Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமூகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி கால்நடை பண்ணையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதாவது, தற்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு, அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை பகுதிக்கு விஜயம் செய்து, பண்ணையாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பண்ணையாளர்கள், மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் பல காலமாக தாங்கள் கால்நடைகளை வளர்த்து வருவதாகவும், சில காலமாக பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்களினால் தாங்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள், இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில், 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று, குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்ததாகவும் அப்பகுதி கால்நடை வளர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும் தற்போது மீண்டும் பொலநறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் காணிகளை அபகரிப்பதுடன், அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவை தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரிடம் முறையிட்டும் எதுவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடாமையினால் பரம்பரை, பரம்பரையாக பாதுகாத்து, பாராமரித்து வந்த காணிகளை விட்டு தற்போது வெளியேறி வருவதாகவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.

குறித்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்ன இந்திரகுமார், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்ணையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும்  பண்ணையாளர்கள் | Athavan News

http://athavannews.com/மயிலத்தமடுவில்-நாளுக்கு/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

Link to comment
Share on other sites

7 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரஞ்சித் said:

கிழக்கை அபிவிருத்தி செய்யப்போகிறோம் என்று இனக்கொலையாளிகளுடனும், இனத்துரோகிகளுடனும் கூடிக் குலாவுகிறது ஒரு கூட்டம். நில அபகரிப்புக்கூட அபிவிருத்திக்குள் அடங்குகின்றதோ? 

கேட்டால், தேசிக்காய்கள் என்னத்தைப் பிடுங்கினார்கள் என்கிற கேள்வி உடனே வந்துவிழும்.  அவர்கள் ஒன்றையும் பிடுங்கவில்லை, ஆனால் நாங்கள் இருப்பதையும் பிடுங்கிக் கொடுப்போம்.

 

இதெல்லாம் இங்க கதைக்கப்படாது ரஞ்சித். மெளனமாகப் பார்த்து அழவேண்டியதுதான்.

வேறொரு திரியில் யாரோ கூறிய நினைவு ""வடக்கு கிழக்கு அபிவிருத்தியில் இந்தியா மிக முக்கிய பங்காளி"". நாங்கள் நன்றி கூற வேண்டும்""

இருக்கிற கோவணமும் உருவப்பட்ட பின்னர்.. ? 

யார், யாருக்கு, யாருக்காக அபிவிருத்தி..?

😢

3 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

இந்தாள் வேற...

😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

Link to comment
Share on other sites

26 minutes ago, கற்பகதரு said:

விவசாயிகள் வந்து குடியேறி விவசாயம் செய்வது அபிவிருத்திதானே? விவசாயிகள் சிங்களவர்கள் என்பதால் அபிவிருத்தியை அபகரிப்பு என்று சொல்வது சரியாகுமா? மாட்டுப்பண்ணையாளர்கள் விலைக்கு வாங்கி மாடுகளுக்கு தீவனம் கொடுக்கவேண்டுமேயன்றி விவசாய காணிகளில் மேய்ச்சலுக்கு விட்டு கொடுப்பதல்ல. மேய்ச்சல் தீவனத்தால் மாடுகளுக்கு தேவையான சத்துள்ள உணவு கிடைக்காது. பாலுற்பத்தியும் குறைவாக இருக்கும். மாட்டுதீவனத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துவதன் மூலம் தீவன உற்பத்தித்துறையும் அபிவிருத்தியடையும். மக்களுக்கு சத்துள்ள பாலும் கிடைக்கும். விவசாயம், பால்வளம், தீவன உற்பத்தி அனைத்தும் அபிவிருத்தியடையும்.

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

19 minutes ago, ரஞ்சித் said:

உங்களின் பழைய பல்லவியான "தமிழின அடையாளத்தைத் துறந்து, சிங்களவர்களுடன் கலப்போம்" என்பதை மீண்டும் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், எல்லாம் அபிவிருத்திதான், எல்லாம் எமது நிலம்தான் என்கிற உங்களின் கருத்து தெரிகிறது. உங்களை மாற்ற முடியாது. 

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

7 minutes ago, nedukkalapoovan said:

உங்கள் வீட்டை அயலவர்களுக்கு வழங்கினால் நன்கு அபிவிருத்தி செய்வார்கள். நீங்கள் தெருவில் நின்று பிச்சை எடுப்பது அபிவிருத்திக்கு உதவும். எப்படி வசதி.

