Jump to content

Ku-rin-gai Chaseல் ஒரு நாள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த புரட்டாசி மாதத்திலிருந்து எனது வேலையில் நிறைய மாற்றங்கள் அதனால் இன்றுவரை வேலைப்பளு மிக அதிகம்... computer, laptop, mobile போன்ற இலத்திரனியல் சாதனங்களை பார்த்தாலே எரிச்சல் வருமளவிற்கு கொண்டுவந்துவிட்டார்கள்..அதனால் எப்போது வெளியே ஒரு கடற்கரையோர நடையோ, மலைப்பாதை நடையோ இல்லை வழமையான மலைப்பாதை கார்ப்பயணமோ போகலாம் என யோசித்தப்படி இருந்த சமயத்தில்தான் இந்த நடைப்பயண சந்தர்ப்பம் வந்தது.. 

எப்பொழுதும் இலத்திரனியல் சாதனங்களையே பார்த்தபடி இருந்த கண்களுக்கும் ஒரு விடுதலை.. அத்துடன் என் மனதிற்கு பிடித்த இயற்கையோடு இணைந்த நடைப்பயணம்..  அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்..

4-FE437-C3-0262-4-EA3-A9-A9-B27-F4938-D0

Ku-rin-gai Chase National Park
சிட்னியின் வடக்கே அமைந்துள்ள தேசிய பூங்கா முக்கியமான வரலாற்றை உடைய மனதை மயக்கும் அழகோடு இணைத்து ஒரு மலைப்பிரதேசம்..

இது அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பழமையான தேசிய பூங்கா, முக்கியமான வரலாற்றை அழகிய அழகுடன் இணைக்கிறது... வரலாற்று இடங்களின்ப்பட்டியலில் இந்த பூங்காவும் உள்ளது..

B6-BE3-EE8-49-EC-4-CA3-8-BFB-055-E9-B423

சிற்றோடைகள், மழைக்காடுகள் மற்றும் யூகலிப்ட்கள், பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களை கொண்ட இந்த பூங்காவிற்கு இயற்கையே இதன் அரண்களாகும்...
சைக்கிள் ஓட்டுதல், மீன்பிடித்தல், இயற்கையோடு இணைந்து இரவை/பொழுதை முகாமிடுதல், மலைப்பாதை நடைப்பயணங்களுக்கு ஏற்றவை

இந்த பூங்கா குரிங்-காய்  அல்லது குரிங்கை என்று அழைக்கப்படும் ஒரு பழங்குடியினரின் பூர்வீக நிலமாகும்.. இதனால் அவர்களது பெயராலேயே அழைக்கப்படுகிறது.. 

நான் வாழுமிடத்திலிருந்து 45 நிமிட கார்பயணத்தில் உள்ள இந்த இடத்தில் காலைப் பொழுதை கழிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது..நடைப்பாதை பயணத்திற்குரிய ஆடை,  பாதணிகள், தொப்பி, தண்ணீர்ப்போத்தல்களுடன் ஒரு கைத்தடியையும் கொண்டு( மரகிளைக்கிளைகளை தொடுவதற்கு ஒரு தயக்கமும், சரிவான இடங்களில் ஊன்றி இறங்கி ஏறவும், அடர்த்தியான புதர்களை ஓரளவிற்கு விலத்தி நடக்கவும்.) பயணம் தொடங்கியது.. 

06107-C05-CA30-4211-AC6-B-51-D0-B577-C57
காலைவேளையில் அதிகளவு மனிதர்கள் வரும் முன்பு போனால் அங்கே உங்களை முதலில் வரவேற்பவர் பல்லியினத்தை சேர்ந்த இவரே..எந்தவித கவலையுமின்றி உலாவும் பல்லியினத்தை சேர்ந்த அவருக்கு தொல்லைகள் கொடுக்காவிட்டால் தன் போக்கில் உலாவுவார்...

large.7A5D840D-2E63-45E7-8884-9200EE208343.jpeg.60d6310509c84f68efd555303837b99d.jpeg
நீல நாக்கு பல்லி, அவுஸ்ரேலியாவில் அதிகமாக காணப்படும் ஊர்வனங்களில் ஒன்றாகும், இது NSW இன் பெரும்பகுதி முழுவதும் காணப்படுகிறது. பெரிதாக இருந்தாலும் கூச்ச சுபாவம் கொண்ட உயினமாகும்.

