Jump to content

மயிலத்தமடுவில் நாளுக்கு நாள் பறிபோகும் காணிகள்: கண்ணீருடன் வெளியேறும் பண்ணையாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

alzheimer என்கிறீர்களா... 🤥

அப்படித் தெரியவில்லையே. என்னுடன்படித்த பெண்பிள்ளைகள், நான் சுற்றித்திரிந்த பெண்கள் எல்லோரும் நினைவில் இருக்கிறார்களே... 😂

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, குமாரசாமி said:

ஆகலும் குசும்பு கூடிப்போச்சுது.....😂
ஓவராய் போய்ச்சுதெண்டால் சிங்கனை களத்திலை இறக்குவன் சொல்லிப்போட்டன்.🤣

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

நான் போட்டிக்கு வரேல்ல... 

எனக்கு அல்சைமர்தான். ஏற்றுக்கொள்கிறேன்.. 🤐

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, குமாரசாமி said:

நான் இறக்கி விடப்போற அந்த சிங்கன் ஆரெண்டு கேக்கேல்லை???? 😁

கு.சா. தான். வேற யார்.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Kapithan said:

கு.சா. தான். வேற யார்.. 😂

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

அதுதான் இல்லை....😂
இவர்தான் அந்த ஆள். இப்ப நீங்கள் காவோலை வேலியை பிரிச்சுக்கொண்டு ஓடப்போறியள்..😁
இஞ்சை பாருங்கோ ஆரெண்டு......😎

 

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

Link to comment
Share on other sites

5 hours ago, வாதவூரான் said:

அவையள் வேலை எடுத்து குடுப்பது கூட தங்களுக்கு கூட வால்பிடிக்கிற குறிப்பிட்ட வேலைக்கே தகுதி இல்லாதவர்களுக்கு தான் (கூட அவர்களுக்காக சண்டைக்கு போகும் ஆக்களுக்கு தான்). இதை தேசிக்காய் பாராளுமன்ற உறுப்பினர்களும் செய்யினம் தானே. இப்பவும் எத்தினையோ சனம் வறுமைக்கோட்டுக்கு கீழ் வேலைக்குரிய தகுதியோடை வேலை இல்லாமல் இருக்குதுகள். ஏமாற்றி வாக்கை எடுத்திட்டு எதுவுமே செய்யவில்லை (இன்னும் காலம் இருக்கு என்று சொல்லுவியள் பாப்பம் என்னநடக்குது என்று). ஆனால் இப்பிடி பிரச்சினை வரும் போது குறைந்தது தங்கடை எசமானரின் காலில் விழுந்தாவது தீர்வு எடுத்து குடுக்கலாமே. சனம் அடுத்த முறையாவது தேசிக்காய்களை திரும்பிப் பார்க்காது

அரசியலில் இதெல்லாம் சகஜம் வாதவூரான். இது இலங்கையில் மட்டுமல்ல அபிவிருத்தியடையாத எல்லா நாடுகளிலும் நடக்கும் ஒன்று. இதை பெரிதாக எடுக்க வேண்டாம். அபிவிருத்தியடைந்த நாடுகளைப்பற்றி குறிப்பிட விரும்பவில்லை.

2 hours ago, Kapithan said:

எனக்கு அல்சைமர்.

யார் இவர்.. 🤔

கப்பி , உங்களுக்கு உண்மையிலும் அல்ஸிமரா? வர வர பிரச்சினை கூடிக்கொண்டு போகுது. ஒரு வைத்தியரை விரைவில் பார்ப்பது நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மயிலத்த மடு வர்த்தமானியில் மேச்சல் தரைதான் எனவும் , கால்நடைகளுக்கு , விவசாய நிலங்கள் என பிரித்து சில இடங்களை  அரச வர்த்தமானியில் உறுதிப்படுத்த சில திட்டங்களை முதலமைச்சர் காலத்தில் பிள்ளையான் எடுத்ததாகவும் ஆனால் அந்த நேரத்தில் ஆட்சிமாறியதும் துரைராஜசிங்கம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு ) அந்த முன்மொழிவு செய்யப்பட்ட திட்டம் தாங்கிய கோப்பை (பைல்) அரசுக்கு அனுப்பாததும் இதற்கு காரண்மாம் என சொல்கிறார்கள் காரணம் பிள்ளையானின் பெயர் வந்து விடுமாம் அவர் வர்த்தமானியில் நல்லாட்சி அரசிடம் கொடுத்திருந்தால் சில வேளை மேச்சல் தரையாக அறிவித்து இருக்கலாம் 

மட்டக்களப்பு வாசிக சாலைக்கு நடந்த கெதி போல தான் இந்த மேச்சல் தரை பிரச்சினையும் நல்லாட்சியில் வாசிக சாலையை கட்டி முடித்தால் பிள்ளையான் பெயர் வரும் , மேச்சல் தரையை கெசற் பண்ணினால் அதற்கும் பிள்ளையான் பெயர்வருமென நினைத்து இருப்பார்கள் இந்த கூத்தமைப்பினர்

**அறிவித்தும் பலன் இல்லை இன்று பல இடங்களை அவர்கள்தான் கைப்படுத்திக்கொள்கிறார்கள் நாம் ஆளையாள் குற்றம் சொல்லிவிட்டு கடந்து விட்டும் எழுதிவிட்டும் செல்கிறோம்.

