Jump to content

இலங்கை வருகிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட பிரதிநிதியாக இலங்கை வரும் அஜித் டோவல், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக தமிழர் தரப்பு அரசியல் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139387/hhhh.jpg

இதேவேளை கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாகவும் பேச்சுக்கள் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சீனாவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் விஜயம்செய்து, இலங்கையின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமையைத் தொடர்ந்து அஜித் டோவலின் விஜயம் அமைந்துள்ளமை அரசியல் அவதானிகளால் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்புத்துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு முழுமையாக வழங்கப்பட மாட்டாது எனவும் தேசிய வளங்களை பிறநாட்டவர்களுக்கு விற்கும் கொள்கை அரசாங்கத்திற்குக் கிடையாது என்றும் விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே அண்மையில் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

இலங்கை வருகிறார் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20201126-205006.jpg ☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரருக்கு நினைவஞ்சலி செலுத்தவல்லோ  இந்த நேரத்தில் வாறார் எண்டு நான் நினைத்தேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் இருநாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளை வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளார்.

இதன்போது அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட அரசின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசவுள்ளார்.

காஷ்மீரில் தாங்கள் எப்படியெல்லாம் அட்டூழியங்கள் செய்து போராட்டங்களை அடக்குகின்றோம் என விபரித்து ஆலோசனை வழங்க வருகின்றார் போலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது!

இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட இந்திய அரசின் தூதுக் குழு இலங்கை வந்தடைந்துள்ளது.

அதன்படி இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் ஐந்து அதிகாரிகளும் புதுடில்லியிருந்து இந்திய அரசுக்கு சொந்தமான விமானத்தில் இன்று முற்பகல் 11.40 மணியளவில் கட்டுநாயக்க, சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தூதுக்குழுவை வரவேற்க இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

இதேவேளை குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா அகமட் தீதியுடன் மாலத்தீவு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு பிரதிநிதிகளும் நாட்டை வந்தடைந்தனர்.

மாநாடு இன்றும் நாளையும் கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன. 

இதற்கு முன்பு புதுடில்லியில் இந்த மாநாடு 2014 இல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையிலான தூதுக்குழு நாட்டை வந்தடைந்தது! | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்  பிரதமர் மஹிந்தவுடன் பேசியது என்ன ?

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்  இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.11.27 விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

 

குறித்த சந்திப்பின் போது முதலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித்  டோவால், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்து செய்தியொன்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வழங்கினார்.

 

கொவிட்-19 தொற்று காரணமாக உலகின் பல நாடுகள் முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலைக்கு பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கும் முகங்கொடுக்க நேரிட்டுள்ளது எனத் தெரிவித்ததுடன், தொற்று நிலைமைக்கு மத்தியிலும் பிராந்திய நாடுகளின் பொருளாதாரம், சமூக அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல நேரிட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

 

அத்துடன், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் நாடுகளுக்கு இடையிலான அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பெரும்பாலும் இராஜதந்திர கலந்துரையாடல்களை இணையத்தின் ஊடாக காணொளி தொழில்நுட்பம் ஊடாகவே மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது எனவும் அஜித் டோவால் தெரிவித்தார்.

 

இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் டோவால் சுட்டிக்காட்டினார்.

spacer.png

எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 

அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன்இ பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால் முன்மொழிந்தார்.

 

அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் டோவால், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

 

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் டோவால் தெரிவித்தார்.

 

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

 

இது தொடர்பில் உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் டோவால், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கு அறிவுறுத்தினார்.

குறித்த சந்தர்ப்பத்தில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் பிரதமரின் செயலாளர் காமினி செனரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால்  பிரதமர் மஹிந்தவுடன் பேசியது என்ன ? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

அத்துடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டலின் கீழ் நவீன தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தி இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குடிநீரை பெற்றுக் கொடுக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி, அத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இலங்கையில் நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு இச்சந்திப்பின் போது உடன்பாடு எட்டப்பட்டது.

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstd2F 

இது எப்ப.? காத்துதான் வருகுது அடிச்சுவிட ஒரு அளவு வேண்டாமா.?