ரெம்பக் குனியாதேங்க.. குட்டிறவன் ஏறிக் குந்திடப் போறான். இதெல்லாம் ஒரு பிழைப்பு. 

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன். சிங்களவருடன் ஒரே நாட்டில்த்தான் இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை, ஆனால் அவனுக்குக் கீழ் அடிமையாகவா அல்லது அவனுக்குச் சமமாகவா என்பதுதான் கேள்வி. மற்றும்படி, மாடு, தீவணம், பாலுற்பத்தி பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. 

நான் ஏன் தமிழ்நாட்டிற்குப் போகவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவுஸ்த்திரேலியா எப்படி எனது தாய்நாடாகும்? எனது நாடும் இலங்கையின் வடக்குக் கிழக்கே. என்ன, அது இப்போது அவனது ஆக்கிரமிப்பின்கீழ் இருக்கிறது, அதனால் அது எனது தாய்நாடு இல்லையென்று ஆகிவிடுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, கற்பகதரு said:

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

ஆமாம் ஆமாம். இவர் அபிவிருத்தி பெற்ற நாயகன். எல்லாம் விளங்கினவர். சொறீலங்காவில் தமிழர்களின் நிலத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுத்து அபிவிருத்தி என்ன ஒரு புல்லையும் புடுங்க முடியாது.

10,000 ரூபா நோட்டும் வந்திட்டுதாம். நல்ல அபிவிருத்தி. இராணுவச் செலவு மொத்த வருமானத்தில்.. 30 சதவீதத்தை விழுங்கும் சொறீலங்கா வல்லரசின் அபிவிருத்தி நாயகன் தாங்கள் என்பதில் தங்கள் முதுகை தாங்களே தட்டிக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, கற்பகதரு said:

நான் மேலே சொன்னது, விவசாயம், சத்துள்ள பால் மாட்டு தீவன உற்பத்தி, மாடுகளுக்கு சத்துணவு, பாலுற்பத்தி பற்றி.

இது உங்களின் பழைய பல்லவி - மெலிந்த மாடுகள் - அரச தரிசு நிலத்தில் கிடைக்கும் புல்லில் மாட்டுதீவனம், வறுமையில் வாடும் மாட்டிலிருந்து பாலுற்பத்தி, சத்தற்ற பாலில் வளரும் குழந்தைகள் - மாட்டுதீவன உற்பத்தித்துறையை இல்லாமல் செய்தல் பற்றி. எப்போதுமே அழிவு செய்வது பற்றித்தானா சிந்திப்பீர்கள்? 

சிங்களவர்களுடன் தான் இலங்கையில் வாழ வேண்டும். தமிழீழம் உருவானாலும் கூட சிங்களவர் அயல்நாடாக, அவர்களுடன் தான் வாழ வேண்டும். அது வேண்டாம் என்றால், இருக்கும் நாட்டையே உங்களது நாடாக கொண்டு திருப்தியடையுங்கள். திருப்திகிடைக்காவிட்டால் தமிழ்நாடு இருக்கிறது - போகலாமே?

இருப்பது ஊரான் வீடு. அபிவிருத்தி என்றால் என்னவென்றே தெரியாத பிச்சைக்காரர் ஊரான் வீட்டில் இருந்து எப்படி பிச்சை எடுப்பார்கள்? வீதிக்கு போனால்தான் பிச்சை கிடைக்கும். 😃 தாராளமாக பிச்சை எடுங்கள் - வீதிகள் நீண்டிருக்கின்றன. அபிவிருத்திக்கும் உங்களுக்கும் பலகாத தூரம். அது உங்களுக்கு புரியாத சங்கதி.

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடுவில் பறிபோகும் காணிகள்; கிழக்கை மீட்போம் என வாக்குச் சேகரித்தவர்கள் எங்கே?

மட்டக்களப்பு மாவட்ட எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவனை பிரதேசம் நாளுக்கு நாள் வெளி மாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை சமுகத்தினாரால் அபகரிக்கப்பட்டு வருகின்றது. இப்போது ஐயாயிரம் ஏக்கர்கள் வரை அபகரிக்கப்பட்டு அங்கிருக்கும் பண்ணையாளர்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். 

