Jump to content

காணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திற்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அந்த அலுவலகத்தினால் காணாமல்போனோர் பெயர்ப்பட்டியலொன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

எனவே அதனடிப்படையில் இனியேனும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நீதியையும் உண்மையையும் இழப்பீட்டையும் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது.

சர்வதேச மன்னிப்புச்சபையால் இன்று  வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

 

காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளின்படி காணாமல்போனோரின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6000 ரூபா இழப்பீட்டுக்கொடுப்பனவாக வழங்கப்பட்டுவந்தது.

எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் அந்தக் கொடுப்பனவு முழுமையாக நிறுத்தப்படுவதற்கு முன்னதாகவே வரையறுக்கப்பட்ட சில குடும்பங்களே அந்த இழப்பீட்டைப் பெற்றுக்கொண்டிருந்தன.

எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீடு முறையாக வழங்கப்பட வேண்டும் என்றும் மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கிறது. 

காணாமலாக்கப்பட்டவர்களின் குழும்பங்களுக்கு இனியேனும் நீதியை இலங்கை வழங்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச்சபை | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.