Jump to content

மாவீரர் நாள்மரபாகி வந்த கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

மாவீரர் நாள்மரபாகி வந்த கதை

  • November 25, 2020

வைமன் வீதியில் அமைந்திருந்த ஈழநாதம் நாளிதழின் பணிமனைக்கு ஒருமுறை பொ.பாலசுந்தரம் பிள்ளை (பின்னாளில் யாழ்.பல்கலைக்கழக துணை வேந்தராக விளங்கியவர்), வந்திருந்தார். இந்நாளிதழின் ஆசிரியர் பொ.ஜெயராஜைச் சந்தித்த அவர் நாள்தோறும் வெளிவந்த நினைவு­கூருகின்றோம்` என்ற தலைப்பிலான விளம்பரம் பற்றிக் குறிப்பிட்டார். முன்­னைய ஆண்டுகளில் இதே நாளில் வீரச்சாவெய் திய மாவீரர்களின் பெயர்,முகவரி, சம்பவம் முதலான விடயங்கள் அந்தந்த நாளிதழில் வெளிவந்­துகொண்டிருந்தன.


அத்துடன் இலங்கைத்­தீவில் தமிழராகப் பிறந்ததனால் சிங்களக்காடையர், படையினர் முதலானோரால் கொல்லப்பட்டோர் பற்றிய விபரங்களும் வெளி­யாகின. இதில் இரண்டாவது விடயம் குறித்தே பேராசிரியர் குறிப் பிட்டார். உலகில் வெவ்­வேறு நாடுகளில் யூதர்கள் என்ற காரணத்­துக்காக கொல்லப்­பட்ட அனைவரது பெயர், சம்பவங்கள் அனைத்தையுமே இஸ்ரேலில் பதிவுக்­குள்ளாக்கி வைத்துள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர் ஒடடு­மொத்தமாக யூத இனம் தாம் சந்தித்த இன அழி­வு­களை வர­லா­றா­கப் பதிவு செய்­வ­தில் காட்­டிய அக்­க­றையை விலா­வா­ரி­யாக விப­ரித்­தார். அத­னைப் போலவே ஈழ­நா­தம் காட்­டும் அக்­க ­றையை குறிப்­பி­டத்­தக்க விட­யம் எனப் பாராட்­டி­னார்.


இறுதி யுத்­தம் முடிந்து பதி­னோரு ஆண்­டு­கள் கழிந்து விட்­டன. இன்­ன­மும் இனப்­ப­டு­
கொ­லைக்­குள்­ளாக்­கப்­பட்ட தமது உற­வு­கள் பற்­றிய பதி­வு­களை எம்­மி­னம் பூர­ணப்­ப­டுத்­த­ வில்லை. இறுதி நாட்­க­ளில் நடைபெற்ற வீரச்­சாவு விப­ரங்­கள் கூட முழு­மைப்­ப­டுத்­தப் ப­ட வில்லை. இந்த விட­யங்­க­ளில் யாரா­வது அக்­கறை காட்ட முனைந்­தால் தலை­யில் குட்டி அம­ர­ வைக்­கும் போக்­கி­னையே சிலர் தொடர்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர். வர­லாற்றை மாற்றி எழு­தும் பிர­கி­ரு­தி­கள் தமது கற்­ப­னை­களை ஓரிரு சம்­ப­வங்­க­ளில் சோடித்து இணை­யத்­த­ளங்­கள், முக­நூல்­க­ளில் உலாவ விடுகின்ற­னர். லூக்­காஸ் சாள்ஸ் அன்­ரனி என்ற இயற்­பெ­ய­ரைக்­கொண்ட மாவீ­ர­ருக்கு சீலன் எனப் பெயர் வைத்­த­வன் தானே என்­றும் தான் ஒரு மூத்த உறுப்­பி­னர் என்­றும் அண்மையில் ஒரு­வர் இணை­யத்­தில் பதி­விட்­டி­ருந்­தார்.மூத்த உறுப்­பி­னர் என்று சொல்­வ­தற்கு அவர் தலை நரைக்­கும் வரை காத்­தி­ருந்­தார் போலும்.


வர­லாற்­றில் நடை­பெ­றும் திணிப்­புக்­கள் என்ற விட­யத்­தில் நாம் எச்­ச­ரிக்­கை­யா­கத் தான் இருக்­க­வேண்­டும். அந்த விட­யத்­தில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­கள் பற்­றி­யும் குறிப்­பிட்­டா­க­வேண்­டும். ஏனெ­னில் இன்­றைய நிலை­யில் மாவீ­ரர் துயி­லு­மில்­லங்­க­ளின் செயற்­பா­டு­கள்,முடி­வு­கள் தொடர்­பாக தீர்­மா­னிக்­கும்
உரிமை தமக்கே உள்­ளது என்ற நினைப்பு சிலரிடம் ஊறிவிட்டது போல் உள்ளது.


விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் வித்துடல் தமிழகத் தில் எரி­யூட்டப்பட்டது. (கொள்ளி வைத்தவர் அப்பையா அண்­ணர்) இரண்­டா­வது,மூன்­றா­வது மாவீ­ரர்­க­ளான லெப்.சீலன் மற்­றும் ஆனந்­தின் உட­லங்­கள் யாழ்.போத­னா வைத்­தி­ய­சா­லை­யில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. எப்­ப­டியோ தக­வல் அறிந்த சீல­னின் தாயார் தனது மக­னின் உடலை தன்­னி­டமே கைய­ளிக்­க­வேண்­டு­மென பொலி­ஸா­ரி­டம் வேண்டிக்கொண்டார். அவ் வேண்டுகோளை பொலி­ஸார் நிரா­க­ரித்­த­னர். ஊர்­கா­வற்­து­றைப் பகு­தி­யி­லேயே பொலி­ஸா­ரால் இவ்­விரு உடல்­க­ளும் எரி­யூட்­டப்­பட்­டன. வரலாற்­றுச் சம­ரான 1983 ஜூலை திரு­நெல்­வே­லி­யில் வீரச்சாவெய்­திய லெப். செல்­லக்­கிளி அம்­மா­னின் வித்­து­ட­லைப் புலி­களே கொண்டு சென்­ற­னர். நீர்­வே­லிப் பகு­தி­யில் இவ் வித்து­டல் விதைக்­கப்­பட்­டது. அன்­றைய கால­கட்­டத்­தில் இவ் விட­யம் பகி­ரங்­கப்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை. சுவரொட்­டி­கள் மூலமே இவ்­வி­ட­யம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது. முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் ஓராண்டு நினைவு நாளை யொட்டியே அவ­ரது வீரச்­சா­வுச் சம்­ப­வ­மும் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டது .