இந்த கூத்தை முதலிலேயே கேள்விப்படிருக்கிறேன், மட்டக்களப்பில் நாம லைசென்ஸிற்கு எட்டுப்போட்டு காட்டுமிடத்திற்கு அருகில் வெபர் ஸ்டேடியம் பக்கத்தில் அரைவாசி கட்டப்பட்டு கட்டாக்காலி டாகிகள் மூச்சாவும் கக்காவும் போய்வைத்திருக்கும் கட்டிடம் தானே அது, பிள்ளையான் உள்ள போனதும் அதுவும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது என்று
உந்த துரைராசசிங்கம் தானே கரடியனாறு பார்முக்குள்ள காசை வாங்கிக்போட்டு  நானாமாரை மேயவிட்டவர் தமிழர்களை வைத்து நல்லா காசு பாத்திட்டார், பரவாயில்லை அதில் கொஞ்சத்தை கிள்ளியாவது மக்களுக்கு போட்டிருக்கலாம், இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.
70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

Link to comment
Share on other sites

5 hours ago, ரஞ்சித் said:

தமிழினத்தை கட்டம் கட்டமாக இலங்கையில் ஒடுக்கி, அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்து ஈற்றில் ஏதிலிகளாக, அடையாளம் தொலைத்தவர்களாக மாற்றுவதே சிங்களப் பேரினவாதத்தின் ஒரே இலக்கு. சுதந்திர காலம்தொட்டே இதைத்தான் அது செய்து வருகிறது.

கிழக்கில் அம்பாறை எனும் தமிழ்ப் பிரதேசம் நெற்செய்கைக்குப் பேர்போனது. ஆனால், அதனைத் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் அபகரித்து, அரசியுற்பத்தியில் தன்னிறைவான நிலையிலிருந்த இலங்கையை இன்னொரு நாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வைத்து, தமிழ் விவசாயிகளின் வயிற்றில் அடித்து, தம்மிடம் கையேந்த வைத்தது பேரினவாதம். அதேபோல வடக்கில் விவசாயத்தை நம்பியிருந்த தமிழர்களை விவசாயத்திலிருந்து அப்புறப்படுத்தி, தம்மிடம் கையேந்தும் நிலையினை உருவாக்க வெங்காயம், மிளகாய் போன்றவற்றை இறக்குமதி செய்தது சிங்களம். அதேபோல, தமிழரின் இன்னொரு முக்கிய ப்ருளாதாரமான மீன்பிடியினை, தனது கடற்படை மூலம் இல்லாதொழித்து, மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து தம்மிடம் கையேந்த வைத்திருக்கிறது.

 சுதந்திரக் காலம் தொட்டே தமிழர் தாயகம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளதுடன், அவர்களிடமிருந்த தன்னிறைவுப் பொருளாதாரமும் மிகவும் சூட்சுமமான முறையில் அழிக்கப்பட்டிருக்கிறது. தமிழரையும், அவர்களின் தாயகத்தையும் அபிவிருத்திசெய்வதோ அல்லது அவர்களின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்புவதோ சிங்களத்திற்கு தேவையற்றது, இன்னும் சொல்லப்போனால் தமிழரின் தாயகத்தில் உண்மையான அபிவிருத்தி என்பதே சிங்களத்தால் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. 

தான் அடிமைப்படுத்த நினைக்கும் ஒரு இனத்தினை, அவர்களின் காலில் அவர்களே நிற்க வைக்க சிங்களத்திற்கு இருக்கும் தேவையென்ன? ஆகவே, இது நிச்சயம் சில தமிழர்கள் நினைக்கும் அபிவிருத்தி கிடையாது. மாறாக, தமிழர் தாயகத்தில் தனது ஆட்சியினைப் பலப்படுத்தி, தடையற்ற வகையில் தனது ஆக்கிரமிப்பை விஸ்த்தரிப்பதே அதன் ஒரே நோக்கம். அதற்கு அது கையிலெடுத்திருப்பதுதான் இந்த "கிழக்கின் வெளிச்சமும்", "வடக்கின் வசந்தமும்". இதனைச் செய்வதற்கு சிலரை அது வளைத்துப்போட்டிருக்கிறது. தமிழரின் அவலங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாத, சிங்களத்தின் உண்மையான திட்டத்தைப் பார்க்க மறுக்கின்ற, சலுகைகளுக்காக உடனே விலைபோகும், மூளைச்சலவை செய்யப்பட்ட சந்தர்ப்பவாதிகளை அது தேடியெடுத்திருக்கிறது. மிகச் சிறிய சலுகைகளை மட்டும் கண்ணில்க் காட்டி, அவர்களை கற்பனை உலகின் உலாவவிட்டிருக்கும் சிங்களப் பேரினவாதம் அவர்களைப் பயன்படுத்தியே தனது ஆக்கிரமிப்பை முன்னெடுக்கிறது. 

