Jump to content

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை :மட்டக்களப்பில் பலருக்கு தொழில் வாய்ப்பு - வியாழேந்திரன்

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை  இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில்  கமத்தொழில், நீர்ப்பாசன அமைச்சுகள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

அதேபோன்று கடந்த காலங்களிலும் எமது அரசாங்கமே வடக்கின் வசந்தம் கிழக்கின் உதயம் என்ற வேலைத்திட்டங்களால் பல அபிவிருத்திகளை வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு மேற்கொண்டன.

அத்துடன் ஏப்ரல் தாக்குதல் மற்றும் கொராேனா தொற்று போன்ற காரணங்களால் உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. எமது பொருளாதாரமும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலும்  மிகவும் நெருக்கடிக்கு மத்தியில் சிறந்ததொரு வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. எனது அமைச்சு கமத்தொழில் அமைச்சுக்கு கீழே இருக்கின்றது. எனது அமைச்சின் கீழும் விவசாய வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்திருக்கின்றோம்.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் 4க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளைக்கொண்டுவந்து தொழில்பேட்டை ஒன்றை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்திருக்கின்றது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

 

https://www.virakesari.lk/article/95355

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

மட்டக்களப்பு மாவட்டத்தில் 200 ஏக்கர் நிலத்தில் தொழில் பேட்டை ஒன்றை அமைத்து ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என என ராஜங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

Link to comment
Share on other sites

அப்படி ஒன்று அமைந்தால் நல்லது. வறுமையில் வாடும் தமிழ் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அரசியல் தீர்வு கிடைக்கும்வரை மக்களின் வாழ்வாதார தீர்வுக்கு போராடும் வியாழேந்திரனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அங்கை ஒரு தம்பி மட்டக்களப்பு கிராமங்களில கக்கூஸ் பிரச்சனை பெரிய பிரச்சனை எண்டு காட்டுக்கத்து கத்துறாரு....முதல்ல அதை கவனியுங்க..

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 சாதாரண மக்களின் அடிப்படை பிரச்சனைகளை சொல்லும் போது உங்களுக்கு நக்கலாக இருக்கும் போது ஈழம் ,ஈழமக்கள் அவர்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என எழுத்தில் மட்டும் எழுதி வீரம் பேசுபவர்களை நினைக்கையில் எனக்கும் ஒரே மன நெருடலாகவே இருக்கிறது 😷😷😷

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

Link to comment
Share on other sites

19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு ஒரு தொழிற்சாலையையேனும் திறக்கவில்லை. வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். அதனைக்கூட அவர்களால் மீள ஆரம்பிக்க முடியாமல்போனது. ஆனால் எமது அரசாங்கம் அதனை ஆரம்பித்திருக்கின்றது என்றார். 

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

19 hours ago, கிருபன் said:

கடந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு எந்த வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையிலான எமது அரசாங்கத்தில் பிரதமரினால் முன்வைக்கப்பட்டிருக்கும் வரவு செலவு திட்டத்தில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கின்றது.

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

Link to comment
Share on other sites

11 hours ago, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

சோழியன் குடுமி சும்மா ஆடாது. போகப் போகத் தெரியும் அதன் ஆட்டம். இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.😲

பாஞ்ச அவர்களே, இன்னும் நாலு வருடங்கள் இருக்கின்றன. எனவே கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்.

கடந்த நல்லாட்சி அரசுக்கும் தமிழர் பிரதிநிதிகள் அதற்க்கு வழங்கினார்கள்தானே. எத்தனை தொழிடசாலைகளை கட்டினார்கள், எத்தனை பேருக்கு வேலை வழங்கினார்கள்? இவர்கள் ஆதரவு கொடுக்க முஸ்லிம்கள் எல்லாவற்றையும் அள்ளிக்கொண்டு போனார்கள்.

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா? எனவே வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் சேர்ந்து என்ன செய்யபோகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிச்சயமாக அரசியல் உரிமை இப்போதைக்கு இல்லை, வியாளேந்திரனும் பெற்றுத்தருவதாக கூறவும் இல்லை. தமிழர் பகுதிகளை , மக்களை அபிவிருத்தி செய்ய வேண்டியே பாராளுமன்றம் சென்றார். எனவே கொஞ்சம் பொறுத்திருப்போம்.

