Jump to content

பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெற்றோர் எனும் உயர் பதவி -செல்வி.டிலக்சனி.மோகராசா

 
1-201.jpg
 26 Views

குழந்தைகளை உடல் நலத்துடன் வளர்ப்பதுடன், உளநலத்தை ஊட்டி வளருங்கள். அவர்களின் எதிர்கால உலகம் அழகாகத் தெரியும்.

“எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; பின் நல்லவராவதும் தீயவராவதும்…”

“தூக்க மருந்தினை போன்றவை பெற்றோர் போற்றும் புகழ் உரைகள்…”

ஆகவே இன்றைய இளைஞர்கள் “சிகரட் குடிக்கிறான், தெருவில் நிற்கிறான், குடிக்கின்றான், ஒரே நண்பர்களுடன் திரியுறான், அதிகமாக Phone பாவிக்கின்றான், Game விளையாடுறான்” என நிதம் வசை பாடுகின்றோம். இவை எல்லாவற்றையும் நாம் பிள்ளைகளின் பிழையென கூறுகிறோம். ஆனால் உண்மையில் ஒரு பிள்ளையின் நடத்தையை பெற்றோரின் வளர்ப்பே தீர்மானிக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் அதிகமான பெற்றோர்கள் வேலை நிமித்தம் தம் பிள்ளைகளின் நிலையை மறந்து, பிள்ளைகளின் கனவுக்காக தங்களை அர்ப்பணிக்கிறார்கள். சிலர் திரைப்படங்கள், நாடகம், முகநூல் என தம் வேலைக்கு பின்னரும் இதனுடன் தம்காலத்தை கழிக்கிறார்கள். பிள்ளைகளின் காசுத் தேவைகளை நிறைவேற்றும் பெற்றோர், எந்தளவு தூரம் ஒரு குழந்தையின் அன்பு, பாதுகாப்பு என மாஸ்லோ சொல்லும் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுகிறார்கள் என்பது பல பெற்றோர்களுக்கு கேள்விக்குறியே. பிள்ளைகள் படித்தால் சரி டொக்டர், இஞ்சினியர் என்று வேலைக்கு சென்றால் சரி என்று சிந்திக்கிறார்களே தவிர, தன் பிள்ளை சமூகத்தில் சிறந்த பிரஜையாக வர வேண்டும்; நல்ல ஆளுமை உடையவனாக இருக்க வேண்டும் என்ற சிந்தனை எத்தனை பேருக்கு இருக்கின்றது என்றால் எம்மில் பலரின் விடை????

பெற்றோர் தான் பிள்ளைகளின் உலகம். பெற்றோர் ஆகிய நீங்கள், எந்த வகையில் தங்களுடன் நேரத்தை செலவிடுகிறீர்கள். எவ்வாறு தங்களுடன் அன்பு உறவை வளர்க்கிறீர்கள் எப்படிக் கவனம் செலுத்துகிறீர்கள் என உங்கள் பிள்ளைகள் அவதானிப்பார்கள். இதைவிடுத்து எந்தப் பிள்ளையும் எவ்வளவு பணத்தை தம் பெற்றோர் உழைக்கின்றார்கள் என பார்ப்பது இல்லை. பெற்றோர் குறைந்தது ஒரு நாளில் மூன்று முறையாவது பிள்ளைகளுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டும் என உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒருதாய் தன் பிள்ளையுடன் 8 முறைகள் தொட்டுக் கதைக்க வேண்டும். பெற்றோர் நீங்கள் பிள்ளைகள் மீது கொண்ட அன்பை மனதிற்குள் வைத்திருந்தால், மட்டும் போதாது. அதை பிள்ளைகளிடம் வெளிப்படையாக காட்டுங்கள்.

நீங்கள் சிறந்த பெற்றோரா? நீங்கள் சிறந்த பெற்றோர் ஆவதற்கு, பின்வரும் திறன்கள் முக்கியமானவை.

Listening – உங்கள் பிள்ளைகளின் செயற்பாடுகள், நாளாந்த வேலைகள் தொடர்பாக பெற்றோர் உங்கள் பிள்ளைகளிடம் கதையுங்கள். அவர்களின் கருத்துக்களை காது கொடுத்துக் கேளுங்கள். பிள்ளைகள் தமது கருத்தைக் கூறும் போது, குறுக்கிடுவதை விடுத்து, முற்றுமுழுதாக அவர்கள் கூறவரும் கருத்தைக் கேளுங்கள். அது பிள்ளைகளைப் பொறுத்தவரை தம் பெற்றோர் தமக்கு முக்கியதுவம் கொடுக்கிறார்கள்; தங்களை அவர்கள் நேசிக்கின்றார்கள் என்பதை ஆழமாக பிள்ளைகளின் மனதில் பதியவைத்து விடுகிறது. பின் பிள்ளைகள் உங்களிடம் இருந்து எந்த விடயங்களையும் மறைக்க மாட்டார்கள். தம் பிரச்சினைகள், கவலைகள், சந்தோசம் என எதையும் முதலில் பகிரும் நபர்களாக பெற்றோராகிய நீங்கள் திகழ்வீர்கள்.

