இந்திய மீனவர்களின் எல்லை பிரச்சினைக்கு முக்கிய தீர்வு விரைவில் : அமைச்சர் டக்ளஸ்

By
கிருபன்,
in ஊர்ப் புதினம்
-
Tell a friend
-
Similar Content
-
By கிருபன்
தமிழ் பிரதேசங்களில், தமிழ் மொழியின் பயன்பாடு: அமைச்சர் டக்ளஸ் வெளியிட்டுள்ள முக்கிய விடயம்
வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வெளியிடப்படுகின்ற வெளியீடுகள் அனைத்தும் குறித்த பிரதேச மக்களுக்கு விளங்கிக் கொள்ளும் வகையில் அமைய வேண்டும். மத்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற திட்டங்களுக்கான பெயர்கள் அனைத்தையும், வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழிலேயே பயன்படுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க திணைக்களங்களின் பிரதேச அதிகாரிகள் தேவையற்ற அசௌகரியங்களை தவிர்க்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியை முழுமையாக செயற்படுத்துவதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருப்பின் தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வருமாறும் அதிகாரிகளைக் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் எழுதப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் திங்களன்று கலந்துரையாடப்பட்ட போதே கடற்றொழில் அமைச்சரினால் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது :
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட வீட்டுத் தோட்டப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பிரதேச மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய மொழியில் தயாரிக்கப்பட்டு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெற்றியாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கு நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற நிலையில், சான்றிதழ்கள் சிங்கள மொழியில் மாத்திரம் அச்சிடப்பட்டிருந்தமையினால் எழுதப்பட்டிருந்த விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இளைஞர்கள் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட அதிகாரிகளுக்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஏற்கனவே, மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்கள் அனைத்திலும் தமிழ் மொழி முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசாங்க அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/97900
-
By கிருபன்
எங்களின் இரத்தம் சிந்தியபோது தமிழக மக்களின் இரத்தம் கொதித்ததை நான் மறக்கவில்லை: டக்ளஸ் செவ்வி
(நேர்காணல் ஆர்.யசி)
‘மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னராக தலைமை பொறுப்புக்கு கொண்டு வர பிரபாகரன் விரும்பினார் அதற்காக கணினிப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருந்திருக்கவில்லை.
‘இலங்கை இந்திய தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன். அது தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது’
இந்திய மீனவர்களின் விவகாரத்தில் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் வீரகேசரி வார வெளியீட்டிற்கான செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி வருமாறு
கேள்வி:- 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஊடாக எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?
பதில்:- கடற்றொழில் அமைச்சிற்கு சுமார் 8.2 பில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சு நாட்டினுடைய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்க வேண்டிய தேசிய அமைச்சாக காணப்படுகின்றது. அந்த வகையில் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செயற்பாடுகளிலும் நீர் வேளாண்மையிலும் முன்னோக்கி நகர்வதற்கான பல்வேறு திட்டங்கள் குறித்த வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
அவற்றை செயற்படுத்துவது தொடர்பாக நானும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர அவர்களும் அமைச்சு அதிகாரிகள் மற்றும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களின் பிரதாணிகளுடன் கலந்துரையாடி நேர்த்தியான முறையில் வேலைத் திட்டங்களை முன்னேடுப்போம். நிச்சயமாக கடற்றொழில் அமைச்சின் அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னுதாரணமாக அமையும்.
கேள்வி:- தேசிய அமைச்சு – நாடளாவிய ரீதியில் திட்டங்கள் என்றெல்லாம் நீங்கள் தெரிவித்தாலும், ஒரேயொரு தமிழ் அமைச்சர் என்ற வகையில் வடக்கு கிழக்கு பிரதேச கடற்றொழில் சார் அபிவிருத்திக்கு குறிப்பிடத்தக்களவு நிதி ஒதுக்கபட்டவில்லை என்று சொல்லப்படுகின்றதே?
பதில்:- எவ்வாறான அளவுகோலின் அடிப்படையில் இவ்வாறான விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது என்று எனக்கு புரியவில்லை. வரவு செலவுத் திட்டத்தில் மயிலிட்டி, வாழைச்சேனை துறைமுகங்களில் அடுத்த கட்ட அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நந்திக் கடலில் அடுத்த கட்டப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதைவிட களப்பு அபிவிருத்தி போன்ற பொதுவான நிதி ஒதுக்கீடுகளின் ஊடாகவும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் அடையாளப்படுத்தப்படுகின்ற வேலைத் திட்டங்களை மேற்கொள்ள முடியும். மேலும் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் மற்றும் பருத்தித்துறை,பேசாலை,குருநகர் ஆகிய இடங்களில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய மீன்பிடித் துறைமுகங்களை உருவாக்குவது தொடர்பாகவும் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான உரையில் சுட்டிக்காட்டியிருந்தேன். அவதானித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.
கேள்வி:- ஆம், உங்களுடைய உரையில் அவை சொல்லப்பட்டிருந்தாலும் வரவு செலவுத் திட்டத்தில் அவற்றுக்கான நிதி ஒதுக்கப்படவில்லையே...?
பதில்:- உண்மைதான். ஆனால் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிச் சூழலில் அனைத்தையும் அரசாங்கத்தின் நிதியின் ஊடாக செய்ய முடியாது. எனவே எங்களுடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு முடிந்தளவு வெளிநாட்டு உதவிகளையும், தனியார் முதலீடுகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இலங்கை போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளினால் முழுத் தேவைகளையும் சொந்த வருமானத்தில் நிறைவேறிக் கொள்ள முடியாது. அதனடிப்படையில் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை சாதகமான தரப்புக்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்.
தேவையேற்படின் குறை நிரப்பு பிரேரணைகள் மூலமும் குறிப்பிட்டளவு நிதியினை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. இவ்விடத்தில் இன்னொரு விடயத்தை சுட்டிக்காட்ட வேண்டும்.
பருத்தித்துறையில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பாரிய துறைமுகத்தை நீண்ட கால கடன் அடிப்படையில் அமைப்பதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வேலைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னாய்வுப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. ஆனால் அந்தப் பிரதேசத்தினைச் சேர்ந்த சில தரப்பினரின் புரிதல் இன்மை காரணமாக குறித்த திட்டத்தினை ஆசிய அபிவிருத்தி வங்கி தற்போது கைவிட்டுள்ளது.
எனினும் மனம் சோராத விக்கிரமாதித்னைப் போன்று மீண்டும் குறித்த திட்டம் தொடர்பாகவும் ஏனைய சில திட்டங்கள் தொடர்பாகவும் ஆசிய அபிருத்தி வங்கியிடம் கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றேன்.
அதேவேளை சில தனியார் முதலீட்டாளர்களும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருக்கின்றனர். அராங்கத்தினுடைய கொள்கை அடிப்படையில் ஆராய்ந்து மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையிலான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
கேள்வி:- பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திப் பணிகள் தடைப்படுவதற்கு காரணமாக இருந்த தரப்புக்கள், எதிர்காலத்தில் குறித்த அபிவிருத்தியை ஏற்றுக் கொள்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்..?
பதில்:- இதுதொடர்பான சரியான கருத்துப் பரிமாற்றங்களை நடத்தி, இந்த துறைமுகம் அபிவருத்தி செய்யப்படுவதனால் தவிர்க்க இயலாத வகையான பாதிப்புக்கள் ஏற்படுமாயின் நியாமான தீர்வினை அல்லது மாற்று ஏற்பாடுகளை கண்டறிவதன் ஊடாக அனைத்து தரப்புக்களின் சம்மத்துடன் குறித்த அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.
