Jump to content

உமை மறந்திடோம் மாவீரர்களே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

128174241_10215757921254598_445111583299

 

 

எங்களுக்காக  உங்களை உதிர்த்து

எம்மினம் காத்திடத் தம்மைத் தந்து

உயிர் என்னும் கொடை தந்து

உங்கள் உணர்வுகள் துறந்து நின்றீர்

 

தாய் மண்ணின் தடையகற்றிட

தணியா மனதின் துணிவு கொண்டு 

மகிழ்வாய் மனதின் ஆசை அடக்கி

அத்தனை ஓசையும் தாண்டி வந்தீர்

 

பதின்ம வயதில் பாசம் அடக்கினீர்

பருவவயதில் புலன்கள் அடக்கினீர்

பசியது கொண்டும் புசிப்பது நிறுத்தி

எதிரி அடக்கும் ஆசைதான் கொண்டீர்

 

எங்கள் நிலத்தை எமதேயாக்க

உங்கள் நிலங்கள் தான் துறந்தீர்

சுற்றம் துறந்து சுகங்களும் துறந்து

காடுமேடெல்லாம் கால் பதித்தீர்

 

ஏறுபோல் எழுந்து எதிகளை வீழ்த்தி

வீறுநடை போட்டு வெற்றிகள் கொய்தீர்

தமிழர் பெயரை தரணியே போற்றிட 

தானைத் தலைவனின் தலைமை ஏற்றீர்

 

அத்தனையும் எத்தர்களாற் அழிந்துபோனதே

எதிரிகள் கைபட்டுக் குலைந்துபோனதே

காட்டிக் கொடுக்கும் கயவர் கொடுமையால்

கட்டிய கூடும் சிதைந்தே போனதே

 

அத்தனை உயிர்களும் அவலம் தாங்கி

எத்தனை ஈனமாய் எருக்களாய் ஆகிட

நித்தமும் நாம் நிமிர்வுடன் நின்றது

இத்தனை தாண்டியும் இல்லாமற் போனதே

 

ஆண்டுகள் பலவாய் அடுக்கிக் கட்டிய

ஆசைகளெல்லாம் நூர்ந்து போனதே

ஓசை கொண்டு ஒலித்த குரல்கள்

ஒட்டுமொத்தமாய் ஓய்ந்துபோனதே

 

ஆயினும் உங்கள் அளவிடமுடியா அகத்தீயில்

கார்முகில் கரையொதுங்க காவலரே உங்கள்

கனவு நிறைவேறும் கணப்பொழுது வந்திடும்

போராசை கேட்கும் பூமியின் விலங்கொடியும்

 

அந்தநாள் வரும்வரை அடங்கிடோம் நாம்

எத்தனை தடைகள் எங்கு தாண்டியும்

அத்தனை பேரையும் ஆண்டுகள் தோறும்

ஓர்மத்துடன் நாம் எண்ணிடுவோம்

 

தோல்வி கண்டு துவண்டோமாயினும்

தோள்கள் துடிக்க திருக்களமாடிய

திண்ணிய வீரராய்ப் போர்க்களம் கண்ட

துணிந்தவர் உம் புகழ் பாட மறந்திடோம்

 

மண்ணை இழந்து மறுகினோமாயினும்

ஊரை இழந்து உருகினோம் ஆயினும் 

மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம்

மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்

 

வன்மம் கொண்டு விடுதலை மூச்சுடன்

வேங்கையானவர் வீரம் மறந்திடோம்

கொடும் பகை வென்று கொடியது ஏற்றிய

உங்களின் வீரம் என்றும் மறந்திடோம்

படை நடத்திப் பகைவரை விரட்டித்  

துணிவுடன் இறந்த உம்மை மறந்திடோம்

கார்த்திகை தோறும் காவலிருக்கிறோம்

மண்ணிலிருந்து மரணம் வரை மாவீரரே

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மண்ணை இழந்து மறுகினோமாயினும்

ஊரை இழந்து உருகினோம் ஆயினும் 

மாண்டவர் மாண்பைக் காக்க மறந்திடோம்

மானம் காத்திட்ட மறவரை மறந்திடோம்

எப்படி மறப்போம்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கார்த்திகையில் பிறந்த கவிதை 

கல்மனதையும் கரைக்கும் கவிதை.....!

நன்றி சகோதரி....! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி சொல்லும் கவிதை.

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.