1 hour ago, பிழம்பு said:

அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீ அஜித் டோவால் தெரிவித்தார்

அவர்களுக்கு வீடு கட்டுவது  இருக்கட்டும் .. நம்மட ஊர்ல எத்தனை சந்து பொந்து இருக்கு என்டு தெரியுமா.?😊

Screenshot-2020-11-27-23-15-16-513-org-m

 முதல்ல மத்தியான சாப்பாட்டுக்கு வழி இருக்கா .?தீட்றா கத்திய..☺️

3 hours ago, பிழம்பு said:

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடல்சார் பாதுகாப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பயிற்சி, உளவுத் தகவல்களைப் பரிமாறுதல், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலைத் தடுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட 

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..
...
..

போதும்டா ..
roflphotos-dot-com-photo-comments-201902

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..

புரட்சி இதையெல்லாம் தமிழரை அழித்தொழிக்க முதல் யோசித்திருக்கணும்.

இப்போ வெரி வெரி லேட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

எல்லோரும்.... "முகமூடி"  போட்டு,  
நல்ல... சமூக இடைவெளி காப்பாற்றுகிறார்கள்.

அந்த... உயரிய குணம்..?  இருவரும் சேர்த்து... 
தமிழர்களை, குண்டு போட்டு... கொல்லும்  போது...
காந்தி தேசத்துக்கும், புத்த தேசத்துக்கும் வரவில்லையே..... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, தமிழ் சிறி said:

spacer.png

எல்லோரும்.... "முகமூடி"  போட்டு,  
நல்ல... சமூக இடைவெளி காப்பாற்றுகிறார்கள்.

அந்த... உயரிய குணம்..?  இருவரும் சேர்த்து... 
தமிழர்களை, குண்டு போட்டு... கொல்லும்  போது...
காந்தி தேசத்துக்கும், புத்த தேசத்துக்கும் வரவில்லையே..... 

சிறித்தம்பி! உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியையும் புத்தனையும் முழுமுதலாய் கொண்ட இரண்டு நாடும் தான் கேடுகெட்ட நாடுகள். மனித தன்மை இல்லாத நாடுகள். ஜனநாயகம் என்ற பெயரில் ஜனநாயகம் என்ன என்றே தெரியாத நாடுகள். மனித நேயத்தை போதித்த புத்தனை வணங்கி விட்டு  மறுகணம்  மானிட பலியெடுக்கும் நாடும் நாடுகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சிறித்தம்பி! உலகம் முழுவதும் போற்றப்படும் காந்தியையும் புத்தனையும் முழுமுதலாய் கொண்ட இரண்டு நாடும் தான் கேடுகெட்ட நாடுகள். மனித தன்மை இல்லாத நாடுகள். ஜனநாயகம் என்ற பெயரில் ஜனநாயகம் என்ன என்றே தெரியாத நாடுகள். மனித நேயத்தை போதித்த புத்தனை வணங்கி விட்டு  மறுகணம்  மானிட பலியெடுக்கும் நாடும் நாடுகளும்.

உண்மை...குமாரசாமி அண்ணா....
இரண்டு... கள்ளரும் சேர்ந்தால், 
உலகத்தையே.. சுருட்டி... 
அடி மடியில்,  கொண்டு போகின்ற ஆக்கள்.

இவங்கள்,  வாயை.. திறந்தால், பொய்யும்...புரட்டும் தான் வரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

உண்மை...குமாரசாமி அண்ணா....
இரண்டு... கள்ளரும் சேர்ந்தால், 
உலகத்தையே.. சுருட்டி... 
அடி மடியில்,  கொண்டு போகின்ற ஆக்கள்.

இவங்கள்,  வாயை.. திறந்தால், பொய்யும்...புரட்டும் தான் வரும். 

இஞ்சை பாருங்கோ நோட்டுக்கு நோட்டு காந்தியின்ரை படம். ஆனால்  அரசியல்வாதிகளும்/அரசும் செய்யிறது முழுக்க சுத்துமாத்து.....

வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்-  பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..! | Income tax hunt against thousands of  Indians who have black money and ...

இவர்கள் எதற்காக வணங்குகின்றார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

Gotabaya Rajapaksa on Twitter: "Receiving blessings at the Sacred Bo Tree  in Anuradhapura this morning with HE Mahinda Rajapaksa, Members of  Parliament and other well-wishers in attendance #LKA…  https://t.co/dz46DJqGln"

Link to comment
Share on other sites

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

memees.php?w=240&img=dml2ZWsvdml2ZWstd2F 

இது எப்ப.? காத்துதான் வருகுது அடிச்சுவிட ஒரு அளவு வேண்டாமா.?