உதாரணத்திற்கு கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தினை பார்ப்பீர்களாயின், குறித்த திட்டம் ஆரம்பிக்கப்டுகின்ற போதும், பல்வேறு காரணங்களை தெரிவித்து மக்களில் ஒரு தரப்பினால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. எனினும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்ப்பு தெரிவித்த தரப்பினரோடு பல்வேறு கட்டப் பேச்சுகளை நடத்தி அவர்களினால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு அடிப்படை திட்டத்தில் சில மாற்றங்களை மேற்கொண்டதுடன் தவிர்க்க முடியாத பாதிப்புக்ளை எதிர்கொண்ட மக்களுக்கு நஸ்டஈடும் வழங்கப்பட்டது.
பிரதேசத்தின் அபிவிருத்தி என்பது தங்களுடைய எதிர்காலச் சந்ததிக்கானது என்பதை புரிந்த கொண்ட மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கான நட்ட ஈட்டினை பெற்றுக் கொண்டு குறித்த கொழும்பு நகரத் திட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் மோதரையில் ஒரு பகுதியினருக்கான நட்டஈடு கடந்த ஆட்சியாளர்களினால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறை குழப்பங்கள் காரணமாக வழங்கப்படாமல் இருந்த நிலையில் கடந்த வருடம் நான் கடற்றொழில் அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர் வழங்கியிருந்தேன்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தினை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஒரு பிரதேசத்திற்கே நன்மையளிக்க கூடிய இவ்வாறான அபிருத்தித் திட்டங்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களில் குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற மக்கள் தாங்களுடைய பாரம்பரிய வரையறைகளை சற்று தளர்த்தி – குறுகிய சிந்தனைகளை தவிர்த்து - நீண்டகால நோக்கோடு குறித்த திட்;டங்களின் சாதக பாதகங்களை ஆராய வேண்டும். அந்தத் திட்டம் நிறைவேற்றப்டுவதனால் கிடைக்கப் போகின்ற சாதங்களுடன் ஒப்பிடும் போது ஏற்படக்கூடிய பாதகங்கள் சொற்பமானவையாக இருப்பின் பாதகங்களை நிவர்த்திக்க கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஆராய வேண்டும்.
அதனை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு முழுத் திட்டத்திற்கும் எதிராக வீதிக்கு இறங்குவது எமக்கும் எமது சந்ததிக்கும் நாமே ஏற்படுத்திக் கொள்ளுகின்ற பாதகங்களாவே அமையும்.
கேள்வி:- கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இலங்கைக்கான அமெரிக்க துர்தவர் அலெயன் பி ரெப்லிட்ஸ் அம்மையார் உங்களைச் சந்தித்து இருந்தார். குறித்த சந்திப்பில் எவ்வாறான விடயங்கள் பேசப்பட்டன?
பதில்:- அமெரிக்காவினால் இலங்கையில் மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்ற காலநிலை மாற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்தி திட்டங்களில் எவ்வாறான கடற்றொழில் சார் திட்டங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதே குறித்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து. கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள், கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுதல், நீர்வேளாண்மையில் துரித வளர்ச்சியை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய நல்லிணக்கதின் ஊடாக தமிழ் மக்களின் அபிலாஷைகளை அடைந்து கொள்வதற்கான எனது அணுகுமுறை என்பவை தொடர்பாக அவருக்கு தெளிவுபடுத்தியிருந்தேன்.
என்னுடைய அணுகுமுறைகள் தொடர்பாக திருப்தி வெளியிட்டிருந்த அவர், நீர்வேளாண்மை மற்றும் கடற்றொழிலாளர்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றும் செயற்பாடுகள் போன்ற விடயங்களில் கடற்றொழில் அமைச்சுக்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்ற செய்தியை வெளிப்படுத்தியிருந்தார். ஆக மொத்தத்தில் திருப்பதிகரமான – கடற்றொழில் சமூகத்திற்கு நம்பிக்கையளிக்கும் சந்திப்பாக அமைந்திருந்தது.
கேள்வி:- கடற்றொழில் நடவடிக்கைகளில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள் தொடர்பாக அமெரிக்க தூதுவருக்கு தெளிவுபடுத்தியதாக தெரிவிக்கின்றீர்கள். அப்படியானால், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லைமீறிய செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துக் கூறினீர்களா..?
பதில்:- எந்த விடயத்தை எங்கு பேசுவது – யாருடன் எவ்வாறான விடயங்களைப் பேசுவது என்பது தொடர்பாக தமிழ் தலைமைகளிடம் காணப்பட்ட – காணப்படுகின்ற தெளிவின்மையும், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களில் ஒன்று என்கின்ற விமர்சனத்தினை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றவன் நான்.
இந்நிலையில் இந்திய மீனவர்களின் விவகாரத்தினை எடுத்துக் கொள்வீர்களாயின் சட்டவிரோதமான எல்லைமீறிய செயற்பாடுகள் தடுக்கப்பட வேண்டும். அந்த விவகாரம் நியாயமான முறையில் தீர்க்கப்பட வேண்டும். எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே நான் உறுதியாக இருக்கின்றேன்.
அதேவேளை மறுபுறத்திலே சம்மந்தப்பட்டிருப்பவர்கள் தமிழக மக்களில் ஒரு பகுதியினர். எங்களுக்கு இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள். - நான் எதனையும் மறக்கவில்லை. இவ்வாறான நிலையில் இழுவை படகு தொழில் முறையை பயன்படுத்துவன் ஊடாக நிறைந்த வருமானத்தினை ஈட்ட முடியும் என்ற தீர்க்கதரிசனமற்ற தீர்மானம் காரணாமாக தங்களுடைய பாரம்பரிய தொழில்முறைகளை கைவிட்டு இந்த தொழிலை வாழ்வாதாரமாக மாற்றிக் கொண்டுள்ளனர்.
தற்போது அவர்களுடைய கடல் பிரதேசத்தில் போதுமான வளங்கள் இல்லாத நிலையில் எமது கடல் பிரதேசத்தினுள் நுழைகின்றனர். யதார்த்த நிலையை புரிந்து கொண்ட நிலையில் தான் இந்த வருட ஆரம்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடன் இந்தியாவிற்கு சென்ற போது இரண்டு தரப்பு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாக பொறிமுறையை உருவாக்குவது தொடர்பான திட்ட வரைபு ஒன்றை இந்தியப் பிரதமரிடம் வழங்கியிருந்தேன்.
குறித்த வரைபு தொடர்பாக இந்தியத் தரப்பும் திருப்தி வெளியிட்டுள்ளது. எனினும் கொரோனா காரணமாக அந்த முயற்சிகளை முன்கொண்டு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பேச வேண்டியவர்களுடன் தொடர்ந்தும் பேசிக் கொண்டிருக்கின்றேன்.
கேள்வி:- இங்கே இரத்தம் சிந்தியபோது அங்கே இரத்தம் கொதித்தவர்கள் என்று தமிழக மக்களை விளிக்கின்றீர்கள். ஆனால் இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த போது மத்திய அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் கொந்தளிக்கவில்லை என்ற விமர்சனம் இருக்கின்றது தானே?
