Jump to content

யாழ்ப்பாண கலாசார மண்டபத்துக்கு... மாநகர சபை உறுப்பினர்கள் விஜயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

சவக்குழியில் இருந்து மீள இருக்கும் எல்லாவாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் கற்பிதன். 

சில சமயங்களில், ஆசாபாச, தனிப்பட்ட பட்டறிவை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு bigger picture ஐ பார்த்தே ஆகவேண்டும். இனத்தின் ஒட்டுமொத்த நலன் கருதி. 

இதைநான் இப்படித்தான் பார்கிறேன். 

சண்டைகாரன் காலில் விழலாம் - சண்டைகாரன் காலில் விழுந்தால் கழுத்தை வெட்டமாட்டான் எனில்.

சண்டைகாரன் நாம் என்ன செய்தாலும் எப்படியும் கழுத்தை வெட்டியே தீருவான் எனும் போது, அவன் காலில் விழுவதும், ஒரு கத்தியை எடுத்து நாமே எம் தலையை சீவுவதும் ஒன்றுதான்.

தீர்வு எப்படியும் சண்டைகாரந்தான் தரவேண்டும். ஆனால் தனியே நாம் மட்டும் போய் கேட்டால் தலையை சீவிவிடுவான்.

யாரையாவது துணைக்கு கூட்டிபோனால்தான் தலையாவது தப்பும்.

துணைக்கு வருகிறீர்களா? என கேட்டால் திரும்பியாவது பார்ப்பவன் சுயநலக்கார கயவன் மட்டுமே. 

அவன் அப்படி செய்ய ஆயிரம் காரணம் இருக்கு, நம் நல்வாழ்வு அவன் நோக்கம் அல்ல, அவனை நம்பவே முடியாது என்பதை எல்லாம் விளங்கி கொண்டு, நாம் அவனுடன் டீல் பண்ணிதான் ஆகவேண்டும்.

ஏனென்றால் வேறு யாரும் எம்முடன் முகம் கொடுத்து கதைக்க கூட தயாரில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களுக்கிருப்பது இந்தியா என்ற நாட்டினால் தமிழருக்கேற்பட்ட இழப்புக் குறித்த கோபமாக எனக்குத் தெரியவில்லை (அந்தக் கோபம் இங்கே நான் உட்பட பல யாழ் உறவுகளுக்கு இருக்கிறது). 

இது வேற பிரச்சினை, இனியும் என்வலப்பை எல்லை மீறித் தள்ளாமல் இருப்பது நல்லது கப்ரன்!🤐

இந்தியாவை நான் வெறுப்பதற்கு வேறு என்ன காரணம் எனக்கிருப்பதாக தாங்கள் எண்ணுகிறீர்கள்.. ? எனது கோபம் இந்தியா எமக்குச் செய்த துரோகத்தால் வந்தது. நிச்சயம் வேறு தனிப்பட்ட காரணங்களால் வந்தது அல்ல. ஏனென்றால் இந்தியா மீது நான் மிகுந்த மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருந்தேன். எல்லாம் போயிற்று.. 🤥

ஒவ்வொரு பிரதேசங்களைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களின் வாழும் சூழல், தேவை தொடர்பிலான பழக்க வழக்கங்கள் உள்ளன. அது அவர்களின் Survival என்கின்ற அடிப்படையில் வந்தது.  இந்த பழக்க வழக்கங்களோ தனி மனித தேவைகளோ எனது இந்தியா மீதான கோபத்திற்கும் அதனால் ஏற்படும் வெறுப்பிற்கும் காரணங்களல்ல என்பதை மிகத் தீர்மானமாக இங்கே குறிப்பிடுகிறேன். 👍

6 minutes ago, கிருபன் said:

தமிழர்களின் நிலத்தை ஆக்கிரமித்து, சிங்களக் குடியேற்றங்களை அமைத்து முழுமையாகவே சிங்கள பெளத்த நாடாக மாற்ற நீண்டகாலத் திட்டத்துடன் கச்சிதமாக வேலைசெய்யும் சிங்களவர்களை நம்புவது எவ்வளவு மடைமை என்று அறியாத அளவுக்கு இந்திய வெறுப்பு ஊறியுள்ளது.