observation – உங்களது பிள்ளைகள் செய்யும் செயலை நிதானமாக அவதானியுங்கள். அவர்கள் எவ்வகையான செயல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள், எதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், யாருடன் அதிகம் பழகின்றார்கள், எவ்வகையான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார்களென பெற்றோர் உற்றுநோக்க வேண்டும். பிள்ளைகளின் நடத்தையில் பிழை இருந்தால், அவதானியுங்கள். ஆனால் பிழைகளை மட்டும் அவதானிக்காதீர்கள். குழந்தைகளின் சொற்கள் மற்றும் சொற்கள் சாராத விடயத்தையும் அவதானியுங்கள்.

Manifest – பிள்ளைகளுக்கு இப்படி செய், அப்படி செய் என உத்தரவு இடுவதை விடுத்து பெற்றோர் ஆகிய நீங்கள், அவர்களுக்கு அதை முன்னுதாரணமாக செய்து காட்டுங்கள். அவர்கள் உங்களை மதிக்கும் அளவுக்கு நீங்கள் செயற்படுங்கள். பிள்ளைகள்  நீங்கள் சொல்வதைவிட நீங்கள் செய்வதை அதிகம் பின்பற்றுகிறார்கள். நீங்கள் செய்வதையே அவர்கள் செய்வார்கள். நீங்கள் உங்கள் குடும்ப அங்கதவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், சமூகத்தில் காட்டும் அக்கறை போன்றவற்றை பிள்ளைகளும் கடைப்பிடிப்பார்கள். பெற்றோரான நீங்கள் பிள்ளைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உங்களின் முதுமைப் பகுதியில் பிள்ளைகளின் நடத்தையில் அவதானிக்க முடியும்.

Story telling – உங்களது பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாக இருந்தால், அவர்களுக்கு நல்லுரைகள், நீதிக் கருத்துகள், சட்டதிட்டங்கள், ஒழுக்கவிதிகளை கதைகளின் மூலம் பிள்ளைகளுக்கு சொல்லுங்கள். சிக்மன்பி ரைட் உளப்பகுப்பு கோட்பாட்டில் குறிப்பிட்ட கருத்திற்கு அமைவாக ஒரு பிள்ளையின் EGO, SUPER EGO எனும் நிலைகளை உருவாக்குவதில் கதை கூறுதல் அத்தியாவசியமானது.

Self Sufficiency – பெற்றோரான நீங்கள் பிள்ளையின் முயற்சிக்கு, தேவைக்கு உதவிட வேண்டுமே தவிர, அவர்களது தேவைகளை நீங்கள் நிறைவேற்றக் கூடாது. பிள்ளை தனக்கு தேவையானதை தான் எடுத்துக் கொள்ளத் தூண்ட வேண்டும். அவர்களுக்கு இயலாத வேளையில்  உதவ வேண்டும். பொதுவாக பிள்ளைகள் கீழே விழுந்தால், பிள்ளை எழமுன் நாம் ஒடிப்போய் தூக்கி விடுகின்றோம். பிள்ளை நடைபழகும் போது பிள்ளை விழாமல் நடைபழக வேண்டுமென நினைக்கும் பெற்றோர்களும் உள்ளனர். அது பிழையான சிந்தனை. பிள்ளை விழுந்தால் தானே எழும். பிள்ளை நடப்பது என்பது அதற்கு பெரிய சவால். அந்த சவாலை பிள்ளை வெற்றி கொள்ள வேண்டும். விழுந்தாலும் தன்னால் யாரின் உதவியும் இன்றி எழும்புவேன் என்ற நம்பிக்கை, தன்னைத் தானே பார்த்துக் கொள்வேன் போன்ற சுய மதிப்பீடு நிலைகளை பெற்றோர் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். நீங்கள் பிள்ளையைத் தூக்கி விடும் போது, பிள்ளைகள் தங்கி இருக்கும் பழக்கத்தையும், தாழ்வு மனப்பான்மையையும் வளர்க்கிறார்கள். பிள்ளையின் முயற்சிக்கு ஊக்கம் ஊட்டி விடுபவராக இருங்கள்.