பதில்:-அவ்வாறான சூழ்நிலையை எற்படுத்தியது புலித் தலைமையின் தவறான சுயநலச் தீர்மானங்களே தவிர தமிழக மக்கள் அல்ல. அவர்கள் உணர்வு ரீதியாக எப்போதும் ஈழத் தமிழர்களுக்கு நெருக்கமானவர்களாகவே இருக்கின்றனர்.
கேள்வி:- நீங்கள் சொல்லது போன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீர்மானங்கள் சுயநலன் சார்ந்தது என்றால் யுத்த முனையில் தனது குடும்பத்தினரை வைத்திருக்காமல் புலம்பெயர் நாடொன்றிற்கு பாதுகாப்பாக அனுப்பியிருக்கலாமே?
பதில்:- உங்களைப் போன்று பலரும் இதனை வாதப் பொருளாக முன்வைப்பதை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அவதானித்திருக்கின்றேன். உங்கள் எல்லோரையும்விட என்னால் பிரபாகரனின் மனவோட்டங்களை அறிந்து கொள்ள முடியும். அதனாலேயே இன்று உங்கள் முன்னால் இருந்து கதைத்துக் கொண்டிருக்கின்றேன். தனது குடும்பதினர் புலம்பெயர் நாடுகளில் இருப்பதைவிட தனக்கு அருகில் இருப்பதுதான் பாதுகாப்பானது என்பதே பிரபாகரனின் எண்ணமாக இருந்தது. தன்னுடைய சாம்ராஜ்ஜியம் மக்களையும் அழித்து தன்னையும் அழிக்கப் போகின்றது என்று பிரபாகரன் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதனால் பிரபாகரனினால் தனது குடும்பத்தினருக்கு அனைத்து வசதிகளும் கொண்ட வாழ்கை முறை வன்னியிலேயே ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
அதேபோன்று மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனியை தனக்கு பின்னரான தலைமை பொறுப்புக்கு கொண்டு வரும் முயற்சியாக கணனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு அது வலுப்படுத்தப்பட்டதே தவிர மகனை யுத்த முனைக்கு அனுப்பும் எண்ணம் பிரபாகரனுக்கு இருக்கவில்லை. பிரபாகரனின் இந்த தீர்மானத்தினை சூசை போன்றவர்கள் வெளிப்படையாக விமர்சித்ததாக தகவல்கள் இருக்கின்றன.
ஆனால் அவர்களின் துரதிஸ்டம் இறுதியில் சார்ள்ஸ் அன்ரனியை தேடி யுத்தமுனை நகர்ந்து விட்டது.
1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான மோதல் ஏற்பட்டு புலிகளுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது பிரபாகரன் முதலில் செய்த வேலை தன்னுடைய மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் ஐரோப்பிய நாடான டென்மார்கிற்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தது தான்.
பின்னர் பிரேமதாஸ அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது பேச்சுவார்த்தைக்காக இலண்டனில் இருந்து வந்த அன்ரன் பாலசிங்கத்துடன் நாட்டிற்கு வந்திருந்தனர்.
அதன் பின்னர் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக படையினர் மேற்கொண்ட ‘சத்ஜெய’ இராணுவ நடவடிக்கை காரணமாக வன்னியில் கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப் பகுதியில்தான் பிரபாகரனின் இரண்டாவது மகன் பாலசந்திரன் பிறந்திருந்தார்.
எனினும் இறுதியிலும் தன்னுடைய சாம்ராஜ்ஜயம் சிதறப் போகின்றது என்பதை பிரபாகரன் முன்கூட்டியே உணர்ந்திருந்தால் இப்போது இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டிய தேவை எனக்கு இருந்திருக்காது.
https://www.virakesari.lk/article/96501
-
By கிருபன்
புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றவர்களை அம்பலப்படுத்திய அமைச்சர்
December 11, 20206:29 am இந்த செய்தியை பகிருங்கள்!
இறுதி கட்ட யுத்தம் நடைபெற்றபோது நாடாளுமன்றத்திலிருந்த போலி தமிழ் தேசியவாதிகள் புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்றே விரும்பியிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
பேரினவாத தீயிற்கு எண்ணெய் வார்க்கின்ற செயற்பாடுகளை போலித் தமிழ் தேசியவாதிகள் குத்தகைக்கு எடுத்துள்ளனர்.
சில தரப்புக்களிடம் சலூன் கதவுகள் போன்று இருக்கும் பேரினவாதத்தினை திறக்கச் செய்வதால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்.
இறுதி யுத்தத்தின் போது யார் யார் எங்கிருந்தார்கள் என்பதை பற்றி இப்போது அறிக்கை பட்டிமன்றம் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.
அந்த அழிவு ஏற்படக் கூடாது என்ற எனது மனிதாபிமான நோக்கு காரணமாக அதனை நிறுத்துவதற்கு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேசுவோம் வாருங்கள் என அப்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்களை அழைத்த போது அவர்கள் அதற்கு இணங்கியிருக்கவில்லை.
புலிகள் அழிய வேண்டும் என்ற மனநிலையிலேயே இருந்தார்கள். ஆனால் அதை வெளிப்படையாகக் காட்டாமல் புலிகள் நின்றடிப்பார்கள், விட்டடிப்பார்கள் – 40000 சவப்பெட்டிகளை தயார் செய்யுங்கள் என்றெல்லாம் கதைவிட்டுக் கொண்டு அழிவுக்கு துணை போனார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
https://www.meenagam.com/புலிகள்-நின்றடிப்பார்கள/
-
By கிருபன்
அமைச்சர் டக்ளஸ் தலைமையில் வடக்கு கிழக்கில் மீன்பிடித் துறைமுகங்கள் உருவாகும் – கந்தரவில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன
December 6, 2020 அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு தேவையான மீன்பிடித் துறைமுகங்கள் உருவாக்கப்படும் என்று கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று நடைபெற்ற கந்தர மீன்பிடித் துறைமுகத்திற்கான வேலைகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நாடளாவிய ரீதியில் சுமார் 22 மீன்பிடித் துறைமுகங்கள் இருக்கின்ற போதிலும் நாட்டின் மூன்றிலிரண்டு கடல் பிரதேசத்தை கொண்ட வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இரண்டு மின்பிடித் துறைமுகங்கள் மாத்திரமே இருப்பதாக கவலை வெியிட்ட இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அடுத்த ஐந்து வருடங்களில் அமைச்சர் டக்ளஸின் தலைமையில் வடக்கு கிழக்கு பிரதேசத்திற்கு தேவையான துறைமுகங்கள் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜனாதிபதியாக இருந்த போது தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கந்தர மற்றும் குருநகர் ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதை நினைவுபடுத்திய இராஜாங்க அமைச்சர், தற்போதைய அரசாங்கத்தில் கந்தர துறைமுகம் தொடர்பாக முதலாவது அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து அங்கீகாரத்தினை பெற்றுக் கொடுத்தமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றியையும் தெரிவித்தார்.
குறித்த துறைமுகம் சுமார் 4 பில்லியன் செலவில் அமைக்கப்படவள்ள நிலையில், இந்த துறைமுகமானது நூற்றுக்கான பலநாள் கலங்களும் சிறு மீன்பிடிப் படகுகளும் பயன்படுத்த கூடிய நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://thinakkural.lk/article/95735
-
By கிருபன்
வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்புரவு செய்ய தயாரில்லை என கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்த வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை பேசுபொருளாக்கி தமிழ் மக்கள் மத்தியில் வீண் புரளியைக் கிளப்புகின்ற சுயலாப அரசியல் செயற்பாடுகள் தமிழ் மக்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது.