என்னைப் பொறுத்தவரை எவரையும் நம்பவேண்டியதில்லை. தமிழர்கள் தங்கள் உரிமைகளை தங்களை நம்பியே பெற்றுக்கொள்ளவேண்டும். உலகில் பலம்பொருந்திய மேற்குநாடுகளும், இந்தியா, சீனா போன்றவையும் தமது நலன்களுக்காக ஆடும் பகடையாட்டத்தில் வெட்டப்படும் காய்களாக இருக்காது பார்த்துக்கொள்ளவேண்டும். 

வரலாறு இதுவரையில் காணாத அளவிற்கு இலங்கையில் பேரினவாதம் தலைவிரித்தாடுகிறது. தனக்கு சிறுபான்மைத் தேசிய இனங்களின் வாக்குத் தேவையற்றது என கோத்தபாய  வெளிப்படையாகப் பேசுகிற அளவிற்கு ஒற்றுமையில்லாத காரணத்தால் அரசியல் பலமில்லாதவர்களாக ஆகியுள்ளோம்.  இந்தியா போன்ற நாடுகள் அவர்களின் நலன்களை முன்வைத்தே எமது பிரச்சினையைக் கையாள்வார்கள் என்ற புரிதலோடு அரசியல் பலத்தைப் பெருக்க அவர்களின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள முனையவேண்டும்.

 

 

சிங்களவனை நம்புகிறேன் என்று எங்கேயும் நான் கூறவில்லை. ஆனால் இந்தியாவை நம்புவதற்கில்லை என்பதை அழுத்தமாகக் கூறவே முனைந்துள்ளேன். 

எதிரிக்கும் துரோகிக்கும் வேறுபாடு தெரியாதவனல்ல.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

நான் ஒருபோதும் என்னை இலங்கையன் என்று கருதிக்கொண்டதில்லை. ஒரு காலத்தில் சிறிலங்கன் பாஸ்போர்ட் வைத்திருந்த காரணத்தால் இலங்கையனாக இருக்கமுடியாது. அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு.

அதேவேளை தமிழ்நாட்டுத் தமிழர் பலர் தம்மை இந்தியன் என்று பெருமையாக முதலில் நினைத்து அடுத்ததாக தமிழர் என்று உணர்வதும் தெரியும். அப்படியான இந்தியக் குடிமக்களாக உணர்பவர்களை காயப்படுத்தக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கின்றேன். தேசிய உணர்வை, இனவுணர்வை வெறுப்புணர்ச்சியால் வளர்ப்பது ஆபத்தானது.

வன்னியன் ஐயா, நீங்கள் ஜெகத் கஸ்பாரின் காணொளியை இணைத்திருந்தீர்கள். அதில் தலைவர் பிரபாகரன் சிங்கள மக்களைப் பற்றி சொன்னதை கவனித்திருப்பீர்கள். சிங்கள மக்களில் எந்தவித கோபமும் இல்லை என்றுதான் சொன்னார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

இராசா..

தமிழ்நாட்டினரை (நான்) தமிழராகத்தான் பார்க்கிறேன். குறிப்பாக, தென்னாட்டினரென்றால் அதிக மரியாதை உண்டு. 

நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது. அதற்காக நான் தமிழ்நாட்டினரை வெறுக்கப்போவதில்லை. 

ஏனென்றால் நான் உங்களை எனது சக தமிழனாகவேதான் பார்க்கிறேன். 👍👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

 

நான் எழுதிய  கருத்து புரியாவிட்டாலும் வழமைபோல என்மீதான வெறுப்பை தீர்ககமட்டும் உங்களால் கூறப்பட்ட கருத்து இது. 


