Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

இதெல்லாம் இங்க கதைக்கப்படாது ரஞ்சித். மெளனமாகப் பார்த்து அழவேண்டியதுதான்.

வேறொரு திரியில் யாரோ கூறிய நினைவு ""வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா மிக முக்கிய பங்காளி"". நாங்கள் நன்றி கூற வேண்டும்""

இருக்கிற கோவணமும் உருவப்பட்ட பின்னர்.. ? 

யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி..?

😢

3 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

இந்தாள் வேற...

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

Link to comment
Share on other sites

26 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

19 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

7 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். சிங்களவருடன் ஒரே நாட்டில்த்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவனுக்குக் கீழ் அடிமையாகவா அல்லது அவனுக்குச் சமமாகவா என்பதுதான் கேள்வி. மற்றும்படி, மாடு, தீவணம், பாலுற்பத்தி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. 

நான் ஏன் தமிழ்நாட்டிற்குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும்? எனது நாடும் இலங்கையின் வடக்குக் கிழக்கே. என்ன, அது இப்போது அவனது ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கிறது, அதனால் அது எனது தாய்நாடு இல்லையென்று ஆகிவிடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

ஆமாம் ஆமாம். இவர் அபிவிருத்தி பெற்ற நாயகன். எல்லாம் விளங்கினவர். சொறீலங்காவில் தமிழர்களின் நிலத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து அபிவிருத்தி என்ன ஒரு புல்லையும் புடுங்க முடியாது.

10,000 ரூபா நோட்டும் வந்திட்டுதாம். நல்ல அபிவிருத்தி. இராணுவச் செலவு மொத்த வருமானத்தில்.. 30 சதவீதத்தை விழுங்கும் சொறீலங்கா வல்லரசின் அபிவிருத்தி நாயகன் தாங்கள் என்பதில் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள்; கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர். 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள். அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். 

இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை. 

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155221

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாதவூரான் said:

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

காப்பி , எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

😷பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று. இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

காப்பி ,

1)எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

2) பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று.

3) இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

அது உங்கள் முடிவு. வாழ்க்கையின் தனிப்படட விவகாரங்களில்  நான் தலையிடுவதில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

உண்மையில் இதுதான் alzheimer. தேடிப்படியுங்கள் - புரியும். நீண்டகால நினைவுகள் விபரமாகவும் தெளிவாகவும் இருக்கும். குறுகிய கால      நினைவுகள் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்.

