Jump to content

மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்


Recommended Posts

மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்

 

 

-புருஜோத்தமன் தங்கமயில் 

“சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம் இனவாத சிந்தனைகளால் நிரம்பியிருக்கின்றது என்பதற்கு, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரியின் வார்த்தைகள் பெரும் சாட்சி. சோறும் புட்டும் வடையும் ஈழத்துத் தமிழ் மக்களின் வாழ்வோடு கலந்த உணவுகள். ஒவ்வொரு சமூகத்துக்குமான பாரம்பரிய அடையாளங்களில், அவர்களின் உணவுக்கும் பங்குண்டு. அது, தலைமுறைகளாக அந்தச் சமூகங்களுக்குள் கடத்தப்பட்டு வருவதுண்டு. 

ஒரு தரப்பின் உணவுப் பழக்க வழக்கங்கள்தான் உயர்வானது; மற்றவர்களின் உணவுப் பழக்க வழக்கம் கீழானது என்கிற சிந்தனை, மனிதன் சமூகக் கூட்டங்களாக வாழ ஆரம்பித்தது முதல் இருந்து வருகின்றது. ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பிராந்தியத்தின் தட்ப வெப்பம், வளம் உள்ளிட்ட தன்மைகளுக்கு ஏற்ப உணவுப் பழக்க வழக்கத்தைக் கொண்டிருக்கும். உலகம் பூராவும் இதுதான் நிலைமை. 

இன்றைக்கு உலகம் கணினிகளுக்குள்ளும் அலைபேசிகளுக்குள்ளும் சுருங்கிவிட்டாலும், எந்தப் பிராந்தியத்தின் உணவை எங்கு வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்கிற போதும், ஒவ்வொரு சமூகமும் தன்னுடைய பாரம்பரிய உணவில் தங்கியிருக்கவே செய்யும். அது அவர்களுடைய அடையாளங்களைத் தக்க வைக்கும் போக்கிலானவை.

ஒவ்வொருவருக்குமான தனி அடையாளம் என்பதுதான், அரசியலின் அடிப்படை. அப்படிப்பட்ட நிலையில், ஒரு சமூகத்தின் உணவுப் பழக்க வழக்கத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனநிலை என்பது, ஆதிக்க போக்கிலானதுதான். அத்தோடு, பீட்சாவை உயர்வாகக் குறிப்பிடுவது என்பது, கொலனித்துவ அடிமை மனநிலையாகும். ஆதிக்க மனநிலையும் அடிமை மனநிலையும் ஒருங்கே இருக்கும் சீழ் பிடித்த மனநிலையை, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி வெளிப்படுத்தி இருக்கிறார்.ஒரு சமூகத்தின் பாரம்பரிய அடையாளத்தையும் அதுசார் அரசியல் உரிமைகளையும் நிராகரித்துக் கொண்டு, எந்தவோர் உயர்வான தன்மைகளையும் யாரும் தீர்வாக முன்வைக்க முடியாது. சோறு, புட்டு சம்பந்தமான எகத்தாளத் தொனி, அரசியல் உரிமைகளுக்காகப் போராடி மாண்டவர்களுக்கான நினைவேந்தலை, நிராகரிப்பதற்காக முன்வைக்கப்பட்டிருக்கின்றது. 

தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பதே தெரியவில்லை. புட்டுத் தேவையில்லை; உயர்வான பீட்சா போதுமானது என்கிறார்கள். இதை ராஜபக்ஷர்களும் அடிக்கடி கூறி வருவார்கள். அதாவது, தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்திருப்பதாகவும் தமிழ் மக்களின் பிரச்சினையே விடுதலைப் புலிகள்தான் என்கிற அளவுக்குள் விடயத்தைச் சுருக்கி வந்திருக்கிறார்கள். 

எப்போதுமே உண்மை இதுவல்ல; பௌத்த, சிங்கள பேரினவாத அடக்குமுறைகளுக்கு எதிராக, சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்கும் போக்கிலேயே, தமிழர் அரசியல் போராட்டம் முளைத்தது. அதை ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொரு தரப்பு வழிநடத்தி இருக்கின்றது. வழிநடத்திய தரப்பை அழித்துவிட்டாலோ அகற்றிவிட்டாலோ தமிழ் மக்களுக்குப் பிரச்சினை இல்லையென்றோ, பௌத்த சிங்கள பேரினவாதம் ஆக்கிரமிப்பின் கொடுங்கரங்களை நீட்டவில்லை என்றோ கருத முடியாது. 