இது தொடர்பில் கிழக்கை மீட்போம் என மக்களிடம் சென்று வாக்கு சேகரித்தவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்காது அரசாங்கத்துக்கு பயந்து ஒளிந்து கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

மேய்ச்சல் தரைக்கு என ஒதுக்கப்பட காணிகளில் பரம்பரை பரம்பரையாக தமது கால்நடைகளை வளர்த்து எமது மாவட்டத்தின் எல்லைகளையும் பாதுகாத்து வருகின்ற பண்ணையாளர்கள் இந்த அரசாங்கத்தின் துணையுடன் பெரும்பான்மை சமுகத்தினரால் அடித்து விரட்டப்பட்டு வருகின்றனர். 

இதற்கு முன் 2013ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு நல்லாட்சி காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று குறித்த அத்துமீறல்களை தடுத்து நிறுத்தியதோடு, எமது மாவட்டத்தின் எல்லையை விட்டே வெளியேற்றப்பட்டிருந்தார்கள்.

நல்லாட்சியில் நாங்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முட்டுக்கொடுத்ததாக சிலர் தேர்தல் காலத்தில் பிரசாரம் செய்தார்கள். அந்த முட்டுக்கொடுப்பு எமது மக்களின் சுதந்திரமான செயற்பாட்டிற்கும், எமது மண்ணை பதுகாப்பதுக்குமே என்பதை இப்போது அறிவார்கள். அண்மைக்காலமாக வெளிமாவட்டத்தினை சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு பண்ணையாளர்களையும் வெளியேற்றி வருகிறார்கள். 

இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் கூட தீர்மானம் எடுப்பதற்கு இராஜாங்க அமைச்சர் , அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் ஆகியோர் அஞ்சுகிறார்கள். இதுவரை ஒரு நடவடிக்கையும் இவர்களால் எடுக்க முடியவில்லை. 

தற்போது கடந்த இரண்டு நாட்களாக அந்த பகுதியில் உள்ள பண்ணையாளர்களை வெளியேறுமாறும், மாடுகளை வேறு இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் கோரி அந்த பகுதியில் சட்ட விரோத விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சிங்களவர்கள் சிலர் பண்ணையாளர்களை அச்சுறுத்தி வருவதோடு கால் நடைகளையும் துன்புறுத்தி வருகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இவ் அபகரிப்புக்கு எதிராகவும், பண்ணியாளர்கள் தாக்கப்படுவதற்கு எதிராகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. இதற்கான ஆவணங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாகும் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், பா.அரியநேந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரசன்னா இந்திரகுமார், மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன், மாநகர சபை உறுபினர் துரைசிங்கம் மதன், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான முரளிதரன், வேல் பரமதேவா மற்றும் பண்னையாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

 

https://www.ibctamil.com/srilanka/80/155221

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, வாதவூரான் said:

அக்னி,
முதல் பார்த்த உடனேயே கொதிக்காமல் இதுக்கு அரசுடன் கூடிக்குலாவுபவர்களிடம் என்ன தீர்வு என்று கேட்டுச் சொல்லுங்கள். இதுக்குள்ளை தேசிக்காய்களை இழுக்காதீர்கள் ஏனென்றால் பிள்ளையான்,கருணா, வியாழனாலை எல்லாம் முடியும் என்று தானே அவர்களுக்கு வாக்கு கேட்டு குத்தி முறிஞ்சனீங்கள்.அல்லது அவர்களாலையும் ஒரு சதத்துக்கும் பிரயோசனமில்லை என்பதை ஒத்துக்கொள்ளுங்கோ

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

Link to comment
Share on other sites

1 hour ago, Kapithan said:

நிலம் பறிபோவதைப் பற்றி அக்கறையே இல்லை. வாழ்வாதாரம் இல்லாமல் போவதைப்பற்றி எந்த கவலையும் இல்லைமேச்சல் தரையில் மாடு வளர்த்தால், மாடு மெலிந்துவிடும், நல்ல பால் கிடைக்கா என்பதுதான் கவலையோ.. 😂😂து

எத்தனைபேரிடம் உந்த நடிப்பு எடுபடும் கற்பகதரு...