முதல் மாவீரர் சங்­கர்


அன்­றைய கால­கட்­டத்­தில் இரு­வ­ரின் பாது­காப்­புக் கருதி சங்க­ரின் வீரச்­சாவை உட­ன­டி­யாக வெளிப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ள­ ரான நித்­தி­யா­ னந்­த­னை­யும், அவ­ரது துணை­வி­யார் நிர்­ம­லா­வை­ யும் கைது செய்ய இராணுவத்­தி­னர் யாழ். நாவ­லர் வீதி­யி­லுள்ள அவர்­க­ளது வீட்டுக்­குச் சென்­ற­னர். ”27.10 1982 அன்று இடம்­பெற்ற சாவ­கச்­சேரி பொலி­ஸ் நிலை­யத் தாக்­கு­த­லில் காய­ம­டைந்த சீலன்,புலேந்­தி­ரன். ரகு (குண்­டப்பா) ஆகி­யோர் இவர்­க­ளது வீட்­டி­லேயே தங்­க­வைத்து சிகிச்­சை­ ய­ளிக்­கப்­பட்­ட­னர்” என்ற தக­வல் படை­யி­ன­ருக்­குக் கிடைத்­தி­ருந் தது. படை­யி­னர் இவர்க­ளது வீட்டை முற்­று­கை­ யி­டச் சென்ற போது அங்கிருந்த சங்­கர் அந்த முற்­று­கை­யி­லி­ருந்து தப்ப முயன்றார்.படை­யி­ன­ரின் துப்­பாக்­கிப் பிர­யோ­கத்­தில் வயிற்­றில் காய­ம­டைந்த அவர் கைலா­ச­பிள்­ளை­யார் கோவி­ல­டிக்கு ஓடி வந்து சேர்ந்த போது துவிச்­சக்­கர வண்­டி­யில் வந்து கொண்டிருந்­தார் அப்­போது யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வ­னும் பின்­னா­ளில் 18 ஆண்­டு­க­ளுக்கு மேலாக ஈழ­நா­தம் நாளி­த­ழின் பிர­தம ஆசி­ரி­ய­ராக விளங்­கி­ய­வ­ரு­மான பொ .ஜெய­ராஜ் . அவர் சங்­க­ரைக்­கண்­டார். ஏற்­க­னவே அறி­மு­க­மா­யி­ருந்த சங்­கரை தனது துவிச்­சக்­கர வண்­டி­ யில் ஏற்­றிக்­கொண்டு சென்­றார். யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு எதிரே உள்ள குமா­ர­சாமி வீதியிலுள்ள 41 எண்­ணு­டைய வீட்­டுக் குக்­கொண்­டு­போ­னார். இந்­தப்­போ­ராட்­டத்­து­டன் சம்­பந்­த­மு­டைய பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் பலர் பழகி வந்த இந்த வீட்­டில் இருந்த ஏனை­யோ­ரு­டன் இணைந்து சங்கரைக் காப்­பாற்­றும் முயற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.


அன்­றைய கால­கட்­டத்­தில் பொது வைத்­தி­ய­சா­லை­யில் சிகிச்சை பெறு­வது முடி­யாத விட­யம். எனவே மேல­திக சிகிச்­சைக்­காக சங்­கர் தமி­ழ­கத்­துக்கு கொண்டு செல்­லப்­பட்­டார். சிவ­கு­மார் என்­னும் இயற்­பெ­ய­ரைக் கொண்ட அன்­ரனே இவ­ரைத் தமி­ழ­கத்­துக்குக் கொண்டு சென்­றார்.


சங்­க­ருக்­காக உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தலை­வர்


பொது­வாக எவ­ருமே நினைவு தப்பி வலி­யில் துடிக்­கும் போது “அம்மா ….. அம்மா .. „ என்றே அரற்­று­வ­துண்டு . ஆனால் சிகிச்­சைக்­காக கொண்டு செல்­லப்­பட்ட அந்­தச் சம­யத்­தில் சங்­கர் “ தம்பி … தம்பி “ என்றே அரற்­றி­னார். தலை­வர் சங்­க­ரின் மன­தில் எந்­த­ள­வுக்கு ஆழ­மாக உறைந்­தி­ருந்­தார் என்­ப­தற்கு இது­வோர் சிறந்த உதா­ர­ணம். தமி­ழர்­க­ளின் விடு­த­லைக்­காக இது­வரை 36 ஆயு­தப்­போ­ராட்ட இயக்­கங்­கள் தோன்­றிய போதும் அதில் புலி­கள் மட்­டுமே வித்­தி­யா­ச­மா­கத் தெரிந்­தார்­கள் என்­றால் அதற்கு இது போன்ற உதா­ர­ணங்­களை சுட்­டிக் காட்­ட­லாம். வேறு எங்­கும் காண முடி­யாத விட­யம் இது . அந்­தப் பாசப்­பி­ணைப்பே வர­லாற்­றில் முதல் மாவீ­ர­னாக (விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின்) பெயர் பதித்த சங்­க­ரின் நினைவு நாளின் போது 1983 இருந்து 2008 வரை நீர் கூட அருந்­தா­மல் உண்­ணா­வி­ர­த­மி­ருக்­கும் எண்­ணத்­தைக் தலை­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யது

மாவீ­ரர் நாள் அறி­விப்பு


இதன் அடுத்­த­கட்­டம் தான் மாவீ­ரர் நாள் பற்­றிய அறி­விப்பு.இந்­திய இரா­ணுவம் செயற்பட்ட காலத்­தில் 1989 ம் ஆண்­டில் இந்த அறி­விப்பு மண­லாற்­றுக் காட்­டில் இருந்த( ’14’முகாம் ) மூலம் சகல பிராந்­திய தள­ப­தி­க­ளுக்­கும் தெரி­விக்­கப்­பட்­டது. முத­லாம் உல­கப்­போ­ரின்போது போர்க்­க­ளத்­தில் உயிர் நீத்த வீரர்­களை நினை­வு­கூ­ரும் வகை­யில் முதன் முத­லாக ஆரம்­பிக்­கப்­பட்ட பொப்பி மலர் நினைவு நாள் பற்றி சங்­கர் என்ற மூத்­த­போ­ராளி உரை­யா­ட­லொன்­றின்­போது தலை­வ­ரி­டம் குறிப்­பிட்­டார் (இவரே பின்­னா­ளில் விமா­னப் படை­யின் உரு­வாக்­கத்­தில் பெரும்பங்கு வகித்­த­து­டன் அதனை வழி­ந­டத்­தி­ய­வர். (இயற்­பெ­யர் வை.சொர்­ண­லிங்­கம்)
இந்த பொப்பி மலர் உதா­ர­ணமே இலங்­கை­யில் ‘சூரி­ய­மல்’ எனப்­ப­டும் சூரி­ய­காந்தி இயக்­கத்­துக்கு வழி
வ­குத்­தது.
அந்­தப்­பொ­றியை சங்­கர் தட்­டியபோதே எங்­க­ளது தேசிய விடு­த­லைப் போராட்­டத்­தில் ஆகு­தி­யா­கிய போரா­ளி­க­ளுக்­கும் ஒரு நாளைப் பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டு­மென்ற சிந்­தனை தலை­வர் மன­தில் உரு­வா­னது . அந்­த­வ­கை­யி­லேயே புலி­க­ளின் முதல் மாவீ­ர­ரான சங்­க­ரின் (சத்­தி­ய­நா­தன் ) நினைவு நாளை மாவீ­ரர் நாளா­கப் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­னார் அவர். இது பற்றி குறிப்­பினை தேவர் அண்­ணா­வும் வெளி­யிட்­டி­ருந்­தார் .

