Jump to content

காணி வழங்கும் திட்டம்: யாழ்.மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணி வழங்கும் திட்டம்: யாழ் மாவட்டத்திலிருந்து மட்டும் 1 லட்சத்துக்கு மேல் விண்ணப்பங்கள்

November 28, 2020

ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

kaani-300x282.jpg
 

நேற்று அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் திட்டமொன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. அதற்கு அமைவாக மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலர் பிரிவு ரதியாக இதற்கான விண்ணப்பங்கள் மக்களிட மிருந்து பெறறப்பட்டிருக்கின்றன. இதில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

குறிப்பாக நல்லூர், சாவகச்சேரி, கோப்பாய் ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் இருந்து அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன எனவும் அவர் மேலும் கூறினார்.
 

https://thinakkural.lk/article/93410

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

“புட்டு” கோஸ்டி... அவுட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

அபிவிருத்தி, காணிவழங்கும் கோஷம் எல்லாம் வேறு எதற்கு என்று நினைக்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

“புட்டு” கோஸ்டி... அவுட்டு.

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

இதுக்கு சிங்கள கைக்கூலிகள் வாயை பாத்துக்கொண்டு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

நல்ல விடையம்.

 

5 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

இதுக்கு சிங்கள கைக்கூலிகள் வாயை பாத்துக்கொண்டு இருக்கும்.

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

ஏற்கனவே இங்கிருந்து போனவர்கள், போன இடங்களில் நிம்மதியாக, பாதுகாப்புடன் வாழ்வதை பார்த்ததினால் இருக்கும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

நீங்கள் தானே சொன்னீர்கள்
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்து சுய முயற்சியில் எழுந்து நிற்பதற்கு முயற்சித்தவர்களை பார்த்து...

12 hours ago, தமிழ் சிறி said:

அதில் அரைவாசி, ஆமிக்காரன்...  மிச்சம் தொப்பிக் காரன்.

 

11 hours ago, satan said:

அபிவிருத்தி, காணிவழங்கும் கோஷம் எல்லாம் வேறு எதற்கு என்று நினைக்கிறீர்கள்?

 

10 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளிலை சிங்களவன் தன்ரை இனத்தை பெரும்பான்மையாக்கி போட்டுத்தான் மிச்ச வேலையை பாப்பான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

ஏற்கனவே இங்கிருந்து போனவர்கள், போன இடங்களில் நிம்மதியாக, பாதுகாப்புடன் வாழ்வதை பார்த்ததினால் இருக்கும்..!

சிறிலங்காவில் ஒரு பிரச்சனையுமில்லை. தமிழ் மக்கள் இப்போது  நிம்மதி பெருமூச்சுடன் வாழ்கின்றார்கள். போர் முடிந்து விட்டது என ஒரு சில யாழ்கள உறவுகள் எழுதுவதை நீங்கள் கவனிக்கவில்லையா சார்?
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நீங்கள் தானே சொன்னீர்கள்
ஒரு லட்சம் பேருக்கு காணி வழங்கும் அரசின் திட்டத்துக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து விண்ணப்பித்து சுய முயற்சியில் எழுந்து நிற்பதற்கு முயற்சித்தவர்களை பார்த்து...

தமிழர் பகுதிகளில் இரகசிய சிங்கள குடியேற்றம் இல்லை என்கிறீர்களா?

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

தமிழர் பகுதிகளில் இரகசிய சிங்கள குடியேற்றம் இல்லை என்கிறீர்களா?

ரகசிய குடியேற்றம் என்று சொல்ல முடியாது. அவர்கள் வெளிப்படையாகவே செய்கிறார்கள். இந்த அரசு வந்த பிட்பாடு அது வேகமெடுக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தனிக்காட்டு ராஜா said:

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

அப்படியாயின் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அடிக்கடி சுட்டுவிரலை நீட்டுவதன் அர்தங்கள் என்னவாக இருக்கும்?


வெளிநாடுகளுக்கு..........
வரவேண்டாம் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
வாருங்கள் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

அப்படியாயின் புலம்பெயர்ந்த மக்களை நோக்கி அடிக்கடி சுட்டுவிரலை நீட்டுவதன் அர்தங்கள் என்னவாக இருக்கும்?


வெளிநாடுகளுக்கு..........
வரவேண்டாம் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?
வாருங்கள் என்று சொன்னால் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

அர்த்தம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை ஊரில் இருக்கும் போது சும்மா இருந்திருப்பார்கள் ஆனால் வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது.

இதில் வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் என்று சொன்னால் வேற நாடு வாருங்கள் என்று சொன்னால் அவரவர் விருப்பம் 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....


 

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....


 

அப்படி என்றால் இவை எல்லாவற்றையும் அனுபவிப்பதட்கு தமிழன் புலம் பெயர வேண்டுமென்று சொல்லுகிறீர்கள். நீங்கள் அனுபவிப்பதை எல்லோரும் அனுபவிக்கட்டும்என்று நல்ல மனம் உங்களிடம் இருக்குமென்று எண்ணுகிறேன். இனி தமிழனுக்கு பிரச்சினையே இருக்காது.