அன்புள்ள துல்பன்.  
நான் நல்ல சுகம்.நீங்களும் நல்ல சுகமாயிருக்க எல்லாம் வல்ல கோட்டை முனியப்பரை வேண்டுகின்றேன்.
உங்கள் மீது எனக்கு வெறுப்பா? எதை வைத்து சொல்கின்றீர்கள்? உடன் பதில் தரவும்.
உங்கள் பதிலை எதிர்பார்த்து வழிமேல் விழிவைத்து காத்திருக்கின்றேன்.
அன்புடன்
குமாரசாமி
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

என்னைப்பொறுத்தவரை.....
இலங்கை தமிழர்கள் இந்தியாவை இரண்டாவது தாய் நாடாகத்தான் பார்த்தார்கள்.என்று கிந்திகள் தமது சுயரூபத்தை காட்ட வெளிக்கிட்டார்களோ அன்றிலிருந்து  தமிழ்நாடு மட்டும் இலங்கை தமிழர்களுக்கு தனியாக தெரிந்தது( தமிழ் அரசியல் வியாபாரிகளை தவிர)

உங்களுக்கு எப்படி இலங்கை வானொலி பெரிதாக தெரிந்ததோ.... அதுபோல் வடபகுதி மக்களுக்கு திருச்சி, திருச்சிராப்பள்ளி வானொலியும் சென்னை வானொலியின் தேன்கிண்ணமும் பெரிதாக தெரிந்தது.

என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

இன்னும் நிறை எழுதலாம்.....
 

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

என்னைப் பொறுத்து..

எங்களுக்கும் தனக்குமான சவக்குழிகளை இந்தியாவே தோண்டி, அதில் எங்களை ஏற்கனவே கொன்று புதைத்தாகி ஏறக்குறைய 10 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதே தனக்கு தோண்டப்பட்ட குழியில் இறங்கி நின்றுகொண்டு, அவர்களின் குழி மண்ணால்தான் எங்களை மூடி சீல் வைத்தார்கள். இப்போது எங்களுக்குத் தோண்டப்பட்டபோது எங்சிய மண்ணால் சிங்களவனும் சீனனும்  அவனது குழியை மூடத் தொடங்கிவிட்டார்கள். இதை பார்த்து இரசிக்க வேண்டியதுதான்.... 😂😂😂😂🤪🤪🤣😂😂🤣🤣

கயவனுடன் பேசுவதால் பயனேதும் உண்டென்று உண்மையில் நீங்கள் நம்புகிறீர்களா.. ?

சாட்சிக்காறன் காலில் விழுவதைவிட, சண்டைக்காறன் காலில் விழலாம் என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள்.

இந்தியர்களை தனிப்பட்ட வாழ்க்கையில் கண்டுணர்ந்து அனுபம்மிக்க தாங்கள்...

உண்மையைக் கூறுங்கள்... (உண்மையான பதில் வேண்டும் 😡...😂)

நீங்கள் இந்தியனை நம்புவீர்களா..

நானாக இருந்தால், ஒரு இந்தியனை நம்புவதைவிட, நூறு சிங்களவனை நம்புவேன்...|👍

ஆனால் நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள். அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை. தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Robinson cruso said:

ஆனால்

1) நீங்கள் யாரையும் நம்ப மாடீர்கள்.

1.1) அந்தளவுக்கு உங்களுக்கு பிரச்சினை இருக்குதுபோல. எப்படியோ

2) வாடா கிழக்கு அபிவிருத்தியில் இந்திய இப்போது ஒரு முக்கிய பங்காளி. நீங்கள் சொல்லி நிறுத்தப்போவதில்லை. மக்கள் இனியும் கொட்டிலில் வாழ தயார் இல்லை. எல்லோரும் கொட்டிலில் வாழ்ந்தால் பரவாயில்லை, அல்லது கொட்டிலில் இருந்துகொண்டு ஆலோசனை கூறினால் பரவாயில்லை.