அப்படி நான் எழுதவில்லை. உண்மையை எழுதி நேர்மையாக கருத்து பரிமாறுவது யாழ்களத்தின் மதிப்புக்கு பொருத்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
    • சின்னங்களை ஒதுக்குவதில் பாரபட்சமாகச் செயல்படுகிறதா தேர்தல் ஆணையம்? பட மூலாதாரம்,DURAI VAIKO/FACEBOOK கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 28 மார்ச் 2024, 02:34 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் புதன்கிழமையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதேவேளையில், பாஜக கூட்டணியில் உள்ள பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக போன்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகளுக்கு அவர்கள் கேட்ட சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் 'பாஜகவின் தலையீடு' இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. சீமானின் நாம் தமிழர் கட்சி ஆரம்பத்தில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர், அக்கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த தேர்தலிலும் அதே சின்னத்தை தேர்தல் ஆணையத்தில் கோரியிருந்தது நாம் தமிழர் கட்சி. ஆனால், அந்த சின்னத்தை கர்நாடகாவை சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி என்ற கட்சிக்கு ஒதுக்கியதால், நாம் தமிழர் கட்சிக்கு அச்சின்னத்தை ஒதுக்கவில்லை என்கிறது தேர்தல் ஆணையம்.   பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB படக்குறிப்பு, தொல். திருமாவளவன் நாம் தமிழர் கட்சி காலம் தாழ்த்தி விண்ணப்பித்ததால் அச்சின்னத்தைத் தர முடியவில்லை என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. உச்ச நீதிமன்றம் சென்றும் கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சியால் பெற முடியவில்லை. அக்கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த முடிவுக்கு சீமான் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அதேபோன்று, இரு தொகுதிகளில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால், ’பானை’ சின்னம் கிடைக்காததால் டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடியது அக்கட்சி. ஆனால், ஒரு சதவீதத்திற்கும் குறைவாக வாக்கு சதவீதம் கொண்டிருப்பதாகவும் சில விதிமுறைகளை பின்பற்ற முடியவில்லை என்றும் கூறி, பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் புதன்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது. தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதாக விசிக தெரிவித்த நிலையில், இந்த முடிவு வந்தது. முன்னதாக, தமிழகத்தில் விழுப்புரம், சிதம்பரம் என இரு தொகுதிகளிலும் பானை சின்னத்தை முன்வைத்து அக்கட்சி பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதில் தொகுதிப் பங்கீட்டில் திமுகவிடம் உறுதியாக இருந்தது விசிக.   பட மூலாதாரம்,NAAM TAMILAR படக்குறிப்பு, சீமான் சட்டம் என்ன சொல்கிறது? அதேபோன்று, பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனக்கூறி மதிமுகவின் வழக்கையும் சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது. குறைந்தது இரு தொகுதியிலாவது போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை மதிமுக பூர்த்தி செய்யவில்லை என இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் வாதாடியது. மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக திருச்சி தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது. அத்தொகுதியில் அக்கட்சியின் முதன்மை பொதுச் செயலாளரும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகனுமான துரை வைகோ போட்டியிடுகிறார். குறைந்தது இரு தொகுதிகளில் போட்டியிட்டால்தான் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் தன் வாதத்தை முன்வைத்தது. வேறு மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளதாக மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், வேட்புமனுத் தாக்கல் நிறைவடையும் நிலையில் அதற்கு சாத்தியமில்லை என்பதால் மதிமுக வாதம் ஏற்கப்படவில்லை. 1994-ம் ஆண்டு திமுகவிலிருந்து பிரிந்து மதிமுகவை தொடங்கினார் வைகோ. 1996 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக மதிமுக பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது. அதன்பின் நடைபெற்ற தேர்தல்களிலும் பம்பரம் சின்னத்திலேயே போட்டியிட்டது.   