அதேபோல் போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம், கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் போன்ற மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.
எம்மைப் பொறுத்தவரையில், கிடைக்கின்ற வளங்களை எல்லாம் பயன்படுத்தி எமது மக்களும் அனைத்து உரிமைகளும் பெற்றவர்களாக வாழ வேண்டும். அதற்கான அனைத்து தேவைகளையும் கௌரவமாக எமது மக்கள் பெற வேண்டும். அதற்காகவே நாம் உழைக்கின்றோம். அந்த வகையில் இந்த வரவு – செலவுத் திட்டத்தை வரவேற்கின்றோம்.
ஆனால், மயானங்களை துப்புரவு செய்கின்ற போலித் தமிழ் தேசியவாதிகள், எமது மக்களின் துயரங்களை துப்புரவு செய்வதற்குத் தயாராக இல்லை. வாழ வேண்டிய எமது மக்களை கல்லறைகளாக்கிவிட்டு, வாழுகின்ற எமது மக்களுக்கு துரோகிகளாகிவிட்ட இவர்களின் வரலாறுகளை எந்தக் கல்லறைகளும் ஏற்றுக் கொள்ளாது என்றே தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர் என்றார்.
https://www.virakesari.lk/article/94929
-
-
Topics
-
25
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
இதை நான் சொல்லவெளிக்கிட்டால் , அப்படியில்லை கொம்மாணும் பிள்ளையானும் பாலும் தேனும் ஓட வைப்பார்கள் என்று அடம்பிடிக்கிறார்களே, என்ன செய்வது? அவ்வளவு விசுவாசம் !!!
-
உண்மை. இந்த சதியின் பின்னால் இந்தியா இருக்கிறதென்பது இப்போது வெளிப்படையாகிறது. வேறு எந்தக் காரணத்தை விட்டாலும், மாணவர்களின் போராட்டத்திற்கோ, உலகத் தமிழரின் போராட்டத்திற்கோ பயந்து பேரினவாதிகள் மீண்டும் இந்த நினைவாலயத்தை நிறுவுவதற்குச் சந்தர்ப்பமேயில்லை என்கிற ஒற்றைக்காரணமே போதும் அவர்கள் இதற்குள் இல்லையென்பதை நிறுவுவதற்கு.
-
By பா. சதீஷ் குமார் · Posted
ரத்த மகுடம்-129 ஐந்து சாம்பல் நிற புறாக்களும் அந்த மனிதர் மீது வீற்றிருந்ததை சில கணங்கள்தான் சாளுக்கிய இளவரசனான விநயாதித்தன் கண்டான்.அது தொடர்பான சிந்தனைகள் அவனுக்குள் விருட்சமாக வளர்வதற்குள் அந்த மனிதர் தன் கண்களைத் திறந்தார்.‘‘வணக்கம்... பறவை சித்தர் என்பது தாங்கள்தானா..?’’ முன்னால் வந்து அவரை வணங்கினான் விநயாதித்தன். http://kungumam.co.in/kungumam_images/2020/20201225/21.jpg ‘‘மற்றவர்கள் இந்த எளியவனை அப்படி அழைக்கிறார்கள்... மற்றபடி அடியேன் சித்தனல்ல... அந்த நிலையை எட்ட முயற்சித்துக் கொண்டிருப்பவன்...’’ சாளுக்கிய இளவரசனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒருவேளை, தான் காண வந்த மனிதர் இவரில்லையோ..? சங்கடத்துடன் தன் இடுப்பைத் தடவினான். ஓலை பாதுகாப்பாக இருந்தது. பறவை சித்தரின் உதட்டில் புன்னகை பூத்தது. ‘‘ஓலையா..?’’ விநயாதித்தனின் புருவங்கள் உயர்ந்தன. ‘‘ஆம்...’’‘‘அனுப்பியது யார்..?’’சில கணங்கள் அமைதியாக இருந்தவன், ஒரு முடிவுடன் சொன்னான். ‘‘எங்கள் ஒற்றர் படையைச் சேர்ந்தவர்...’’‘‘ஆணா பெண்ணா..?’’வியப்பின் உச்சியில் சாளுக்கிய இளவரசன் ஊசலாடினான். ‘‘ஆண்...’’ ‘‘இந்த எளியவனைச் சந்திக்கும்படி அதில் எழுதப்பட்டிருக்கிறதா..?’’ விநயாதித்தன் தன்னையும் அறியாமல் ‘ஆம்’ என தலையசைத்தான். தன் மீது அமர்ந்த புறாக்களை கணத்துக்கும் குறைவான நேரம் பறவை சித்தர் அளவிட்டார். ‘‘ஐந்து புறாக்கள்...’’ முணுமுணுத்தவர் தன் முன்னால் நின்றிருந்தவனை உற்றுப் பார்த்தார். ‘‘சாளுக்கிய தேசத்தைச் சேர்ந்தவனாக நீ இருக்கவேண்டும்...’’ ‘‘அத்தேசத்தின் இளவரசன் நான்...’’பறவை சித்தர் நகைத்தார். ‘‘ஐந்து புறாக்கள் என் மீது அமர்ந்தபோதே இதைப் புரிந்துகொண்டேன்... எல்லா ரகசிய நடவடிக்கைகளுக்கும் சாளுக்கியர்கள் ஐந்து புறாக்களைத்தானே பறக்க விடுவார்கள்..?’’ இமைக்காமல் அவர் முகத்தையே விநயாதித்தன் பார்த்துக் கொண்டிருந்தான். ‘பறவை சித்தர் சக்தி வாய்ந்தவர் என எல்லோரும் சொல்கிறார்கள் இளவரசே... எதிர்காலத்தை அப்படியே சொல்லும் வல்லமை அவருக்கு இருக்கிறதாம்... ஒருமுறை அவரை நீங்கள் சந்தித்தால் நல்லதென்று தோன்றுகிறது...’ என தனக்கு அனுப்பப்பட்ட... இப்பொழுது தன் இடுப்பில் பாதுகாப்பாக இருக்கும் ஓலையில் எழுதப்பட்ட... வாசகங்களை நினைவுகூர்ந்தான். ‘‘நண்பர்களைக்கூட ஒற்றர் படையைச் சேர்ந்தவர்களாகக் குறிப்பிடும் வழக்கம் இளவரசருக்கு இருக்கிறது போல் தெரிகிறது...’’ அதிர்ச்சியை மறைத்துக் கொள்ள விநயாதித்தன் சிரமப்பட்டான். ‘‘ஓலையை அனுப்பியவரும் ஒரு தேசத்தின் இளவரசர்தானே..?’’ அதுவரை தன் முன் இருப்பவர் நம்பத்தகுந்தவரா இல்லையா என்று சந்தேகப்பட்டுக் கொண்டிருந்த சாளுக்கிய இளவரசன், தன் முன் வீசப்பட்ட இக்கேள்விக்குப் பின் ‘இவர் பறவை சித்தர்தான்’ என்ற முடிவுக்கு வந்தான். சரியாகச் சொல்லிவிட்டாரே! ‘‘ஆ...ம்... கங்க நாட்டு இளவரசன்... என் நண்பன்...’’ பறவை சித்தர் தன் இமைகளை சில கணங்கள் மூடி, பின் திறந்தார். ‘‘இந்த எளியவனைக் காண வந்ததன் காரணம்..?’’ இனி உண்மையைப் பேசுவதே நல்லது என்ற முடிவுக்கு விநயாதித்தன் வந்துவிட்டதால், ‘‘பல்லவர்களை நாங்கள் பூண்டோடு அழிக்க வேண்டும்... நடைபெறும் போரில் சாளுக்கியர்கள் வெற்றி பெற வேண்டும்... அதற்கு உங்கள் ஆசி தேவை...’’ என்றான்.பறவை சித்தர் அமைதியாக இருந்தார். ‘‘ஏன் ஆசி வழங்க மறுக்கிறீர்கள்..?’’ ‘‘கோரிக்கை அப்படி...’’ ‘‘என் கோரிக்கையில் என்ன தவறு...’’ ‘‘கோரிக்கையே தவறுதான்... அனைத்து உயிரினங்களும் வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரும் இப்படிப்பட்ட கோரிக்கைகளுக்கு ஆசி வழங்க மாட்டார்கள்...’’‘‘ஒரு நாட்டின் இளவரசன் வேறு எப்படிப்பட்ட கோரிக்கையை வைப்பான் என்று நினைக்கிறீர்கள்..? எப்படி உங்கள் இயல்பு எல்லா உயிரினங்களும் வாழவேண்டும் என்று நினைப்பதோ அப்படித்தானே எதிரி நாட்டை அழிக்க வேண்டும் என ஓர் இளவரசன் விரும்புவதும்...’’ ‘‘அதற்காகத்தானே உன் தந்தை அசுரப் போர் வியூகத்தைக் கைப்பற்றியிருக்கிறார்..?’’ நரம்புகள் அதிர விநயாதித்தன் அப்படியே சிலையானான். இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவன் முகம் வெளிப்படுத்தியது. ‘‘அதை நம்பச் சொல்கிறீர்களா..?’’ ‘‘ஏன் நம்பக் கூடாது என்று நினைக்கிறாய்..?’’ ‘‘அதைக் கொண்டு வந்தவன் கரிகாலன்...’’ ‘‘கரிகாலன் யார்..?’’ ‘‘எங்கள் எதிரி நாட்டு உபசேனாதிபதி. நாடே இல்லாத சோழர் குலத்தின் இளவரசன்...’’ ‘‘அவன் ஏன் அந்த அசுரப்போர் வியூகத்தைக் கைப்பற்றி உங்களுக்குத் தரவேண்டும்..?’’ ‘‘அவன் சாளுக்கியர்களின் நண்பன் என்று என் தந்தை நினைக்கிறார்... பல்லவர்களுடன் இருந்தபடியே அவர்களுக்கு எதிராக அவன் குழிபறித்துக் கொண்டிருப்பதாக நம்புகிறார்...’’‘‘அதை நீ நம்பவில்லையா..?’’‘‘இல்லை... பல்லவர்கள் நலனுக்காக சாளுக்கியர்களுடன் நட்பு பாராட்டும் வேடதாரிதான் அந்த கரிகாலன்...’’ ‘‘உன் கூற்றுக்கு ஆதாரம் இருக்கிறதா..?’’விநயாதித்தன் தயங்கினான். ‘‘இல்லை... உள்ளுணர்வு கரிகாலனை நம்பவேண்டாம் என எச்சரித்தபடி இருக்கிறது...’’‘‘அதே உள்ளுணர்வு அசுரப் போர் வியூகம் குறித்து என்ன சொல்கிறது..?’’சாளுக்கிய இளவரசன் உதட்டைக் கடித்தான். தன் வலது தொடையில் அமர்ந்திருந்த புறாவை எடுத்து பறவை சித்தர் தடவிக் கொடுத்தார். ‘‘வினாவுக்கான விடை இந்தப் புறாக்கள்தான்... ஐந்து புறாக்கள்... இவை சாளுக்கியர்கள் ரகசிய செய்திகளைப் பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் உபாயம் மட்டுமல்ல...’’ நிமிர்ந்து விநயாதித்தனைப் பார்த்தார். அவரே தொடரட்டும் என சாளுக்கிய இளவரசன் அமைதியாக நின்றான்.‘‘மணிமங்கலம் போர் நினைவில் இருக்கிறதா..?’’ மணிமங்கலம் ஊரின் பழமையான ஆலமரத்தின் கீழே பத்மாசனமிட்டு கரிகாலன் அமர்ந்திருந்தான். சீரான பிராணாயாமத்தில் இருந்தவனின் மனக்கண்ணில் பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் இடையில் நடந்த குருக்ஷேத்திரப் போர்க் காட்சிகள் விரிந்தன.குறிப்பாக தன் உறவினர்களுக்கும் ஆசான்களுக்கும் எதிராக போர் புரியமாட்டேன் என தன் காண்டீபத்தை தேரில் வைத்துவிட்டு குழப்பத்துடன் அமர்ந்திருந்த அர்ஜுனனும் பாஞ்சஜன்யம் சங்கை தன் வலது கையில் ஏந்தியபடி அவனுக்கு அபயம் அளிக்கும் பகவான் கிருஷ்ணரின் தோற்றமும்.அக்காட்சியையே கரிகாலன் உன்னிப்பாக தன் அகத்தில் கவனிக்கத் தொடங்கினான்...‘‘எப்படி உன்னால் மறக்க முடியும்..? சாளுக்கியர்களால் மட்டுமல்ல... தமிழகத்தைச் சேர்ந்தவர்களாலும் எக்காலத்திலும் அப்போரை மறக்கவே முடியாது... ஏன் தெரியுமா..? விந்திய மலைக்கு தென்புறப் பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என்றால் அது மணிமங்கலம் போர்தான்...’’ எவ்வித உணர்ச்சியும் இன்றி சொன்ன பறவை சித்தர், தன்மீது அமர்ந்திருந்த ஐந்து புறாக்களையும் ஒவ்வொன்றாக எடுத்து தடவிக் கொடுத்து அவற்றைப் பறக்கவிட்டபடியே தொடர்ந்தார்.‘‘சாளுக்கிய மன்னர்... மாமன்னர் என்று நீங்கள் குறிப்பிடுவீர்கள் அல்லவா... அவர்... இரண்டாம் புலிகேசி... நான்கு முறை பல்லவர்களை வெற்றி கொண்டார். ஐந்தாவது முறையாகப் படை திரட்டி வந்த அவரை மணிமங்கலத்தில்தான் அப்போதைய பல்லவ மன்னனான நரசிம்மவர்மன் எதிர்கொண்டான்...’’ என்றபடி ஐந்தாவது புறாவைப் பறக்கவிட்டார்.‘‘அதனால்தான் இந்த ஐந்து புறாக்கள்தான் விடை என்றேன்... அந்த மணிமங்கலம் போரில் பல்லவப் படைக்குத் தலைமை தாங்கியவன் பரஞ்சோதி. அவன் மூன்று அசுரப் போர் வியூகங்களை சாளுக்கியர்களுக்கு எதிராக வகுத்தான்... அவற்றில் ஒன்றைத்தான் பல்லவ மன்னரான நரசிம்மவர்மர் தேர்வு செய்தார்.அந்த வியூகத்தின் அடிப்படையில் நடைபெற்ற போரில் முதல் முறையாக சாளுக்கியர்கள் தோற்றார்கள்... நான்கு முறை சாளுக்கியர்கள் பெற்ற வெற்றிக்கு பழிவாங்கும் விதமாக பல்லவப் படை அந்த வெற்றியை ருசித்தது... தோற்று ஓடிய சாளுக்கியப் படைகளையும் உங்கள் பாட்டனார்... மாமன்னர்... இரண்டாம் புலிகேசியையும் பரஞ்சோதி தலைமையிலான பல்லவப் படை துரத்திக் கொண்டே சென்றது... எதுவரை..? சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி வரை!