Jump to content

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடு - இலங்கைக்கான வாய்ப்பினை அதிகரித்துள்ளதா.?

Screenshot-2020-11-26-12-12-16-398-com-a 

சமகால உலக ஒழுங்கில் சர்வதேச அரசியலை கணிப்பிட்டு செயல்படும் நாடுகளும் ஆட்சியாளரும் பாதுகாக்கப்படும் நிலையொன்று வளர்ந்து வருகிறது. அத்துடன் அத்தகைய அரசியலை உருவாக்கும் போது எதிரியின் பலவீனத்தை அளந்து கொள்ளவும் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்திருந்து நகர்த்துவதுமே பிரதான விடயமாகிவிட்டது. அத்தகைய அரசியல் நகர்வு ஒன்று கடந்த 15.11.2020 அன்று நிகழ்ந்துள்ளது. அதனை பொருளாதார உறவாகப்பார்த்தால் மட்டும் போதாது அதனூடான அரசியல் ஒன்றுக்கான கதவும் திறக்கப்பட்டுள்ளது. அது ஆசிய-பசுபிக் வட்டகைக்கான அரசியல் பொருளாதாரமாகவே தெரிகிறது. அதனால் பெரும் தேசங்கள் மட்டுமல்ல இலங்கையும் அதிக பாதுகாப்பினை புவிசார் அரசியலிலும் பூகோள அரசியலிலும் அடைந்துள்ளது. இக்கட்டுரையும் அத்தகைய அரசியல் பொருளாதாரத்தை தேடுவதாக அமைந்துள்ளது.

15.11.2020 அன்று ஆசியான் அமைப்பின் (ASEAN) 10 உறுப்பு நாடுகளும் பசுபிக் பிராந்திய நாடுகளான அவுஸ்ரேலியாஇ சீனாஇ ஜப்பான்இ நியூசிலாந்துஇ தென்கொரியா ஆகிய ஐந்து நாடுகள் உட்பட 15 நாடுகள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய அமைப்பாக பிராந்திய பொருளாதார விரிவாக்க ஒத்துழைப்பு ( Regional Comprehensive Economic Partnership) விளங்குகிறது. 2011 ஆம் ஆண்டு ஓகஸ்ட் இல் நிகழ்ந்த கிழக்காசிய உச்சி மகாநாட்டில் சீன மற்றும் ஜப்பானிய பொருளாதார அமைச்சர்களது உரையாடல் விரிவான பொருளாதார வழிமுறை குறித்து வெளிப்படுத்த ஆரம்பித்தது.இதன் தொடர்ச்சியாக 2012 இல் கம்போடியாவில் நடைபெற்ற ஆசியான் உச்சி மகாநாட்டில் பிராந்திய பொருளாதாரம் பற்றிய முதல் கட்ட பேச்சுக்கள் ஆரம்பமாகின. 2012 முதல் 2020 முதல் 29க்கு மேற்பட்ட கூட்டங்களை நடாத்தியதோடு கடந்த 15.11.2020 அன்று வியட்நாம் தலைநகரில் காணொளி மூலம் நிகழ்ந்த மாநாட்டில் 15 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் செயலாளர்கள் மற்றும் துறைசாரர் நிபுணர்கள் கலந்து கொண்டு உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர்.

உலகளாவிய ரீதியில் பாரிய வர்த்தக பொருளாதார வர்த்தக கூட்டொன்று ஆசிய பசுபிக் நாடுகளில் வலுவான பொருளாதார அமைப்பு என்றும் கூறப்படுகின்றது. உலக மக்கள் தொகையில் 30% இனை ஈடு செய்யும் இந் நாடுகள் உலக வர்த்தகத்தில் 39% பங்களிப்பை வழங்குகின்ற நாடுகளாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஏறக்குறைய 49.5 ரில்லியன் டொலர் முதலீட்டைக் கொண்ட நாடுகள் எனவும் அழைக்கப்படுகின்றது.

இவ் உடன்படிக்கை 15 நாடுகளுக்கும் இடையில் உற்பத்திப் பொருட்களின் தரம், விலைக் கட்டுப்பாடு, உதிரிப் பாகங்களின் பரிமாற்றம், தேவையான வளப் பங்கீடு, தொழிநுட்ப உதவி, உற்பத்தித் திறன், ஊக்குவிப்பு ஆகியவற்றை செயல்படுத்துவதென வரையறுத்திருப்பதோடு அதற்கான விதிமுறைகளையும் உருவாக்கி உள்ளது. இப் பிராந்திய பொருளாதாரக் கூட்டின் பிரதான இலக்காக வர்த்தகத்தை ஊக்குவித்தல், சுதந்திரமான வர்த்தகப் பொறிமுறையை உருவாக்குதல், முதலீட்டை அதிகரித்தல், பிராந்திய நாடுகளுக்கிடையில் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்தல், நாடுகளுக்கு இடையில் ஏற்றுமதியைப் பலப்படுத்துதல் போன்ற அடிப்படையில் பிராந்தியக் கூட்டை வலுப்படுத்துவதாக உள்ளது.

