Jump to content

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பண்டிதர் சரணாலயமும் கிட்டு பூங்காவும் - கானா பிரபா

kiddu.jpg

அது ஒரு காலம், நல்லூர்த் திருவிழா மூட்டம் அந்தக் கோயிலே கதியென்று 25 நாட்களும் கிடப்போம். கோயில் திருவிழா ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் கடலை, கச்சான், இனிப்பு, ஐஸ்கிறீம் கடைகளும், பனை, தென்னை வழியே பிறக்கும் சுதேச உற்பத்திப் பொருட்களுமாகக் கோயிலைச் சூழவும் மூகாமிட்டிருக்கக், கோயில் முன்றலில் சங்கீதக் கச்சேரிகள், கதாப் பிரசங்களுமாகச் சாமம் தொடும் நிகழ்ச்சிகள்.

இதெல்லாம் அந்தக் கோயில் திருவிழாவுக்கான் தற்காலிக ஏற்பாடுகள். ஆனால் இதையெல்லாம் தாண்டி ஒரு நிரந்தரப் பொழுது போக்கு மையமாக அப்போது அமைந்தது பண்டிதர் சரணாலயம். நல்லூர்க் கந்தசாமி கோயிலுக்குத் தட்டாதெருச் சந்தியாலோ, பலாலி வீதியாலோ பயணப்படும் போது எதிர்ப்படும் கந்தர்மடச் சந்தியின் முடக்கில் பண்டிதர் சரணாலயம் அமைந்திருந்தது.

கப்டன் பண்டிதர் என்ற இயக்கப் பெயர் கொண்ட ப.ரவீந்திரன் வல்வெட்டித்துறைக்கு அருகேயுள்ள கம்பர்மலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1977ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து இயக்க வளர்ச்சிக்கு அயராது உழைத்தார். கடமையுணர்வு, கடும் உழைப்பு, இலட்சியப்பற்று ஆகிய சீரிய பண்புகள் நிறைந்த கப்டன் ரவீந்திரன், விடுதலைப் போராளிகளின் அன்புக்கும் மதிப்பிற்கும் பாத்திரமாக விளங்கினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிகவும் வேண்டியவராக, அவரது வலது கையாகத் திகழ்ந்தார். இயக்க நிர்வாகப் பொறுப்புக்களைச் சுமந்து வந்ததோடு மட்டுமல்லாது, கெரில்லாத் தாக்குதல் நடவடிக்கைகளிலும் இவர் பங்குபற்றி வந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள இராணுவத்தினருக்கும் மத்தியில் நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.ரவீந்திரன் (பண்டிதர்) வீரமரணம் அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் திகதியன்று, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அச்சுவேலி எனும் கிராமத்தில் நடைபெற்றது.

அச்சுவேலியிலுள்ள விடுதலைப்புலிகளின் கெரில்லாத் தளமொன்றை, பெருந்தொகையான சிங்கள இராணுவப் படையினர் திடீரென முற்றுகையிட்டனர். இதனைத் தொடர்ந்து அத்தளத்திலிருந்த எமது விடுதலை வீரர்களுக்கும் இராணுவத்தினருக்கும் மத்தியில், பயங்கரச் சண்டை மூண்டது. நீண்ட நேரமாக நடைபெற்ற இச்சண்டையில் கப்டன் ரவீந்திரன் இறுதிவரை போராடி, விடுதலை இலட்சியத்திற்காகத் தனது உயரைத் தியாகம் செய்தார். கப்டன் ரவீந்திரனுடன் நான்கு இளம்புலிகள் வீரமரணம் அடைந்தனர். ஏனைய போராளிகள் முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பினர். (கப்டன் பண்டிதர் குறித்த தகவல் உதவி : ஈழமலர் இணையம்)

இவ்விதம் வீரமரணமடைந்த கப்டன் பண்டிதர் அவர்கள் ஞாபகார்த்த்தமாகவே அப்போது பண்டிதர் சரணாலயத்தை விடுதலைப் புலிகள் உருவாக்கினர்.

நல்லூர்த் திருவிழாவுக்கு இணுவிலில் இருந்து போகும் சாக்கில் தான் பண்டிதர் சரணாலத்துக்கும் முற்றுகை இடுவோம். அம்மாவுடன் போனால் கைலாசப் பிளையாரடியால் பஸ்ஸில் தான் பயணிக்க வேண்டும். இதைத் தவிர்த்து அப்பாவின் சைக்கிளில் குந்தியிருந்து போனால், கோயிலில் சுவாமி தரிசனம், நல்லூர்த் தேர்முட்டி அடியில் இருந்து யோகர் சுவாமிகள் குறித்து அப்பாவின் சிந்தனைகளைப் பொறுமையாகக் கேட்டு நல்ல பிள்ளையாக நடந்து, வழி தெருவில் கச்சான் கடலைக்கும் அடம் பிடிக்காமல் பண்டிதர் சரணாலயத்துக்கு முன் வரை அமைதிய வந்து பேச்சைக்  கிளப்பி விடுவேன்.

IMG_0838.JPG

“அப்பா அப்பா உள்ளுக்கை ஒருக்கால் எட்டிப் பார்த்து விட்டு வரட்டோ?”

சரி இவன் நல்ல பிள்ளைக்கு நடிக்கிறானே என்று அப்பாவும் சைக்கிளை ஓரம் கட்டி விட்டு வெளியே கூட்டத்தோடு நிற்பார். சில சமயங்களில் தானும் கூட வருவார். சிறுவருக்கு ஐம்பது சதம், பெரியவர்களுக்கு ஒரு ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று நினைவு.

