Jump to content

விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை வீரர்கள் என்றும் எம் இதயங்களில் வாழ்வார்கள் – தீபமேத்திய பின் விக்கினேஸ்வரன்

November 27, 2020

01-8-12-1024x498.jpg“தமிழ் மக்களின் விடுதலைக்காக தம் உயிர்களைத் தியாகம் செய்த விடுதலை வீரர்கள் ஒவ்வொருவரும் எம் மக்களின் இதயங்களில் என்றும் வாழ்ந்துகொண்டு இருப்பர்.”

தனது வாசஸ்தலத்தில் விடுதலை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய போது தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்

 

 

https://thinakkural.lk/article/93260

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்திடமிருந்து தங்களை காத்தவர்களையே தமிழர் நினைவுகூருகின்றனர் – விக்கினேஸ்வரன்

 
cv-600.png
 23 Views

“தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவுகூரவில்லை. சிங்கள இராணுவத்திடமிருந்து தம்மைப் பாதுகாக்க போராடிய வீரர்களையே நினைவுகூருகின்றனர். பெரும்பான்மை சமூகம் பயங்கரவாதி என்று முத்திரை குத்துபவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் அல்லர்” என்று தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்.

அவர் ஆங்கிலத்தில் அளித்த கேள்வி – பதிலிலேயே இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். அந்தப் பதிலில், “தமிழர்கள் பயங்கரவாதிகளை நினைவில் கொள்ளவில்லை. போரில் உயிரிழந்த தங்களின் அன்பானவர்களையே நினைவு கூருகின்றனர். அவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் அனைவரும் எங்கள் மகன்கள், மகள்கள், தந்தைகள், தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகள், மாமாக்கள், அத்தைகள், மருமகன்கள், மருமகள், உறவினர்கள் மற்றும் பலர்.

கெப்பெடிபொல திஸாவே ஒரு சிங்களத் தலைவராக இருந்தார். அவர் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடினார். ஆனால், அவர் இன்று ஒரு வீரன் என்று அழைக்கப்படுகிறார். அவரது நினைவாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆயினும்கூட ஆங்கிலேயர்கள் அவரை ஒரு குற்றவாளி, பயங்கரவாதி என்று அழைத்து அவரை தேடப்படும் மனிதராக அடையாளப் படுத்தியிருந்தனர். ஆனால் அவர் சிங்கள மக்கள் மத்தியில் ஹீரோ. ஆகவே, முதலில், தமது உரிமைகளுக்காக, தனிநபராகவோ அல்லது கூட்டாகவோ போராடும் எவரையும் நீங்கள் ஒரு பயங்கரவாதி என்று அழைக்க முடியாது.

எங்கள் இளைஞர்கள் சிங்கள இராணுவத்தை விரட்ட தங்கள் மக்களுக்காக போராடினர். 1958, 1961, 1977, 1983 மற்றும் கலவரங்களில் தமிழர்களைப் பயமுறுத்துவதற்காக அவர்கள் தங்கள் குண்டர்களைப் பயன்படுத்தினர். அப்பாவி ஆண்கள் குத்திக் கொல்லப்பட்டனர், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர், குழந்தைகள் வெட்டப்பட்டனர், கொல்லப்பட்டனர், பல அப்பாவிகள் கார்களில் போடப்பட்டு தீ வைக்கப்பட்டனர். தமிழர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.

WhatsApp-Image-2020-11-27-at-7.47.04-PM-அவர்கள் தமிழர்கள் என்பதாலன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் அல்ல. பொலிஸ் மற்றும் இராணுவம் மறுபுறம் பார்த்துக் கொண்டிருக்கும் போது இவை அனைத்தும் செய்யப்பட்டன. இது அரச பயங்கரவாதம்.சுதந்திர காலத்திலிருந்து தமிழர்கள் இப்படி நடத்தப்படுவதற்கு அவர்கள் என்ன செய்தார்கள்? அவர்கள் திறமையான, கடின உழைப்பாளி, மனசாட்சி உள்ளவர்கள் .

நாடு முழுவதும் சிங்கள மற்றும் தமிழருக்கு சம அந்தஸ்து ஆரம்பத்திலேயே வழங்கப்பட்டிருந்தால், சமூகங்களுக்கிடையேயான முரண்பாடு ஏற்பட்டிருக்காது. எதிர்காலத்தில் ஓர் இரத்தக் களரியை ஏற்படுத்தும் நோக்கம் தமிழர்களிடம் இல்லை. ஆனால், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் நம் மக்களை மீண்டும் வன்முறையில் ஆழ்த்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

இனப்பிரச்னைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வை வழங்குவதும், வல்லரசுகள் வன்முறைச் சூழலை உருவாக்குவதைத் தடுப்பதும் அரசாங்கத்தின் கைகளிலேயே உள்ளது” என்றுள்ளது.

 

https://www.ilakku.org/இராணுவத்திடமிருந்து-தங்/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.