Jump to content

டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஆதரவாக களத்தில் குதித்த உத்தரப்பிரதேச விவசாயிகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேளான் சட்டத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சீமான் ஆர்ப்பாட்டம்

 

Link to comment
Share on other sites

  • Replies 94
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26-வது நாளாக எட்டிய விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்த டாக்டர்கள், நர்ஸ்கள் ; கோரிக்கைகளை தீர்க்க மத்திய அரசு தயார் என கடிதம்

26-வது நாளாக எட்டிய விவசாயிகள் போராட்டம்: ஆதரவு தெரிவித்த டாக்டர்கள், நர்ஸ்கள் ; கோரிக்கைகளை தீர்க்க மத்திய அரசு தயார் என கடிதம்
 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்கள் நலனுக்கு எதிரானவை என்று கருதி அவற்றுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு வட மாநிலங்களை, குறிப்பாக பஞ்சாப், அரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராடி வரும் விவசாயிகளின் 40 அமைப்புகளுடன் மத்திய அரசு 5 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், முடிவு எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றே ஆக வேண்டும் என்பதில் விவசாய அமைப்புகளும், அதற்கு அழுத்தம் தரவே கூடாது, வேண்டுமானால் திருத்தங்கள் செய்யலாம் என மத்திய அரசும் தத்தமது நிலைப்பாடுகளில் உறுதியாக உள்ளனர்.

இதனால் விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது. வாட்டியெடுக்கும் குளிர்கூட விவசாயிகளை போராடுவதில் இருந்து தடுக்க முடியவில்லை.

விவசாயிகள் போராட்டம் இன்று 26 நாளாக நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானாவைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பஞ்சாபை சேர்ந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டக் களத்திற்கு குவிந்துள்ளனர். 

இன்றிலிருந்து உண்ணாவிரத தொடர் சங்கிலி போராட்டத்தைத் தொடங்கவுள்ள விவசாயிகளுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்யப்போவதாக அவர்கள் கூறினர்.

இதுவரை உடல்நலக்குறைவு, விபத்து மற்றும் கடும் குளிரால் இறந்துபோன 33 விவசாயிகளுக்கு நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுபோன்ற உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், முதியவர்களுக்கும் மருத்துவர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளிக்கவுள்ளதாகவும் மருத்துவர்களும், செவிலியர்களும் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் பஞ்சாபைச் சேர்ந்த டாட்டூ கலைஞர்களும் போராட்ட களத்திற்கு வந்து, அங்குள்ள விவசாயிகளுக்கு பஞ்சாப் வரைபடம் மற்றும் விவசாயம் சம்மந்தமான டாட்டூக்களை இலவசமாக வரைந்து வருகின்றனர்.

கொரோனா காலத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பிரதமர் மோடி மணி அடிக்க சொன்னதைப் போன்று, இன்று அவர் மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் அவர் உரையாற்றும்போது, விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் மணியோசை எழுப்புமாறு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்தீத் சிங் வேண்டுகோள் வைத்துள்ளார்.

வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டால், டிசம்பர் 23ஆம் தேதி விவசாயிகள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் என்றும், அன்று நாடு முழுவதும் மக்கள் மதிய உணவைத் தவிர்த்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறும் விவசாயிகள் சங்க மூத்த தலைவர் ராகேஷ் திகேத் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் 6-வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்த விவசாயிகள் சங்கத்தினருக்கு மத்திய அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கத்தினர் தங்களின் குறைகள், கவலைகள், சந்தேகங்களைக் கூறினால், அடுத்தககட்டப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதற்கான தேதியைக் குறிக்கலாம். இதற்கான பேச்சுவார்த்தையை டெல்லி விஞ்ஞான் பவனில் நடத்தலாம். 

விவசாயிகள் சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே டெல்லி போராட்ட களத்தில் 11 பேர் கொண்ட குழு, இந்த உண்ணாவிரதத்தை இருக்கப்போவதாகவும், அரியானாவிலிருந்து டெல்லி செல்லும் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி சுங்கச்சாவடி வசூலை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல், அரியானா மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுவதை 25-ந் தேதியில் இருந்து 27-ந் தேதிவரை விவசாயிகள் தடுத்து நிறுத்துவார்கள் என்று விவசாய தலைவர் ஜெகஜீத்சிங் டாலிவாலா தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர் ராம்பால் சிங் கூறுகையில்,

இந்த போராட்டம் தொடங்கி 3-4 மாதங்கள் ஆகிவிட்டன, முதலில் நாங்கள் இந்த போராட்டத்தை பஞ்சாபில் போராடினோம், இப்போது நாங்கள் டெல்லியில் போராடி வருகிறோம்.  விவசாய சட்டங்கள் திரும்பும் வரை நாங்கள் எங்கும் செல்ல மாட்டோம் என்றார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/21120346/Farmers-Protest-Doctors-nurses-from-Punjab-extend.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் 27 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் கடும் குளிருக்கு மத்தியில் 27 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
 

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி (சந்தைகள்) அமைப்பு போன்றவற்றுக்கு ஆபத்து உள்ளதாக கூறி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் டெல்லியில் 3 வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.


இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் வேளாண் சட்டங்கள் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்த வித தீர்வுகளும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உயிரை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் 27-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லியில் நாளாக நாளாக குளிரின் வீரியம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு கடுமையான குளிர் வாட்டியபோதும் விவசாயிகளின் மன உறுதியில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அவர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதும், மாற்றுவழிகளை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பதும், போக்குவரத்து நெரிசல்கள் தொடர்வதும் டெல்லி மக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது. எப்போது இந்த போராட்டம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/22092528/Farmers-protest-continues-for-27th-day-amid-severe.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் - பிரதமர் மோடி

அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம்  - பிரதமர் மோடி
 

புதுடெல்லி

உழவர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ்  சிறு மற்றும் விளிம்புநிலை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அடுத்த தவணை நிதியுதவி வழங்குவதை பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்வின்போது, 6 மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

உழவர் கடன் அட்டை மூலம்   2.5 கோடி விவசாயிகள் இணைக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் மற்றும் கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது

உழவர் கடன் அட்டை மூலம் ஆண்டுக்கு 4 சதவீதம்  என்கிற குறைந்த வட்டியில் கடன்பெறுவதை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துரையுங்கள்

9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வழங்கப்படுகிறது. இது நேரடியாக அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் எந்த இடைத்தரகர்களுக்கும் பங்கு இல்லை. கமிஷனும் கொடுக்க தேவையில்லை. விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு செயல்படுகிறது.

80 சதவீத விவசாயிகளுக்கு குறைந்தளவு சொத்து உள்ளது. ஏழை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டதால், அவர்கள் வறுமைக்கு தள்ளப்பட்டனர். சிறு விவசாயிகளின் நலனுக்காக எனதுஅரசு சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. விவசாயிகளுக்கு,சிறந்த காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்தோம். 

 மத்திய அரசு திட்டங்களை மேற்கு வங்க அரசு அனுமதிக்காததால், அவற்றின் பயன்களை மேற்குவங்காள விவசாயிகள் அடைய முடியவில்லை.

மம்தா பானர்ஜியின் கொள்கைகள் வங்காளத்தை அழித்துவிட்டது.  விவசாயிகளுக்கு எதிரான மம்தாவின் நடவடிக்கைகள் என்னைப் புண்படுத்தியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்கள் பற்றியும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறை கைவிடப்படும் என்றும் விவசாயிகளிடம் எதிர்க்கட்சியினர் தவறான தகவலைப் பரப்புகின்றனர்.   சில போராட்டங்களுக்கு பின்அரசியல் காரணங்கள் உள்ளன. வேளாண் சட்டத்தை வைத்து சிலர் அரசியல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.விவசாயிகள் போராட்டத்தை தூண்டிவிட்டு, நமது பொருளாதாரத்தை எதிர்க்கட்சிகள் அழிக்கின்றன.உங்கள் அரசியல் லாபத்துக்காக விவசாயிகளின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் .

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள், விளம்பரத்திற்காக போராட்டத்தை தூண்டி விடுகின்றனர். கேரளாவில் விவசாய பொருள் மார்க்கெட் குழு(ஏபிஎம்சி) இல்லை. அதனை ஏன் அம்மாநில அரசு கொண்டு வரவில்லை. சொந்த நலனுக்காக தான் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தூண்டி விட்டுள்ளன. எதிர்ப்பு தெரிவிக்க, எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு. தவறாக வழிநடத்த உரிமையில்லை.

