Jump to content

கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

கஞ்சிகுடியாறு குளத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடும்திட்டம்

SAVITHNovember 26, 2020
 
watermarked-IMG-20201125-WA0022%2B%25281%2529.jpg
(காரைதீவு நிருபர் சகா)

திருக்கோவில் பிரதேசத்திற்குட்பட்ட பாரிய நீர்ப்பாசனக்குளமான கஞ்சிகுடியாறு குளத்தில் ஒரு லட்சத்து50ஆயிரம் திலாப்பியா (செல்வன்) மீன்குஞ்சுகளை விடும் திட்டம் நேற்று(24) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதனூடாக அப்பிரதேசத்திலிருக்கக்கூடிய பின்தங்கிய கிராமங்களின் மீனவர் சமுதாயத்திற்கான புதிய வாழ்வாதாரத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜக்கிய அமெரிக்காவின் "அன்புநெறி" அமைப்பின் அனுசரணையுடன் IMHO அமைப்பின் பரிந்துரைக்கமைவாக் அசிசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பு இவ்வேலைத்திட்டத்தை அமுல்படுத்துகிறது. இதற்கு கிழக்குமாகாண மீன்பிடித்துறை பணிப்பாளர் சிவ.சுதாகரனின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக நேற்று 50ஆயிரம் திலாப்பியா மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டன. அடுத்த 6மாதங்களில் அடுத்தகட்ட 50ஆயிரம் மீன்குஞ்சுகளும் அடுத்த 6மாதங்களில் இறுதி 50ஆயிரம் மீன்குஞ்சுகள் விடப்படவிருக்கின்றன.

இத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேறறு திருக்கோயில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் சிறபபாக நடைபெற்றது. நிகழ்வில் அசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR) அமைப்பின் இலங்கைக்கான தலைவர் எந்திரி ஹென்றிஅமல்ராஜ் பிரதான அதிதியாகக்கலந்துகொணடார்.

மேலும் உதவி பிரதேசசெயலாளர் க.சதிசேகரன் கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் கிராமங்களின் கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னீர் மீன் வளர்ப்பு மாகாண மற்றும் தேசிய உத்தியோகத்தர்கள். தாண்டியடி மக்கள் சேவைகள் ஒன்றியம் இளைஞர்கள்இ கஞ்சி குடியாறு மீனவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

IMHO அமைப்பின் தலைவர் வைத்தியகலாநிதி டாக்டர் (திருமதி) ராஜம் இத்திட்டத்தை மேலும் விஸ்தரிக்க உத்தேசித்துள்ள விடயமும் இங்கு தலைவர் ஹென்றியினால் கூறப்பட்டது.

125,000.00 ரூபா பெறுமதியான இந்த மீன்குஞ்சுகள் மட்டக்களப்பு மீனவர் கூட்டுறவு திணைக்களத்தின் Nursary யில் 80 நாட்கள் வளர்க்கப்பட்டு சுமார் 2 தொடக்கம் 3 சென்டிமீட்டர் அளவு வளர்ச்சி அடைந்த நிலையில் இக்குளத்தில் விடப்பட்டுள்ளது. இந்த மீன் குஞ்சுகள் மூன்று மாதத்தின் பின்பு அறுவடை செய்யக் கூடிய அளவு வளர்ந்திருக்கும்.

இத்திட்டத்தின் ஊடாக கஞ்சிகுடிச்சாறு மீனவர் சங்கத்தின் 84 உறுப்பினர்களும் 5 மீன் வியாபாரிகளும் நேரடியாக பயனடைவர்.மறைமுகமாக 350 குடும்பங்களும் 5 மீன் வியாபாரிகளும் சுமார் 500 வாடிக்கையாளர்களும் பயனடைகின்றனர்.

மீனன்குஞ்சுகள் விடப்பட்டதன் பின்னர் கஞ்சிகுடியாறு மீனவர் சங்கக்கட்டடத்தல் பிரதேச செயலாளர் மற்றும் முக்கியஸ்தர்கள் நன்னீர் மீன் வளர்ப்பு உத்தியோகத்தர்கள் ஆகியோருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

1. ரூபஷ் சாகாமம் விழாவட்டவான் போன்ற குளங்களுக்கும் மீன்குஞ்சு வழங்குகின்ற திட்டத்தை விரிவுபடுத்துதல்.

2. மீன் குஞ்சு வழங்குகின்ற திட்டத்துடன் இதனை நிறைவு செய்யாமல் தொடர்ந்து இந்த மீனவர் சங்கங்களை வலுவூட்டுதல் செயற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துதல்.

3. சிறிய நீர் தடாகங்களை உருவாக்கிய அவற்றில் நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கு மானிய அடிப்படையில் உதவி செய்தல். இதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளும் மீனவர் கூட்டுறவு திணைக்களம் மூலமாக வழங்கப்படும்.

4. தற்போது குளங்களில் இருந்து அறுவடை செய்யப்படுகின்ற மீன்கள் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது ஊடாக வியாபாரிகள் அதிக லாபம் அடைகிறார்கள் எனவே நேரடியாக மீன் மீன்பிடியில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கு அதிக லாபத்தைப் பெற்றுக் கொள்கின்ற வகையில் மீன்களுக்கான பெருமதி சேர் திட்டத்தை உருவாக்குதல்.

5. புகை கருவாடு க்கு அதிக கேள்வி நிலவுவதால் மீனை பதப்படுத்தி கருவாடு உற்பத்தியை மேற்கொள்வதற்கு விசேட கவனம் செலுத்துதல்.