இங்குள்ளவர்கள் உரிமைகளை பெற்று தர்மடடார்கள் என்பதையும் ஏற்றுக்கொள்ளுகிறோம். எனவே நீங்கள் கூறிய எல்லாவற்றையும் மற்றவர்களும் அனுபவிக்க சிங்களவனிடம் கொடுத்து விட்டு அல்லது சோனவனிடம் கொடுத்துவிட்டு புலப்பெயருவதே ஒரே வழி. எதாவது உதவி செய்வீர்கள் என்று உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

தூரத்தில் நிற்கும் போதுதான் கோபுரத்தின் அழகு தெரியும்.

புலம்பெயர்ந்து வந்ததின் பின்னர்....!

தமிழின் அருமை/புதுமை/தொன்மை தெரிகின்றது.
சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.
சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.
அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
அரசு சட்டங்களை அமுல்படுத்தும் போது மக்கள் அதை எப்படி மதிக்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
இனவாதத்தை ஒடுக்கி பொதுநலவாதத்தை முன்னிலைப்படுத்துகின்றமை தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
அரசியலில் மதங்களை புகுத்தாமல் நல்லாட்சி எப்படியென்று தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
விவசாயத்தை எப்படி முன்னிலைப்படுத்தி வளர்கின்றார்கள் என்பது தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.
மக்கள் அபிவிருத்திக்கு ஒதுக்கிய பணத்தில் அரசியல்வாதிகள் சொந்த வீடு கட்டுவதில்லை என்பது தெரிகின்றது.
நதிகளும் ஆறுகளும் எல்லோருக்கும்  சொந்தமானது என்பது தெரிகின்றது.

பிள்ளையானும்,கருணாவும்,அங்கஜனும்,சம்பந்தனும் சுமந்திரனும் தமிழருக்கு உரிய அடிப்படை உரிமைகளை பெற்று தரமாட்டர்கள் என்பது தெரிகின்றது.

இன்னும் வரலாம்....


 

 

அரே வா சூப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

ஏன் நடக்காது?

தரமான அரசியல் கட்சிகளை,அரசியல்வாதிகளை இனங்கண்டு பாராளுமன்றம் அனுப்பினால் நல்லதே நடக்கும்.சாராயத்திற்கும் இனவாதத்திற்கும் விருந்துபசாரங்களுக்குமாக வாக்களித்தால் எப்படியிருக்கும் என்று தெரிகிறது தானே...?

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன. :cool:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 

 

19 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அர்த்தம் என்பது பெரிதாக ஒன்றும் இல்லை ஊரில் இருக்கும் போது சும்மா இருந்திருப்பார்கள் ஆனால் வெளிநாடு சென்ற பின்னரே நாடு மக்கள் . நிலம் காணி என்பவற்றின் மீது பற்று வருகிறது.

இதில் வெளிநாடுகளுக்கு வரவேண்டாம் என்று சொன்னால் வேற நாடு வாருங்கள் என்று சொன்னால் அவரவர் விருப்பம் 


 

உண்மைதான். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாடடார்கள்.

இங்கு விண்ணப்பித்த எல்லோருக்கும் வழங்காவிடடாலும் சிலருக்கு வழங்கப்படும். இருந்தாலும் அவர்கள் அடையாளப்படுத்திய காணிகளை வழங்க மாடடார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஏன் நடக்காது?

தரமான அரசியல் கட்சிகளை,அரசியல்வாதிகளை இனங்கண்டு பாராளுமன்றம் அனுப்பினால் நல்லதே நடக்கும்.சாராயத்திற்கும் இனவாதத்திற்கும் விருந்துபசாரங்களுக்குமாக வாக்களித்தால் எப்படியிருக்கும் என்று தெரிகிறது தானே...?

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன. :cool:

இலங்கையில் அப்படி நடக்க வாய்ப்பில்லை அண்ண 

ஆசியாவில் நான் குறிப்பிட முனைந்தது இலங்கை இந்தியா, வங்களாதேஷ், பாகிஸ்த்தான் , போன்ற நாடுகளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

சனநாயகம் என்றால் எப்படியிருக்கும் என்று தெரிகின்றது.

சகலருக்கும் சம உரிமை என்றால் எப்படியென்று தெரிகின்றது.

அரசு சகல மக்களுக்கும் சமமானது என்பது தெரிகின்றது.
ஊழல் இல்லாமல் மக்கள் சேவை எப்படி நடக்கின்றது என்பது தெரிகின்றது.
இயற்கையை எப்படி பாதுகாக்கின்றார்கள் என்று தெரிகின்றது.
தனிமனித கருத்து சுதந்திரம் எப்படியென்று தெரிகின்றது.
யாராக இருந்தாலும் மக்களுக்கு கண்டன ஊர்வலங்கள் அனுமதியளிப்பது தெரிகின்றது.

 

 

10 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நீங்கள் கூறுவது ஐரோப்பிய நாடுகளில் நடப்பது இது ஆசியா பகுதி நீங்கள் நினைப்பதும் கேட்பதும் இங்கு நடக்காது நாடு அந்த பாதையில் பயணம் செய்து விட்டது. 