 விவசாயத்துறையை நாம் நவீனப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.  வேளாண்துறைச் சீர்திருத்தங்களால் விவசாயிகள் விளைபொருட்களை எங்கும் யாருக்கும் விற்க முடியும் என்பதால் நல்ல விலை கிடைக்கும். வேளாண் சட்டங்களால், ஒரு மண்டிகூட மூடப்படாது. இவ்வாறு அவர் பேசினார். முந்தைய அரசு விவசாயிகளுக்கு அளித்த உறுதிமொழிகளை மறந்துவிட்டதாகவும், முந்தைய அரசின் கொள்கைகளால் ஏழைகள் மேலும் ஏழைகளானதாகவும் மோடி தெரிவித்தார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/12/25155236/PM-address-to-farmers-Don-t-play-with-farmers-future.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்வரும் புதனன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு  அழைப்பு | Athavan News

எதிர்வரும் புதனன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு விவசாயிகளுக்கு மத்திய அரசு அழைப்பு

வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதி விவசாயிகளை பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேற்று காலை 11 மணிக்கு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர்.

இருப்பினும் எதிர்வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விக்யான் பவனில் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி குறித்த விடயம் தொடர்பாக பேசுவதற்கு 40 விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

http://athavannews.com/எதிர்வரும்-புதனன்று-பேச்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவில்லை!’- பா.ஜ.க-விலிருந்து விலகிய முன்னாள் எம்.பி

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு வீரர்களில் சிலரும், தலைவர்கள் பலரும் தங்களின் விருதுகளை திருப்பியளித்துவருகின்றனர்.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும்விதமாக பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஹரீந்தர் சிங் கஹல்சா (73), கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

கடந்த செப்டெம்பர் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்கள் தங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவற்றை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்று நாடு முழுவதுமுள்ள பல்வேறு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அதன் நீட்சியாக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு டெல்லியின் தேசிய நெடுச்சாலைகளில் கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
 
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக, மத்திய அரசு விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகளிடம் நடத்திய பல்வேறுகட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், தற்போது போராட்டம் தொடர்ந்துவருகிறது. விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேசிய விளையாட்டு வீரர்களும், தலைவர்களில் பலரும் தங்களின் விருதுகளை திருப்பியளித்து வருகின்றனர்.

 

இந்தநிலையில், பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.யான ஹரீந்தர் சிங் ஹல்சா, ``மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் செயல்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வீடுகளைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் கடுமையான பனிக்கு இடையிலும் தங்களின் உரிமைகளுக்காக போராடிவருகின்றனர். இதை முடிவுக்கு கொண்டுவருவதற்கான எவ்வித முயற்சியையும் அரசாங்கம் எடுக்காததை நான் மிகவும் கண்டிக்கிறேன்.

அதனால், இதற்கு மேலும் இந்தக் கட்சியில் எனது பணியைத் தொடர விரும்பவில்லை” என்று கூறி பா.ஜ.க-விலிருந்து விலகியிருக்கிறார். கடந்த 2014-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்த ஹரீந்தர் சிங் கஹல்சா பஞ்சாப்பிலுள்ள ஃபதேகர்க் சாஹிப் (Fatehgarh Sahib) தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகி பா.ஜ.க-வில் இணைந்தார்.

ஹரீந்தர் சிங் ஹல்சா
 
ஹரீந்தர் சிங் ஹல்சா

இதேபோல், விவசாயிகள் மீதான மத்திய அரசின் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டதால் பா.ஜ.க-வின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ராஷ்டிரிய லோக்தன்திர்க் கட்சி (Rashtriya Loktantrik Party) பா.ஜ.க-வுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. இது தொடர்பாக பேசிய அக்கட்சியின் தலைவர் ஹனுமன் பெனிவால், ``மத்திய அரசின் இந்தப் புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலக முடிவு செய்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாக, இதே போன்று அகாலிதளம் கட்சியும் விவயசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பா.ஜ.க-கூட்டணியிலிருந்து வெளியேறியது.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/farmers-protest-ex-mp-harinder-singh-khalsa-quits-bjp

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது“ - டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி தற்கொலை

“எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது“ -  டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் விவசாயி தற்கொலை
 
வேளாண் சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.
 
பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக் கான விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் ஒரு மாதத்தை கடந்தும் தீவிரமாக நடந்து வருகிறது.
 
 
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தை விவசாயிகளின் 2 கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டிருக்கிறது. குறிப்பாக மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் வேளாண் கழிவுகளை எரிப்பதற்கு விதிக்கப்படும் அபராதம் போன்ற பிரச்சினைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டது.
 
ஆனால் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு எட்டப்படவில்லை. எனவே இது தொடர்பாக வருகிற 4-ந் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
 
இந்த பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
 
இது ஒருபுறம் இருக்க, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 38-வது நாளை எட்டியது. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் அவர்கள், டெல்லி எல்லைகளில் எந்த வித தொய்வும் இன்றி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
 
கடந்த சில நாட்களாக தலைநகரில் கடுமையான குளிர் வாட்டி வருகிறது. குறிப்பாக புத்தாண்டு தினமான நேற்று 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது. இது, கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத மிகக்குறைந்தவெப்பநிலை ஆகும்.
 