அரசியல் உரிமைக்காக தெரிவு செய்யப்படடவர்கள் அதனை பெற்றுத்தரட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

இந்தவருடம் மாவீரர் வாரத்திலேயே அது என்ன ஆட்டம் ஆடுது.

யாதொன்றும் இல்லை, மக்களை மாவீரர் பக்கம் செல்லாமல் தடுக்கும் ஏற்பாடு. அங்காலை கிழக்கின் விடிவெள்ளி 834 நாட்களாக சத்தியாக்கிரக போராட்டம் நடத்திய பொத்துவில், ஊறணி மக்களுக்கு வாக்கு கொடுத்து ஏமாத்துறார். 

Link to comment
Share on other sites

9 hours ago, Robinson cruso said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, அபிவிருத்தியாவது நடந்ததா?

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 17:02, குமாரசாமி said:

இது நக்கல் அல்ல. எரிச்சல் வருகின்றது. அன்று தொடக்கம் மக்கள் நலம் மக்கள் நலம் என்று சொல்லி அரசுடன் சேர்ந்து என்னத்தை செய்தார்கள்?   கருணா 10 வருடகாலமாக என்னத்தை செய்தார்?பகிரங்கமாக குடி கும்மாளமாக இருந்ததை தவிர......

கர்ணா ஒன்றும் பெரிய அமைச்சர் கிடையாது செய்து கிழிக்க ஆனால் கர்ணா பிள்ளையான் செய்தது பாதி பங்கு கூட தமிழ் மக்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் கூட்டமைப்பு செய்ததா?? 

On 27/11/2020 at 19:38, Paanch said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் அன்று மூவாயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர். இன்று ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தாகத் தெரிவிக்கப்படுகிறது. அப்படியானால் மிகுதி இரண்டாயிரம் பேரும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனரா. 🤔

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது அதனால் சில ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை நிறுத்தி இருக்கலாம் அல்லவா நாம பாட்டுக்கு ஒன்றை நினைச்சு அடித்து விடுவது 

Link to comment
Share on other sites

 

On 26/11/2020 at 19:06, கிருபன் said:

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் ஆயிரம் பேர்வரை தொழில் புரிந்துவந்தனர்.

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gif

On 4/7/2019 at 03:46, ampanai said:

சுமார் 3000 தொழிலாளர்கள் அங்கு வேலை செய்தனர்.

 

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை கடதாசி ஆலையில் என்ன நடந்திருக்கு என தெரியுமா?? அண்ண அங்கு உற்பத்தி நடைபெறாத போது அவர்களுக்கு சம்பளம் யார் வழங்குவது

இங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

Link to comment
Share on other sites

12 hours ago, Paanch said:

அரசியல் உரிமைதான் கிடைக்கவில்லை, உண்மை.! 

அபிவிருத்தியாவது நடந்ததா? 

நடந்தது உண்மை.! யீ. யீ. பொன்னம்பலம் அவர்களின் காலத்தில் நடந்தது.!! 

இன்று அந்த அபிவிருத்திகள் எல்லாம் எங்கே??.  அரசியல் உரிமை கொண்ட வேலி இல்லை என்றால்.....! வேலியே பயிரரை மேயும்!!.   

 

அப்படி என்றால் அபிவிருத்தி இப்போதைக்கு தேவை இல்லை என்று சொல்கிறீர்களா? அப்படி என்றால் எப்போதுமே இல்லை. தமிழர்களும் இருக்க மாடடார்கள். அவர்கள் சிங்கள தமிழர்களாக மாறி இருப்பார்கள். அல்லது இஸ்லாமியர்களாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Paanch said:

 

image.gif.9f9208cf6d9201646f58d1a505ce829b.gifஇங்கு ஊட்டங்கள் முரண்படுகின்றனவே.