இவ் அமைப்பை ஆரம்ப கட்டத்தில் இருந்து 28வது கூட்டத் தொடர் வரை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கலந்து கொண்டிருந்தது. ஆனால் தாய்லாந்தில் நடைபெற்ற அக் கூட்டத் தொடரில் இந்திய சார்பு நிலையில் முன் வைக்கப்பட்ட முக்கியமான கோரிக்கைகளை பிராந்தியக் கூட்டு ஏற்கத் தவறியதன் விளைவாக இவ் உடன்பாட்டில் கையெழுத்திடாது விலகியமைக்கான காரணமாக இந்திய உள்துறை அமைச்சர் அமீர்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகின்ற போது இப் பிராந்திய ஒத்துழைப்பு உண்மை நோக்கத்தைப் பிரதிபலிக்கவில்லை என்றும் விளைவுகள் நியாயமானவையாக இல்லை என்றும் இறக்குமதி உயர்வுக்கு எதிராக போதிய பாதுகாப்பு இல்லை என்றும் சீனாவுடன் போதிய வேறுபாடு இந்தியாவுக்கு உண்டு என்றும் அடிப்படை விதிகளையும் சந்தை அமைப்பு முறையையும்இ கட்டணமில்லாத தடைகள் போன்றவை தொடர்பில் நம்பகத் தன்மையோ உத்தரவாதமோ இல்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் இந்தியா கூறிய காரணங்கள் பொருத்தமற்றவை என்றும் இந்தியா இவ் ஓத்துழைப்பு நிறுவனத்தில் இணைவதற்கான அனைத்து ஒழுங்குகளும் தயாராக உண்டு என்றும் சிங்கப்பூர் வர்த்தக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேற்குறித்த பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு அமையமானது பிராந்திய அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.

முதலாவது கொவிட் 19 பரவலுக்குப் பின்னர் பிராந்திய அடிப்படையில் அவ்வாறே உலகளாவிய ரீதியிலும் புவிசார் பொருளாதாரம் (புநழ- நுஉழழெஅiஉள) ஒன்றுக்கான வாய்ப்புக்களும், தேவைப்பாடும் அதிகரித்து வருகின்றது. அதன் ஒரு பரிமாணமானது ஆசிய பசுபிக் நாடுகளில் பொருளாதார ஒத்துழைப்பும் சீனாவின் தலைமையில் உருவாகி இருக்கிறது. இது சீனாவுடனான வர்த்தக உறவும் அதன் முக்கியத்துவமும் உணரப்பட்டது போல் பிராந்திய உற்பத்தியின் பரிமாற்றமும் இலகுவானதும் சுமூகமானதுமான சூழலை உருவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது சீனாவின் அரசியல் பலத்தை அதிகரித்துள்ளது என்ற வாதம் ஏற்றுக் கொள்ளப்படும் அளவுக்கு அதன் பொருளாதாரப் பலமும் பிராந்தியப் பொருளாதாரப் பலமும் அதிகரிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளது. கொவிட் 19 ஒரு பொருளாதாரத் தேக்கத்தை நாடுகளுக்கு இடையில் இனங்காண வைத்துள்ளது. அதிலும் பிராந்தியங்கள் முதல் நெருக்கடி மையங்களாக மாறியுள்ளன. அவற்றின் உற்பத்திப் பரிமாணங்கள் அத்தகைய நெருக்கடியில் அகப்பட்டு;ளளன. அதிலிருந்து பிராந்திய பொருளாதா விரிவாக ஒத்துழைப்பு இலகுவான நடைமுறையாக ஆசிய-பசுபிக் பிராந்தியத்தை மாற்றுகிறது என்பது 15 நாடுகளாலும் உணரப்படுகின்றது.

இரண்டாவது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிற்பாடு பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு (TPP)என்ற அமைப்பிலிருந்து 2017 அமெரிக்கா விலகியதை அடுத்து அத்தகைய பொருளாதார ஒத்துழைப்பு முடிபுக்கு வந்தது. இதனை அடுத்து ட்ரம்பின் தலைமையில் இந்தோ -பசுபிக் தந்திரோபாயக் கூட்டொன்று ஏற்படுத்தப்பட்டது. அதன் வளர்ச்சியாக குவாட் என்ற அமைப்பு அமெரிக்கா, அவுஸ்ரேலியா, இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்வாங்கி உருவாக்கப்பட்டது. அது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் 'ஒரே சுற்று ஒரே பாதை" எனும் சீன விரிவாக்கத்தைத் தடுப்பதாக அமைந்திருந்தது. இச் சூழலில் மேற்குறித்த 15 நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பானது அமெரிக்க இந்தியக் கூட்டின் இந்தோ பசுபிக் தந்திரோபாயத்தையும் குவாட் அமைப்பின் பாதுகாப்பு நகர்வுகளையும் தகர்க்க ஆரும்பித்துள்ளது. குறிப்பாக ஜப்பான், அவுஸ்ரேலியா இரண்டு நாடுகளும் சீனா தலைமையிலான வர்த்தக பொருளாதார ஒழுங்கமைப்பில் இணைந்தமை அமெரிக்க, இந்திய அணிக்குப் பெரும் சவாலாக மாறியது. தற்போது ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் பலம் அதிகரித்து வருகின்றது.

