Jump to content

நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன்

 
  • நிலாந்தன்

nilaanthan.jpg“யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது.

அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழும்பிலிருந்து வந்த சிரேஷ்ட பிரதி வாதாடி மன்றாடியார் முன்னைய அமர்வில் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த  கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரசாத் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%எனினும், தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பலமான எதிர்வினையை கிளப்பியுள்ளன. ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பிட்டும் வடையும் விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மொத்தத்தில் இது தமிழ் மக்களை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடுத்தியிருக்கிறது. அதே சமயம் அது முகநூல் உலாவிகளின் கவனத்தை மாவீரர் நாளிலிருந்து திசை திருப்பி பிட்டின் மீது குவித்துள்ளதா? பொது வெளியில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் பிட்டின் மகிமையை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டதா?

ஒரு மக்கள் கூட்டத்தின் உணவை இழிவு படுத்திக் கூறுவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான அரசியலின் ஒரு பகுதிதான் என்பதனை எனது நண்பரான ஒரு புலமையாளர் சுட்டிக் காட்டினார். பாரம்பரிய உணவுகள் ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களே. ஏற்கனவே அரசாங்கம் தமிழ் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மரபுரிமைச் சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வகைமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மரபுரிமை சொத்துக்களை முன்நிறுத்தும் ஒரு போக்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த மரபுரிமை யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

கிழக்கில் தமிழர்களோ முஸ்லிம்களோ இல்லாத ஒரு தொல்லியல் செயலணியை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.   ஒரு தமிழ் மருத்துவர் அதில் இணைய முன்வந்த போதிலும் அவரை உள்ளெடுக்க அரசாங்கம் தயாரில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தின் உபகரணமாகிய ஒரு போலீஸ் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தமை தமிழ் மக்களை இன ரீதியாக; உணவு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைத்திருக்கிறது.

போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் போர்க்காலத்தில் பிட்டு வடை ரொட்டி தோசை ஆகியவற்றை  மட்டும் சாப்பிடக் கூடியதாக இருந்த தமிழ் மக்களுக்கு பீட்சா  சாப்பிடும் ஒரு நிலைமையை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்ற தொனிப்பட அப்பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார்.யுத்த காலத்தின் கஷ்டங்களை எடுத்துக்காட்ட அவர் இப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அவருடைய கூற்று தமிழ் மக்கள் மத்தியில் பின்வருமாறு விளங்கிக் கொள்ளப்பட்டிருகிறது.

முதலாவது அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு  ஐரோப்பிய பாணியிலான ரெசபிகளை சுவைக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இரண்டாவது பிட்டும் வடையும் தோசையும் பீட்சாவை விட தாழ்ந்தவை.
மூன்றாவது பிட்டும் வடையும் சாப்பிடும் ஒரு வாழ்க்கை முறை உயர்வானது அல்ல.
நாலாவது போராட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பீசா கிடைத்திருக்காது.

ஐந்தாவது உணவுதான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை. உரிமைகள் அல்ல.
மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதில் அரசியல் ரீதியான தாக்குதல் இருக்கிறது. பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் இருக்கிறது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. வாழ்க்கை முறையைக் கொச்சைப்படுத்துகிறது. உணவுப் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துகிறது. எனவே மரபுரிமைச் சொத்துக்களை கொச்சைப்படுத்திகிறது.

ஆனால் இது தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு 1968ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக “தோச வட அப்பிற்ற எப்பா” – “தோசை வடை எமக்கு வேண்டாம்” என்று கோஷம் எழுப்பப்பட்டதை இங்கே நினைவூட்ட வேண்டும். குறிப்பாக டட்லிக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் இணக்கம் நிலவியதைச் சுட்டிக்காட்டி “டட்லிகே படே மசாலா வடே” “டட்லியின் வயிற்றில் வடை” என்றும் கோஷம் எழுப்பபட்டது.

ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பது என்றால் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை விமர்சிப்பதும் ஒரு வழிதான். இதற்கு உதாரணம் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகம் பூராகவும் பீதியும் அதிர்ச்சியும் ஏற்பட்ட பொழுது சீனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்தது. உலகப் பேரரசான அமெரிக்காவின் அதிபர் அதனை வுகான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைத்தார். சீனர்களின் விலங்குச் சந்தைகளிலிருந்தே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கொரோனா வைரசின் மீதான கோபத்தை; பயத்தை சீனர்களின் மீதான கோபமாக சீனர்களின் மரபுரிமை சொத்துக்களான அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தின் மீதான விமர்சனமாக பலரும் முன் வைத்தார்கள்.