 

4 hours ago, குமாரசாமி said:

சிங்கப்பூர்,ஜப்பான் ,சீனா,மலேசியா போன்ற நாடுகள் ஆசியாவில்தான் இருக்கின்றன.

நல்ல தெளிவாக தான் இருக்கிறார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/11/2020 at 10:07, தனிக்காட்டு ராஜா said:

 

ராணுவம் விடுவிச்ச காணிகளில் இருக்க ஆட்கள் இல்லை திரும்பவும் ராணுமே எடுக்கிறது சில இடங்களை நம்ம சனம் ஐரோப்பா அமெரிக்க என்று குடிபெயர நினைக்கும் போது அவங்களும் என்ன செய்வாங்கள் நம்ம நிலம் வந்தோரை வாழவைக்கும் நிலம் வந்தவர்கள் உரிமை சொந்தம் கொண்டாடுவது வழமைதானே குட்டி கிட்டி போட்டு 

 

On 28/11/2020 at 15:07, குமாரசாமி said:

 நம்ம சனம் ஏன் குடிபெயர நினைக்கின்றார்கள்? 

 

On 29/11/2020 at 01:23, தனிக்காட்டு ராஜா said:

சிலவேளை வெளிநாட்டு மோகமாக கூட இருக்கலாம். கொழும்பில் தமிழர்கள் வாழ்கிறார்கள். 

மக்கள் வேற வாழ்க்கை வாழநினைக்கிறார்கள்.

நாம் உணர்ச்சிவசபடுவது என்பது இயல்பானதுதான் 
அன்றாட நிகழ்வுகளில் சில தோல்விகளை நாம் சந்திக்க நேர்ந்தால் 
அப்போது உணர்ச்சி பொங்காமல் நிதானமாக சிரித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்றால் 
எம்மிடம் உயரிய ஒரு நீண்ட கால திட்டம் இருக்க வேண்டும். 
இது எம்மிடம் இல்லாத ஒரு பெரும் குறை இருக்கிறது இதை நாம் நிவர்த்தி செய்ய முடியும் 
அதுக்கான பலம்  அறிவு எல்லாம் தேவைக்கு அதிகமாக கொட்டி கிடக்கிறது 

சிங்களவர்கள் தமிழர் நிலத்தில் குடியேறுவது என்பதை இனி தடுக்க முடியாது 
தர்மீகமாக சிந்தித்தால் தடுக்கவும் கூடாது . இலங்கையின் 70 வீதமான சிங்களவர்கள் இனியும் குறுகிய 
நில பரப்பில் வாழ  முடியாது இலங்கையின் விலைவாசி என்பது இனி வரும் காலங்களில் 
வானத்தை தொடும் அளவுக்கு வளரும் கொழும்பில் இப்போதைய மத்திய தர குடும்பம் ஒன்று 
இன்னும் 10 வருடங்களில் வாழ முடியாது. கொழும்பை விட்டு வெளியேற வேண்டிய நிர்பந்தம் நிச்சயம் உண்டு. 

தனியார் காணிகளை பாதுகாத்தாலே எமக்கு போதும் 
ஆனால் எதிர்கால விலைவாசிக்கு முகம் கொடுக்க முடியாமல்  
ஏழை தமிழர்கள் காணிகளை விற்கும் நிலையை நாம் எப்படி தடுப்போம்?
என்பதுதான் தமிழர் ஆளுமையை இலங்கையில் கேள்வி குறி ஆக்க கூடியது.

வெள்ளம் வர போகிறது என்பதும் எமக்கு தெரியும் 
எங்கிருந்து என்ன வடிவில் வர போகிறது என்பதும் தெரியும் 
இப்போதும் எவ்வாறு அணை கட்டுவது என்பதை விட்டு விட்டு 
நாம் எமக்குள் புடுங்குபட்டு கொண்டிருப்பது அர்த்தம் அற்றது 

ஒவ்வொரு அரசியல்வாதியும் பல லட்ஷம் ரூபாக்களை கொட்டியே 
இன்று தேர்தலில் வெற்றி பெற்று இருக்கிறான் அவன் எதோ ஒன்றுக்கு 
முதலீடு செய்து இருக்கிறான் என்பது அவன் தேர்தலில் அவ்வளவு பணம் 
கொட்டும்போதே சாதாரண அறிவுக்கு புரியும். இன்னும் புரியவில்லை என்றால் 
அங்கு அதை புரியும் அறிவு பற்றாகுறை உண்டு என்பதாவது புரியவேண்டும்.
ஆகவே யாரவது அரசியல் வாதி எதையாவது புடுங்குவான் என்று எதிர்பார்ப்பது 
வெறும் நீராசை ... அரசியல் வாதிகளை விட இப்போதைய சூழலில் சாதாரண குடிமக்களால் 
பெரும் எடுப்பில் புடுங்க முடியும். இதுதான் இன்றைய கள சூழல்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து மருதர்.இதை விட்டுட்டு..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.