கிழக்­கில்…!

மட்­டக்­க­ளப்­புக்­கு இந்த அறி­விப்பு வந்­த­போது வடக்கு,கிழக்­கில் நிலை­கொண்­டி­ருந்த இந்­திய இரா­ணு­வம் கட்­டம்­கட்­ட­மாக வெளி­யே­றும் நிலை­யில் இருந்­தது .முத­லா­வது தொகு­தி­யி­னர் அம்­பாறை மாவட்­டத்தை விட்டு 30.10.1989 அன்று முற்­றாக வெளி­யே­றி­விட்­ட­னர் ஈ.பிஆர்.எல்.எப் ,ஈ.என்.டி.எல். எப்,டெலோ இயக்­கங்­க­ளுக்கு கூடு­த­லான ஆயு­தங்­க­ளை­யும் அவர்­க­ளால் பிடிக்­கப்­பட்ட இளை­ஞர்­க­ளுக்கு பயிற்­சி­யும் வழங்­கி­விட்டே இம் மாவட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­னர்.இந்­தி­யப்­ப­டை­யி­னர். இவர்­க­ளால் பயிற்­சி­ய­ளிக்­கப்­பட்­டோர் திருக்­கோ­வில் மற்­றும் தம்­பி­லு­வில் ஆகிய இடங்­க­ளில் இரு பெரும் முகாம்­களை அமைத்­தி­ருந்­த­னர் .இந்­த­நி­லை­யில் அன்­றைய அம்­பாறை மாவட்டத் தள­ப­தி­யாக விளங்­கிய அன்­ரனி தலை­மை­யில் ஒரு முகா­மை­யும் இன்­னொன்றை அன்­றைய மட்­டக்­க­ளப்பு மாவட்ட தள­பதியாக விளங்­கிய ரீகன் தலை­மை­யி­லும் 05.11.1989 அன்று தாக்கி கைப்­பற்­றி­னர்­பு­லி­கள்.
இந்த நிலை­யில் அம்­பா­றை­யில் அன்­ரனி முதல் மாவீ­ரர் நாளை திறம்­பட நடத்­தி­னார். திருக்­கோ­யில் பகு­தி­யில் தள­பதி அன்­ரனி தலை­மை­யில் போரா­ளி­கள் பாது­காப்பு வழங்க அம்­பாறை மாவட்ட அர­சி­யல் துறை­யி­னர் நிகழ்வை நடத்­தி­னர்.


ஆனால் மட­டக்­க­ளப்பு மாவ­ட­டத்­தில் இந்­திய இரா­ணு­வம் நிலை கொண்­டி­ருந்­த­தால் பெரும்­பா­லான கிரா­மங்­க­ளில் மாவீ­ரர்­க­ளின் படங்­கள் வைத்து தீபம் ஏற்­றப்­பட்­டது.வந்­தா­று­மூ­லை­யில் புலி­க­ளும் மக்­க­ளும் கூடி­யி­ருந்த இடத்­துக்கு எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­த­போ­தும் அசம்­பா­வி­தம் எது­வும் நடக்­க­வில்லை.


திரு­கோ­ண­ம­லை­யைப் பொறுத்­த­வரை இந்­திய இரா­ணு­வத்­தின் நெருக்­கடி அதி­க­மாக இருந்­தது. அவ்­வா­றி­ருந்­தும் சாம்­பல்­தீவு மகா­வித்­தி­யா­ல­யத்­தில் நிகழ்­வுக்­கென ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. 150 க்கு மேற்­பட்ட பொதுமக்­கள் இந் நிகழ்­வில் கலந்­து­கொண்­ட­னர். நிகழ்­வுக்­கான ஏற்­பா­டு­க­ளின் பாது­காப்­புக்­காக ஒரு அணி அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. இந்த அணிக்கு மேஜர் தர நிலை­யி­லான சுரேஷ் என்ற போரா­ளி­யை­யும் (பின்­னர் படகு விபத்­தில் ஆகு­தி­யா­னார் ) நிகழ்­வைப் பொறுப்­பேற்று நடந்த அர­சி­யல் பொறுப்பை ஏற்­றி­ருந்த ரூப­னை­யும் அனுப்­பி­யி­ருந்­தார் பது­மன். அன்­றைய கால­கட்­டத்­தில் சங்­க­ரின் புகைப்­ப­டம் கூட இவர்­க­ளின் கைவ­சம் இருக்­க­வில்லை.


நிகழ்வு நடை­பெ­றும் தக­வல் அறிந்து இந்­தி­யப்­ப­டை­யி­னர் அங்கு விரைந்­த­னர். அவர்­களை எதிர்த்து புலி­கள் போரிட்­ட­னர். ஒரு பக்­கம் மோத­லில் ஈடு­பட்­டுக்­கொண்டே நிகழ்­வை­யும் நடத்­தி­மு­டித்­த­னர் .மாவீ­ரர்­க­ளின் பெற்­றோ­ரின் பாது­காப்­பைக் கருத்­திற்­கொண்டு சுருக்­க­மாக நிகழ்வு நடந்­தன. ரூபன் சுட­ரேற்றி வைத்­தார்.அதே­வேளை இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரைத் தடுக்­கும் முயற்­சி­யில் ஈடு­பட்ட லெப்.ரிச்­சாட் (இரா­ம­சாமி குண­ராசா, இறக்­கண்டி, திரு­கோ­ண­மலை.)என்ற போராளி களப்­ப­லி­யா­னார். இன்­னு­மொரு போரா­ளி­யும் இந்­தச் சம­ரில் காய­ம­டைந்­தார்.மாவீ­ரர் நாளின் மாண்­பைப் பேண­வும் மாவீ­ர­ரின் பெற்­ரோ­ரைக்­காக்­கும் முயற்­சி­யி­ லும் தன்னை ஆகு­தி­யாக்­கிய முதல்­மா­வீ­ர­னாக ரிச்­சாட்டின் வர­லாறு அமைந்­தது.

வடக்­கில்..!