1966ஆம் ஆண்டு டட்லி அரசாங்கத்துக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்து, தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் அரச கரும மொழியாக தமிழ் மொழியை முன்மொழியும் சட்டமூலத்தை டட்லி அரசாங்கம் கொண்டு வந்தது. அதற்கு எதிராக, சுதந்திரக் கட்சியும் அதன் இணக்க சக்திகளாகச் செயற்பட்ட இடதுசாரிக் கட்சிகளும் பெரும் போராட்டங்களை முன்னெடுத்தன. அப்போதும் தமிழ் மக்களுக்கு எதிராக, ‘மசாலா வடை’ அடையாளத்தை முன்னிறுத்தி, இனவாதத்தைக் கக்கினார்கள். டட்லி அரசாங்கம் செல்வாவிடம் சரணடைந்து விட்டதாகக் காட்டுவதற்காக ‘’டட்லியின் வயிற்றுக்குள் மசாலா வடை’’ என்றார்கள். 

சோறு, புட்டு என்பவற்றுக்கு எதிரான எகத்தாளத் தொனிக்கு எதிராக, இம்முறை தமிழ்த் தரப்பு காத்திரமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றது. சமூக ஊடகங்கள் தொடங்கி, நாடாளுமன்றம் வரையில் புட்டின் பெருமை பற்றியெல்லாம் பேசினார்கள். புட்டோடு என்ன வகையான கறிகளும் பழங்களும் சேர்த்து உண்ண வேண்டும் என்கிற பெரிய பொழிப்புரையையே எழுதினார்கள். 

இதனை ஒரு கட்டத்தில், தங்களின் வர்த்தக விளம்பர நோக்கில், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் கையாண்டதையும் கண்டோம். ஒடுக்கப்பட்டு வருகின்ற இனமொன்று, தன்னுடைய பாரம்பரிய அடையாளங்களின் வழிதான், தன்னுடைய அரசியலைத் தக்க வைத்துக் கொள்கிறது. பாரம்பரிய அடையாளங்கள் என்பது, சமய நம்பிக்கை, உணவுப் பழக்க வழக்கம், ஆடை, அணிகலன் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

தமிழ் மக்கள் தாயகத்தில் இருந்தாலும், புலம்பெயர்ந்து சென்றாலும் தங்களுடைய அடையாளங்களைக் கொண்டு சுமந்து வந்திருக்கிறார்கள். அதுவும் புட்டையும் இடியப்பத்தையும் பாற்சொதியையும் பனிக்குளிர் தேசங்களிலும், பிரதான உணவாகக் கட்டிக் காத்து வருகிறார்கள். 

தங்களின் அடுத்த தலைமுறையின் நாக்கிலும், இந்த உணவுகளின் சுவையைப் பதிய வைக்கிறார்கள். கறிகளின் காரத்தின் (உறைப்பின்) அளவில் வேண்டுமானால் சிறிய மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், கறியும் அது தரும் சுவையும் பெருமளவு தாயகத்திலும் புலத்திலும் உள்ள தமிழ் மக்களிடம், ஒரே மாதிரியாகப் பேணப்படுகின்றது. அதுதான், காலங்களும் சூழலும் தாண்டி, அடையாளங்களைக் கொண்டு சுமப்பதாகும். 

ராஜபக்ஷர்கள், மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சியில் இருக்கிறார்கள். அவர்கள் நினைத்ததை எல்லாம் செய்கிறார்கள். அவர்களின் முன்னால், மனித உரிமைகளுக்கும் நீதி நியாயங்களுக்கும் இடமில்லை. ராஜபக்ஷர்களின் நிலைப்பாடுகளே, ‘ஒற்றை நீதி’ என்றாகிவிட்ட நாட்டில், மாவீரர் நினைவேந்தலைப் பொதுவெளியில் முன்னெடுப்பது என்பது, அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. 

அதுவும், கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் நடைமுறைகள் வழக்கத்தில் இருக்கும் போது, நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, அதையும் பிரயோகிக்கின்றார்கள்.  நீதிமன்றங்களின் ஊடாகத் தடையுத்தரவு பெறப்படுகின்றது. கடந்த காலங்களில் அனுமதிக்கப்பட்ட நினைவேந்தலுக்கான வெளி, ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்படுகின்றது. 