2001 சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட மதிமுகவால் ஒரு இடம் கூட பெற முடியவில்லை. பெரிய வாக்குவங்கியை அக்கட்சியால் பெற முடியாத நிலையில், 6 சதவீதத்திற்கும் குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ளதாக கூறி, மதிமுகவின் மாநில அந்தஸ்தை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். எனினும், அடுத்தடுத்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பம்பரம் சின்னத்தைப் பெற்றுக்கொண்டது மதிமுக. ஆனால், இந்த தேர்தலில் மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என, புதன்கிழமை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதுதொடர்பான வழக்கில், ஒரு மாநிலத்தில் குறைந்தபட்சம் இரு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே பம்பரம் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அச்சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணைய விதிமுறைகள் அனுமதிக்கவில்லை என, இந்திய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன் தெரிவித்துள்ளதாக, `தி இந்து` ஆங்கில செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சின்னங்கள் 1968 ஆணை (ஒதுக்கீடு)-ன் படி, ஒரு கட்சி அங்கீகாரத்தை இழந்தவுடன் அதன் சின்னம் தானாகவே பொதுச் சின்னத்திற்கு மாறும் வகையிலான வழிமுறை இல்லை என தெரிவித்த அவர், தற்போது பம்பரம் சின்னம் பொது சின்னமாகவும் இல்லை, ஒதுக்கீட்டுச் சின்னமாகவும் இல்லை என்பதால், இக்கோரிக்கையை ஏற்க முடியாது என வாதாடினார். அச்சட்டத்தின் 17-வது பத்தியின்படி, ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களிலும் பொதுச் சின்னங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும். ஆனால், இந்த நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் பம்பரம் சின்னம் இல்லை என அவர் கூறினார். ஆனால், அதேசமயம், அங்கீகாரத்தை இழந்த அரசியல் கட்சிகளுக்கு 10B பத்தியின்படி வழங்கப்பட்டுள்ள சலுகையை மதிமுக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதாவது, குறைந்தது 2 தொகுதிகளில் போட்டியிட்டிருந்தால் பம்பரம் சின்னம் கிடைத்திருக்கும்.   பட மூலாதாரம்,FACEBOOK சின்னங்கள் எப்படி ஒதுக்கப்படும்? ஒரு மாநில கட்சி அங்கீகரிக்கப்படுவதற்கு தேர்தல் சின்னங்கள் ஆணையின்படி சில நிபந்தனைகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதன்படி கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 6 சதவீத வாக்குகளையும் இரு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றியும் பெற்றிருக்க வேண்டும். அல்லது, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 6% வாக்குகளையும் ஒரு மக்களவை தொகுதியிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த நிபந்தனையை பூர்த்தி செய்யாத அரசியல் கட்சிகள் மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழக்கும். அதன் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றுக்கொள்ளும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கென சின்னங்கள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் பொது சின்னத்தை ஒதுக்கும். அக்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் உள்ள பொதுச் சின்னங்களிலிருந்து தங்களுக்கு விருப்பமான மூன்று சின்னங்களை தங்களின் விருப்பமாக கோர வேண்டும். தேர்தல் ஆணையத்தின் பொதுச் சின்ன பட்டியலில் இல்லாத எந்த சின்னமும் நிராகரிக்கப்படும். இதனிடையே, இந்தாண்டு ஜனவரி 4-ம் தேதி, பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்வதில் சில புதிய விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, சின்னம் கோரும் கட்சி கடந்த மூன்று ஆண்டுகளின் வரவு-செலவு கணக்கையும் கடந்த இரண்டு தேர்தல்களின் செலவு அறிக்கைகளையும் கட்சியின் அலுவலக பொறுப்பாளர் கையொப்பமிட்ட விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவித்தது. ஜனவரி 11 முதலே இந்த விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்டன. கேட்ட சின்னத்தைப் பெற்ற பாஜக கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக, அதிமுக உள்ளிட்ட மாநில கட்சிகளும் காங்கிரஸ், பாஜக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் அங்கீகாரம் பெற்றவையாக உள்ளன. பாமக, மதிமுக, நாம் தமிழர் கட்சி, அமமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் அங்கீகாரம் பெறாதவையாக உள்ளன. ஆனால், பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அவை கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட சின்னங்களான முறையே மாம்பழம், குக்கர், சைக்கிள் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.   பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, டிடிவி தினகரன் சந்தேகம் எழுப்பும் எதிர்க்கட்சிகள் இதனால், தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக கூறுகிறார், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. "விடுதலைச் சிறுத்தைகளுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும், இரண்டு எம்.பிக்களும் உள்ளனர். திருமாவளவன் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினர்களும் பானை சின்னத்தில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். முன்னுரிமை அடிப்படையில் பானை சின்னம் வழங்கியிருக்க வேண்டும். மற்ற மாநிலத்தில் ஒதுக்கப்பட்ட சைக்கிள் சின்னத்தைக் கூட மாற்றி தமாகாவுக்கு ஒதுக்கினர். பாஜகவின் பங்கு இல்லாமல் தேர்தல் ஆணையம் இதை முடிவு செய்யவில்லை. தன்னிச்சையான அமைப்பான தேர்தல் ஆணையம் பாஜகவின் கிளை அமைப்பாக செயல்படுகிறதோ என்ற ஐயம் இருக்கிறது" என்றார். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் புதிய சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது கடினமான பணியா என்ற கேள்விக்கு, "சமூக ஊடகங்கள் மூலம் கொண்டு செல்வோம். ஆனால், மற்றவர்களுக்குப் பின்னால் தான் நாங்கள் ஓட வேண்டியிருக்கும். இத்தகைய விதிமுறைகளையே மாற்ற வேண்டும். போட்டியிடும் களம் அனைவருக்கும் சமமானதாக இல்லை. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும் ஒவ்வொரு தேர்தலிலும் புதிய சின்னத்தையே தர வேண்டும். தேர்தல் ஆணையம் விதிகளை மாற்ற வேண்டும்" என்றார். இதனிடையே, ஜனவரி மாதம் கொண்டு வரப்பட்ட “புதிய விதிகளை கணக்கில் கொள்ளாமல், கர்நாடகாவை சேர்ந்த புதிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியிருப்பதாகவும்,” குற்றம்சாட்டுகிறது நாம் தமிழர் கட்சி. தேர்தல் ஆணையம் மீதான இத்தகைய விமர்சனங்கள் குறித்து, முன்னாள் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவதற்கென வகுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை தேர்தல் ஆணையம் பின்பற்றும். `ஒருதலைபட்சமானது` என்பதற்கு சில ஆதாரங்கள் வேண்டும். எந்தவொரு முடிவும் எடுக்கப்படுவதற்கு முன்பும் காரணம் கூற வேண்டும். அந்த முடிவு, ஒருதலைபட்சமானதா, இல்லையா என்பதை கூற சில ஆதாரங்கள் வேண்டும்” என தெரிவித்தார்.   படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் "சின்னம் முக்கியம் தான்" தேர்தல் ஆணைய முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் நியாயமானதே என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "குக்கர் சின்னத்தில் போட்டியிடாமல் கடந்த சட்டமன்ற தேர்தலில் பரிசுப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது அமமுக. ஆனால், இந்த தேர்தலில் குக்கர் சின்னம் கொடுத்துள்ளனர். தமாகா என்ற கட்சியே இல்லாமல் பல தேர்தல்கள் நடந்துவிட்டன. ஆனால் அந்த கட்சிக்கு சைக்கிள் சின்னம் கொடுக்கின்றனர். பாஜக கூட்டணியில் இருப்பதாலேயே அவர்களுக்கு இந்த லாபம் கிடைக்கிறது. ஏதாவது சங்கடத்தை திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றனர். புதிய சின்னத்தில் போட்டியிடுவது நிச்சயம் சங்கடம் தான். பாஜக கூட்டணி கட்சிகளுக்கும் ஆதரவாளர்களுக்கும் எந்த பிரச்னையும் வரவில்லை. அவர்களுக்கு எல்லாமே சுமூகமாக இருக்கிறது” என்றார். மேலும், இன்றும் தேர்தல்களில் சின்னம் வெற்றி-தோல்விகளை தீர்மானிப்பதில் முக்கிய கருவியாக இருப்பதாக அவர் கூறுகிறார். ”இரட்டை இலையா, உதயசூரியனா என்றுதான் இப்போதும் தேர்தல் நடக்கிறது. விழிப்புணர்வு இருந்தாலும் சின்னம் முக்கியமானதுதான். பிரபலமானவர்களால் தான் புதிய சின்னத்தை மக்களிடம் எடுத்துச் செல்ல முடியும். தமிழ் மாநில காங்கிரஸ் ஆரம்பித்தபோது ரஜினிகாந்த் இருந்ததால்தான் சைக்கிள் சின்னத்தை எடுத்துச் செல்ல முடிந்தது” என்றார் அவர். ”பாஜகவுக்கு பங்கு இல்லை” தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்குப் பின்னால் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து, பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பிபிசியிடம் பேசுகையில், “சின்னங்களை ஒதுக்குவது தேர்தல் ஆணையத்தின் தனி அதிகாரம். அதற்கென விதிமுறைகள் இருக்கின்றன. கேட்ட சின்னம் கிடைக்காத கட்சிகள் அனைத்தும் அங்கீகாரம் இல்லாத கட்சிகள். இவை முன்கூட்டியே தங்களுக்கு வேண்டிய சின்னத்தைக் கேட்காமல் இருந்திருப்பார்கள். இதில் பாஜகவின் பங்கு எதுவும் இல்லை” என்றார். https://www.bbc.com/tamil/articles/c29w8kpg55zo
    • ரீலை ஓட்டுவதில் திறமை கொண்டவர்  உங்களுக்கு நினைவிருக்கோ  முன்பு நான் தான் கற்பகதரு Tulpen என்றவர்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.