3) தமிழனின் பண்பாடு கொடுத்தவனுக்கு நன்றி சொல்வது. எடுத்துக்கொண்டு நன்றி சொல்லாமலிருப்பது நன்றல்ல.

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

Link to comment
Share on other sites

5 minutes ago, Kapithan said:

1) நம்பக்கூடிய ஒருவரை நீங்கள் காட்டுங்கள் பார்க்கலாம் 😜

1.1) காயம் பட்டவனுக்குத்தான் வலி. எப்படியும் வாழலாம் என்பவர்களுக்கும் எந்த அயோக்கியனுடனும் கூட்டுச் சேரலாம் என்பவனுக்கும் வலி தெரியாது. உங்களுக்கும் வலி இருக்குமென்று நம்புகிறேன். என் யூகம் சரிதானே... 😀

2) பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடுவது நல்ல விடயம்தானே வங்காலையான். இந்தியா மட்டுமென்ன சிறிலங்கா, சீனா செய்தாலும் நல்ல விடயமே. (இந்தியா மனமிரங்கி பிச்சையிடுவதுபோல போகிறது உங்கள் கதை 😂😂 செய்த துரோகத்திற்கு இந்தியா செய்துதானாக வேண்டும். அது எங்கள் உரிமை 😡)

3) வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்று தமிழனுக்கே இடமில்லாது போனதுபோல...எத்தனை துரோகங்களைச் செய்தபோதும் பணிந்து, கூனிக்குறுகி, கூழைக்கும்பிடு போட்டு நன்றி சொல்ல நான் ஆயத்தம் அல்ல... 😡

நீங்கள் எப்படி... 😎

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

காப்பி, நீங்கள் கூனி குறுகி நன்றி சொல்ல வேண்டாம். மக்கள் நன்றி சொல்லத்தான் போகிறார்கள். மாட மாளிகையில் இருப்பவர்களுக்கு இது புரியாது. கொட்டிலில் , மலையில் நனைந்து கொண்டிருப்பவனுக்குத்தான் இது புரியும்.

இருந்தாலும் உங்கள் பிரச்சினை புரிகின்றது. அதட்கு தீர்வு கிடட எனது வாழ்த்துக்கள்.

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

Link to comment
Share on other sites

2 minutes ago, Kapithan said:

மக்கள் நன்றி சொல்வது இருக்கட்டும்.. நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். இந்தியாவால் பயனேதும் பெற்றீர்களோ.. 😀

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

எனக்கு இதுவரைக்கும் உங்களைப்போன்ற அந்த அனுபவம் ஏட்பட வில்லை. நான் வேலை செய்த இடத்திலிருந்து இந்தியர்களையே வெளியற்றி இருக்கிறேன். அது வேறு விடயம். கொட்டிலில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும்போது அதை பாராட்டாமல் இருக்க முடியாது. அதே நேரத்தில் இந்த கட்டிட திறப்பு விழாவில் பாராட்டு பாத்திரம் அங்குள்ள படித்தவர்களால் வழங்கப்படத்தான் போகிறது. இது உங்களுக்கு ஒரு பிரச்சினை என்று விளங்குகிறது.

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

... அது உணர்வில் வரவேண்டும். பல்வேறு கேள்விக்கொத்துகளில் ethnicity கேட்கப்படும்போது தமிழர் என்றே குறிப்பிடுவதுண்டு...

மிக்க நன்றி..🙏 We are in same page.

5 hours ago, Kapithan said:

..நீங்கள்,  உங்களை இந்தியராகக் கருதுவீர்களானால் அதையிட்டு நான் கருத்துச் சொல்ல முடியாது...