கிளி­நொச்சி மாவட்­டத்­தின் நிகழ்வு பிர­தே­சப் பொறுப்­பா­ள­ராக இருந்த அத்­தா­ரின் ஏற்­பாட்­டில் நடை­பெற்­றது. உருத்­தி­ர­பு­ரம் சிவன்­கோ­யி­ லடி, அக்­க­ரா­யன்,கிளி­நொச்சி ஆகிய இடங்­க­ளில் இந்­திய இரா­ணுவ முகாம்­கள் இருந்­த­போ­தும் இவற்­றுக்கு நடு­வில் இருந்த கோணா­வில் அ.த.க பாட­சா­லை­யில் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. வாடகை மோட்­டார் வண்­டி­யில் ஒலி­ பெ­ருக்கி பூட்டி நிகழ்வு பற்றி அறி­விப்­புச் செய்­யப்­பட்­டது. சில வேளை இவர்­க­ளுக்கு இந்­தி­யப்­ப­டை­யி­ன­ரால் தொந்­த­ரவு ஏற்­ப­ட­லாம் எனக்­க­ருதி, நக­ரில் இருந்த சகல ஒலி­பெ­ருக்கி மற்­றும் வாடகை மோட்­டோர் வண்டிக­ளின் உரி­மை­யா­ளர்­கள் நிகழ்­விடத்­துக்கு அழைக்கப்­பட்­ட­னர்.


“வானம் பூமி­யா­னது பூமி ­வா­ன­மா­னது” என்ற பெரு­மாள் கணே­ச­னின் பாடலை பின்­னா­ளில் பிர­பல எழுச்­சி­பா­ட­க­ராக விளங்­கிய S .G சாந்­தன் பாடி­னார். அடி­மைத்­த­னத்­துக்கு எதி­ரான சினி­மாப் பாடல்­களை மாண­வர்­கள் பாடி­னர். (சத்­தி­யமே இலட்­சி­ய­மாய் கொள்­ளடா , உள்­ளத்­திலே உரம் வேண்­டு­மடா போன்ற) “ஓநா­யும் ,சேவல்­க­ளும்” என்ற நவீன குறி­யீட்டு நாட­க­மும் மேடை­யேற்­றப்­பட்­டது.வன்­னி­யில் முதன்­மு­தல் மேடை­யேற்­றப்­பட்ட இக் குறி­யீட்டு நாட­கத்தை நா. யோகேந்­தி­ர­நா­தன் எழு­தி­யி­ருந்­தார். அன்­ரன் அன்­ப­ழ­கன் முக்­கிய கதா­பாத்­தி­ரத்தை ஏற்­றி­ருந்­தார். மாவீ­ரர் நாளுக்­கான சுட­ரேற்­றல் முத­லான நிகழ்­வு­க­ளு­டன் மிகச் சிறப்­பான முறை­யில் அனைத்­தும் நடை­பெற்­றன.மூன்று முகாம் களி­லி­ருந்­தும் இந்­தி­யப்­ப­டை­யி­னர் வந்­தால் எதிர்­கொள்­ளத் தேவை­யான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டி­ருந்த போதும் அசம்­பா­வி­தம் ஏது­மின்றி அனைத்­தும் நடை­பெற்­றன.


மன்­னார்ப் பிராந்­தி ­யத்­தின் சகல மாவீ­ரர் விப­ரங்­க­ளை ­யும் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் அமு­தன் (சுரேஷ் ) தலை­வ­ரி­டம் சமர்ப்­பித்­தி­ருந்­தார். பண்­டி­வி­ரிச்­சான் , நானாட்­டான், கறுக்­காய்க் குளம், முழங்­கா­வில் ஆகிய இடங்­க­ளில் நினை­வேந்­தல் நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பண்­டி­வி­ரிச்­சான் பாட­சா­லை­யில் பிர­தே­சப்­பொ­றுப் பா­ளர் கணே­ஷின் ஏற்­பாட்­டில் நிகழ்வு நடை­பெற்­றது. கவிதை, பேச்சு, நாட­கம் என பல்­வேறு நிகழ்­வு­க­ளின் போட்­டி­க­ளும் முன்­கூட்­டியே ஏற்­பாடு செயப்­பட்­டி­ருந்­தன. நானாட்­டான் நெல் களஞ்­சி­யத்­தில் பிர­தே­சப் பொறுப்­பா­ளர் ஞானி­யின் ஏற்­பாட்­டில் நிகழ்­வு­கள் நடந்­தன. பின்­னா­ளில் தமி­ழீழ நிர்­வாக சேவை­யில் பிர­மு­க­ராக விளங்­கிய சின்­னப்பா மாஸ்­டர் இந் நிகழ்வை திறம்­ப­டச் செய்­வ­தற்­கான ஒத்­து­ழைப்பை வழங்­கி­யி­ருந்­தார்.


கறுக்­காய்க் குளத்­தி­லும் நெற்­க­ளஞ்­சி­யத்­தி­லேயே நிகழ்­வு­கள் நடை­பெற்­றன. பிர­தே­சப்­பொ­றுப்­பா­ளர் பாரதி இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார்.பூந­கரி பிர­தே­சத்­துக்­கான நிகழ்வு முழங்­கா­வில் மகா வித்­தி­யா­யத்­தில் நடை­பெற்­றது. பிர­தே­சப் பொறுப்­பா­ளர் சாம் இதற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்­டி­ருந்­தார். யாழ்.மாவட்­டப் பொறுப்­பா­ள­ராக பொட்­டுவே செயற்­பட்­டார். அவர் தன்­னு­டன் பணி­யாற்­றிக் கொண்­டி­ருந்த ராஜன் (பின்­னா­ளில் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கி­ய­வர்) சூட் ( தவளை நட­வ­டிக்­கை­யின் போது வீரச்­சா­வெய்­தி­ ய­வர்) ஜக்­சன் (தற்­போது புலம்­பெ­யர் நாடொன்­றில் வசிப்­ப­வர்) முத­லா­னோ­ரி­டம் மாவீ­ரர் நாள் அறி­விப்பு பற்­றிக் குறிப்­பிட்­டார். இந்­தி­யப் படை­யி­ன­ரின் நட­வ­டிக்கை தீவி­ர­மா­யி­ருந்­த­தால் சிறு சிறு குழுக்­க­ளாக காலத்­துக்­கேற்ப செயற்­பட்­டுக் கொண்­டி­ருந்­த­னர் புலி­கள். நீர்­வேலி வாத­ர­வத்தை, குப்­பி­ளான், மாத­கல் போன்ற இடங்­க­ளில் இந்த நக­ரும் குழுக்­கள் பெரும்­பா­லும் தங்­கி­யி­ருந்­தன. பகி­ரங்க நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­வது சிர­ம­மென்­ப­தால், சுவ­ரொட்­டி­கள் அடித்து சாத்­தி­ய­மான இடங்­க­ளில் ஒட்­டு­வோம் என ராஜ­னி­டம் தெரி­வித்­தார் பொட்டு.

முதல் சுவ­ரொட்டி


திலீ­பன் காலத்­தில் அர­சி­யற் பணி­களை மேற்­கொண்­ட­வர் என்ற வகை­யில் நடை­மு­றைச் சாத்­தி­ய­மான விட­யங்­கள் பற்றி ராஜ­னின் அபிப்­பி­ரா­யங்­கள் கவ­னத்­திற் கொள்­ளப்­பட்­டன. ‘‘உங்­கள் சுவ­டு­க­ளில் தொட­ ரும் பாதங்­கள்’’ என்­றொரு வச­னத்தை (சுலோ­கம் என்­றும் சொல்­ல­லாம்) எழு­திக் கொண்­டு­போய் பொட்­டு­வி­ டம் காட்­டப்­பட்­டது. அவர் அதை ஏற்­றுக் கொண்­டார். எனி­னும் மக்­கள் மன­தில் இன்­னும் ஆழ­மா­கப் பதிய வைப்­பது எப்­படி என்று சிந்­தித்­த­ வாறே தொடர்ந்து செய­லில் இறங்­கி­னார்.