6. ஒரே நாளில் மீனை கருவாடாக பதப்படுத்துவதற்காக சாகாமம் மீனவர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட மீன் காயவைக்கும் இயந்திரத்தை உடனடியாக பாவனைக்கு கொண்டு வருகின்ற வகையில் ஒரு நிதியை கண்டுபிடித்து மீனவர்களுக்கு அதிக லாபத்தை பெற்றுக்கொடுத்தல்.

7. சாகாமம் மீனவர் சங்கத்தால் மீன் காய வைக்கும் இயந்திரம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகின்ற போது அதனை கஞ்சிகுடியாறு மீனவர் சங்கத்துக்கு வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை பிரதேச செயலாளர் துரித நடவடிக்கை மேற்கொள்வார்.

8. வியாபாரிகளுக்கு மீன்களை வழங்குவதற்கு பதிலாக மீனவர் சங்கம் நேரடியாக மீன்களைக் கொள்வனவு செய்து விற்பனை செய்கின்ற திட்டத்தை உருவாக்குவதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்தல்.

9. குளங்களில் அதிக முதலைகள் இருப்பதால் அடிக்கடி மீன் வலைகள் பாதிப்புக்குள்ளாகும் நிலையில் மீனவர்கள் உடனடியாக தங்களுக்கு தேவையான வலைகளை கொள்முதல் செய்து தொழிலை மேற்கொள்வற்கான அவசர கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துதல்.(மீனவ சங்கத்திற்குள் அதிக நிதியை கையாளுகின்ற வகையில் சிறந்த பொறிமுறை ஒன்றை உருவாக்குதல்)

10. நன்னீர் மீன்பிடி ஊடாக கிராமத்திற்குள் இருக்கின்ற ஏனைய நபர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்குதல்.

11. நீண்டகாலமாக குறிப்பிட்ட சிலர் மாத்திரமே மீன்பிடியில் ஈடுபடுகின்ற அதேவேளை கிராமத்துக்குள் நீண்ட காலமாக இருக்கின்ற வர்களுக்கு மீன் பிடிப்பதற்கான அனுமதியை வழங்குகின்ற வகையில் புதிய அணுகுமுறை ஒன்றை உருவாக்குதல்.

12. மீனவ சங்கத்தால் சேமிக்கப்படுகின்றன நிதியிலிருந்து ஏனைய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குதல்.

13. மீன்பிடியும் விவசாயமும் ஒன்றாக மேற்கொள்ளுகின்ற இப்பிரதேசத்தில் விவசாயத்துக்கும் கூடுதல் முக்கியத்துவம் வழங்குதல்.

14. தற்போது யானை வேலி அமைக்கப்பட்டு கொண்டிருப்பதால் மகா மற்றும் யல ஆகிய இரண்டு போகங்களும் மேட்டுநில பயிர்ச்செய்கை மேற்கொள்ளுகின்ற வகையில் புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய பயிர் (peanuts, watermelon, sweet corn) செய்கை திட்டங்களை மேற்கொள்தல்

15. திருக்கோயில் பிரதேசத்திலே விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய பகை பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக மட்டக்களப்பு சோலை விவசாய அமைப்பு எமது பிரதேசத்திற்குள் பணியாற்றுவதற்கு அழைத்தல்.

இன்று கலந்துரையாடி எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான கலந்துரையாடல் ஒன்றை வருகின்ற வாரங்களில் பிரதேச செயலாளர் தலைமையிலே கலந்துரையாடி தீர்க்கமான சில முடிவுகளை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

watermarked-IMG-20201125-WA0017%2B%25281%2529.jpg

 

watermarked-IMG-20201125-WA0019%2B%25281%2529.jpg

 

watermarked-IMG-20201125-WA0021.jpg

 

watermarked-IMGP0236.jpg

 

watermarked-IMGP0238.jpg

 

watermarked-IMGP0273.jpg

 

watermarked-IMGP0284.jpg

 

watermarked-IMGP0295.jpg

 

watermarked-IMGP0305.jpg

 

watermarked-%25E0%25AE%25AE%25E0%25AF%2580-00-768x576.jpg

 

watermarked-%25E0%25AE%25AE%25E0%25AF%2580-01-768x576.jpg

 

 

http://www.battinews.com/2020/11/1-50.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனிஉங்களுக்கு இந்த அமைப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் தெரியுமா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு விடயம்

வாழ்த்துக்களும்  நன்றிகளும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வெளிநாட்டு நன்கொடைகளை வைத்து அரசியல் செய்யாத வரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, சுவைப்பிரியன் said:

தனிஉங்களுக்கு இந்த அமைப்புகள் மற்றும் திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்கள் ஏதும் தெரியுமா.

இதில் பங்கேற்ற நபர்கள் (அரசு சார்பில்) தெரிந்தவர்கள் ஆனால் அந்த அமைப்பு பற்றி எதுவும் தெரியாது எந்த அமைப்புகளின் தொடர்பும் இல்லை தொடர்புகள் வைத்துக்கொள்வதும் இல்லை நான். 

புலிகள் காலத்தில் மீன் பிடி இல்லாமல் தற்போது அதிகம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது . காட்டுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டும் இந்த குளத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இதில் பங்கேற்ற நபர்கள் (அரசு சார்பில்) தெரிந்தவர்கள் ஆனால் அந்த அமைப்பு பற்றி எதுவும் தெரியாது எந்த அமைப்புகளின் தொடர்பும் இல்லை தொடர்புகள் வைத்துக்கொள்வதும் இல்லை நான். 

புலிகள் காலத்தில் மீன் பிடி இல்லாமல் தற்போது அதிகம் மீன்கள் பிடிக்கப்பட்டு வருகிறது . காட்டுக்குள் அதிக தூரம் செல்ல வேண்டும் இந்த குளத்தை பார்க்க வேண்டுமாக இருந்தால் 

நன்றி தனி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.