Jump to content

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன

இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு, வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155082?ref=imp-news

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் இடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதோடு, வீதியில் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இதனால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் மக்கள் அச்சத்தில் உறையவில்லை. இன்றைய சிங்கள அரசும் அதன் பாதுகாப்புப் படைகளுமே அச்சத்தில் உறைந்துள்ளதைக் கூர்ந்து கவனித்தால் புரியும்.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லையில் வர்த்தக நிலையங்களை திறக்குமாறு இராணுவம் மிரட்டல்!

IMG_20201127_152602.jpg?189db0&189db0

 

முல்லைத்தீவு – நகரம் மற்றும் புதுக்குடியிருப்பு நகர் பகுதிகளில் இன்று (27) பெருமளவான விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருந்த நிலையில் அவற்றை திறக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் நிர்ப்பந்திப்பதாக வர்த்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு நகரில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உள்ளடங்கலாக கணிசமான விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கவில்லை. அதேபோல புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்ற இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும் அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்திவருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

  • IMG_20201127_152605-1024x768.jpg?189db0&
  • IMG_20201127_152554.jpg?189db0&189db0

இது தொடர்பில் வர்த்தகர் ஒருவர் வெளியிட்ட கருத்து கீழே

 

 
 

https://newuthayan.com/முல்லையில்-வர்த்தக-நிலைய/

Link to comment
Share on other sites

முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம்

http://athavannews.com/wp-content/uploads/2020/11/army-1-1.jpg

மாவீரர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு நகர் மற்றும் புதுக்குடியிருப்பு நகரில் இன்று (வெள்ளிக்கிழமை) வணிக நிலையங்கள் அனைத்தும்  மூடப்பட்டு மாவீரர் நாள் உணர்வுபூர்வமாக மக்களால் அனுஷ்ட்டிக்கபட்டு வருகின்றது.

இந்நிலையில் மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களை உடனடியாக திறக்குமாறு வலியுறுத்தி, பலவந்தமாக திறக்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக  வர்த்தகர்கள்  குற்றம் சுமத்தியுள்ளனர்.

மேலும், முல்லைத்தீவு நகரிலுள்ள இஸ்லாமிய சகோதரர்களும் கடைகளைப் பூட்டியே இருந்தனர். முல்லைத்தீவு மாத்திரமின்றி புதுக்குடியிருப்பிலும் விற்பனை நிலையங்களில் பெரும்பாலானவை திறக்கப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்களை தொடர்புகொண்டும், அந்தப் பகுதியில் நின்றிருந்தவர்களைக் கொண்டும் உடனடியாக விற்பனை நிலையங்களை திறக்குமாறு வலியுறுத்தியதாகவும்   வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

சுயவிருப்பின் பெயரில் கடைகளை பூட்டிய உரிமையாளர்களுக்கு தனிமனித சுதந்திரம்கூட இல்லாத நிலை காணப்படுகின்றதாக  என வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு நகரங்களில் பூட்டியிருக்கும் கடைகளை இராணுவம் மற்றும் புலனாய்வாளர்கள் புகைப்படம் எடுத்து பதிவுகளையும் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/wp-content/uploads/2020/11/army-2-1.jpg

முல்லைத்தீவில் மூடப்பட்ட கடைகளை திறக்கும் நடவடிக்கையில் இராணுவம் | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் தடைகளையும் மீறி நினைவேந்தல்

முல்லைத்தீவில் - தடைகளை மீறி பலத்த அச்சுறுத்தலுக்கு மத்தியில் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

 

spacer.png

 

தமிழரசுக் கட்சியினுடைய மத்தியகுழு உறுப்பினர்களுள் ஒருவரான அன்ரனிநாதன் பீற்றர் இளஞ்செளியன் என்பவராலேயே இவ்வாறு இறந்தவர்களுக்கான நினைவேந்தல் அவருடைய இல்லத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

spacer.png

நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்ளும்போது, இளஞ்செளியனுடைய வீட்டைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதேவேளை அங்கு சூழ்ந்திருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புலனாய்வாளர்களால் அச்சுறுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் எடுக்கப்பட்டன.

இருப்பினும் தடைகளையும் அச்சுறுத்தல் நிலைமைகளையும் தாண்டி அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

இதே வேளை, முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், உறவினர்களால், போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலிகள் மேற்கொள்ளப்பட்டன.

 

spacer.pngspacer.png

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ மக்கள் விடுதலைப் போராட்டத்தையும், போராளிகளையும் வெறுக்கிறார்கள். நாங்கள் பிஷா கொடுத்தோம், தென்னிலங்கையோடு கைகோத்தோம், றெயின் ஓடினோம் என்றெல்லாம் பீலா விட்டார்கள். என்ன நடக்கும் என்று தெரிந்தும் நாங்கள் அவர்களை மறக்கத் தயாரில்லை என்று அவர்களை நினைவு கூர தங்களால் இயன்றவரை போராடுகிறார்கள். அவர்களை, உணர்வுகளை  நீதிமன்றமோ, அரசோ தடுத்து நிறுத்த முடியாது. விடுதலையும், போராளிகளும் நம் மூச்சோடு கலந்து விட்டவர்கள். தியாகி திலீபனுக்காக ஒருநாள் உண்ணாவிரதமிருக்க குறைகூறியவர்கள் அத்தனைபேரும் தலைகுனிய, இராணுவம் புடைசூழ இன்று அந்த தியாகிகளுக்காக தம்மை முடக்கிக்கொண்டிருக்கிறார்கள் மக்கள். தடை  போடப்போட உடைத்தெறியும் வல்லமை, வீரியம் அடையும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் எங்கை இருந்தாலும் ஒன்லைனில் யூரோ மில்லியன் வாங்குவேன்.. மாத ஆரம்பத்திலேயே 4 கிழமைக்கும் சேத்து வாங்கிடுவன்.. 40/50 க்குள் ஒரு தொகை செல்வாகும் மாதம்.. ஒரே நம்பரை வெட்டிக்கொண்டு வாறன்.. விழாதெண்டு தெரியும்.. அப்பிடி விழுந்தாலும் எழும்பி நடக்கேலா பல்லுப்போன காலத்திலைதான் விழும்.. அதுக்கு பிறகு விழுந்தா என்ன விட்டா என்ன..  உங்கள் பகிர்வுக்கு நன்றி.. நல்ல எழுத்து நடையா இருக்கு.. யாராப்பா நீங்கள்..? முந்தி எங்களோட சுய ஆக்கங்களில எழுதுப்பட்ட ஆள் போல கிடக்கு.. 🤔
    • பாடசாலை மாணவிகளுக்கு வவுச்சர்களை வழங்க நடவடிக்கை! எதிர்வரும் சித்திரை புத்தாண்டின் பின்னர் பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதன்படி, பின்தங்கிய பகுதிகள் மற்றும் அடையாளம் காணப்பட்ட பாடசாலைகளில் உள்ள சுமார் 800,000 பாடசாலை மாணவிகளுக்கு சுகாதார அணையாடைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாணவி ஒருவருக்கு தலா 1,200 ரூபாய் பெறுமதியான வவுச்சர் வழங்கப்படும் எனவும், இந்த திட்டத்துக்காக ஒரு பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297396
    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.