வாதாபியை அடைந்த பல்லவப் படை பரஞ்சோதியின் வழிகாட்டுதலுடன் அந்நகரையே தீக்கிரையாக்கியது... அதனால்தான் மணிமங்கலத்தில் தொடங்கி வாதாபி வரை பல்லவப் படை நிகழ்த்திய கொடூரத்தை இப்பிரதேசத்தின் குருக்ஷேத்திரப் போர் என மக்கள் குறிப்பிடுகிறார்கள்...’’ நிறுத்திய பறவை சித்தர், சில கணங்கள் இமைக்காமல் விநயாதித்தனைப் பார்த்தார்.சாளுக்கிய இளவரசனுக்குள் அனல் கொதித்துக் கொண்டிருந்தது. அவன் நயனங்கள் தீயைக் கக்கின.‘‘அப்படிப்பட்ட அசுரப் போரால்... அதுவும் பரஞ்சோதி வகுத்த ராட்சஷப் போர் வியூகத்தால்... அதே பல்லவர்களை எதிர்கொண்டு பழி தீர்க்க வேண்டும் என உன் தந்தையும் சாளுக்கிய தேசத்தின் இப்போதைய மன்னரும் இரண்டாம் புலிகேசியின் புதல்வருமான விக்கிரமாதித்தர் விரும்புகிறார்... அதற்காக இன்றைய பல்லவ தேசத்தின் உபசேனாதிபதியான கரிகாலனை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகிறார்... ஒரு மன்னரின் கடமை எதுவோ அதை அவர் நிறைவேற்றுகிறார்... இதை ஏன் நம்பவும் ஏற்கவும் மறுக்கிறாய்..?’’ ‘‘அப்படியானால் நடைபெறவிருக்கும் சாளுக்கிய-பல்லவ போரில் பரஞ்சோதி வடிவமைத்த... இதுவரை பயன்படுத்தப்படாமல் இருக்கும்... அசுரப் போர் வியூகத்தை நாங்கள் பயன்படுத்தினால் வெற்றி பெறுவோம் என்கிறீர்களா..? இதையே உங்கள் ஆசியாகக் கருதலாமா..?’’ பதிலேதும் சொல்லாமல் பறவை சித்தர் எழுந்து அருகிலிருந்த புதர் பக்கமாகச் சென்றார்...நாழிகை நகர்ந்ததே தவிர அவர் வரவில்லை. விநயாதித்தன் அந்தப் புதரை அடைந்து ஆராய்ந்தபோது அங்கு எந்த மனிதரும் இருப்பதற்கான - இருந்ததற்கான - அறிகுறி தெரியவில்லை!கரிகாலன் தன் கண்களைத் திறந்தான்.அகத்தில் தெரிந்த அர்ஜுனனுக்கு அபயம் அளிக்கும் கிருஷ்ணரின் தோற்றம் புறத்திலும் தெரிந்தது. ‘இதே தோற்றத்தில் பகவான் கிருஷ்ணர் காட்சியளிக்கும் கோயிலை நான் இந்த மண்ணில் கட்டுவேன்... என்னால் முடியவில்லை என்றால்... எனது சந்ததி... சோழர் குலம்... வருங்காலத்தில் இதே மணிமங்கலத்தில் ஆலயம் எழுப்பும்...’ தரையில் அடித்து சத்தியம் செய்தான்.இரண்டு நாழிகைகளுக்குப்பின் பூனை போல் அடியெடுத்து வைத்து பறவை சித்தர் வந்தார்.விநயாதித்தன் அங்கில்லை. ‘அப்பாடா...’ பெருமூச்சு விட்டார். ‘சித்தராக நடிப்பது எவ்வளவு கடினம்... சித்தர்கள் எப்படி உரையாடுவார்கள் என்று தெரியாமல் நம் போக்கில் வார்த்தைகளை விட்டிருக்கிறோம்... நல்லவேளையாக சாளுக்கிய இளவரசன் நம்பிவிட்டான்...’நிம்மதியுடன், அருகில் இருந்த மரத்தில் ஏறி, மூன்று கிளைகளுக்கு இடையில் கை கால்களும் வாயும் கட்டப்பட்டு இருந்த ஒரு மனிதனை இறக்கி கட்டுகளை அவிழ்த்தார்.கட்டப்பட்ட மனிதனும் நரம்புகளும் எலும்புகளும் தெரிய... ஜடை முடியுடன் சித்தர் கோலத்தில்தான் இருந்தான்.‘‘என்ன காரியம் செய்துவிட்டாய்...’’ கை கால்களை உதறியபடி அந்த மனிதன் சீறினான். ‘‘நாம் இருவருமே பல்லவ ஒற்றர்கள். கரிகாலர்தான் என்னை இங்கு அனுப்பி சாளுக்கிய இளவரசனிடம் பேசச் சொன்னார்... கெடுத்து விட்டாயே...’’‘‘இல்லை... நிறைவேற்றிவிட்டேன்...’’ பறவை சித்தராக விநயாதித்தனிடம் உரையாடியவன் சிரித்தான். ‘‘என் தலைவி சிவகாமியின் கட்டளைப்படி!’’ http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17566&id1=6&issue=20201220 ரத்த மகுடம்-130 ‘‘என்ன... பல்லவ நாட்டின் சக ஒற்றனால் வாய் அடைக்கப்பட்டு; கை, கால்கள் கட்டப்பட்டு; மரத்தின் கிளையில் சிறை வைக்கப்பட்டாயா..?’’நிதானமாகக் கேட்ட கரிகாலனை பிரமிப்புடன் பார்த்தான் அந்த மனிதன்.தான், எதுவும் சொல்லாமல் நடந்த அனைத்தையும் ஏதோ நேரில் பார்த்தது போல் சொல்லும் திறமைசாலி, பல்லவப் படையின் உபசேனாதிபதியாக இருக்கும் வரை சாளுக்கியர்கள் மட்டுமல்ல... வேறு எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாலும் பல்லவ நாட்டைக் கைப்பற்ற முடியாது...மனதுக்குள் சொல்லிக் கொண்டவன், வாயைத் திறந்து ‘‘ஆம்...’’ என்றான்.http://kungumam.co.in/kungumam_images/2020/20210101/19.jpg‘‘வந்தவன் யார்..?’’‘‘எனது தம்பி...’’‘‘பொன்னனா..?’’அந்த மனிதனின் கண்கள் விரிந்தன. ‘‘ம்...’’‘‘நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகள் என்பது நமக்கு சாதகமான அம்சம்...’’‘‘...’’‘‘உன் சகோதரன் விநயாதித்தனிடம் என்ன சொன்னான்..?’’‘‘மரத்தின் கிளையில் என்னை அடைத்ததால் அவர்கள் உரையாடல் துல்லியமாக என் செவியில் விழவில்லை...’’‘‘விழுந்தவரை சொல்...’’சொன்னான்.கரிகாலனின் நயனங்கள் சிந்தனையில் ஆழ்ந்தன. சில கணங்கள்தான். பிறகு சட்டென ஒளிர்ந்தன. ‘‘உத்தமா...’’‘‘கட்டளையிடுங்கள் கரிகாலரே...’’‘‘இரட்டைப் பிறவிகள் என்பதால் பொன்னனும் நீயும் அச்சு அசலாக ஒரே உருவமாக இருப்பீர்கள்...’’கரிகாலன் முடிப்பதற்குள் உத்தமன் இடைமறித்தான். ‘‘நாசியின் அளவு மட்டுமே வேறுபடும்... அது கூட சிறிய அளவில்தான்...’’