அப்படியான நிலையில், மாவீரர் நினைவேந்தலை, எவ்வாறு பேணிப் பாதுகாத்து, முன்னேறுவது என்று, தமிழ் மக்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. பல தடவைகள் நெருப்பாற்றைக் கடந்து வந்த சமூகமாக, இப்போதுள்ள தடைகளையும் சவால்களையும் பெரும் சிக்கல்களுக்குள் மாட்டிக் கொள்ளாமல் கடக்க வேண்டும். புலம்பெயர்ந்து சென்றாலும், எப்படி பாரம்பரிய அடையாளங்களைத் தமிழ் மக்கள் கொண்டு சுமக்கிறார்களோ, அப்படித்தான் பொது வெளியில் நினைவேந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டாலும் வீடுகளுக்குள் நினைவேந்தலைப் பேண முடியும். 

அதாவது, ‘தமிழர் சுதந்திரமாக வாழ்வதற்காகப் பல்லாயிரம் இன்னுயிர்கள் இழக்கப்பட்டிருக்கின்றன; அந்த உயிர்கள், எமக்காக மாண்டிருக்கின்றன’ என்று நம்பும் ஒவ்வொரு தமிழ் மகனும் மகளும், உள்ளத்தில் அவர்களுக்காக நினைவேந்துவதும், அடுத்த தலைமுறையிடம் அவர்களின் தியாகத்தைக் கொண்டு சேர்ப்பதுமே இப்போதைய தேவையாகும். 

அடக்குமுறைகளுக்கு எதிராக எழுந்த இனமாக, தமிழ் மக்கள் அடையாளம் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறான நிலையில், வீடுகளிலும் உள்ளத்திலும் தீபமேற்றி, அஞ்சலித்து, நினைவேந்தல் தடைகளையும் தகர்த்தெறிய முடியும்.

Tamilmirror Online || மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் புதிய ஒழுங்குமுறை உருவாக்கக் காலமாவீரர் நாளின் முக்கியத்துவம்

 
Editorial-1-150x150-2.jpg
 45 Views

 01-கோவிட் 19இற்குப் பின்னரான காலத்தின் தாக்கம்

02-உலகில் புதிய ஒழுங்குமுறை ஒன்றை சீனாவின் பொருளாதார மேலாண்மையுடன் கூடிய வல்லாண்மைக்கு எதிராக நிறுவ வேண்டிய அமெரிக்க அரசியல் மாற்றம்; தோன்றியுள்ளதன் விளைவான மாற்றங்களின் காலத்தின் தாக்கம்

03-சட்டத்தின் ஆட்சியும் பாராளுமன்ற வலுவேறாக்கமும் இல்லாத சிங்கள பௌத்த பெரும்பான்மை கொடுங்கோன்மைப் பாராளுமன்ற ஒற்றையாட்சியின் கீழ், அதன் மீயுயர் அதிகாரமுள்ள அரச அதிபரின் ஆட்சியில், ஒரே நாடு ஒரே இனம் ஒரே மதம் இனப்பிரச்சினை என்பதேயில்லை, பெரும்பான்மை மக்களுடைய விருப்புக்கு எதிராக அதிகாரப் பரவலாக்கல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வெளிப்படையான அரச கொள்கைப் பிரகடனங்களுடான ஆட்சியாகவும், தங்கள் நாளாந்த நிர்வாகத்தையே தங்களை இனஅழிப்புச் செய்த படைத்தலைமைகளே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடாத்துகின்ற ஆட்சியாகவும் உள்ள இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் தாக்கம்.

என்னும் மூவகையான காலத் தாக்கத்தை ஈழத்தமிழர்கள் எதிர் கொள்ளும் நேரத்தில்  2020 மாவீரர்நாள் இடம்பெறுகிறது.

உண்மையில் இந்த மாவீரர் நாள் ஈழத்தமிழர்கள் தங்கள் அடையாளத்தையும், இருப்பையும், அந்த இருப்பை சனநாயக வழிகளில் நிலைப்படுத்துவதற்கான வழிகாட்டலையும், தெளிவையும் பெறுவதற்கான ஆற்றலைத் தரக்கூடிய நிகழ்வாக வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

இம்மாவீரர் நாளுடன் ‘இலக்கு’ தனது இலக்கு நோக்கிய பயணத்தில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து இணைகின்ற பொழுது ஈழத்தமிழ்மக்கள் இன்று தங்கள் உரிமைகளைப் பெறுவதற்குச் சரியானதைச் செய்யவும் சரியான முறையில் செய்யவும் செய்ய வேண்டியன குறித்து இலக்கை வகுப்பது இலக்கின் கடமையாகிறது.

