Jump to content

Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி


Recommended Posts

Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி

Business Today-இன் முதல் 30 தரப்படுத்தலில் முதலிடத்துக்குத் மீளத்திரும்பியது கொமர்ஷல் வங்கி

 

நாட்டில் 2019-20 காலப்பகுதியில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திய நிறுவனங்களுக்கான தரப்படுத்தலான ´Business Today Top 30" இல் கொமர்ஷல் வங்கி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இதன்மூலமாக இலங்கையிலுள்ள முக்கியமான கூட்டாண்மை நிறுவனங்களிடத்தில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது.

இத்தரப்படுத்தலில் முதலிடத்துக்கு கொமர்ஷல் வங்கி மீளத் திரும்பியமையானது, முதல் ஐந்து இடங்களுக்குள் தொடர்ச்சியாக 12 ஆண்டுகள் தரப்படுத்தப்பட்டமையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. இந்த 12 ஆண்டுகளில் அநேகமான தடவைகள், இரண்டாவது நிலையை வங்கி பெற்றிருந்தது.

பிஸ்னஸ் டுடேயினால் நவம்பர் 2020 இல் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய தரப்படுத்தலில், கொமர்ஷல் வங்கிக்கு 27.6 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தரப்படுத்தலில் 30 ஆவது இடத்தைப் பெற்ற நிறுவனத்துக்கு 4.4 புள்ளிகள் கிடைத்திருக்க, இரண்டாவது இடம் கிடைத்த நிறுவனத்துக்கு 26.95 புள்ளிகள் கிடைத்திருந்தன.

இது குறித்துக் கருத்துத் தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் திரு. எஸ். ரெங்கநாதன், பூகோளப் பெருந்தொற்று ஆரம்பிக்க முன்னரேயே குறிப்பிடத்தக்களவு சவால்களை வழங்கிய ஓர் ஆண்டில், பிஸ்னஸ் டுடே தரப்படுத்தலில் முதலிடத்துக்கு நாங்கள் மீள வந்தமை குறித்து, நாங்கள் இயல்பாகவே பெருமகிழ்ச்சியடைகிறோம். கூட்டாண்மை நிறுவனமொன்றின் உறுதிக்கான மிகச்சிறந்த பரீட்சையாக இன்னல்களே காணப்படுகின்றன. பெருந்தொற்றின் தாக்கங்கள் தொடர்ச்சியாக உணரப்படும் நேரத்தில், இவ்வாண்டில் ஏற்பட்டுள்ள முன்னரெப்போதும் ஏற்படாத சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டுவரும் கொமர்ஷல் வங்கியின் முழு அணிக்கும் இந்தத் தரப்படுத்தலில் கிடைத்துள்ள அடைவை நாங்கள் அர்ப்பணிக்கிறோம் எனத் தெரிவித்தார்.

தரப்படுத்தல் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிஸ்னஸ் டுடே, 2019-20 காலப்பகுதிக்கான பிஸ்னஸ் டுடே முதல் 30 தரப்படுத்தலில் இம்முறை நகர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. நீண்டகாலமாகச் செயற்பட்ட அனுபவம் மிக்க நிறுவனங்கள் தமக்கான இடத்தைப் பெற்றுக்கொள்ள, சில நிறுவனங்கள் முதன்முறையாகத் தரப்படுத்தலில் இடம்பிடித்துள்ளன. தற்போதுள்ளதைப் போன்ற சவாலானதொரு காலப்பகுதியில், கூட்டாண்மை நிறுவன உலகில் புதிய நிறுவனங்கள் தமது அடையாளத்தைப் பதிப்பதென்பது ஊக்கத்தைத் தரும் ஒன்றாகும் எனத் தெரிவித்தது.

2020 ஆம் ஆண்டில் இலங்கையின் பலமான வங்கி வணிகக்குறி என பிரான்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்ட கொமர்ஷல் வங்கி, 1.4 ட்ரில்லியன் ரூபாய் மொத்தச் சொத்துக்கள், 150 பில்லியன் ரூபாய் மொத்த வருமானம், 17.4 பில்லியன் ரூபாய் நிகர இலாபம் 1.07 ட்ரில்லியன் ரூபாய் வைப்புகள், 930.7 பில்லியன் ரூபாய் நிகரக் கடன்களும் நிலுவைகளும் என, 2019 ஆம் ஆண்டை நிறைவுசெய்திருந்தது.

தேசியப் பொருளாதாரத்துக்குப் பங்களிப்பு வழங்குவதில் பல தசாப்தங்களாக முன்னிலை வகித்த நிறுவனம் என்ற வகையில் கொமர்ஷல் வங்கி, பெருந்தொற்றுக் காலத்துக்குப் பின்னரான பொருளாதார மீட்சியை உந்தும் ஒரு நிறுவனமாகச் செயற்பட்டு வருகிறது. நடைமுறை மூலதனக் கடன்களை வழங்குவதிலும் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்குச் சலுகைகளை வழங்குவதிலும் தனியார் வங்கிகளில் கொமர்ஷல் வங்கி முன்னிலையில் காணப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கும் தனிநபர்களுக்குமென அமுல்படுத்தப்பட்டுள்ள வௌவேறான 11 திட்டங்களை, சூர்யோதயம் நிதியியல் உதவித் திட்டத்தின் கீழ் வங்கி வகைப்படுத்தியுள்ளதுடன் வழங்க வேண்டுமென இலங்கை மத்திய வங்கியால் பணிக்கப்பட்ட கடன் தவணைக்கால நீடிப்புக்கு மேலதிகமாக இந்த நிவாரணத் திட்டங்களை வழங்கியுள்ளது.

உலகின் ஆயிரம் தலைசிறந்த வங்கிகளில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ள இலங்கையின் ஒரே வங்கியான கொமர்ஷல் வங்கி தொடர்ந்து பத்து வருடங்களாக அந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இவ்வாண்டு வங்கி அதன் 100 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்றது. 2019ல் 50க்கும் மேற்பட்ட சர்வதேச மற்றும் உள்ளுர் விருதுகளை வென்றுள்ள கொமர்ஷல் வங்கி இலங்கையில் 268 கிளைகளுடனும் 875 ATM வலையமைப்புடனும் செயற்படுகின்றது.

பங்களாதேஷ் செயற்பாடுகளுக்கு அப்பால் கொமர்ஷல் வங்கியின் கடல் கடந்த செயற்பாடுகள் மியன்மாரில் யங்கூனில் பிரதிநிதிகள் அலுவலக செயற்பாடுகளைக் கொண்டதாகவும், நேய்பியுடோவில் நுண் நிதிக் கம்பனி ஒன்றைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மாலைதீவில் முதல் வரிசை வங்கியொன்றை அதிகபட்ச பங்குரிமையோடு முழு அளவில் வங்கி திறந்துள்ளது.
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.