-
Tell a friend
-
Topics
-
21
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
9
By உடையார்
தொடங்கப்பட்டது
-
Posts
-
சிறையையும் உடைத்து சசிகலாவுக்கு மட்டும் உள்ளே புகும் ஆற்றல் கொரோனாவுக்கு உண்டென்று......
-
சுமந்திரன் இதற்குக் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கக் கூடாது என்பது என் கருத்து. நடந்தது பலகாலமாகத் தொடர்கிற எல்லை கடந்த வளத்திருட்டு! இதை சீனன் செய்தாலும் இந்தியத் தமிழர் செய்தாலும் நடவடிக்கை அவசியம்! கவலைக்குரியது என்றாலும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் போது உயிரிழப்பு என்பது occupational hazard மாதிரி கூடவே இருக்கும் ஆபத்து! அதெப்படி சிறிலங்காச் சிங்களவன் முல்லைத் தீவில் மீன் பிடிப்பதையும் இந்திய தமிழர் மன்னாரில் மீன் பிடிப்பதையும் ஒப்பிடுகிறார்கள்? முதலாவது பிரஜையின் உரிமை, இரண்டாவது எல்லை கடந்த சட்ட மீறல்!
-
By goshan_che · Posted
இந்த அதிகாரம் பிரதேச சபைக்கு இருக்கிறதா? -
By Paanch · பதியப்பட்டது
கொரோனா போராட்டக் களத்தில் திருவள்ளுவர்..! – ஆங்கிலத்தில் சுப.திருப்பதி (தமிழில்: அ.குமரேசன்) Book Day Admin7 months agoA KumaresanCorona strugglecorona viruscoronavirusThiruvalluvarno comment216 views Spread the love வள்ளுவன் தந்த சில குறள்கள் இன்றைய கொரோனா போராட்டச் சூழலுக்குப் பொருத்தமாக, குடிமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களையும், அரசுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகளையும் சொல்கின்றன. [எழுத்தாளர் சுப. திருப்பதி தனது நண்பர்கள் ராஜாஜி, வி.வி.எஸ்.ஐயர், கே.சீனிவாசன், கே.எம்.பாலசுப்பிரமணியம், எஸ்.எம்.டயாஸ் உதவியோடு இந்தக் குறட்பாக்களைத் தேர்ந்தெடுத்து புதிய விளக்கங்களோடு ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். அவற்றை எனது பாணியில் தமிழாக்கியிருக்கிறேன்.] அச்சம்: அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். -எதற்கும் அஞ்சமாட்டேன் என்ற வீம்பு வீரம் அறியாமையேயாகும். அறிவுடையோர் எதற்கு அஞ்ச வேண்டுமோ அதற்கு அஞ்சவே செய்வார்கள். தொற்று: இலக்கம் உடம்பிடும்பைக்கு என்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். -அறிவார்ந்தவர்கள் உடம்பைக் குறிவைத்துத் தாக்குகிற துன்பங்கள் வரவே செய்யும் என்பதைப் புரிந்து வைத்திருப்பார்கள். ஆகவே கலங்கி நொறுங்கிச் செயலிழந்துவிட மாட்டார்கள். தொற்றுப் பரவல்: நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர். -நோய்த் தாக்குதலுக்கு உள்ளான எவரையும் அதன் பாதிப்புகள் தீண்டும். நோய் தொற்றுவதை விரும்பாதவர்கள் யாரும் அது மற்றவர்களுக்கும் தொற்றிவிடக்கூடாது என்ற அக்கறையோடு இருப்பார்கள். முன்னெச்சரிக்கை: அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் அஃதுஅறி கல்லா தவர். -என்ன நடக்கும் எப்படி நடக்கும் என்ற தெளிவு அறிவுடையோருக்கு இருக்கும். அறியாதவர்களோ நிகழ்வதைப் புரிந்துகொள்ளாமலே இருப்பார்கள். தடுப்பு: எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை அதிர வருவதோர் நோய். -அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நோயிடம் சிக்க மாட்டார்கள். தூய்மையும் வாய்மையும்: புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும். -தண்ணீரைப் பயன்படுத்தி உடல் தூய்மையைப் பராமரிக்கலாம், உண்மை நிலைமைகளைச் சொல்வதுதான் உள்ளத்தூய்மையின் அடையாளம். பாதுகாப்புக் கவசம்: வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும். -முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டுத் தடுக்கத் தவறுகிறபோது வாழ்க்கை நெருங்கிவரும் நெருப்பின் முன் இருக்கிற வைக்கோல் போலாகிவிடும். சுய கட்டுப்பாடு: தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. -தனது உயிரையே இழக்க நேரிட்டாலும் மற்றவர்களின் அரிய