Jump to content

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத்திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன.

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும்  மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக்கொண்டுவந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

 

https://www.virakesari.lk/article/95355

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

Link to comment
Share on other sites

அப்படி ஒன்று அமைந்தால் நல்லது. வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை மக்களின் வாழ்வாதார தீர்வுக்கு போராடும் வியாழேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

Link to comment
Share on other sites

11 hours ago, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

பாஞ்ச அவர்களே, இன்னும் நாலு வருடங்கள் இருக்கின்றன. எனவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

கடந்த நல்லாட்சி அரசுக்கும் தமிழர் பிரதிநிதிகள் அதற்க்கு வழங்கினார்கள்தானே. எத்தனை தொழிடசாலைகளை கட்டினார்கள், எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள்? இவர்கள் ஆதரவு கொடுக்க முஸ்லிம்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனார்கள்.

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா? எனவே வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் சேர்ந்து என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அரசியல் உரிமை இப்போதைக்கு இல்லை, வியாளேந்திரனும் பெற்றுத்தருவதாக கூறவும் இல்லை. தமிழர் பகுதிகளை , மக்களை அபிவிருத்தி செய்ய வேண்டியே பாராளுமன்றம் சென்றார். எனவே கொஞ்சம் பொறுத்திருப்போம்.

அரசியல் உரிமைக்காக தெரிவு செய்யப்படடவர்கள் அதனை பெற்றுத்தரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.

யாதொன்றும் இல்லை, மக்களை மாவீரர் பக்கம் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடு. அங்காலை கிழக்கின் விடிவெள்ளி 834 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய பொத்துவில், ஊறணி மக்களுக்கு வாக்கு கொடுத்து ஏமாத்துறார். 

Link to comment
Share on other sites

9 hours ago, Robinson cruso said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா?

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 17:02, குமாரசாமி said:

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

கர்ணா ஒன்றும் பெரிய அமைச்சர் கிடையாது செய்து கிழிக்க ஆனால் கர்ணா பிள்ளையான் செய்தது பாதி பங்கு கூட தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டமைப்பு செய்ததா?? 

On 27/11/2020 at 19:38, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது அதனால் சில ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை நிறுத்தி இருக்கலாம் அல்லவா நாம பாட்டுக்கு ஒன்றை நினைச்சு அடித்து விடுவது 

Link to comment
Share on other sites

 

On 26/11/2020 at 19:06, கிருபன் said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர்.

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gif

On 4/7/2019 at 03:46, ampanai said:

சுமார் 3000 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர்.

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது

இங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

Link to comment
Share on other sites

12 hours ago, Paanch said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

 

அப்படி என்றால் அபிவிருத்தி இப்போதைக்கு தேவை இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் எப்போதுமே இல்லை. தமிழர்களும் இருக்க மாடடார்கள். அவர்கள் சிங்கள தமிழர்களாக மாறி இருப்பார்கள். அல்லது இஸ்லாமியர்களாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

 

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gifஇங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

ஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்.....? நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

ஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்.....? நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..!  

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

Link to comment
Share on other sites

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

நல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

நல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.?? 

உறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள். 

யாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில்  உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.

** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும் 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள். 

யாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில்  உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.

** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும் 

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

பக்கத்து வளவுக்காரரின் இரண்டு பக்கத்தாரின் உறுதியில் உங்கள் பெயர் எல்லை என‌ குறிப்பிடப்பட்டு இருக்குமாயின் ஒரு வேளை முயற்ச்சி செய்யலாம் பான்ஞ்ச் அண்ண உறுதி எடுக்க ஆனால் வருடங்கள் அதிகம் கடந்தால் நிலமை என்பதும் கேள்விக்குறியே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.