😫😫

காப்பி , எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

😷பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று. இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Robinson cruso said:

காப்பி ,

1)எத்தனையோ நிலங்கள் பறி போயிற்று இதுக்கு ஏன் இப்போது தொந்தரவு படுகிறீர்கள். இது அவர்களின் திடத்தில் ஒரு பங்குதான். இன்னும் கொஞ்ச நாளையில் இரணைமடு குளத்தின் கீழும் இப்படி நடக்கபோகுது.

இதிலே எழுதி திட்டி தீர்ப்பதால் ஒன்றுமே  நடக்கப்போவதில்லை. சிலர் நினைக்கிறார்கள் இதில் எழுதி முடிந்தவுடன் சிங்களவன் பயந்துபோய் ஓடி விடுவான் என்று.

2) பிள்ளையனோ, வியளந்திரனோ இதட்கு முடிவு எடுக்க முடியாது. அல்லது கருணாகரணலோ, சாணக்கியனாலோ எதுவும் செய்ய முடியாது. இது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் உள்ளபடி நடக்கும் ஒன்று.

3) இதுவும் உங்களுக்கு உள்ள பிரச்சினையோடு உள்ள இன்னொரு பிரச்சினைதான். என்ன செய்வது.😜

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

1) 100

2) 100

3) எனக்கு என்ன பிரச்சனை என்று தெளிவுபடுத்தினால் உதவியாக இருக்கும். ஒருவேளை பிரச்சனை இருந்து முத்தியபின்னர் கூறினால் பிரயோசனமில்லாமல் போகும் 🤥

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Robinson cruso said:

இரண்டு நாளைக்கு முன்னர் உங்களுக்கு நிறைய பிரச்சினை இருப்பதாகவும், நான் எழுதுவதும் பிரச்சினை என்பதுபோல எழுதி இருந்தீர்கள். அதட்காகத்தான் அப்படி எழுதினேன். உங்களுக்கு மறதி அதிகம்போல. அப்படி பிரச்சினை ஏதும் இல்லாவிட்ட்தால் நல்லது.

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Robinson cruso said:

அதை என்னிடம் சொல்லாதீர்கள். முடியுமென்றால் உங்கள் மனைவியிடம் சொல்லி பாருங்கள்.

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

Link to comment
Share on other sites

Just now, Kapithan said:

மனைவியிடமா அல்லது மனைவிகளிடமா.. 😂

அது உங்கள் முடிவு. வாழ்க்கையின் தனிப்படட விவகாரங்களில்  நான் தலையிடுவதில்லை.

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

உண்மையில் இதுதான் alzheimer. தேடிப்படியுங்கள் - புரியும். நீண்டகால நினைவுகள் விபரமாகவும் தெளிவாகவும் இருக்கும். குறுகிய கால      நினைவுகள் இருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

அம்பாறையில் பறிபோன ஒரு பிரதிநிதித்துவமும் ,மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு கிடைத்த பிரதிநிதித்துவமும் கூத்தமைப்பு  தேசிக்காய்களுக்கு கிடைத்திருந்தால் இந்தப்பிரச்சினையே வந்திருக்காது என்று இங்கே கூடிக்குலாவலை பற்றி கருத்திடுபவர்கள் 100% உத்தரவாதம் தர முடியுமா ...? 
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை ..அடுத்த தேர்தலில் அப்படியே கொத்தாக அனுப்புறம் பார்லிமெந்துவிற்கு பிடுங்கிக்கொண்டு வந்து விடுவார்கள் என்று உங்களை முன்னிறுத்தி உத்தரவாதம் தரமுடியுமா ...? கூடிக்குலாவுபவர்களை விட்டுவிட்டு உரிமைக்காக இறங்கிய பேர்வழிகள் கிழித்துக்காட்டலாமே என்ன நடந்தாலும் கநெக்சனை அங்கே  கொண்டு போய் கொடுக்காமல் ,
பாடையில் போறதென்றாலும் பதவியோடு தான் போவேன் என்று வருடக்கணக்காக மக்களை மாக்களாகி 
பிழைத்த தேசிக்காய்களை ஒருதடவையாவது மக்களுக்கு சேவை செய்ய சொல்லுங்கோ ,குறைந்தபட்சம் கொடுத்த வாக்குறுதிகளையாவது நியாபகம் வைத்துக்கொள்ள சொல்லுங்கோ 

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள். அதைத்தான் குறிப்பிட்டேன்.