அடுத்ததாக தரையில் அடைகாத்து கொண்டிருந்த The masked Lapwings (Vanellus miles), தன்முட்டைகளை எடுத்துவிடுவோம் என்ற பயத்திலும் சனநாடமாட்ட எரிச்சலிலும்  கத்தியது.. பறந்துவந்து அதன் பெருங்குரலில் கத்தி கொத்திவிடுவது போல பயமுறுத்தியது இந்த  கூடு கட்டும் பருவத்தில் அதன் தற்காப்பு நடத்தைக்கு பெயர் பெற்ற masked lapwings பறவை.

large.2F3334C2-C4D2-4CD9-AFA7-81A62D4D8FAE.jpeg.11d45a387c32c23b8d06153b251cfa49.jpeg

மஞ்சள் நிறத்திலான குச்சிபோன்ற இறகுகளை உடையதால், மஞ்சள் ஈட்டிகளை சுமந்து செல்வதாக பழங்குடி மக்கள் கூறுவதுண்டு...

நடை தொடரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், கதையுடன் படங்கள் மிக முக்கியம் தலைவியே ......!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

தொடருங்கள், கதையுடன் படங்கள் மிக முக்கியம் தலைவியே ......!   😁

நன்றி சுவி அண்ணா

படங்கள் நிறையவே உண்டு.. படம் எடுக்கப்போய் பாறையில் சறுக்கிய அனுபவமும் உண்டு..

முதலாவது நடைப்பாதை தடம்:

இங்கே பல நடைபயிற்சி தடங்கள் (Aboriginal Heritage Walk loop 4.4km, Gibberagong Track 8.3km(இருவழி), Rainforest Track- 1.6km(இரு வழி), Warrimo Track- 6.2km(ஒரு வழிபயணம்), Bobin Head Trail loop-12.9km என பல உண்டு.. இதில் நேரத்திற்கும், உடல்நிலைக்கும் ஏற்ப ஒன்றிரண்டை தேர்ந்தெடுத்து நடக்கலாம்

முதலாவதாக போனது ஒரு மணித்தியால (ஒரு வழிப்பயண நேர அளவு) உள்ள ஒரு மழைக்காட்டுப்பாதை(Rainforest Track). இந்த தடம் Cockle Creek எனும் சிற்றோடையோடு சேர்ந்த ஒரு மழைக்காட்டை சென்றடையும்.. போகும் பாதையில் இந்த இடத்திற்குரிய பழங்குடிமக்களின் அடையாளங்களை பாறைகளிலும் நிலத்திலும் பார்க்க முடிந்தது.. அதில் ஒன்றுதான் சிவப்பு கைகளின் குகை(Red hands cave). 

large.D2D263F9-DBED-4C36-B249-63157BCDD5C5.jpeg.7fa8bca10ff8d990d1c294430b34bc2d.jpeg

large.178427B7-A475-4C52-A155-13D64D944265.jpeg.b4c0cc7e0603bb8040f0fc667d0e1fdd.jpeg

நடை தொடரும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து தொடருங்கள் .. 👍

கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் ..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.F4B9DFE7-A01D-4965-9DAC-5B718D3784EA.jpeg.99c57b99f3d4945d750d0f5c3f4599e1.jpeg
இந்த மழைகாட்டு தடம் ஓரளவிற்கு சீரான ஆனால் நடுத்தரமான ஏற்ற இறக்கங்களை கொண்டது.. அப்படியிருந்தும் தடம் மாறி பின் ஒருமாதிரி சரியான தடத்திற்கு வந்த அனுபவம் மறக்கமுடியாது.. 