இந்த கடுமையான குளிரிலும் இரவு-பகலாக வெட்டவெளியிலேயே தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இதனால் தங்கள் உடல்நலத்துக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ள போதும் அவற்றை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கைகளை வென்றெடுப்பதிலேயே உறுதியாக உள்ளனர்.
 
இந்நிலையில்,  இன்று காலை காசியாபாத்தில் உள்ள போராட்ட களத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென தற்கொலை  செய்துகொண்டார். அங்கு உள்ள நடமாடும் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எனது தியாகம் வீணாகப் போகக்கூடாது என்றும் தன்னை எல்லையிலேயே புதைக்குமாறு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
விவசாயிகள் போராட்டதில் கலந்து கொண்டவர்களில் 40 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 6 விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசு தினத்தன்று டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி: விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை

will-hold-tractor-parade-towards-delhi-on-jan-26-if-demands-not-met-farmer-unions கோப்புப்படம்
 

புதுடெல்லி

எங்களின் கோரி்க்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் குடியரசுதினத்தன்று டெல்லியில் நடக்கும் அணிவகுப்பு மரியாதை முடிந்தபின் விவசாயிகள் சார்பில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் ஒரு மாதத்துக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற பல்வேறு போராட்டங்கள் வாயிலாக விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால், வேளாண் சட்டங்கள் விவசாயிகள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்டன என்று மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 6 கட்டப் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தும் எந்தவிதமான தீர்வும் எட்டப்படவில்லை. விளைநிலங்களில் வேளாண் கழிவுகளை எரித்தல், மின்கட்டண உயர்வு ஆகியவை பற்றி மட்டும் பரிசீலிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில் வரும் 4-ம் தேதி அடுத்தக் கட்டப்பேச்சு நடக்க உள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று டெல்லியே நோக்கி விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துவோம் என எச்சரித்துள்ளனர்.

வரும் 26-ம் தேதி குடியரசுத் தினத்துக்கு சிறப்பு விருந்தினராக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் இந்தியா வரவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1609582771756.jpg யோகேந்திர யாதவ்

இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் சிங் இன்று நிருபர்களுக்கு அளித்தப் பேட்டியில் “ எங்களின் கோரிக்கைகளுக்கு வரும் 4-ம் தேதி நடக்கும் மத்திய அரசுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படாவிட்டால், குடியரசு தினத்தன்று அணிவகுப்பு ஊர்வலம் முடிந்தபின், விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியை நோக்கி நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்

ஸ்வராஜ் இந்தியா அமைப்பின் தலைவர் யோகேந்திர யாதவ் நிருபர்களிடம் கூறுகையில் “ விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகள் ஏற்கப்பட்டதாக மத்திய அரசு கூறுவது முற்றிலும் பொய். இதுவரை ஏதும் எழுதி உறுதிதரப்படவில்லை. குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதில் எந்த உடன்பாடும் எட்டவில்லை” எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குருராம் சிங் சோதனி கூறுகையில் “கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையில், 23 பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையைத் தரமுடியுமா, அதை எம்எஸ்வி விலையில் வாங்க முடியுமா எனக் கேட்டோம். அதற்கு மத்தியஅரசு முடியாது எனத் தெரிவித்தனர். பின் எதற்காக நாட்டு மக்களுக்கு தவறான செய்தியை சொல்கிறீர்கள். இதுவரை 50 விவசாயிகள் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள்” எனத் தெரிவித்தார்

 

https://www.hindutamil.in/news/india/618248-will-hold-tractor-parade-towards-delhi-on-jan-26-if-demands-not-met-farmer-unions-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கொட்டும் பனியில் 39 -வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்

புதுடெல்லி,
 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடந்த மாதம் 26-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்திலும், சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
 
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 39-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் நடத்திய 6-வது கட்ட பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் 50 சதவீத கோரிக்கைகளுக்கு முடிவு காணப்பட்டதாக மத்திய அரசு கூறியது.
 
இதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் முக்கியமாக வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகியவை குறித்து பேசப்படுகிறது.
 
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் கொரோனா அச்சுறுத்தலை எதிர்கொண்டு போராடி வரும் விவசாயிகள், நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையை அதிகமாக நம்பியுள்ளனர். இதில் தங்களுக்கு சாதகமான முடிவு எட்டப்படும் என கருதி வரும் அவர்கள், இதன் மூலம் தங்கள் காத்திருப்பு விரைவில் முடிவு பெறும் என எதிர்பார்த்து உள்ளனர்.
 