உள்ளே கிளிகள், குருவிகள் என்று ஏகப்பட்ட பறவை இனங்கள், ஆட்டம் போடும் குரங்குகளில் இருந்து வன்னிக் காடுகளில் பிடித்த அரிய வகை உயிரினங்கள் எல்லாம் கூண்டுக்குள் நின்று வேடிக்கை காட்டும். ஒவ்வொரு கூண்டிலும் அழகு தமிழில் பெயர்கள் பொறிக்கப்பட்டிருக்கும். என் ஞாபக அறிவில் வித விதமான தாவரங்களும் அவற்றின் விஞ்ஞானப் பெயர்களோடும், தேனீ வளர்ப்பு முறைமையும் இருந்ததாகவும் நினைப்பு.

அந்தக் காலத்தில் வீடுகளில் லவ் பேர்ட்ஸ் வளர்க்கும் மோகம் முளை விட்டிருந்த காலத்தில் இப்படி பண்டிதர் சரணாலத்த்தில் வித விதமான வன விலங்குகளைப் பார்த்து ரசிப்பதே அப்போது எங்களுக்கு ஆச்சரியமான அனுபவம்.

1987 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையாக வந்து இலங்கை அரசிடம் சோரம் போனதோடு எழுந்த போரோடு பண்டிதர் சரணலயம் காடானது. எந்த வித பராமாரிப்போ, எடுக்க ஆள் இன்றியோ புதர் மண்டிக் கிடந்தது பல காலம். அத்ற்குப் பின் அந்தப் பக்கமே போவதற்கு ஏனோ தோன்றியதில்லை.

கேணல் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) ஈழப் போராட்டத்தில் இணைந்து பரவலாக அறியப்பட்ட மாவீரர் என்பது உலகறிந்தது. அப்போது நான் உயர் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள் ரீயூசன் சென்ரருக்குப் போன தினம் கேணல் கிட்டுவின் வீரமரணச் செய்தி கிட்டுகிறது. சின்னக் கரும்பலகை ஒன்றை எங்கள் CCA கல்வி நிலையத்தில் இருந்து எடுத்து வந்து நண்பர்களோடு சேர்ந்து சோக்கட்டியால்

“கிட்டு அம்மானுக்குக் கண்ணீர் அஞ்சலிகள்” என்று எழுதியது இன்னும் பசுமையாக் இருக்கின்றது.

அந்த வார இறுதி எல்லாக் கல்விச் சாலைகளும் மூடப்பட்டுத் துக்கம் அனுஷ்டிக்கிறார்கள்.

சில காலத்துக்குப் பின்னர் நல்லூர் முத்திரைச் சந்தியடியில் தேவாலய வளவுக்கு முகப்பில் எழும்புகின்றது “கேணல் கிட்டு பூங்கா”.

குகைப் பயணம், சறுக்கல், ஊஞ்சல் என்று சிறுவர்ககளுக்கான எல்லா விதமான வித விதமான களியாட்டு வித்தைகள், விளையாட்டுகள் காட்டும் உபகரணங்கள் என்று நேர்த்தியாக அமைக்கப்பட்ட பூங்கா இது. நல்லூர்க் கோயிலில் இருந்து பொடி நடையாக வந்து சேரலாம். அப்போது வளர்ந்தவர்கள் நாம் சிறுவர்களின் விளையாட்டை வேடிக்கை பார்த்து, சீமெந்துப் புட்டிகளில் ஏறி நடந்து விட்டு வருவோம். 95 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண முற்றுகையோடு கிட்டு பூங்காவும் வேரோடு பிடுங்கப்பட்டது.

யாழ்ப்பாணத்து மக்களுக்கு குறிப்பாக வடமராட்சி தவிர்ந்த பிரதேசங்களில் முக்கிய பொழுதுபோக்கு மையங்களாக இருந்த சுப்பிரமணியம் பூங்கா எண்பதுகளின் முற்பகுதியோடு கோட்டையில் மையம் கொண்ட இராணுவ அச்சுறுத்தலால் கை விட்ட சூழலில், காரைநகர்ப் பக்கம் இருந்த கசூரினாக் கடற்கரை, கீரிமலைக் லடற்கரை போன்றவை கடற்படை அச்சுறுத்தல் போன்றவற்றால் முடக்கப்பட்டிருந்த தமிழரது பொழுது போக்க்கு வாழ்வியலில் நல்லூர்த் திருவிழாவும் பண்டிதர் சரணாலயமும், கிட்டு பூங்காவும் அழிக்க முடியாத வரலாற்றுச் சுவடுகள்.

இன்று தமிழரது பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர் மாற்றும் சூழலில் நம் கண்ணுக்கு முன்னே எழுப்பப்பட்டு இருந்த தமிழரது அடையாளங்களைத் தாங்குவது நம் நினைவுகள் மட்டுமே.

கானா பிரபா

https://vanakkamlondon.com/news/2020/11/92163/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2020 at 16:05, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இன்று தமிழரது பூர்வீக நிலங்கள் அழிக்கப்பட்டுச் சிங்களப் பெயர் மாற்றும் சூழலில் நம் கண்ணுக்கு முன்னே எழுப்பப்பட்டு இருந்த தமிழரது அடையாளங்களைத் தாங்குவது நம் நினைவுகள் மட்டுமே.

ஊருக்குப்போய் வரும் சமயங்களிலெல்லாம் பல இடங்களைப்பார்க்கும் பொழுது  பழைய நினைவுகளுடன் ஏற்படும் வலியை தவிர்க்கமுடியாது.. அதில் இதுவும் ஒன்று.. 

பகிர்ந்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.