 

large.142B754A-A45D-485D-ADB5-F9F424FB7A0B.jpeg.90338b43ee9587c9467d9e3e5bcb91b3.jpegமழைக்காட்டு  நடைபயிற்சி தடமுடிவிடம்.


மழைக்காட்டை அடைந்தபின் திரும்பும் வழியில்  Gibberagong Track 8.3km(இருவழி) ஒரு மணித்தியாலத்தியம் வரை நடந்து அதன் அழகை ரசித்துவிட்டு மீண்டும் வந்த வழியே மழைக்காட்டு தடப்பாதை வழியாக ஆரம்பபுள்ளியை அடையமுடியும்.. 

இந்த Gibberagong trackல் நடக்கையில் எடுத்த சில காட்டுப்பூக்களை இங்கே பதிவிடுகிறேன்..

684899-AE-943-D-45-D2-AA24-094-C5-F1-EA3
565457-C9-DEC4-4-E5-E-9650-6964-C4-E028-
1-EC81456-0-BE7-41-C6-B5-FB-325-DDC4-EBB

இ்ந்த Gibberagong தடம் மிகவும் குறுகலானது. சிற்றோடையின் கரை உங்களது கண்களுக்கு அருகில் இருப்பது போல விரைவில் இடத்தை அடைய முடியும் என்ற தோற்றத்தை தரும் ஆனால் இலகுவிலோ விரைவாகவே அடையமுடியாது. கிட்டதட்ட 3 மணித்தியாலங்களுக்கு மேல் நடக்க வேண்டும் என்பதால் இடையில் திரும்ப வரவேண்டியதாயிற்று... 

large.56A0705A-75A0-4834-894F-DF2FB4285771.jpeg.1ec900c0db62d7805a4ea8882154dccd.jpeg

நடை இன்னும் ஒரு பகுதியுடன் முடிவடைந்துவிடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தொடர்ந்து தொடருங்கள் .. 👍

கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் ..👌

 

18 hours ago, ஈழப்பிரியன் said:

தொடருங்கள் .நாமும் பயணிப்போம்.

 

17 hours ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள்

 

16 hours ago, விளங்க நினைப்பவன் said:

நடைப்பயணம் படங்கள் interesting 👍

மிக்க நன்றி..

எனக்கு இந்த மாதிரி இயற்கையோடு அமைந்த bushwalking மிக மிக பிடிக்கும்.. குழுவில் இருப்பவர்கள் எல்லோரும் ஒரே வேகத்தில் அல்லது ஒரே ரசனை கொண்டவர்களாக இருந்தால் இன்னமும் சுவராசியமாக இருக்கும்.. ஆனால் அடிக்கடி சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது blue mountains போல இருக்கிறது, அனால் அருவிகளுடன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

இது blue mountains போல இருக்கிறது, அனால் அருவிகளுடன்.

 

Blue mountains இதைவிட அடர்த்தியான காடுகளையும், பல நடைபாதை தடங்களையும் குகைகளையும் கொண்டது என நினைக்கிறேன்.. அதில் இரண்டே இரண்டு நடைபாதை அனுபவமே எனக்கு உள்ளது.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோடைகாலத்தில் இப்படியான இயற்கைசார்ந்த இடங்களுக்கு அடிக்கடி போவதுண்டு. ஐரோப்பாவில் பாம்பு, பூச்சி, பூரான் எல்லாம் இல்லை என்ற தைரியத்தில் எங்கும் கால் வைக்கலாம். ஆனால் அவுஸில் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதிய உணவை முடித்துவிட்டு Cowan Creek எனும் இந்த ஆற்றின் அடுத்த பக்கத்தில் இருக்கும் Warrimoo Trail, Bobin Head Trialல், Warrimoo தடப்பாதையில் நடக்க தொடங்கிய போது எடுத்த படங்களை இங்கே பதிவிடுகிறேன்..