அதேநேரம் இந்த பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தால், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர். குறிப்பாக 6-ந் தேதி மிகப்பெரிய அளவில் டிராக்டர் பேரணி மற்றும் அரியானாவில் வர்த்தக வளாகங்கள், பெட்ரோல் நிலையங்கள் அடைப்பு உள்பட பல நடவடிக்கைகளுக்கு அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையேயான 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது

மத்திய அரசு - விவசாய சங்கங்கள் இடையேயான 7-ஆம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது
 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி அமைப்பு உள்ளிட்டவற்றை பாதிப்பதாக குற்றம் சாட்டி வரும் விவசாயிகள், எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

கடந்த நவம்பர் 26 ஆம் தேதி முதல், டெல்லி எல்லையில் பஞ்சாப் அரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 6- சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. கடைசியாக கடந்த 30-ந்தேதி நடந்த பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் 2 பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டன. 

எனினும் சட்டங்களை திரும்பப்பெறுதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 பிரதான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்று விவசாயிகள் உறுதிபட  தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில்,  டெல்லியில் விவசாயிகள் - மத்திய அரசு இடையே 7-வது கட்ட பேச்சுவார்த்தை இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.  டெல்லி விஞ்ஞான் பவனில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 
 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/04142844/Centre-Holds-Talks-With-Farmer-On-Repeal-Of-Farm-Laws.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி

 
1-25-696x392.jpg
 15 Views

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு  நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்தை தோல்வியில் முடிந்துள்ளது.

மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, இந்திய தலைநகர் டெல்லியில் கடும் குளிர், கொட்டும் மழைக்கு மத்தியில் 40ஆம் நாளாக போராட்டத்தில்   ஈடுபட்டு வருகின்றனர் விவசாயிகள்.

இதற்கிடையே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர, மத்திய அரசு, இதுவரை 6 கட்டங்களாக தொடர் பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறது. எனினும், இதுவரை நடந்த பேச்சுகளில் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

இதையடுத்து, நேற்று மீண்டும் பேச்சு நடந்தது. இதில் குறைந்த பட்ச ஆதாரவிலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் பல்வேறு ஆலோசனை தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகள் சங்கங்களின் கோரிக்கையை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூட்டத்தில் பேசிய இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் திட்டவட்டமாக கூறியதாக பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரம் சட்டத்தின் அம்சங்களை விவாதிக்க நாங்கள் விரும்பியபோதும், அதை விவசாயிகள் ஏற்காததால் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. விவசாயிகள் சங்கங்கள் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளன என்று அமைச்சர் நரேந்திர சிங் தோமர்  குற்றம்சுமத்தியுள்ளார்.

இதையடுத்து மீ்ண்டும் வரும் 8-ம் தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

 

https://www.ilakku.org/?p=38548

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்’ - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்

‘சீர்திருத்தத்துக்கு பின்னால் உள்ள உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள்’ - டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு வேளாண் மந்திரி வேண்டுகோள்
 
புதுடெல்லி, 
 
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நாளை (வெள்ளிக்கிழமை) மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
 
இந்த நிலையில் ஒரு சில விவசாய அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அவர்களுடன் கலந்துரையாடிய தோமர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
 
 
அப்போது அவர் கூறுகையில், ‘நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் நலன்களையும் பாதுகாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அதனால்தான் சட்டங்களை ஆதரித்து எங்களை சந்திக்க வரும் விவசாயிகளுடன் நாங்கள் பேசுகிறோம். அதைப்போல எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்துகிறோம்’ என்றார்.
 
நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் இந்த சட்டங்களை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
 
வேளாண் சீர்திருத்தங்களுக்கு பின்னால் உள்ள உணர்வுகளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இந்த விவகாரத்தில் தனக்கு நம்பிக்கை இருப்பதாக தெரிவித்தார். விவசாயிகள் நலன்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதாகவும், இதற்காக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மூலம் முடிவு எட்டப்படும் எனவும் அவர் கூறினார்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று நடந்தது ஒத்திகைதான்; குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி: விவசாயிகள் அதிரடி

நேற்று நடந்தது ஒத்திகைதான்; குடியரசு தினத்தில் பெரிய அளவில் டிராக்டர் பேரணி:  விவசாயிகள் அதிரடி
 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டம் 44வது நாளாக நீடித்து வருகிறது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் மத்திய அரசு 7 சுற்று பேச்சுவார்த்தைகளை இதுவரை நடத்தி இருக்கிறது. இதில் கடந்த மாதம் நடந்த 6-வது சுற்று பேச்சுவார்த்தையில், மின்கட்டண விவகாரம், வேளாண் கழிவுகள் எரிப்பதற்கு அபராதம் ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது.