அவர்களுக்கு வீடு கட்டுவது  இருக்கட்டும் .. நம்மட ஊர்ல எத்தனை சந்து பொந்து இருக்கு என்டு தெரியுமா.?😊

Screenshot-2020-11-27-23-15-16-513-org-m

 முதல்ல மத்தியான சாப்பாட்டுக்கு வழி இருக்கா .?தீட்றா கத்திய..☺️

சரிதான் .. அடுத்த வாரம் 

 இதையேதான் சீனாகார் வந்து கதைப்பினம்.. அதற்கு அடுத்த வாரம் அமெரிக்காகார் வந்து கதைப்பினம் ..

அதற்கு அடுத்த வாரம் மறுபடி கிந்தியன் வந்து கதைப்பினம் ..
...
..

போதும்டா ..
roflphotos-dot-com-photo-comments-201902

நல்ல கருத்துப்படங்களுடன் பதிவிட்டிருந்தீர்கள். என்னதான் இருந்தாலும் இலங்கை அரசு சொல்வதைத்தான் இந்திய அரசு கேட்க்கும். தமிழர்கள் உரிமை பற்றி காலத்துக்கு காலம் எதாவது பேசினாலும் இந்திய நலன்தான் அவர்களது முக்கிய நோக்கம். சீனாவை இலங்கையில் இருந்து தூரப்படுத்துவதட்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். எனவே தமிழர்போராட்டம் முடிவின்றி ஒரு  பக்கம் தொடரவே போகின்றது. சிங்கள அரசு என்ன செய்யபோகின்றார்கள் என்பதை முதலிலேயே தீர்மானித்துவிடடார்கள். அதையே இந்த அரசு தொடரப்போகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இஞ்சை பாருங்கோ நோட்டுக்கு நோட்டு காந்தியின்ரை படம். ஆனால்  அரசியல்வாதிகளும்/அரசும் செய்யிறது முழுக்க சுத்துமாத்து.....

வேட்டை ஆரம்பம்... பல லட்சம் கோடிகளை பதுக்கிய இந்திய அரசியல்வாதிகள்-  பணமுதலைகளுக்கு பட்டை நாமம்..! | Income tax hunt against thousands of  Indians who have black money and ...

இவர்கள் எதற்காக வணங்குகின்றார்கள் என்று யாருக்காவது தெரியுமா?

Gotabaya Rajapaksa on Twitter: "Receiving blessings at the Sacred Bo Tree  in Anuradhapura this morning with HE Mahinda Rajapaksa, Members of  Parliament and other well-wishers in attendance #LKA…  https://t.co/dz46DJqGln"

இது தலதா மாளிகையின் உள் அரண்மனையின் வளாகத்தில் உள்ள அரசமரம். இதுவே, முதன் முதலாக (புத்தரால் /?? அசோகனால்  ??) பௌத்த மதம் தூதனுப்ப பட்ட போது கொண்டுவரப்பட்ட மரம் என்று நம்பபடுகிறது.

இந்த இடத்திற்கு பொது சனத்தால்  செல்ல முடியாது. 

சொறி சிங்கள அரச உயர் மட்டங்களின் பெண்கள் கூட அருகில் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

தலதா மாளிகையில் பாதுகாக்கப்படும் புத்தரின் தந்த தாதுவே (அது இப்பொது விஜயனின் பல் என்ற நம்பிக்கையும் உண்டு, ஆனாலும் மனித பல்லின் பரிமாணத்தில் பெரிது என்றே நம்பப்படுகிறது), சிங்கள மக்களையும், அரசையும் தமிழர்களை யுத்தத்தில் அழித்து  வெற்றி பெற்றத்துக்கான முழுமுதல் இறைவரம் என்று கோத்த நம்புகிறார்,  தனது உள்வட்டாரத்திலும் வெளிப்படையாக சொல்லி வருகிறார்.

இந்த மரம், சிங்கள பௌத்த மதத்தின் உயிரையும், உணர்வையும் பிரதிபலிக்கும் ஓர் உயிராக போற்றப்படுகிறது. 
       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

ஆனாலும் மனித பல்லின் பரிமாணத்தில் பெரிது என்றே நம்பப்படுகிறது)

யானையின் தந்தமாக இருக்குமோ ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.