எங்­கே­யா­வது கறுப்பு வர்­ணம் (பெயின்ற்) எடுத்து வரும்­படி சொன்­னார். வெளியே சென்­ற­வர்­கள் ஒரு வாளி­யில் அத­னைக் கொண்டு வந்­த­னர். வெள்­ளைத் தாள் ஒன்றை எடுத்த பொட்டு அரு­கில் நின்ற சூட்டை அழைத்து அவ­ரது காலின் அடிப்­பா­தத்­தில் பெயின்றை அடித்து அத்­தா­ளில் பதிய வைத்­தார். அச்­சொட்­டாக கால் பதிந்­தது. எனி­னும் அங்கு நின்ற அன்­னை­யொ­ரு­வர் இவ­ரது கால் சிறி­ய­தாக உள்­ளது; வேறொ­ரு­வ­ரின் கால் பெரி­தாக இருக்­கு­மா­யின் நன்­றாக இருக்­கும் எனத் தனது அபிப்­பி­ரா­யத்தை வெளி­யிட்­டார். அது சரி­யா­கவே இருந்­தது பொட்­டு­வுக்கு. உடனே அரு­கில் நின்ற ஜக்­ச­னின் காலில் மை பூசப்­பட்­டது. அது மிகப் பொருத்­த­மாக இருந்­தது. ராஜன் எழு­திய வச­னத்­தில் பாதங்­கள் என்ற சொல்லை நீக்­கி­விட்டு அதற்­குப் பதி­லாக …. (டொட் டொட்) என குறிப்­பிட்­டார் பொட்டு.


அந்த வகை­யில் தயா­ரிக்­கப்­பட்ட சுவ­ரொட்­டியே முதன் முத­லில் மாவீ­ரர் நாளுக்­கென மக்­க­ளின் பார்­வைக்கு வந்­தது. துவிச்­சக்­க­ர­வண்டி மூல­மாக பல்­வேறு இடங்­க­ளுக்­கும் கொண்டு சென்று ஒட்­டி­னர் புலி­கள்.


ஒதுங்­கிய இரா­ணு­வம்


புத்­தூர் முகா­மி­லி­ருந்து புறப்­பட்ட இந்­திய இரா­ணு­வத்­தி­னரை நாட­கக் கலை­ஞர் செல்­வம் மற்­றும் பாலன் முத­லா­னோர் வழி மறித்­த­னர். மாவீ­ரர் நாள் தொடர்­பான விட­யங்­கள் இருப்­ப­தால் வெளியே வரா­ம­லி­ருக்­கு­மாறு அவர்­கள் இரா­ணு­வத்­தி­டம் கூறி­னர். தாங்­கள் எப்­ப­டி­யும் வெளி­யேற வேண்­டி­ய­வர்­கள் தானே என்ற நினைப்­பிலோ என்­னவோ மக்­க­ளின் கருத்­துக்கு மதிப்­ப­ளித்து திரும்­பிச் சென்­ற­னர் இந்­தி­யப் படை­யி­னர்.
புலி­க­ளின் கட்­ட­ளைப் பணி­ய­க­மான மண­லாறு’ 14: முகா­மில் தேவர் அண்­ணா­வோடு இணைந்து ஏற்­பா­டு­களை கவ­னிக்­கு­மாறு தலை­வர் அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார். அந்த வகை­யில் பெண் போரா­ளி­கள் உட்­பட அனை­வ­ரும் உணர்­வு­பூர்­வ­மாக பணி­க­ளில் ஈடு­பட்­ட­னர். புலி­க­ளைத் தவிர வேறு எந்த விடு­தலை இயக்­க­மும் காட்­டுக்­குள் இருந்து ஒலி­பெ­ருக்கி மூலம் பாடல்­களை இசைக்க விட்டு தமது தோழர்­களை நினைவுகூர்ந்­தி­ ருக்­காது.


இந்­நி­கழ்­வு­கள் நடை­பெ­றும்­போ­தும் இந்­தி­யப் படை வந்­தால் எதிர்­கொள்­வ­தற்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­க­ளில் தளர்ச்சி ஏதும் இருக்­க­வில்லை.
நிகழ்­வு­களை கார்த்­திக் மாஸ்­டர் புகைப்­ப­டம் எடுத்­துக் கொண்­டி­ருந்­தார். இவ­ருக்கு ஏற்­க­னவே காட்­டுக்­குள் வைத்தே புகைப்­ப­டக் கரு­வி­யைக் கையாள்­வது, அதன் நுணுக்­கங்­கள் என்­ப­வற்­றைக் கிட்டு கற்­பித்­தி­ருந்­தார். தலை­வ­ரின் உரை முத­லான விட­யங்­கள் அடங்­கிய நிகழ்ச்சி நிரலை சங்­கர் மற்­றும் தேவர் அண்ணா திட்­ட­மிட்­டி­ருந்­த­னர்.


1990 ஆம் ஆண்டு நள்­ளி­ரவு 12 மணிக்கு மாவீ­ரர் நாள் நிகழ்­வு­கள் ஆரம்­ப­மா­கின. 12 மணி இரு நிமி­டத்­துக்கு சுட­ரேற்­று­மாறு விடுத்த அழைப்­புக்கு மதிப்­ப­ளித்­தி­ருந்­த­னர் மக்­கள். ஆல­யங்­க­ளில் மணி­கள் ஒலிக்க வைக்­கப்­பட்­டன. அத­னைத் தொடர்ந்து மக்­கள் சுட­ரேற்ற தலை­வ­ரின் உரை வானொ­லி­யில் ஒலி­ப­ரப்­பா­னது. வீட்டு வாச­லில் சுட­ரேற்­றிய சம­யம் மழை பெய்­தது. அத­னால் சுடர் அணைந்து விடா­ம­லி­ருக்க குடை பிடித்­த­னர். இந்­தக் காட்சி ஒரு ஓவி­ய­ரின் மன­தில் தைத்­தது. அவர் இக்­காட்­சி­யைத் தத்­ரூ­ப­மாக வரைந்­தி­ருந்­தார். தீப­மேற்­றல், மணி­யோசை ஒலிக்­கச் செய்­தல் முத­லான விட­யங்­க­ ளெல்­லாம் கவி­ஞர் புது­வை­ அண்­ணா­வின் ஆலோ­ச­னையே. அத­னைத் தலை­வர் ஏற்­றி­ருந்­தார். மாவீ­ர­ரின் பெயரை வீதி­க­ளுக்கு சூட்­டு­வ­தும் நடை­பெற்­றது.