எனினும் வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுதல், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் ஆகிய 2 கோரிக்கைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி நடந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

எனவே இரு தரப்பினரும் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதில் தீர்வு எட்டப்படும் என மத்திய அரசு நம்பிக்கை வெளியிட்டு உள்ளது.  இந்நிலையில், டெல்லியில் விவசாயிகள் அணி திரண்டு நேற்று டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்தனர்.  இதன்படி, டெல்லியின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகள் உள்பட டெல்லியின் நான்கு எல்லைகளில் இருந்தும் இந்த பேரணி நேற்று நடைபெற்றுது.

இதனை முன்னிட்டு, வன்முறை சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதேபோன்று, முக்கிய பகுதியான சிங்கு எல்லையில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.  விவசாயிகளின் டிராக்டர் பேரணியை முன்னிட்டு அரியானாவில் உள்ள குண்ட்லி-மனேசர்-பல்வால் சுங்க சாவடி பகுதியிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.

அரியானாவில் விவசாயிகள் பல்வால் பகுதி வரை டிராக்டர் பேரணி செல்ல முதலில் முடிவு செய்திருந்தனர்.  பின்னர் இதில் மாற்றம் செய்து, நொய்டா வரை டிராக்டரில் பேரணியாக சென்று விட்டு காஜிப்பூருக்கு திரும்புவது என்று முடிவு செய்தனர்.

பேரணியை கண்காணிக்க போலீசார் போதிய அளவில் குவிக்கப்பட்டனர்.  பேரணியை வீடியோ பதிவு செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன என்று காசியாபாத் மாவட்டத்திற்கான கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் (நகரம்) சைலேந்திர குமார் சிங் கூறினார்.

இதன்பின்பு டிராக்டர் பேரணி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.  இதனை தொடர்ந்து பாரதீய கிசான் யூனியனை சேர்ந்த ராகேஷ் திகாய்த் கூறும்பொழுது, வருகிற 26ந்தேதி குடியரசு தின அணிவகுப்பில் நாங்களும் பேரணி நடத்துவோம்.  ஒருபுறம் பீரங்கிகள் அணிவகுக்கும்.  மறுபுறம் நாங்கள் டிராக்டர்களில் அணிவகுத்து செல்வோம் என கூறினார்.

விவசாய தலைவர்களில் ஒருவரான ராஜ்வீர் சிங் கூறும்பொழுது, டிராக்டர் பேரணி மிக அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.  நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்ல.  இதனை அரசு கவனித்திருக்கும்.  இன்று நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட பின் விவசாயி சிம்ரன்ஜீத் என்பவர் கூறும்பொழுது, நடந்து முடிந்த பேரணி ஒத்திகைதான்.  குடியரசு தினத்தில் கொண்டாட்டத்துடன் பெரிய அளவில் பேரணி இருக்கும் என கூறியுள்ளார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/08081355/What-happened-yesterday-was-a-rehearsal-Large-scale.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி

விவசாயிகள் போராட்டம்:  டெல்லியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கேள்வி
 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதுபோல், டெல்லியின் எல்லை பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் முற்றுகை போராட்டம் தொடர்பாகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீதான முந்தைய விசாரணையின்போது, விவசாய சங்கங்களுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், விரைவில் இருதரப்பும் ஒரு முடிவுக்கு வர நல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அடுத்தக்கட்ட விசாரணையை 11-ந் தேதிக்கு (இன்று) தள்ளி வைப்பதாக கூறினர். மத்திய அரசும் ஒப்புக்கொண்டது.  ஆனால், கடந்த 7-ந் தேதி நடந்த மத்திய அரசு மற்றும் விவசாய சங்கங்கள் இடையிலான 8-வது சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

அதுபோல், விவசாயிகள் போராட்டம் தொடர்பான மனுக்களும் இன்று விசாரிக்கப்படுகின்றன. விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடக்க அனுமதிக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் கோர்ட்டு தலையிடாது என்றும் கடந்த மாதம் 17-ந் தேதி விசாரணையின்போது சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தநிலையில், இன்றைய விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு எடுக்கப்போகும் நிலைப்பாடு, கவனத்தை ஈர்த்துள்ளது.  இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா, ராஷ்டீரிய ஜனதா தள எம்.பி. மனோஜ் கே. ஜா உள்ளிட்டோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்த மனுக்கள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தன.  இவற்றின் மீது நடந்த விசாரணையில், வேளாண் சட்டங்கள் பற்றிய விவகாரம் நடத்தப்படும் விதம் வேதனை அளிக்கும் வகையில் உள்ளது.  என்ன பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது என எங்களுக்கு தெரியவில்லை? இந்த சட்டங்களை சில காலத்திற்கு தள்ளி போடலாமா? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