‘‘அதாவது யார் உத்தமன்... யார் பொன்னன் என்பதை சட்டென கண்டுபிடிக்க முடியாது... அப்படித்தானே..?’’‘‘எங்கள் உறவினர்களே பல நேரம் குழம்பியிருக்கிறார்கள்...’’கரிகாலன் புன்னகைத்தான். ‘‘இது போதும். அடுத்த ஆட்டத்தைத் தொடங்கலாம்... உத்தமா நேராக காஞ்சிக்கும் மல்லைக்கும் இடையில் இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு செல்... அங்குதான் இப்பொழுது விநயாதித்தன் இருக்கிறான். அவன் மட்டுமல்ல...’’உத்தமன் இமைக்காமல் கரிகாலனைப் பார்த்தான்.‘‘கடிகை பாலகனும், காபாலிகனும், சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தரின் சகோதரரான அனந்தவர்மரும்கூட அங்குதான் இருக்கிறார்கள்...இதே பறவை சித்தராக அங்கு செல்... விநயாதித்தனைச் சந்தித்து...’’ என்றபடி உத்தமனை நெருங்கி அவன் செவியில் சிலவற்றை கரிகாலன் முணுமுணுத்தான்.உத்தமனின் வதனம் மலர்ந்தது. ‘‘இம்முறை வெற்றியுடன் திரும்புகிறேன் கரிகாலரே...’’கரிகாலன் புன்னகைத்தான்.‘‘சொல்லாமல் கொள்ளாமல் எங்கு சென்றீர்கள் மன்னா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபர் வந்தார்.விக்கிரமாதித்தர் அலட்சியமாக அவரைப் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார்.‘‘செல்ல வேண்டிய இடத்துக்கு...’’‘‘கணிகையர் இல்லத்துக்கா..?’’சாளுக்கிய மன்னரின் நயனங்கள் தீயைக் கக்கின. ‘‘யாரிடம் உரையாடுகிறீர்கள் என்று தெரிந்துதான் பேசுகிறீர்களா..?’’‘‘எங்கள் மன்னரிடம் பேசுகிறோம் என்று தெரிந்துதான் உரையாடுகிறேன்...’’‘‘அறிந்துமா இப்படியொரு வினாவைத் தொடுத்தீர்கள்..?’’‘‘தொடுத்ததற்கு உரிய பதில் வராதபோது, இதுவாக இருக்கலாமோ என்று இன்னொரு கேள்வியை எழுப்பினேன்...’’‘‘எழுப்பப்பட்ட வினா தவறானது...’’‘‘எனில் சரியான விடையைப் பகிரலாமே...’’‘‘பதில் சொல்ல விருப்பமில்லை... நீங்கள் செல்லலாம்...’’‘‘அறிந்து கொள்ளாமல் செல்ல முடியாது மன்னா...’’‘‘நான் மன்னன்...’’‘‘அதனால்தான் எங்கு சென்றீர்கள் என்று கேட்கிறேன்...’’ராமபுண்ய வல்லபரை உற்றுப் பார்த்தார் சாளுக்கிய மன்னர்.அப்பார்வையை எதிர்கொண்டு அசையாமல் நின்றார் சாளுக்கிய போர் அமைச்சர்.‘‘ஒரு மன்னனுக்கு இந்த உரிமை கூட இல்லையா..?’’‘‘இல்லை மன்னா...’’‘‘காரணம்..?’’‘‘நாம் எதிரி நாட்டில் இருப்பதால்...’’இதைக் கேட்டு கடகடவெனச் சிரித்தார் விக்கிரமாதித்தர். ‘‘இந்த காஞ்சி மாநகரம் இப்பொழுது சாளுக்கியர்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது... இன்று பல்லவ நாட்டின் மன்னனும்் நான்தான்...’’‘‘பெயர் அளவுக்கு...’’‘‘என்ன சொன்னீர்கள்..?’’‘‘பெயர் அளவுக்கு பல்லவ நாட்டை நாம் ஆள்கிறோம் என்று சொன்னேன்...’’‘‘இப்படிச் சொல்பவர் எனக்குஅமைச்சராக இருக்கிறார்...’’‘‘சின்ன திருத்தம் மன்னா... ஏதோ ஒரு துறையின் அமைச்சராக அல்ல... போர் அமைச்சராக பதவி வகிக்கிறார்...’’‘‘எனில் சாளுக்கியர்கள் கோழைகள் என்கிறீர்கள்...’’‘‘பல்லவப் படை இன்னும் அழிக்கப்படவில்லை என நினைவுபடுத்துகிறேன்...’’‘‘எனவே எங்கு சென்றாலும் உங்களிடம் உத்தரவு பெற்றுவிட்டுச் செல்லவேண்டும் என கட்டளையிடுகிறீர்கள்...’’‘‘மன்னரின் உயிரைக் காக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது என்கிறேன்...’’‘‘தனியாக வருபவனைக் கொல்லும் அளவுக்கு பல்லவர்களின் நிலை தாழ்ந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா..?’’‘‘யுத்தத்தில் தரம் தாழ்தல்... அறம்... தர்மம்... என எதுவும் கிடையாது மன்னா... சொல்லப்போனால் போர்க்களத்தில் பொது விதி என்றே எதுவும் இல்லை... எது எப்படி எந்த விதத்தில் நடந்தாலும் சகலமும் ராஜதந்திரமாகவே கருதப்படும்...’’‘‘... என்கிறதா சாஸ்திரம்...’’‘‘... என்கிறது அனுபவம்...’’‘‘எனவே, ஒரு நாட்டின் மன்னன் தன் போர் அமைச்சருக்கு கட்டுப்பட்டவன்... அப்படித்தானே?’’‘‘தன் படைகளுக்கு கட்டுப்பட்டவன்...’’ தலை நிமிர்ந்து சொன்னார் ராமபுண்ய வல்லபர். ‘‘மன்னருக்காகத்தான் படைகள்... மன்னரால்தான் படைகள்... மன்னரைச் சுற்றித்தான் படைகள்... படைகளின் அச்சாணியே மன்னர்தான் என்னும்போது அச்சாணியைப் பாதுகாக்க வேண்டியது படைகளின்... படைவீரர்களின் கடமை... அப்படைகளின்... படை வீரர்களின் தலைவனான போர் அமைச்சரின் பொறுப்பு...’’‘‘அந்தப் பொறுப்பின் பொருட்டுதான் என்னை நிற்கவைத்து விசாரணை நடத்துகிறீர்களா..?’’‘‘வழிநடத்துகிறேன் என்று சொல்வது சரியாக இருக்கும் மன்னா...’’‘‘எப்படி..? தன் மன்னரையே வேவு பார்ப்பதன் வழியாகவா..?’’ கேட்டபடியே ராமபுண்ய வல்லபரை நெருங்கி வந்தார் விக்கிரமாதித்தர். ‘‘உங்களால் பணியமர்த்தப்பட்ட வீரர்கள் என்னைப் பின்தொடர்வது எனக்குத் தெரியும்அமைச்சரே...’’‘‘நன்றி மன்னா... என் கடமையை நான் சரிவர செய்கிறேன் என்பதை தாங்கள் புரிந்து கொண்டதற்கு...’’