Jump to content

பிரான்ஸில் நிறவெறி தாக்குதல்: கருப்பின இளைஞரை தாக்கிய காவல்துறையினர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
27 நவம்பர் 2020, 08:18 GMT
புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்
பிரான்ஸ் தாக்குதல்

பட மூலாதாரம்,AFP

 
படக்குறிப்பு,

காவல்துறை தலைமையகத்தில் புகார் கொடுத்து விட்டு வெளியே வரும் இசை கலைஞர் மிஷெல் ஸெக்லர்

(இன்றைய நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் சுருக்கத்தை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கருப்பின இசை கலைஞரை மூன்று காவல்துறையினர் கடுமையாக தாக்கிய சம்பவம பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரான்ஸின் பிரபல இசை கலைஞர்கள், கால்பந்தாட்ட அணியினர் உள்ளிட்ட பலரும் சமூக ஊடகங்கள் வாயிலாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை இந்த சம்பவம் நடந்தபோதும், அது தொடர்பான காணொளி வியாழக்கிழமைதான் வைரலானது. இந்த சம்பவம் பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. இது குறித்து வெளிப்படையாக இன்னும் அதிபர் மக்ரோங் கருத்து தெரிவிக்கவில்லை.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின், மிஷெல் ஸெக்லர் என்ற இசை கலைஞரை தாக்கிய மூன்று காவல்துறையினர் அடையாளம் காணப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் காவல்துறையின் சீருடையில் அந்த மூன்று பேரும் இழைத்த கொடுமைக்காக அவர்கள் பணியில் இருந்தே நீக்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்துவதாகவும் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார்.

பிரான்ஸில் நிறவெறி தாக்குதல்: கருப்பின இளைஞரை தாக்கிய பொது இடத்தில் தாக்கிய காவல்துறையினர் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.