எனுங்க இந்த கொலைவெறி..? :)

4 hours ago, குமாரசாமி said:

..என்னால் தமிழ்நாட்டு மக்களை இந்தியராக பார்க்க முடியவில்லை. அதே போல் நான் சிறிலங்கன் அல்ல.தமிழீழத்தவன்.

மிக்க நன்றி, கு.சா.😔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ராசவன்னியன் said:

எனுங்க இந்த கொலைவெறி..? :)

நான் தவறாக ஏதும் சொல்லவில்லையே.. 🤔

தெளிவின்மை இருந்தால் மன்னிக்கவும். குருபன், குசா. வின் நிலைப்படுதான் எனதும்.  

Blood is thicker than water என்று சும்மாவா கூறினார்கள், இராசா.. 😀

👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, satan said:

ஐயா, மன்னா! எனக்கும் ஒரு சந்தேகம்..... நீங்கள் ஆயிரந்தடவை வந்தே மாதரம் பாடினாலும், அவர்கள் உங்களை அந்த பாரதத் தாயின் பிள்ளைகளாக (மக்களாக) ஏற்றுக்கொள்கிறார்களா? என்னினம் அழியுதே, தடுத்து நிறுத்து! என நீங்கள் போட்ட கூக்குரலைக் கேட்டதா அந்தத் தாய்மனம்? மாறாக வெந்தழலை அல்லவா கொட்டி பழி தீர்த்தது. நீங்களும் அழுதீர்கள், புலம்பினீர்கள், துவண்டீர்கள். முடிவில் என்ன எண்ணி, சொல்லி  உங்களைத் தேற்றினீர்கள்? எதற்காக உம்மவர்  தீக்குளித்தனர் எமக்காக? அறிய ஆவல்!  

நான் உணர்வுக் கடலின் அடிமட்டத்தில் ஆரம்பிக்க நினைத்தால், நீங்கள் மேலிருந்து சருகுகளோடு நோக்குகிறீர்கள்..ஆழம் தெரியாது..!

Link to comment
Share on other sites

9 hours ago, ராசவன்னியன் said:

ஒரு சந்தேகம்..! 😜

உங்களின் பெரும்பாலோர் பார்வையில், தமிழ்நாட்டு தமிழர்கள், இந்தியர்களா..? இல்லை தமிழர்களா..?

(இதற்கு பதில் சொல்லுமுன், நீங்கள் இலங்கையரா..? தமிழரா..? என சுயசோதனை செய்துகொண்டு பதிலளிக்கவும் 😋)

 

உங்கள் கேள்விகளுக்கு வரையறுக்கப்பட்ட விடைகள் இல்லை. தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களா இல்லை இந்தியர்களா என்றால் இரட்டை நிலைதான். அதேபோல் இலங்கைத் தமிழர்கள் இலங்கையர்களா இல்லை தமிழர்களா என்றால் அதுவும் இரட்டை நிலைப்பாடுதான். இரண்டு இடத்திலும் தமிழர்கள் என்ற வரையறுக்கப்பட்ட நிலைப்பாட்டுக்குள் ஏக மக்களும் வந்திருந்தால் தமிழ்நாடு தனிநாடாக இருந்திருக்கும் அதுபோல் ஈழமும் தனிநாடாக இருந்திருக்கும். ஒரு தரப்பு மக்களிடம் இருக்கும் இனம் சார்ந்த உணர்வை முன்வைத்து இவற்றை தீர்மானிக்கவும் முடியாது. ஏக மக்களின் அரசியல் பொருளாதார வாழ்வாதரா உறவுகள் இந்திய இலங்கை மத்திய அதிகார மையத்துடன் தொடர்புபடுகின்றது என்பதை பொறுத்துதான் இவற்றுக்கான பதில்கள் அமையும். ஒரு உதராணத்திற்கு ஈழப்போராட்ட தொடக்க காலத்தில் இருந்து முடியும் வரை வடகிழக்கில் இருந்த பள்ளிகள் ஆசிரியர்கள் என்னும் பலதரப்பட்ட அரச உத்தியோகத்வர்கள் இலங்கை அரச பொருளாதரத்தை அடிப்படையாகக் கொண்டு வழ்ந்தார்கள். மாணவர்கள் பலர் போராடி மடிந்தார்கள். போராட்டம் முடிந்த பின் அரசின் பொன்சன் பணத்தில் தொடர்ந்து வாழ்கின்றார்கள். அவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் போரடி மடிந்தவர்கள் இலங்கையர்களா தமிழர்களா என்று கேட்டால் வரும் பதிலும் ஒரே பெறுமதியாக இருக்காது. 

சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சண்டமாருதன் said:

...சாதிய பொருளாதார ஏற்றதாழ்வுகளும் மத முரண்பாடுகளும் நிறைந்த ஒரு மக்கள் கூட்டம் இனம் என்ற ஒரு பொது தளத்திற்கு வந்த பிறகே இந்த கேள்விகளை கேட்க முடியும். அதனால் இப்படியான கேள்விகளும் அதற்கான வரையறுக்கப்பட்ட  விடைகளுக்குமான அவசியம் எந்தக் காலத்திலும் தேவைப்பாடாது. தமிழராக வாழ விரும்புகின்றவர்கள் தமிழராக வாழ்ந்திட்டு போகவேண்டியதுதான்.

என்னங்க சாமி, இப்படி பொசுக்குனு விரக்தியா சொல்லீட்டா எப்படி..? 😔

50களிலிருந்து அடிப்பட்டு வந்தவர்களுக்கு ஒரு விடியல் தோன்றி மறைந்ததுதானே..? மறுபடியும் ஏன் இன்னொரு உதயம் இருக்ககூடாது..?

காலம் சுழல, கிட்டாமலா போய்விடும்..?

Link to comment
Share on other sites

10 hours ago, Kapithan said:

உதவி பெறுபவர்கள் நன்றி சொல்லட்டும். ஆனால் நீங்கள் ஏன் நன்றி சொல்ல விழுந்தடித்து ஓடுகிறீர்கள். அதச்சொல்லுங்கள் முதலில்.. 

ஏன் நீங்கள் முன்னர் கூறியபடி கொட்டிலிலா இருக்கிறீர்கள்.. 😂😂

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Robinson cruso said:

காப்பி, கொட்டிலில் இருப்பது உங்களுக்கு அவமானமாக இருக்கலாம். நாங்கள் உங்களைப்போல  மாளிகையில்தான் இருக்கவேண்டுமென்று ஆசைப்படுபவர்கள் இல்லை. தமிழனை தமிழன் எண்டு சொல்பவனே அவமானப்படுத்துறான். நன்றி சொல்வது தமிழனின் கடமை. இதுவும் சில வேளைகளில் உங்களுக்கு பிரச்சினையாக இருக்கலாம்.

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

கொட்டிலில் இருப்பது அவமானம் அல்ல. ஆனால் கொட்டிலைப் பிரித்து எறிந்து, எரித்து, அழித்தவனின் காலடியில் வலிந்து போய் நெடுங்கிடையாக விழுந்து கிடப்பது அவமானம் என்று நம்புகிறேன்.

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இப்படி எல்லாரும் அவன் காலடியில் விழுகிறோம், இவன் காலடியில் விழுகிறோம் என்று எழுதுவார்கள். அதுக்கு மட்டும் குறைச்சல் இருக்காது. ஆனால் ஐந்து சதம் கொடுக்கா மாடடார்கள். வாய் வீச்சில் வல்லவர்களடி.

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

நான் இன்னமும் அரசியல்வாதியாகவில்லை வங்காலையான். பயப்படாதீர்கள். 😀

காப்பி, அரசியல்வாதி எடுக்கத்தான் போவான், கொடுக்கப்போக மாடடான்.நீங்கள் எப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.