மாவீ­ரர் பெற்­றோ­ரைக் கெள­ர­வித்­தல் நிகழ்­வும் இந்த ஆண்­டி­லேயே ஆரம்­ப­மா­கி­விட்­டது. வலி­கா­மம் பகுதி மாவீ­ரர்களது பெற்­றோர் கோப்­பாய் ஆசி­ரிய கலா­சா­லை­யி­லும் வட­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் நெல்­லி­யடி மத்­திய கல்­லூ­ரி­யி­லும் தென்­ம­ராட்­சி­யைச் சேர்ந்­தோர் டிறி­பேர்க் கல்­லூ­ரி­யி­லும் தீவ­கத்­தைச் சேர்ந்­தோர் வேல­ணை­யி­லும் கெள­ர­விக்­கப்­பட்­ட­னர். புதிய உடை­கள், அன்­ப­ளிப்­பு­கள் வழங்­கல், விருந்­தோம்­பல் முத­லான விட­யங்­கள் பெற்­றோரை நெகிழ வைத்­தன. தாங்­கள் இழந்த பிள்­ளை­களை அங்­கி­ருந்த போரா­ளி­க­ளின் வடி­வில் கண்­ட­னர். இந்­திய இரா­ணுவ காலத்­தில் ஒரு போராளி வீரச்­சா­டைந்­தார். அவ­ரது உடல் ஓரி­டத்­தில் எரி­யூட்­டப்­பட்­டது. ஏதோ அனா­தை­கள் போல எங்­கள் சகாவை எரிப்­பது ஒரு போரா­ளி­யின் மன­தைத் தைத்­தது. விடு­த­லைக்­கா­கப் புறப்­பட்­ட­ வர்­கள் என்­றா­லும் அவர்­க­ளுக்­கான நிகழ்வு கெள­ர­வ­மாக நடத்­தப்­பட வேண்­டும்– எங்­கள் கட்­டுப்­பாட்­டில் ஒரு நிலம் இருக்­கு­மா­யின் தனிப் போரா­ளி­க­ளுக்­கென ஒரு சுடலை அமைக்க வேண்­டும் என ராஜன் நினைத்­தார்.

துயி­மில்­லங்­க­ளின் உரு­வாக்­கம்


நெருக்­க­டி­கள் தானே புதிய சிந்­த­னை­களை தோற்­று­விக்­கும். எம்.ஜி.ஆர். இள­மை­யில் வறுமை கார­ண­மாக பட்­டினி கிடக்க வேண்­டி­யேற்­பட்­டது. அந்த வலி மன­தில் ஆழ­மா­கப் பதிந்­தி­ருந்­த­தால் தான், தாம் முத­ல­மைச்­ச­ராக வந்­த­போது சத்­து­ண­வுத் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார். தான் சாப்­பி­டக் கூடிய நிலை­யில் இருந்­தி­ருந்­தால் நிச்­ச­யம் கல்­வியை இடை­நி­றுத்­தி­யி­ருக்க மாட்­டார். இந்த நிலை தனது ஆட்­சி­யில் குழந்­தை­க­ளுக்கு ஏற்­ப­டக்கூடாது . முத­லில் உண­வுக்­கா­க­வே­னும் பாட­சா­லை­க­ளுக்­குப் பிள்­ளை­கள் வரட்­டும் என நினைத்­தார்.


அது­போல் வாழைத்­தோட்­டத்­தில் சேரி வாழ்க்­கையை அனு­ப­வித்­த­தால்­தான் ஒவ்­வொரு குடும்­பத்­துக்குத் தனித்­தனி வீடு­கள் அமைக்­கப்­பட வேண்­டு­மென்று பிரே­ம­தாஸ நினைத்­த­ப­டி­யால்­தான் வீட்­டுத் திட்­டத்­தில் அதீத அக்­கறை காட்­டி­னார். 10 லட்­சம் வீட்­டுத் திட்­டத்தை நிறை­வேற்­றி­னார். அதைப் போன்­றதே போரா­ளி­க­ளுக்­கான தனிச் சுடலை என்ற சிந்­த­னை­யும். ராஜன் யாழ்.மாவட்ட அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ரா­ன­தும் தனது எண்­ணத்­தைச் செயற்­ப­டுத்த முனைந்­தார். முத­லில் நிலம் வேண்­டுமே? சிறைச்­சா­லைத் திணைக்­க­ ளத்­துக்கு சொந்­த­மான நிலம் கோப்பாய்– இரா­ச­பா­தை­யில் உள்­ளது என்ற தக­வலை ஒரு போராளி தெரி­வித்­தார். அத­னையே போரா­ளி­க­ளின் சுட­லை­யாக்­கு­வோம் என முடி­வெ­டுத்­தார் மாவட்ட அர­சி­யல் துறைப் பொறுப்­பா­ளர் ராஜன். காணி­யைத் துப்­பு­ர­வாக்­கு­தல் போன்ற பணி­க­ளில் பொ.ஐங்­க­ர­நே­ச­னின் ‘தேனீக்­கள்’ அமைப்­பைச் சேர்ந்த மாண­வர்­க­ளும் ஈடு­பட்­ட­னர். அடுத்து சுட­ லை­யை­யும் வடி­வ­மைக்க வேண்­டும். யாழ்.நக­ரப் பொறுப்­பா­ள­ராக இருந்த கமல் மாஸ்­டர் (வீரச்­சா­வ­டைந்­து­விட்­டார்) தனது பணி­ம­னைக்கு முன்­னால் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்த கட்­டட வடி­வ­மைப்­பா­ளர் ஒரு­ வர் இருக்­கி­றார் என்று தெரி­வித்­தார். அவ­ரையே வர­வ­ழைத்து சுட­லைக்­கான வடி­வம் அமைக்­கப்­பட்­டது. வடி­வ­மைப்­பா­ளர் கோரி­ய­படி கந்­தர்­ம­டத்­தி­லி­ருந்த பொறி­யி­ய­லா­ளர் பங்­க­ளிப்­பும் கிடைத்­தது. ஏற்­க­னவே அறி­மு­கம் இல்­லா­த­போ­தும் இரு­வ­ரும் ஆர்­வ­மு­டன் இப்­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர். பொற்­பதி வீதி­யி­லுள்ள கட்­ட­டத் தொழி­லா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பில் நடந்த பணி­க­ளில் உடலை எரிப்­ப­தற்­கான மேடை­யும் அடங்­கி­யி­ருந்­தது.
இதன்­பின்­னர் வீரச்­செய்­தி­ய­வர் ஒரு கிறிஸ்­த­வர். அவரை எப்­படி எரிப்­பது என்ற பிரச்­சினை. அது­வும் தனிச் சுட­லை­யில் ஏன் எரிப்­பான் என்­பது அடுத்த கேள்வி. விவ­கா­ரம் எழுந்­த­தும் ராஜன் அங்கு சென்­றார். ‘‘பொதுச் சுட­லை­யில் கண்ட காவாலி, கழி­ச­றை­க­ளை­யும் எரித்­தி­ருப்­பா­ர்­கள். எங்­கள் மகனோ புனி­த­மான மாவீ­ரர். காவா­லி­களை எரித்த இடத்­தில் இவ­ரை­யும் எரிப்­பதை ஏற்­க­மாட்­டார்­கள் தானே?” எனக் கேட்­டார். யதார்த்­தத்­தைப் புரிந்­த­னர் பெற்­றோர். மேடை­யில் இவ­ரது சட­லம் எரிப்­பதை ஒளிப்­ப­ட­மாக எடுத்து தலை­வ­ருக்­குக் காண்­பிக்­கப்­பட்­டது. ‘‘தனி மயா­னம் நல்­ல­து­தான்; நாங்­கள் ஏன் எரிக்க வேண்­டும்? புதைக்­க­லாமே?’’ இந்­தக் கேள்வி தான் வித்­து­டல்­க­ளைப் புதைக்­கும் வழக்­குக்கு அத்­தி­பா­ரம். அடுத்­த­தாக வீரச்­சா­வெய்­து­ப­வ­ரின் வீட்­டுக்கு சென்­ற­போது அங்­கும் பிரச்­சினை எழுந்­தது. ஏன் எங்­கள் பிள்­ளை­யைச் சுட­லை­யில் எரிக்­கா­மல் புதைக்க வேண்­டும்? என்று கேட்­ட­னர். நீங்­கள் மக­னின் நினைவு எழும் போதெல்­லாம் அந்த இடத்துக்­குச் சென்று கும்­பி­ட­லாம். அழ­லாம். பூப்­போ­ட­லாம் என்று விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டது.