Teaching Compassion – பிள்ளைகளுக்கு மற்றவர்களில் கவனம் செலுத்த வேண்டும்; உயிர்களை மதிக்க வேண்டும்; பிறர் மகிழ்ச்சிக்கு நாம் எம்முடைய வாழ்வில் சிறு பகுதியையாவது கொடுக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுங்கள். பிள்ளைக்கு நாம் மட்டும் மகிழ்சியாக இருக்கக் கூடாது; நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் நான் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டுமென சொல்லிக் கொடுக்க வேண்டும். அதன் மூலமாக பிள்ளைகள் பெற்றோரான உங்களையும், தன் எதிர்கால குடும்பத்தையும், தன் உறவினர்களையும், தன்னைச் சார்ந்த, சாராதவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துகொள்ள முயல்வார்கள்.

Appreciotion – பிள்ளைகளை பாராட்டுங்கள். அவர்கள் நல்ல செயல்கள் செய்யும் போது, அவற்றை தேடித் தேடிப் பாராட்டுங்கள். அவர்கள் குற்றம் இழைத்தால் தண்டிக்காமல் அதை ஒரளவு கண்டு கொள்ளமால் விடுங்கள். அப் பாராட்டு இன்றிய நடத்தையானது, சிறிது காலத்தில் அழியும் சாத்தியக்கூறு உண்டு. பாராட்டுதல் எனும் போது பிள்ளைகளுக்கு மகிழச்சி தரக்கூடிய சொற்களை பயன்படுத்தல், பரிசுப்பொருட்கள் கொடுத்தல், வெளி இடங்களுக்கு பிள்ளைகளைக் கூட்டிச் செல்லுதல், அவர்களுக்கு பிடித்தவற்றை செய்தல் என்பன சிறப்பான விடயம் ஆகும். ஒரு நாளும் பாராட்டுகளை வழங்குவதற்கு தயங்கி நிற்காதீர்கள்.

இவ்வாறாக திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளும் போது, உங்களால் உங்களின் பிள்ளைகளுக்கு சிறந்த பெற்றோராக வாழ முடியும். அத்துடன் ஆளுமையுடன் கூடிய ஒழுக்கப் பண்புகளை பிள்ளைகளிடையே வளர்த்தெடுக்க முடியும். உங்கள் பிள்ளையின் Role model பெற்றோர் ஆகிய நீங்கள் தான். பிள்ளைகளின் முன்மாதிரியான நீங்கள், நேரான மனப்பான்மை கொண்டவராக விளங்க வேண்டும். பிள்ளை மூன்று வயதில் மாதிரியை பின்பற்ற அதாவது உங்களைப் போல செய்ய ஆரம்பிக்கின்றது. பெற்றோராகிய நீங்கள் பிள்ளைகளுடன் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பது தான் பிள்ளையின் நடத்தைக்கு காரணம். பிள்ளைகளிடம் குற்றம் காணாதீர்கள். எனெனில் இக் குற்றங்கள் உருவாக பெற்றோரான நீங்களே காரணம். ஆகவே எமது சமூகத்தில் நீங்கள் சிறந்த பெற்றோராக உருவாகுங்கள். சிறந்த பிள்ளைகள் தானாக உருவாகுவார்கள்.

செல்வி.டிலக்சனி.மோகராசா

உளவியல் துறை மாணவி(யாழ்பல்கலைக்கழகம்)

 

https://www.ilakku.org/பெற்றோர்-எனும்-உயர்-பதவி/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
    • இராணுவத்தின் நிர்வாகத்தின் கீழ் ஒட்டுசுட்டான் ஓட்டு தொழிற்சாலை – புனரமைப்பையும் ஆரம்பித்தனா் March 29, 2024     ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இராணுவ சமூக சேவையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன், அந்தத் தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு சென்ற இராணுவத் தளபதி லெப். ஜெனரல் விக்கும் லியனகே பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். இதன் போது, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலைக்கும் சென்று அங்கு முன்னெடுக்கப்படும் புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார். இந்தத் தொழிற்சாலையை கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி முதல் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. கூழாமுறிப்பில் அமைந்துள்ள இந்த ஓட்டுத் தொழிற்சாலை உள்நாட்டு போர் காரணமாக கடந்த 1983ஆம் ஆண்டு முதல் செயலிழந்து காணப்பட்டது. எனினும், 2009ஆம் ஆண்டின் பின்னர் இந்தத் தொழிற்சாலையை மீண்டும் இயக்க மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியளித்தன. ஆனால், அவை எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையிலேயே, இலங்கை பீங்கான் கூட்டுத்தாபனம் தொழிற்சாலையை இராணுவ சமூக சேவையின் கீழ் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்தே தொழிற்சாலையை புனரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது. “நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் உள்நாட்டு மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் அந்தப் பகுதி மக்களின் நலனை மேம்படுத்தவும் இந்த தொழிற்சாலை புதுப்பிக்கப்படுகிறது” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.   https://www.ilakku.org/இராணுவத்தின்-நிர்வாகத்த/
    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.