மாவீரர்கள் நினைவேந்தல் தென் தமிழீழத்தில் முதன் முதல் தொடங்கப்பட்ட காலத்திலும் இன்றைய சூழ்நிலை போன்றே ஈழத்தமிழர்களின் அரசியல் சமுக பொருளாதார நிச்சயமற்ற காலம் காணப்பட்டதையும், அந்த மாவீரர் நாள் நினைவேந்தல்களில் மாவீரர்களின் ஈக உள்ளத்தன்மையும் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளும் உறுதியின் உறைவிடங்களாக அவர்கள் விளங்கியமையும் உணரப்பட்டதினாலேயே அக்காலத்தில் ஒவ்வொரு ஈழத்தமிழ் உள்ளமும் திடம்பெற்று தங்கள் தாயகத்தைத் தேசியத்தை தன்னாட்சியைக் காப்பதற்கான உறுதியை ஈழமக்கள் பெற்றனர். அதன் விளைவாகவே ஈழமக்களின் அரசு நோக்கிய அரசு ஒன்று 18.05.2009 வரை உலகால் உணரப்பட்டதையும் அது சட்டபூர்வமான சட்ட அங்கீகாரத்தை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் சிறீலங்காவின் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழின அழிப்பால் சிறீலங்கா மீண்டும் தன்னை ஈழத்தமிழர் மீதான ஆக்கிரமிப்பு ஆட்சியாக நிறுவிக் கொண்டதையும்  அனைவரும் அறிவர்.

இந்த இன்றைய ஆக்கிரமிப்பில் இருந்து சனநாயக வழிகளின் வழி எவ்வாறு விடுபட்டு ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு பெறுவது என்பது இன்றுள்ள முக்கிய கேள்வி.

இரண்டு தளங்களை நிறுவிச் செயல்படுவதும் அவற்றுக்கு இடையான பலமான இணைப்புமே இந்தக் கேள்விக்கான விடையைத் தரும்.

முதல் தளம்; தாயகத்தில் இன்றைய ஈழத்தமிழர்களின் உள்ளக தன்னாட்சி உரிமைகள் மறுக்கப்படும் விதங்களையும் முறைகளையும் ஒழுங்குபடுத்தித் தொகுத்து காலதாமதமின்றி உலகுக்கு வெளிப்படுத்துதவற்கான ஒன்றிணைந்த கூட்டுத் தலைமைத்துவ கூட்டமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது தளம்; தாயகத்தில் ஈழத்தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிற உள்ளக தன்னாட்சி மறுப்பைத் தக்க சான்றுகளுடன் காலதாமதமின்றி எடுத்துரைத்து உலகநாடுகளையும் உலக அமைப்புகளையும்  ஈழத்தமிழர்களின் வெளியக தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் பாதிப்புற்றுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு சிறீலங்கா அரசாங்கத்தின் இறைமையைக் கடந்து உதவும்படி கோரக்கூடிய கூட்டுத் தலைமைத்துவ அமைப்பு தேசங்கடந்துறை தமிழர்களிடை பொதுவேலைத்திட்டம் ஒன்றினால் உருவாக்கப்படல் வேண்டும்.

இந்தத் தளங்களுக்கு சக்தி அளிக்கக் கூடியதாகவும், இன்றைய அரசியல் சூழல்களை மக்களுக்குத்  தெளிவாக விளக்கக் கூடியதாகவும், மக்களின் பொதுக் கருத்துக் கோளங்களை உருவாக்கி, எல்லா மக்களது தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் உள்ள ஈழமக்களுக்கான தேசிய ஊடகம் இன்றைய காலத்தின் தேவையாகிறது. இதுவும் கூட செயற்படும் திரள்நிலை ஊடகங்களின் கூட்டிணைப்பால் சாத்தியமாக்கப்படலாம்.

இவற்றை உருவாக்க மாவீரர்கள் எந்த பகிர்வு உள்ளத்தையும் தலைமைக்கான பணிவு உள்ளத்தையும் கொண்டிருந்தார்களோ அந்த உள்ளத்துடன் உழைப்பதே மாவீரர்களுக்கு நாம் செய்யும் சிறந்த வணக்கமாக அமையும்.

 

https://www.ilakku.org/உலகின்-புதிய-ஒழுங்குமுறை/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.