5-BA47890-CBE9-43-BF-87-AA-6-E025-E6-BFA

இந்தப்பாதை மற்றைய பாதைகளை விட அதிக சரிவுகளையும், சீரற்ற தடங்களையும் வெளிச்சமும் அதிளவில் இல்லாத ஒரு பாதை.. அதனாலேயே நடப்பது மிகவும் சுவராசியமாக இருந்தது.. 

DCAF9-E56-EC08-437-A-9849-0-A3208-A0180-
large.975D5C65-DE45-4914-850D-88EDE624C1AF.jpeg.7c06ba6b2f6c1affac8f72aece07307d.jpeg

இருள் சூழத்தொடங்கியதால் இதை முழுமையாக முடிக்க இயலாமல் திரும்ப வேண்டியதாயிற்று..

large.3B820CD5-872F-4154-961B-6D7B2B4521E1.jpeg.db6dd5fae1ac40d86894a0a19ef7427a.jpeg

ஆனாலும் காய்ந்து சருகான இலைகள் காலடியில் மிதிபடும் சத்தமும், வயதான உயர்ந்த மரங்கள் முதல் வளரும் சிறு மரங்கள் வரை காற்றில் வரும் அவற்றின் வாசனையும் ரசித்தபடி மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்த திருப்தி ஏற்பட்டது. 

large.981D8360-6DC1-4BE9-96C9-8E38CE502DE8.jpeg.4a7880a21d34480eda66cfd6cf015bd2.jpeg

நடை முற்றுப்பெற்றது....

நன்றி
-பிரபா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Blue mountains இதைவிட அடர்த்தியான காடுகளையும், பல நடைபாதை தடங்களையும் குகைகளையும் கொண்டது என நினைக்கிறேன்.. அதில் இரண்டே இரண்டு நடைபாதை அனுபவமே எனக்கு உள்ளது.. 

 

large.AF476D15-C4FB-4C33-B0F5-C0B90554205A.jpeg.da9f766e6711761144cba83d2271ef1c.jpeg

Blue Mountainsற்கு கடந்தவருடம் ஊரிலிருந்து வந்திருந்த எனது சகோதரியுடன் எங்களைப்போல மூன்று சகோதரிகளாக ஆனால் குன்றுகளாக மாறிவிட்ட Three Sisters பார்க்க போயிருந்த போது, Echo point என்ற உயரமான இடத்திலிருந்து பார்த்த பொழுதான் காடுகளின் அடர்த்தியும் தொலைதூரம் வரை பரந்துவிரிந்து இருந்த Blue Mountainsம் தெரிந்து.. 

ஆனால் Ku-rin-gaiல் உயரமான இடத்திலிருந்து பார்க்க நேரம் போதாமையால் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

69-E71-FB1-6727-4-FEF-A19-A-FBF527419-EA

20 hours ago, கிருபன் said:

கோடைகாலத்தில் இப்படியான இயற்கைசார்ந்த இடங்களுக்கு அடிக்கடி போவதுண்டு. ஐரோப்பாவில் பாம்பு, பூச்சி, பூரான் எல்லாம் இல்லை என்ற தைரியத்தில் எங்கும் கால் வைக்கலாம். ஆனால் அவுஸில் கவனமாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன்.

எனது அலுவலக நண்பர் Blue Mountainல்தான் இருக்கிறார்.. அவர் முன்பு ஒரு முறை கூறியிருந்தார் இந்த மாதிரி போகும் பொழுது ஒரு தடியை கொண்டு போகவேண்டும் என்று.. சறுக்கி விழந்து எழும்பாமல் ஊன்றி இறங்க ஏற வசதியாக இருக்கும் அதே நேரத்தில் தடியினால் தட்டிக்கொண்டு போனால் சத்தத்தில் இவைகள் ஓடிவிடும் என்று.. 

இங்கே கோடைகாலத்தில் காட்டுத்தீ பயம் இருப்பதால் குளிர்கால முடிவில் அல்லது இளவேனில் கால ஆரம்பத்தில்தான் போவதுண்டு..

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.