Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

இதெல்லாம் இங்க கதைக்கப்படாது ரஞ்சித். மெளனமாகப் பார்த்து அழவேண்டியதுதான்.

வேறொரு திரியில் யாரோ கூறிய நினைவு ""வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா மிக முக்கிய பங்காளி"". நாங்கள் நன்றி கூற வேண்டும்""

இருக்கிற கோவணமும் உருவப்பட்ட பின்னர்.. ? 

யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி..?

😢

3 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

இந்தாள் வேற...

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

Link to comment
Share on other sites

26 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

19 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

7 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். சிங்களவருடன் ஒரே நாட்டில்த்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவனுக்குக் கீழ் அடிமையாகவா அல்லது அவனுக்குச் சமமாகவா என்பதுதான் கேள்வி. மற்றும்படி, மாடு, தீவணம், பாலுற்பத்தி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. 

நான் ஏன் தமிழ்நாட்டிற்குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும்? எனது நாடும் இலங்கையின் வடக்குக் கிழக்கே. என்ன, அது இப்போது அவனது ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கிறது, அதனால் அது எனது தாய்நாடு இல்லையென்று ஆகிவிடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

ஆமாம் ஆமாம். இவர் அபிவிருத்தி பெற்ற நாயகன். எல்லாம் விளங்கினவர். சொறீலங்காவில் தமிழர்களின் நிலத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து அபிவிருத்தி என்ன ஒரு புல்லையும் புடுங்க முடியாது.

10,000 ரூபா நோட்டும் வந்திட்டுதாம். நல்ல அபிவிருத்தி. இராணுவச் செலவு மொத்த வருமானத்தில்.. 30 சதவீதத்தை விழுங்கும் சொறீலங்கா வல்லரசின் அபிவிருத்தி நாயகன் தாங்கள் என்பதில் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள்; கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர். 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள். அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். 

இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை. 

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155221

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாதவூரான் said:

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

காப்பி , எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

😷பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று. இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

காப்பி ,

1)எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

2) பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று.

3) இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

அது உங்கள் முடிவு. வாழ்க்கையின் தனிப்படட விவகாரங்களில்  நான் தலையிடுவதில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

உண்மையில் இதுதான் alzheimer. தேடிப்படியுங்கள் - புரியும். நீண்டகால நினைவுகள் விபரமாகவும் தெளிவாகவும் இருக்கும். குறுகிய கால      நினைவுகள் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்.

அப்படி நான் எழுதவில்லை. உண்மையை எழுதி நேர்மையாக கருத்து பரிமாறுவது யாழ்களத்தின் மதிப்புக்கு பொருத்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.