வரலாற்றில் இதற்கு முன்னரும் இந்த நிலைமை இருந்தது. ஒரு மக்கள் கூட்டத்தை இழிவு படுத்துவதற்கு அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் ஒரு போக்கு தொடர்ச்சியாக வரலாற்றில் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை இழிவுவுபடுத்துவதற்கு பன்றி இறைச்சியை இழுத்துக் கதைக்கும் ஒரு போக்கு பரவலாக உண்டு.

தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அல்லது பிரதேசத்தை அல்லது சாதியை இழிவுபடுத்துவதற்கு இவ்வாறு உணவுப் பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டித் திட்டும் ஒரு போக்கை காண முடியும்.

உதாரணமாக கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் போது வேதக்காரர்கள் மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் விமர்சிப்பதுண்டு.
இப்பொழுது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை அரசாங்கம் தடுக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலும் மாட்டிறைச்சிக் கறி சாப்பிடும் சமயங்களையும் சமூகங்களையும் விமர்சிக்கும் ஒரு போக்கைக் காணலாம்.

இவ்வாறான ஒரு வரலாற்றுப் போக்கின் ஆகப் பிந்திய விவகாரம்தான் பிட்டும் வடையும் சர்ச்சையாகும். இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக உணவை ஓராயுதமாகப் பயன்படுத்திய அரசியல் பாரம்பரியம் ஒன்றில் இது ஆகப் பிந்தியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் பிட்டுப் புராணம் ஒன்றை பரவலாக காண முடியும். பிட்டின் பூர்வீகம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பரவலாகப் பார்க்க முடியும்.

இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று அழைப்பார்கள். பாண்டிய மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் செம்மனச்செல்வியின் கதையில் அது காணப்படுகிறது.

காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிய பொழுது ஊர் மக்களை அணை கட்டுவதற்கு மன்னன் அழைத்தான். ஊரில் ஒரு பாட்டி இருந்தார். பெயர் செம்மனச்செல்வி. பிட்டு அவித்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருக்கு யாரும் இல்லை. அவரால் அணை கட்ட முடியாது. கூலிக்கு ஆளை அமர்த்தவும் காசில்லை. அவர் சிவபெருமானிடம் வருந்தி அழுதார்.

சிவன் ஒரு கூலியாளாக அவரிடம்  வந்தார். கூலிக்கு பதிலாக பிட்டு அவித்து தருவேன் என்று பாட்டி சொன்னாள். உதிர்ந்த பிட்டுகளை எனக்குத் தா உதிராத பிட்டுகளை நீ விற்றுவிடு  என்று சிவபெருமான் சொன்னார். பாட்டியும் பிட்டை அவிக்கத் தொடங்கினார். அவித்த பிட்டெல்லாம் உதிரத் தொடங்கியது. சிவபெருமான் எல்லாவற்றையுமே போட்டுப் பிடித்தார். உண்ட களைப்பில் ஒரு மர நிழலில் உறங்கி விட்டார். மன்னன் அணைக்கட்டு வேலை நடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் வந்தான் வேலை செய்யாமல் படுத்திருக்கும் கூலியை கண்டான். பிரம்பை எடுத்து முதுகில் அடித்தான். அது சிவனின் மேல் விழுந்த ஆடி. முழு உலகத்தின் மீதும் விழுந்தது. அடித்த மன்னனின் முதுகிலும் விழுந்தது. இதுதான் செம்மனச்செல்வியின் கதை.

அது பழைய கதை. பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கதை. இப்பொழுது புதிய கதை. அது பிட்டைக் குறைத்துக் கூறிய போலீஸ்காரரின் கதை. போராட்டத்தை கீழ்மைப்படுத்தக் கூறிய கருத்து அது. ஆனால் பிரசாத் பெர்னாண்டோ அடித்த அடி எல்லா தமிழர்களின் முதுகிலும் விழுந்தது. அவருடைய முதுகிலும் விழுந்தது. ஏனெனில் அது தமிழ் மக்களை ஒன்று திரட்டி விட்டது. நீதிமன்றத்தில் தான் கூறிய வார்த்தைகளுக்கு இப்படி ஒரு திரண்ட எதிர்வினை இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

https://thinakkural.lk/article/93611

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.