வர­லாற்­றில் துயி­லு­மில்­லத்­தில் முதன் முத­லாக விதைக்­கப்­பட்­ட­வர் என்ற வர­லாறு சோலை என்ற மாவீ­ர­ருக்­குக் கிடைத்­தது. மாவீ­ரரை விதைக்­கு­முன் வாசிக்­கப்­ப­டும் வாச­கங்­க­ளை­யும் (மாவீ­ரர் பெயர் தவிர்த்­தது )புதுவை அண்­ணாவே எழு­தி­னார்.


மாவீ­ரர் பதி­வு­கள்


இந்­தக்­கா­லப் பகு­தி­க­ளிலே மாவீ­ரர் பணி­மனை முழு அள­வில் செயற்­பட ஆரம்­பித்­தது. இந்­தி­யப் படை­யி­ன­ரின் வரு­கைக்கு முன்­னர் மாவீ­ரர்­க­ளின் விப­ரம் பேணப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் இந்­தி­யப் படை­யி­ன­ரின் காலத்­தில் புதி­தாக இணைந்து கொண்­டோர் பற்­றிய விவ­ரம் தலை­மைக்­குத் தெரிந்­தி­ருக்க வாய்ப்­பில்லை. அந்­தக் காலத்­தி­லேயே இணைந்து அக்­கா­லப் பகு­தி­யி­லேயே சிலர் மாவீ­ர­ரா­கி­யும் இருந்­த­னர். எனவே இவ்­வா­றான விட­யங்­க­ளைத் தெரி­விக்­கும்­படி பகி­ரங்க அறி­விப்பு விடுக்­கப்­பட்­டது. இதற்கு பொன்.பூலோ­க­சிங்­கம் என்ற சட்­டத்­த­ர­ணி­யின் பங்­க­ளிப்பு காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தது. அவர் நாள்­தோ­றும் தினக்­கு­றிப்பு (டயரி) எழு­தும் பழக்­க­மு­டை­ய­வர். பத்­தி­ரி­கை­க­ளில் வரும் மாவீ­ரர் இழப்பு, பொது­மக்­கள் இழப்பு (படையினர் மற்­றும் இன­வா­தி­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டவை) குறித்து அவர் எழு­திய குறிப்­பு­களே மாவீ­ரர் பட்­டி­யலை கணி­ச­மான அளவு சரி­யாக்க உத­விற்று. தாவ­டி­யில் தும்­புத் தொழிற்­சா­லை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விமா­னக் குண்­டு­ வீச்­சில் லூக்­காஸ் என்­ப­வர் மாவீ­ர­ரா­னார். ஆனால் இந்த மாவீ­ரர் பற்­றிய விவ­ரம் எவ­ருக்­கும் தெரி­யாது. நாவ­லப்­பிட்­டி­யைச் சேர்ந்­த­வர் என்று மட்­டுமே தெரி­யும்.
1990 இல் ஈழ­நா­தம் நாளி­தழ் ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது வீர­வ­ணக்க விளம்­ப­ரங்­கள் வெளி­வந்­தன. தங்­கள் பிள்­ளை­களை, உற­வு­களை, நட்­பு­களை நினை­வு­கூர வச­தி­யான சில­ரால் மட்­டுமே முடிந்­தது. அதே­சம்­ப­வங்­க­ளில் வீரச்­சா­வெய்­திய ஏனைய மாவீ­ரர்­களை எவ­ரும் நினை­வு­கூ­ர­வில்லை. இத­னைக் கண்­ணுற்ற ஒரு போராளி அப்­போ­தைய அர­சி­யல் தலை­மையை வகித்த மாத்­த­யா­வி­டம் இவ்­வி­ட­யம் பற்­றிக் குறிப்­பிட்­டார். நாளாந்­தம் அதே நாளில் வீரச்­சா­வெய்­தி­யோர் விவ­ரம் வெளி­யி­டப்­பட வேண்­டும் என்ற ஆதங்­கத்­தைத் தெரி­வித்­தார். வரு­டம் 365 நாளில் மட்­டு­மல்ல 4 வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றை­வ­ரும் (லீப்­வ­ரு­டம் ) பெப்­ர­வரி 29 இல் கூட மாவீ­ரர் விவ­ரம் உண்டு என்­ப­தும் தெரி­ய­வந்­தது. இதற்­கென இயங்­கி­வந்த பணி­மனை இரண்டு மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யான பொன்.தியா­கம் அப்­பா­வின் பொறுப்­பில் ஆரம்­பிக்­கப்­பட்டு மாவீ­ரர் பணி­ம­னை­யு­டன் இணைக்­கப்­பட்­டது. (பின்­னர் இவர் மூன்று மாவீ­ரர்­க­ளின் தந்­தை­யா­னார். பள்­ள­ம­டு­வில் இவ­ரது மக­ளும் வீரச்­சா­வ­டைந்­தார்) பெய­ரில், திக­தி­யில், முக­வ­ரி­யில் என பல்­வேறு தவ­று­க­ளு­டன் இருந்த பட்­டி­யல்­கள் தியா­கம் அப்­பா­வின் முயற்­சி­யால் திருத்­தப்­பட்­டன. மாவீ­ரர் நிகழ்­வு­கள் பற்­றிய சுற்­று­நி­ரு­பங்­கள் இந்­தப் பணி­ம­னை­யி­னால் விடுக்­கப்­பட்­டன. இந்­தப்­ப­ணி­மனை கோரும் விவ­ரங்­களை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என பிராந்­தி­யத் தள­ப­தி­க­ளுக்­கும் தலை­வ­ரும் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தார். எந்­தெந்­தத் துயி­லு­மில்­லங்­க­ளில் யார் ,யார் விதைக்­கப்­பட்­டார்­கள், வித்­து­டல் கிடைக்­காத யார் யாருக்கு எங்­கெங்கு நினை­வுக்­கல் உள்­ளன போன்ற முழு விவ­ரங்­க­ளும் இந்­தப்­ப­ணி­ம­னை­யில் இருந்­தது.இதன் மூலம் மிக­வும் காத்­தி­ர­மான பணியை செய்­து­வந்­தார் பொன் தியா­கம் அப்பா.