சிலர் தற்கொலை செய்துள்ளனர்.  வயது முதிர்ந்தோர், பெண்கள் உள்ளிட்டோர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கின்றனர்.  என்ன நடந்து கொண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, வேளாண் சட்டங்கள் சிறந்தவை என ஒரு மனு கூட தாக்கல் செய்யப்படவில்லை என கடிந்து கொண்டுள்ளார்.

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/11124524/Farmers-Struggle-What-is-going-on-in-Delhi-Question.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
டெல்லியில் 50வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் 50வது நாளை எட்டியது விவசாயிகள் போராட்டம்
 

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளை அப்புறப்படுத்தக்கோரி தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன் நேற்று மீண்டும் நடைபெற்றது.

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. அதே நேரத்தில் இந்த சட்டங்களை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதற்கு ஒரு குழுவையும் சுப்ரீம் கோர்ட்டு நியமித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு அமைத்த குழு முன் ஆஜராக மாட்டோம், அதே நேரத்தில் 15-ந் தேதி மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என விவசாய அமைப்புகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 50வது நாளாக விவசாயிகள் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடயே  காஞ்சிபுரம் அருகே உள்ள பல்வேறு கிராமங்களில் வேளாண் சட்ட நகலை எரித்து விவசாயிகள் போகிப் பண்டிகை கொண்டாடினர்,

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூரில் வேளாண் சட்ட நகல்களை எரித்து மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/13083928/The-peasant-struggle-reached-its-50th-day.vpf

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்! - சாலையில் தடுப்புச்சுவர், ஆணிகளுடன் டெல்லி காவல்துறை

ஆணிகளைக்கொண்டு தடுப்புச் சுவர்

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுவருகின்றனர். அதோடு சாலைகளில் சிமென்ட் கொண்டும், ஆணிகளைப் பதித்தும் தடுப்புச்சுவர் அமைத்துவருகின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் இரண்டு மாதங்களை கடந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது. அரசுடன் நடத்தப்பட்ட 11 சுற்றுப் பேச்சுவார்த்தைகளும்ம் தோல்வியடைந்திருக்கும் நிலையில், `குடியரசுத் தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் ஊடுருவிய சிலர் கலவரத்தை ஏற்படுத்தினர்’ என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காயம்பட்ட காவலர்கள் சிலரும், `தங்களைத் தாக்கியது விவசாயிகள் அல்ல’ எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இந்தக் கலவரத்தில் 400-க்கும் அதிகமான காவல்துறையினர் காயமடைந்தனர்.

தடுப்புச் சுவர்
 
தடுப்புச் சுவர் ANI

நாளுக்கு நாள் வலுவடைந்துவரும் போராட்டத்தை விவசாயிகள் மேலும் தீவிரப்படுத்த முடிவுசெய்திருக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் டெல்லியின் மூன்று எல்லைகளிலும் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். போராட்டம் நடைபெறும் இடங்களுக்கு அதிக அளவில் விவசாயிகள் குவிந்துவருகிறார்கள். போராட்டத்தை முடித்துவைத்து, விவசாயிகளைக் கலைத்துவிட வேண்டும் என்பதில் காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

குடியரசு தினத்தன்று நடைபெற்றது போன்ற மற்றொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்பதில் காவல்துறையினர் உறுதியாக இருக்கின்றனர். அதற்காகப் பலகட்ட முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, தடுப்புகளைக் கொண்டு பலத்த பாதுகாப்புகளை ஏற்படுத்திவருகின்றனர்.

ஆணிகளைக் கொண்டு தடுப்புச் சுவர்
 
ஆணிகளைக் கொண்டு தடுப்புச் சுவர் ANI

அதுமட்டுமல்லாமல், சிமென்ட் கொண்டு சாலைகளில் தற்காலிக தடுப்புகளை ஏற்படுத்திவருகின்றனர். இந்தச் சுவர்கள் எளிதில் உடைக்க முடியாத வண்ணம் கூடுதல் கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. தடுப்புகளுக்குப் பின்பகுதிகளில் சாலைகளில் ஆணிகளைக்கொண்டு வாகனங்கள் எதுவும் செல்லாத வண்ணமும் தடுப்புகளைக் காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர். அதிகப்படியான கூட்டம் கூடுவதாலும், போலீஸாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலும் டெல்லியின் எல்லையில் பதற்றம் தொடர்கிறது!