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

Link to comment
Share on other sites

3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊட்டங்கள் ஊடக செய்திகளாக இருக்கலாம் அண்ணே 

ஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்.....? நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

ஊடகச் செய்திகளைப் பார்த்தபின்தானே தம்பி நீங்களும் கருத்திடுகிறீர்கள், வாழைச்சேனை காகித ஆலையை நீங்கள் நேரில்சென்று பார்த்தா எழுதினீர்கள்.....? நண்பர்கள், உறவினர்கள் தெரிந்தவர்கள் சொன்னார்கள் என்று எழுதி அதற்கு ஆதாரம் கேட்டால் எங்கு போவீர்கள். இங்கு யாழில் களவிதிமுறைகளை மீறி யாரும் கருத்தாட முடியாதே..!  

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

Link to comment
Share on other sites

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாழைச்சேனை ஒன்றும் அமெரிக்காவில் இல்லையே நாளையும் சென்று என்னால் பார்க்க முடியும் எனது வேலையும் மட்டக்களப்பில தான் 🤗🤗 

நல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Paanch said:

நல்லது ராசா, ஓட்டமாவடி றெயில்பாதை கடந்து, வைரவர் கோவில் இருந்த காணிக்கு முன்னால் எனது வீடும் வளவும் உள்ளது, இருவருடங்களுக்கு முன்பு சென்று பார்த்தபோது... வீதியின் இருமருங்கிலும் கடைகளாக இருந்தது, வீட்டைக் காணவில்லை. காணிஉறுதியும் தொலைந்துவிட்டது. நீங்கள் போகும்போது தெரிவியுங்கள் விபரம் தருகிறேன் வீடு இருக்கிறதா என்று பார்த்துச் சொல்ல முடியுமா.?? 

உறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள். 

யாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில்  உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.

** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும் 

Link to comment
Share on other sites

1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

உறுதி இருந்தால் மீட்கலாம் அண்ணே தாய் உறுதி வேண்டும் இருந்தால் யாராவது பிடித்திருந்தால் வழக்கு போட்டு வென்று எடுக்கலாம் ஆனால் எடுத்தவன் காசு காரனாக இருந்தால் செலவு செய்யும் காசுக்கு ஒரு காணி வாங்கி விடலாம் நம்ம நாட்டு சட்டத்தரணிகள் வாதாடி வென்று கொடுத்து விடுவார்கள். 

யாரும் கவனிப்பார்கள் அற்ற நிலையில்  உறுதி முடித்து எடுத்திருப்பார்கள். யாராாவது தெரிந்தவர்கள் இருந்தால் பராமரிக்கவாவது கொடுத்து இருக்கலாம்.

** பல ஏக்கர் கணக்கில் காணிகள் முஸ்லிம்களால் அபகரிக்கப்பட்டுள்ளது வாகரை வரைக்கும் 

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

தகவலுக்கு நன்றி தம்பி, எங்களது முக்கியமான பல ஆவணங்கள் மட்டக்களப்பில் அன்றடித்த பெரும் புயலில் அழிந்துவிட்டது. தப்பியவற்றை யாழிலுள்ள எனது மாமா வீட்டில் வைத்திருந்தோம், இந்தியன் ஆமி சென்றதும், சிறீலங்கன் ஆமி, விமான நிலையத்திலிருந்து காங்கேசன்துறை வீதிவரை புதிய பாதை போடுவதற்கு புல்டோசர் கொண்டு வழியிலுள்ள வீடுகளை இடித்து அழித்தபோது மாமாவின் வீடும் அழிந்து, எங்கள் மிகுதி ஆவணங்களும் பலவும் அதற்குள் அகப்பட்டு அழிந்தன.  

பக்கத்து வளவுக்காரரின் இரண்டு பக்கத்தாரின் உறுதியில் உங்கள் பெயர் எல்லை என‌ குறிப்பிடப்பட்டு இருக்குமாயின் ஒரு வேளை முயற்ச்சி செய்யலாம் பான்ஞ்ச் அண்ண உறுதி எடுக்க ஆனால் வருடங்கள் அதிகம் கடந்தால் நிலமை என்பதும் கேள்விக்குறியே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.