Jump to content

கொடூரமாக கொலை செய்த காரணத்தினாலா அரசாங்கம் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது - சுமந்திரன் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

 

எமது மக்கள் தமது உறவுகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமானதும் எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

அரசாங்கம் ஏன் நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது. அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஊடகம், வெளிவிவகார அமைச்சுகள் மற்றும் பிராந்திய உறவு அலுவல்கள் இராஜாங்க அமைச்சிற்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூரும் மாதம் இது, அதனால் தான் பொப்பி மலர் பயன்படுத்துவோம். அதேபோல் கடந்த 30 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் நீத்தவர்களையும் நினைவுகூர வேண்டும்.

ஒரே நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராடியவர்களாக இருந்தாலும் அவர்களை நிறைவுகூர வேண்டியது, அவர்கள் நீண்ட காலமாக நினைவுகூரப்பட்டும் வருகின்றனர்.

ஆனால் இன்று திடீரென அவசர நிலைமையொன்று உருவாகியுள்ளது. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் ஹெலிகொப்டரில் யாப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளுக்கு சென்று இவற்றை கண்காணிப்பதாக தெரிகின்றது.

அதேபோல் தனிமைப்படுதல் சட்டத்தையும் கவனத்தில் கொள்ளது அவர்கள் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். நினைவேந்தளின் போது உண்மையாகவே எமது மக்கள் தமது உறவினர்கள், பெற்றோர், பிள்ளைகளை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கின்றனர். அதனை தடுப்பது துரதிஸ்டவசமான செயற்பாடகும். இது எமது மக்களை அவமதிக்கும் செயலாகவும் அமைந்துள்ளது.

உயிரிழந்தவர்களை நினைவுகூர்வது, அனுஷ்டிப்பது எமது கலாசாரத்தில் முக்கியமானதும்  மதிக்கத்தக்க விடயமாகும். நீங்கள் ஏன் உயிரிழந்தவர்களை நினைத்து அஞ்சுகின்றீர்கள்.

அவர்களை கொடூரமாக கொலைசெய்த காரணத்தினாலா, அல்லது சர்வதேச சட்டத்தை மீறிய செயற்பாடுகள் இடம்பெற்ற காரணத்தினாலா நினைவேந்தளுக்கு அஞ்சுகின்றீர்கள்.

சுயாதீனம் என்பது சகலருக்கும் பொருந்தக்கூடியது. பெரும்பான்மையினருக்கு மாத்திரம் இது பொருந்தாது. அவ்வாறு நடைபெறுமானால் நிராகரிக்கப்பட்டவர்கள் தமக்கான சுயாதீனத்தை தேடிக்கொள்ள நினைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்த நாடு ஆக்கிரமிப்புகளுக்கு பின்னரே ஒரு நாடாக மாறியது. இந்த நாட்டில் பல்வேறு வர்க்க மக்கள் உள்ளனர். எனவே சுயாதீனம் என்பது சகலருக்கும் இருக்க வேண்டிய ஒன்றாகும். மாறாக அரசாங்கம் மாத்திரம் அதனை கையில் எடுத்துக்கொண்டு சர்வதேச சட்டங்களை மீற முடியாது என்றார். 

கொடூரமாக கொலை செய்த காரணத்தினாலா அரசாங்கம்  நினைவேந்தலுக்கு அஞ்சுகின்றது - சுமந்திரன் கேள்வி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  அவர்கள் தங்கள் பயங்கரவாதத்திற்கு  எதிராக போராடினார்கள்  என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள்தான் பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மாவீரரை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையை தீர்க்கவேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். 

சுமந்திரன் அன்று விடுதலைப்போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று  சொல்லிவிட்டு இன்று  அவர்களை நினைவு கூர அனுமதி தாருங்கள் என்று கேட்டால், சிங்களவன்  இவரை பரிகசிப்பானா இல்லையா? அவர் அரசியலின் இருப்புக்காக இவ்வாறு மாத்தி, மாத்தி  பேசுகிறார் என்றே சொல்வான். உண்மையும் அதுதானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, satan said:

  அவர்கள் தங்கள் பயங்கரவாதத்திற்கு  எதிராக போராடினார்கள்  என்று ஏற்றுக்கொள்ளவில்லை. தாங்கள்தான் பயங்கரவாதிகள், ஆக்கிரமிப்பாளர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளப்போவதுமில்லை. மாவீரரை ஏற்றுக்கொண்டால் பிரச்சனையை தீர்க்கவேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். 

சுமந்திரன் அன்று விடுதலைப்போராட்டத்தை தான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று  சொல்லிவிட்டு இன்று  அவர்களை நினைவு கூர அனுமதி தாருங்கள் என்று கேட்டால், சிங்களவன்  இவரை பரிகசிப்பானா இல்லையா? அவர் அரசியலின் இருப்புக்காக இவ்வாறு மாத்தி, மாத்தி  பேசுகிறார் என்றே சொல்வான். உண்மையும் அதுதானே? 

 

5 hours ago, Paanch said:

 

இன்னும் சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்கும் கூட்டம் புலம்பெயர் தேசங்களில் இருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கு அபாயகரமானதும் கூட....

Link to comment
Share on other sites

9 hours ago, குமாரசாமி said:

இன்னும் சுமந்திரனுக்காக வக்காளத்து வாங்கும் கூட்டம் புலம்பெயர் தேசங்களில் இருப்பது கவலைக்குரியது மட்டுமல்ல இலங்கை தமிழர்களுக்கு அபாயகரமானதும் கூட....

புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்ல, இலங்கையிலும் உள்ளார்கள். ஏன் யாழ்களத்திலும் சிலது புகுந்திருக்கிறதே....🧐

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.