 

https://www.vikatan.com/government-and-politics/politics/concrete-barricade-and-barrier-wall-with-nails-made-on-the-delhi-border

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய விவசாயிகள் போராட்டம் 120 நாட்களை எட்டியது; நாளை நாடு தழுவிய முழு அடைப்பு

Bharat-Band-960x540-1-696x392.jpg
 21 Views

இந்திய மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் 120வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி நாளை நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாயிகள் அழைப்பு  விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் இன்றுடன் 120வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களது போராட்டம் 4 மாதங்களை நிறைவு செய்துள்ளதைத் தொடர்ந்து நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இது தொடர்பாக  சம்யுக்தா கிஷான் மோர்ச்சா சங்கத் தலைவர் தர்ஷன் பால் வெளியிட்ட அறிக்கையில், “நாடு தழுவிய அளவில் நாளை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். காலை  6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில், பேருந்துகள், ரயில்கள், சந்தைகள், வணிக வளாகங்கள் என அனைத்து இயக்கமும் நிறுத்த வேண்டும். இந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு  அளித்து நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு வெற்றியைத் தேடித்தர வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.ilakku.org/?p=45460

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- பஞ்சாபில் கடைகள் அடைப்பு

விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- பஞ்சாபில் கடைகள் அடைப்பு

 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி பஞ்சாப், அரியானா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

 
டெல்லி புறநகரில் சுழற்சி முறையில் முற்றுகை போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெறும்வரை போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் இன்று 121-வது நாளை எட்டியது. இந்தநிலையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரும் கோரிக்கையை வலியுறுத்தி நாடுமுழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முழு அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.

தேர்தல் நடைபெறும் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து விலக்கு அளிப்பதாக விவசாயிகள் கூட்டமைப்பு அறிவித்து இருந்தது. மற்ற மாநிலங்களில் முழு அடைப்பு நடத்தி போக்குவரத்தை தடை செய்வோம் என்று விவசாய சங்கங்களை ஒருங்கிணைக்கும் சம்குக்தா கிஷான் மோர்ச்சா என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது.

விவசாயிகள் அறிவித்தபடி இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டம் தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை 12 மணி நேரத்திற்கு முழு அடைப்பு போராட்டம் நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் உட்பட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதன்காரணமாக பஞ்சாப், அரியானா உள்பட சில வட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் தீவிரமாக காணப்பட்டது. குறிப்பாக பஞ்சாபில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. அரியானா, ராஜஸ்தானிலும் பல பகுதிகளில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

பஞ்சாபில் ரெயில், பஸ் உள்பட வாகன போக்குவரத்து அனைத்தும் தடுக்கப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் சற்று பாதிப்பு ஏற்பட்டது. மற்றபடி வட மாநிலங்களில் போக்குவரத்தில் எந்த இடையூறும் இல்லை.

டெல்லி புறநகரில் காசிப்பூர், திக்கிரி, சிங்கு ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஏற்கனவே முற்றுகையிட்டு இருந்தனர். இன்று அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம், அரியானா மாநிலங்களுக்கு வாகன போக்குவரத்தில் இடையூறு காணப்பட்டது.

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

பஞ்சாப், அரியானாவில் முக்கிய நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் தடுப்புகளை ஏற்படுத்தி மறியல் செய்தனர். பதிண்தா, லுதியானா, அமிர்தசரஸ், பாட்டியாலா, மொகாலி, ரோதக், ஜார்ஜர் மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் மிக கடுமையாக காணப்பட்டது.

ஆம்புலன்ஸ் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் விவசாயிகள் அனுமதி கொடுத்தனர். அம்பாலா-டெல்லி இடையே பல இடங்களில் விவசாயிகள் மறியல் செய்தனர்.

சில இடங்களில் ரெயில் நிலையங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. விவசாயிகளுக்கும், மத்திய அரசு பிரதிநிதிகளுக்கும் இடையே இதுவரை 11 தடவை சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதன் காரணமாக விவசாயிகள் போராட்டம் காலவரையின்றி நீடித்தபடி உள்ளது.

 

 

https://www.maalaimalar.com/news/topnews/2021/03/26123654/2471968/Tamil-News-Farmers-Full-Bandh-against-farm-bills.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.