உயிருக்குக் கேடுவிளைவிக்கும் வகையில் செயல்படக்கூடாது. தனிமைப்படுத்தல்: பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப் பொருத்தலும் வல்லது அமைச்சு. -செயல்திறனுள்ள அரசு உரிய வகையில் தனிமைப்படுத்தி, பரிவோடு பராமரித்து, சிகிச்சைக்குப் பின் உறவினர்களோடு முறையாகச் சேர்த்துவைக்கக்கூடியதாக இருக்கும். ஒத்துழைப்பு: ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். -சக மனிதர்களுக்கு ஒத்துழைப்பாக இருக்க வேண்டுமென உணர்ந்து செயல்படுவதே உயிரோடு இருப்பதன் பொருள், ஒத்துழைக்க மறுக்கிறவர்கள் பிணமாகவே கருதப்படுவார்கள். பொறுப்பின்மை: ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போஒம் அளவுமோர் நோய். -மற்றவர்களிடமிருந்து வரும் ஆலோசனைகளைக் கேட்டும் செயல்படாமல், சொந்த அறிவையும் வளர்த்துக்கொள்ளத் தவறுகிறவர்கள் இருக்கிறவரையில் ஒரு நோயைப் போன்றவர்கள்தான். கடமை: மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை. -மற்ற உயிரினங்களையும் நேசித்துப் பாதுகாக்கிற அருளுள்ளம் படைத்தவர்களுக்கு தனது உயிரை நினைத்து அஞ்சுகிற நிலைமை வராது. பேரிடர் மேலாண்மை: ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். -துன்பம் ஏற்படுத்தக்கூடிய செயல்களைத் தவிர்க்க முயலுதல், அப்படியும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் தளர்ந்துபோகாமல் கையாளுதல் – இந்த இரண்டுமே திட்டமிட்டுச் செயல்படுகிறவர்களின் வழிமுறைகளாகும். கட்டமைப்புகள்: எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண். -தேவையான பொருள்கள், கட்டமைப்புகள் அனைத்தும் தயாராக இருந்து, உரிய நேரத்தில் கிடைக்கிறதென்றால் அதுவே மக்களைப் பாதுகாக்கும் அரண். வழிகாட்டல்கள்: எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு -உலகம் முழுக்க எத்தகைய வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை முழுமையாகத் தெரிந்துகொண்டு, அவற்றை நமக்கேற்ற முறையில் பயன்படுத்துவதே அறிவு. உலக சுகாதார நிறுவனம்: கடனறிந்து காலங் கருதி இடனறிந்து எண்ணி உரைப்பான் தலை. -எந்தக் காலக்கட்டம், எப்படிப்பட்ட இடம் என்ற சூழல்களையும் ஆராய்ந்து சரியான முடிவுக்கு வருவதே தலைமைப் பொறுப்பின் தகுதி. விளக்கு: எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. -அறிவார்ந்தவர்களைப் பொறுத்தவரையில் எல்லா விளக்குகளும் விளக்காகிவிடாது, பொய்மையான நம்பிக்கைகளில் தள்ளிவிடாத விளக்குகளே விளக்காகும். தேசம்: பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம் அணிஎன்ப நாட்டிற்கு இவ்வைந்து. பெருந்தொற்றிலிருந்து விடுதலை, போதிய வளம், உற்பத்தி, மகிழ்ச்சி, தற்காப்பு இவை ஐந்தும் ஒரு தேசத்தின் அணிகலன்களாகும். தற்சார்பு நாடு: நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரும் நாடு. -ஒரு வளமான நாடு வேறு யாரையாவது நாடித்தான் வளம் சேர்க்க வேண்டும் என்ற நிலைமை ஏற்படாத வகையில் தனது வளங்களைப் பாதுகாத்து வைத்திருக்கும். புலம்பெயர் தொழிலாளர்: பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு இறையொருங்கு நேர்வது நாடு. -புலம்பெயர்ந்து வருகிறவர்களால் ஏற்படும் எதிர்பாராத சுமைகளைத் தானே தாங்கிக்கொண்டு, தேசத்தைப் பராமரிப்பதற்கான நிதி வருவாயை உறுதிப்படுத்துவதாக நாட்டின் அரசு திகழ வேண்டும். எல்லைப் பிரச்சினை: உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேராது இயல்வது நாடு. -தீராத பசியும், குணமாகாத நோயும், அழிக்கும் பகையும் தன்னை நெருங்கவிடாமல் இயங்குவது நாட்டிற்குப் பெருமை. முதலீட்டுக்கான இடம்: அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி. -ஏதுமற்றவரின் கொடும் பட்டினியைத் தீர்க்கக்கூடியவராக இருப்போமாயின், அவ்வாறு பசிபோக்கும் இயக்கமே நம் பணத்திற்கான முதலீடாகும். அ. குமரேசன் என் வலைப்பூ: அசாக்
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.