விக்கிரமாதித்தரின் உதட்டில் இகழ்ச்சி வழிந்தது. ‘‘நான் எங்கு சென்றேன் என தங்களுக்குத் தெரியும்... அப்படியிருந்தும் ‘எங்கு சென்றீர்கள்’ என என்னிடமே கேட்கிறீர்கள்... இதற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்..?’’‘‘உண்மையை... சென்ற இடத்தில் நடந்ததைச் சொல்லுங்கள்...’’‘‘உங்களால் அனுப்பப்பட்டவர்கள் எதுவும் சொல்லவில்லையா..?’’‘‘இல்லை...’’‘‘ஏன்... அவர்கள் சரிவர பணியாற்றவில்லையா..?’’‘‘சாளுக்கிய குடிமகன் தன் பணியை சரிவர செய்வதுபோல் வேறு எந்த தேசத்தவனும் தன் கடமையைச் செய்வதில்லை...’’‘‘அப்படியானால் எதற்காக என்னிடம் கேட்கிறீர்கள்..?’’‘‘மன்னரின் உயிருக்கு ஆபத்து நேராமல் பார்த்துக் கொள்வதுதான் அவர்களது பணியே தவிர பாண்டிய மன்னருடன் என்ன பேசினார் என ஒட்டுக் கேட்பதல்ல...’’‘‘ஆக, நான் மதுரைக்கு ரகசியமாகச் சென்றது உங்களுக்குத் தெரியும்...’’‘‘அரிகேசரி மாறவர்மருடன் தனிமையில் என்ன பேசினீர்கள் என்று தெரியாது...’’‘‘தெரிந்து என்ன செய்யப் போகிறீர்கள்...’’‘‘பாண்டிய நாட்டு மன்னருடன் எங்கள் சாளுக்கிய மன்னர் என்ன பேசினார் என்று தெரிய வேண்டியது சாளுக்கிய தேசத்தின் போர் அமைச்சரின் கடமை...’’‘‘சொல்ல மறுத்தால்..?’’‘‘தன் நாட்டின் நலனுக்காகவும், தன் குடிமக்களின் மகிழ்ச்சிக்காகவும், தன் பிரதிநிதிகளின் பாதுகாப்புக்காகவும் வாழும் எங்கள் மன்னர் ஒருபோதும் தன் பொறுப்பில் இருந்து மீற மாட்டார்...’’‘‘கடமை... பொறுப்பு... விசாரணை... நானும் மனிதன்தானே..?’’‘‘மன்னன் ஒருபோதும் மனிதனல்ல... அவர் தன் தேசத்தின்... நாட்டு மக்களின் பிரதிநிதி...’’விக்கிரமாதித்தர் பெருமூச்சு விட்டார். ‘‘உங்களுக்கு என்ன தெரிய வேண்டும்...’’‘‘சீனனை மதுரை தச்சர் வீதியில் தாங்கள் சந்தித்தது... கச்சையை எரித்தபோது கிடைத்த தேவ மூலிகையின் சாம்பல்... பொக்கிஷங்கள் தொடர்பான குறியீடுகள்... இவை எல்லாம் உங்கள் போர் அமைச்சரான அடியேனும் அறிவேன்... காஞ்சியிலும் அதேபோன்று நிகழ்ந்தது...’’ நிறுத்திய ராமபுண்ய வல்லபர் தன் மன்னரை சங்கடத்துடன் நோக்கினார். ‘‘அறிந்துகொள்ள விரும்புவது பாண்டிய மன்னர் தங்களிடம் என்ன சொன்னார் என்பதை...காரணம், விருந்தினராக நீங்கள் மதுரைக்குச் செல்லவில்லை... பகையாளியாகவும் நுழையவில்லை... ரகசியமாகச் சென்றீர்கள்... உங்களை எதிர்கொண்டு உபசரித்து அதே ரகசியத்துடன் அரிகேசரி மாறவர்மர் அனுப்பி வைத்திருக்கிறார்... இதற்கு நடுவில் பரம ரகசியமாக உங்களுடன் உரையாடியிருக்கிறார்... அந்த உரையாடலில், நடைபெறவிருக்கும் பல்லவ - சாளுக்கிய போர் குறித்து பேச்சு இடம்பெற்றதா..?’’‘‘இல்லை...’’‘‘அப்படியானால்..?’’‘‘போர் குறித்து உங்களிடமும் விநயாதித்தனிடமும் என்ன சொன்னாரோ அதையேதான் உறுதிப்படுத்தினார்... ஆனால், வேறொரு தகவலைச் சொன்னார்...’’‘சொல்லுங்கள்’ என்பதுபோல் அவரையே பார்த்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘பல்லவ இளவரசியான சிவகாமியை நாம் சிறைப்பிடித்து... அவள் போலவே இருக்கும் நம் ஒற்றர் படைத்தலைவியை ‘சிவகாமி’யாக பல்லவர்களுக்குள் ஊடுருவவிட்டிருக்கிறோம் அல்லவா... அதுவே நாம் செய்த பெரிய பிழை என்கிறார் பாண்டிய மன்னர்...’’‘‘இதில் என்ன பிழையை அவர் காண்கிறார்..?’’‘‘பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுக்கு இரத்த சம்பந்தமாக மட்டுமல்ல... வளர்ப்பு ரீதியிலும் மகளே கிடையாதாம்...’’‘‘அதுதான் தெரியுமே மன்னா... நரசிம்மவர்ம பல்லவனின்காதலியான ஆயனச் சிற்பியின் மகள் சிவகாமியின் வளர்ப்புப்பேத்திதானே இந்த சிவகாமி...’’‘‘இல்லை என்கிறார் அரிகேசரி மாறவர்மர்...’’‘‘என்ன...’’ அதிர்ந்தார் ராமபுண்ய வல்லபர்.‘‘ஆம் அமைச்சரே... வாதாபி தீக்கிரையாகட்டும் என சபித்து... அந்த சபதம் நிறைவேறியதைப் பார்த்து ரசித்த நடன மங்கையான சிவகாமி... எந்த பெண்பிள்ளையையும் வளர்க்கவும் இல்லையாம்... பேத்தியாகக் கருதவும் இல்லையாம்... மாறாக ஓர் ஆண்மகவை தன் பேரனாக தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கினாராம்!’’‘‘உத்தமனை காஞ்சி - மல்லைக்கு இடையில் இருக்கும் சத்திரத்துக்கு அனுப்பியிருக்கிறீர்களா..?’’ தலையைஉயர்த்தி சிவகாமி கேட்டாள்.பதிலேதும் சொல்லாமல் அவள் இதழில் கரிகாலன் முத்தமிட்டான்.‘‘நானும் பொன்னனை அதே இடத்துக்கு விநயாதித்தனைச்சந்தித்துப் பேசும்படி அனுப்பியிருக்கிறேன்!’’ என்றபடி கரிகாலனின் பரந்த மார்பில் தன் முகத்தைப் பதித்து ஒன்றினாள்! http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17586&id1=6&issue=20201227 -
https://www.toptamilnews.com/seeman-at-the-temple/?feed_id=10289&_unique_id=5ffd415d664c5 துலாபாரம் என்று இருப்பதையும் கொஞ்சம் கவனியுங்கோ அண்ணை.
-
By புரட்சிகர தமிழ்தேசியன் · Posted
https://www.docdroid.net/lCxC0su/4246-pdf இந்த இதழ் தங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன் தோழர்..👌
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.