அப்படி நான் எழுதவில்லை. உண்மையை எழுதி நேர்மையாக கருத்து பரிமாறுவது யாழ்களத்தின் மதிப்புக்கு பொருத்தமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

வாதவூரான் 
தேசிக்காய்களை இந்த திரியில் முதலில்   தூக்கிக்கொண்டு வந்தது நானல்ல, இவர்களால் செய்யமுடியுமா அவர்களால் செய்யமுடியுமா என்று comparative analysis செய்வதென்றால் தேசிக்காய்களையும்  இழுக்க வேண்டித்தான் வரும் 
அரசுடன் கூடிக்குலாவுகிறார்கள் என்றவுடனே தெரிந்திருக்கும் அவர்களின் எல்லை எது என்று 
மற்றும் கூடிக்குலாவுபவர்கள் இன்றைக்கு நேற்று கூடிக்குலாவ தொடங்கியவர்களும் அல்லர், அவர்கள் எப்படியானவர்கள் என்பது மக்களுக்கு எப்போதோ தெரியும் இருந்தும் தேசிக்காய்களை  விட அவர்களை ஏன் தெரிந்தெடுத்தார்கள் என்பதற்கு பதில் நான் சொல்லத்தேவையில்லை, இந்த ஜனாதிபதி தேர்தலின் போதே கேட்டேன் அறுதிப்பெரும்பாண்மை  பலத்துடன் கோத்தா வெல்லப்போகிறார் என்ன அரசியல் வைத்திருக்கிறீர்கள் என்று யாருக்காவது தெளிவாக பதில் சொல்ல முடிந்ததா சொல்லிய பதில் கோத்தா  வந்தால் வெள்ளை வான் வரும் சரி ஏற்கனவே ஒரு வருடம் பூர்த்தி எத்தனை வெள்ளை வான் கடத்தல்கள் ...?, பொன்சேகாவிற்கு வாக்கு போடலாம் என்றால் கோத்தாவிற்கு  ஏன் போட  முடியாது  பதிலிருக்கிறதா...?, நசுக்கல் கூட்டத்திற்கு வாக்கு போட்டு இப்போது நசுக்கப்படுகிறீர்கள், கூத்தமைப்பு தேசிக்காய்களின்  கையாலாகாத்தனத்தை மறைக்க இனி வியாழன்,பிள்ளையானின் சாக்குப்பைகளுள் என்ன இருக்கிறது என்று தான் நோண்டப்போகிறீர்கள், இனி வரப்போகும் மிச்சக்காலத்திற்கும் பிள்ளையான் என்ன கிழித்தார் வியாழன் என்ன கிழித்தார் என்று தான் உங்கள் உரிமை அரசியல் நடக்கப்போகிறது. இடையிடையில் தமிழ்த்தாயை வேண்டுமென்றால் கூப்பிட்டு பீக்கோ ஊசி போட்டு கொஞ்சம் எனர்ஜி ஏற்றி விடுவினம்,
சிம்பிள் அரசுடன் கூடிக்குலாவுவர்கள் தமிழர்களுக்கு ஒரு 100 பேருக்கு  அரசு வேலை எடுத்து கொடுத்து தாங்கள்  அமுக்குவதில்  ஒரு 25 வீதத்தையாவது வாக்களித்த மக்களுக்கு பிச்சையாக கொடுத்தால் அந்த மக்களுக்கு அது போதும் ஏனென்றால் அதற்க்கு கூட வக்கற்றுத்தான் இருக்கிறது அந்த மக்கள் கூட்டம் . நீங்கள் யாரை உங்கள் உரிமைக்காக அனுப்பினீர்களோ அவர்களை மூஞ்சியில் அறைந்தது போல கேள்வி கேட்பது தான் நியாயம் ,தமிழ் வாத்தியிடம் போய்  இங்கிலிஷ் பாடத்திற்கான கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, அதற்கு இங்கிலிஷ்வாத்திகளும் பாராளுமன்றத்திலிருக்கிறார்கள் இல்லையா அவர்களிடம் கேளுங்கள்   

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
    • Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM   அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும்.  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார். ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர். https://www.virakesari.lk/article/181483
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.