 

‘‘தாயகக் கனவுடன்..”


1992 ஆம் ஆண்­டுக்­கான மாவீ­ரர் நாள் ஏற்­பா­டு­கள் குறித்த ஆலோ­ச­னைக் கூட்­டம் தலை­வர் தலை­மை­யில் நடந்­தது. அப்­போது மக­ளிர் அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ள­ராக விளங்­கிய ஜெயா ஒரு ஆலோ­ச­னையை முன்­வைத்­தார். மாவீ­ரர் பெற்­றோ­ரும் போரா­ளி­க­ளும் இணைந்து பாடக் கூடிய ஒரு பாடல் உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்­றார். உடனே தலை­வர் புது­வை­ யண்­ணா­ வைப் பார்க்க கையைப் பொத்தி பெரு­வி­ரலை உயர்த்­திக் காட்­டி­னார் புதுவையண்ணா.


ஈழ­நா­தம், விடு­த­லைப் புலி­கள், சுதந்­தி­ரப் பறவை வெளி­வந்த மாவீ­ரர்­கள் பற்­றிய கட்­டு­ரை­களை தனி­யான நூல்­க­ளாக வெளி­யிட வேண்­டும் என்ற அறி­வ­னின் யோச­னை­யும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டது. துயி­லு­ மில்­லத்­துக்கு வரு­வோர் தமது பிள்­ளை­க­ளின் நினை­வாக வீடு­க­ளில் நாட்­டு­வ­தற்கு அவர்­க­ளின் கல்­ல­றை­கள் மற்­றும் நினை­வுக் கற்­க­ளுக்கு முன்­னால் தென்னை போன்ற பயன்­தரு மரங்­களை வைக்க வேண்­டும் என்று பொருண்­மிய மேம்­பாட்டு நிறு­வ­னத்­தி­ன­ரால் வைக்­கப்­பட்ட யோச­னை­யும் ஏற்­கப்­பட்­டது. இந்த யோசனை இன்று பல்­வேறு வகை­யி­லும் பின்­பற்­றப்­ப­டு­வது ஆரோக்­கி­ய­மான விட­யம்.


ஜெயா­வின் கருத்தை உட­ன­டி­யாக செய­லாக்­கி­னார் புது­வை­யண்ணா. அது­தான் ‘‘தாய­கக் கன­வு­டன்’’ என்று ஆரம்­பிக்­கும் மாவீ­ரர் பாடல். மன­தைப் பிழி­யும் இப்­பா­டல் இன்­று­வரை மாவீ­ரர் குடும்­பத்­தி­னர், முன்­னாள் போரா­ளி­கள்­மற்­றும் தமிழ் மக்­கள் மன­தில் நிலைத்து நிற்­கி­றது. கண்­ணன் இசை­ய­மைக்க வர்­ண­ரா­மேஸ்­வ­ரன் குர­லில் ஒலித்த பாடல் இது. கோப்­பாய் துயி­லு­மில்­லத்­தில் தனக்­குப் பக்­கத்­தில் நின்று நேரில் அத­னைப் பாட­வேண்­டும் என்று அப்­போ­தைய அர­சி­யல்­து­றைப் பொறுப்­பா­ளர் தமிழ்ச் செல்­வன் வர்­ண­ரா­மேஸ்­வ­ர­னின் வேண்­டிக் கொண்­டார். ஒலி­பெ­ருக்­கி­யி­லும் இந்­தப்­பா­டல் இசை­யு­டன் ஒலித்­தது.
முதன்­மு­த­லாக இவ்­வ­ரி­க­ளைக் கேட்ட மாவீ­ரர் குடும்­பத்­தி­னர் கதறி அழு­த­னர். இப்­பா­ட­லின் ஒலி­நா­டாவை ஒரு போரா­ளி­யி­டம் (கரும்­ப­றவை) வழங்­கிய புது­வை­யண்ணை முதன் வரி­க­ளைக் கேட்­கும்­போது உங்­க­ளுக்கு நினை­வில் வரும் சம்­ப­வங்­க­ளை­யும் கருத்­துக்­க­ளை­யும் எழு­தித் தாருங்­கள் என்­றார். அந்த விட­யம் வெளிச்­சம் இத­ழில் வெளி­வந்­தது. ஒரு மாவீ­ர­னின் தாயா­ரான மல­ரன்­னை­யும் அன்­றைய மாவீ­ரர் நாள் குறித்து கட்­டுரை எழு­தி­யி­ருந்­தார்.


மாறிய நேரம்


1992 மாவீரர் நாள் பொதுச்­சு­டரை தமிழ்ச்­செல்­வன் ஏற்­றி­னார்.1991 இல் இதனை மாத்­தயா ஏற்­றி­யி­ருந்­தார். மாவீ­ரர் பாட­லில் வரும் ‘‘நள்­ளிரா வேளை­யில் நெய் விளக்­கேற்­றியே நாமுமை வணங்­கு­கி­றோம்’’ என்ற வரி ‘‘வல்­லமை தாரு­மென்­றுங்­க­ளின் வாச­லில் வந்­துமே வணங்­கு­கின்­றோம்’’ எனப் பின்­னா­ளில் மாற்­றப்­பட்­டது. ஏனெ­னில் முன்­னர் நள்­ளி­ர­வி­லேயே மாவீ­ரர் நாள் நினைவுகூரப்­பட்­டது. பின்­னரே தற்­போதுள்ள மாலை 6.05 க்கு மாவீ­ரர் சுடர் ஏற்­றும் முறை வழக்­கத்­துக்கு வந்­தது . தற்­போ­தைய நேரமே முதல் மாவீ­ர­ரான சங்­கர் வீரச்­சா­வெய்­திய கணம், 2009 மே 15 ஆம் நாள் வரை 35 ஆயி­ரம் அள­வில் மாவீ­ரர்­க­ளின் விவ­ரம் கிடைத்­தன. இதன் பின்­னர் தர­வு­க­ளைப் பேணவோ வழங்­கவோ இய­லக் கூடிய நிலை­யில் சூழல் அமை­ய­வில்லை.


https://www.meenagam.com/மாவீரர்-நாள்மரபாகி-வந்த/

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.