மூன்றாவது உலகளாவிய ரீதியில் மிக நீண்ட காலமாக நிலைத்திருக்கும் பொருளாதார ஒத்துழைப்பு அமையமான ஆசியான் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பில் இணைந்திருப்பது சீனாவின் பலத்தை இப் பிராந்தியத்தில் அதிகரிக்க வைத்துள்ளது. குறிப்பாக நப்டாவின் (NAFTA) தோல்வியும், சார்க் அமைப்பின் (SAARC)தொழிற்படு திறனின்மையும்இ ஐரோப்பிய யூனியனின் (EU-Brixt) உடைவும் ஆசியான் (ASEAN) அமைப்பிற்கான தனித்துவத்தை அடையாளப்படுத்துகின்றது. ஒரு வகையில் குறிப்பிடுவதானால் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் வெற்றிகரமான பொருளாதார ஒத்துழைப்பு அமையமாக ஆசியான் விளங்குகின்றது. இது ஆசிய பசுபிக் நாடுகளுக்கு பலமான வர்த்தகக் கூட்டாகவே அமைந்துள்ளது.

எனவே பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு கொவிட் 19க்குப் பின்னான பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்ட அம்சமாகும். அதற்கான இலக்கும் செயல்பாடும் வெற்றிகரமானதாக அமைவதற்கு புவிசார் அரசியல் பொறிமுறை பாரிய ஒத்துழைப்பை ஏற்படுத்தக் கூடியது. உற்பத்தியும் பரிமாற்றமும் பிராந்தியங்களுக்குள் பரிமாற்றப்படுகின்ற போது அது ஒரு பலமான அரசியல் பொருளாதார இருப்பை ஏற்படுத்தக் கூடியது. சீன அமெரிக்கப் போட்டியானது வெளிப்படையானதாக விளங்குகின்ற போது ஏற்படுகின்ற வாய்ப்புக்களை சீனா தனதாக்குகின்றது. இது அமெரிக்க செல்வாக்கு படிப்படியாக வீழ்ச்சியை நோக்கி நகர வழிவகுக்குமொன கணிக்கப்படுகிறது. அமெரிக்க ஆட்சி மாற்றமும் பைடன் -ட்ரம் மோதலும் வெள்ளை மாளிகை ஆட்சி மாற்றத்துக்கான நெருக்கடியும் சீனாவுக்கான வாய்ப்புக்களை அதிகர்த்துள்ளது. சரியான கால நேரத்தை கணித்து அமெரிக்கா நெருக்கடிக்குள் திணறிக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் சீனா ஒரு பாரிய பாய்ச்சலை சாத்தியப்படுத்தி இருக்கின்றது. அது மட்டுமன்ன்றி அமெரிக்க கூட்டின் வலுவான சக்திகளைத் தகர்தெடுத்ததோடு அந் நாடுகளின் அடிப்படைப் பொருளாதாரத் தேவைகளை சீனா சரியாகப் பயன்படுத்தி உள்ளது. அமெரிக்க இந்தியக் கூட்டு இராணுவ ரீதியிலும் கடல் பயிற்சிகளிலும்; ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்ற சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மையப்படுத்தி அதற்கான முனைப்புகளை சீனா பாதுகாக்க ஆரம்பித்திருக்கின்றது. எனவே சீனாவின் உலகத்தை ஆளும் திறன் என்பது இன்னொரு வலுவான கட்டத்தை நேர்க்கி அடியெடுத்து வைத்துள்ளது. சீனாவின் பலம் என்பது ஆசியானின் பலமாகவே புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

bond1.png 

சீனாவின் எழுச்சியானது இலங்கையில் புவிசார் பூகோள சவாலை எதிர் கொள்வதற்கான வாய்ப்பாகவே அமைந்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமெரிக்க இந்திய நெருக்குவாரங்களால் சீன சார்பு நிலைக்குள் பயணிக்க முடியாத சூழல் கடந்த ஒரு வருடமாக நீடித்தது. ஆனால் தற்போது அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்பட்ட மாற்றமும் சீனா தலைமையிலான பிராந்திய பொருளாதார ஒத்துழபை;புக்கான உடன்படிக்கையும் அத்தகைய நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்பதற்கான வாய்ப்பினைத் தந்துள்ளது. பிராந்திய பொருளாதார விரிவாக்க உபாயம் என்பது அமெரிக்கா இந்தியக் கூட்டுக்கு நெருக்கடியையும் சீனா தலைமையிலான அரசுகளுக்கான வாய்ப்பையுமே உருவாக்கியுள்ளது. இத்தகைய உலக ஒழுங்கு இலங்கை ஆட்சியாளர்களின் நலன்களுக்கான உத்தரவாதத்தை அதிகரித்துள்ளது.

அருவி இணையத்திற்காக கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

http://aruvi.com/article/tam/2020/11/26/19668/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.