2000 இற்குப்பின்னர், குறிப்பாக 2004 இன் பின்னர், தமிழினத்திடையே வலிந்து ஏற்படுத்தப்பட்ட பிரதேசவாதத்தினை மூலதனமாகக் கொண்டு இந்த கூலிகளை தமிழ் சமூகத்தில் உலாவவிட்டு, தனது ஆக்கிரமிப்பில் தீவிரம் காட்டிவருகிறது.

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

அடுத்த தேர்தலுக்கு உதவக்கூடிய ஆக்கம். தமிழ்தேசிய கட்சிகளின் சார்பில் இந்த ஆக்கத்தை தயாரித்த ரஞ்சித்துக்கு நன்றிகள் பல 🙏

அனால் இஞ்ச எடுபடாது அதுதான் பிரச்சினை கல்லோய தொடக்கம் பல வெலிஓயா எல்லாம் கடந்து அவன் செல்கிறான் ஆனால் நாம் ஆட்டிக்கல் மட்டும் எழுதுவம் .

நாட்டு நிலமையே வேற யூட் விளங்கியும் விளங்கிக்கொள்ளாதமாதிரியே நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது ஏனென்றால் அந்தக்காலம் ஆயுதம் பதில் சொல்லியது இந்த காலம் அவர்கள் ஆக்கிரமிப்பு  பதில் சொல்கிறது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/11/2020 at 22:00, ரஞ்சித் said:

உங்களுக்கு மறந்துவிட்டதா அல்லது நடிக்கிறீர்களா என்று தெரியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் எமக்கிருக்கும் ஒரே வழி தமிழின அடையாளத்தைத் துறந்து சிங்களவருடன் கலந்து சிங்களவராவதுதான் என்று எழுதினீர்கள்.

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து. இன்னொருதடவை நம் தமிழின அடையாளத்தை விட்டுக்கொடுத்து சிங்களவராக மாறினாலே நாம் இலங்கையில் வாழ முடியும் என்றும் தக்கன பிழைக்கும் என்கிற சொற்பதம் முதன்முதலில் இவர் பிரயோகித்திருந்தார். நம் அடையாளத்தை தொலைத்து, அடிமைகளாக வாழ்வதற்கா பல்லாயிரம் இன்னுயிர்களையும் இழந்து, சொத்துக்கள் அழிந்து போராடினோம்.  இங்கு பலர் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திய மொழி தமிழ், உறவாடிய மொழி, தமிழ் இப்போ எதிரிக்கு இங்கு வக்காலத்து வாங்குவது தமிழில் என்பதை எல்லாம் மறந்து, தமிழால் எந்தப் பிரயோசனமும் இல்லை, தமிழன் அடிமையாக வாழவே இலாயக்கு என்பது போல் எழுதுகிறார்கள். சிங்களவன் தமிழனை அடக்க, அவர்களின் வளங்களை சுரண்ட அன்று தொடக்கம் இன்றுவரை உதவியவன், உழைத்தவன் எல்லாம் தமிழனே. தமிழன் இல்லையென்றால் சிங்களம் வெறும் பூஜ்ஜியமே. சேர் பொன் இராமநாதன்,  கதிர்காமன், எங்களின் அரசியற்தலைவர்கள், இப்போதுள்ள கைக்கூலிகள் வரை அடக்கம். தமிழையும், தமிழன் அனுபவிக்கப்போகும் துயரங்களையும், இழப்புகளையும் இங்கு வந்து சொல்லிச் சொல்லி மகிழுது ஒரு கூட்டம்.  தாம் யார்? தாய்மொழி எது? என்பதை மறந்து இகழ்வதில் பரவசப்படுகிறார்கள். இங்குதான் அவர்களின் அலப்பறைகளை கொட்ட முடியும்.  இதை விட்டால் வேறு கதியில்லை இவர்களின் பரப்புரைகளை கேட்க.  

Link to comment
Share on other sites

22 hours ago, அக்னியஷ்த்ரா said:


இதுவெல்லாம் வெளிநாடுகளில் உரிமைக்காக போராடுபவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது, அவர்களுக்கு பாராளுமன்றில் ஒரு ஸ்டண்ட் ஸ்பீச் அடிச்சு சிங்கள இனவாதிகளை மீன் மாக்கெட்டில் கூவுவது போல் கூவவைத்து விட்டால் போதும் ..அல்டிமேட் அச்சீவ்மென்ட்.


70 % இனவாதிகளால் தெரிந்தெடுக்கப்பட்ட இனவாதியிடம் எதனை எதிர்பார்க்கிறார்களோ தெரியாது
நீங்கள் வாக்கை ரணிலின் நசுக்கல் கூட்டத்திற்கு போடுவீங்கோ ,கோத்தா உங்களை திருப்த்தி படுத்தவேண்டுமோ ,அவருக்கு எங்கிருந்து பெரும்பாலான வாக்குகள் விழுந்ததோ அவர்களை திருப்திபடுத்த நடக்குது வேலை அதுமட்டுமல்ல அதுதான் மஹிந்த மாபியாவின் முதலீடே , வேடிக்கை மட்டும் பார்க்கவேண்டியதுதான்        

வெளி நாடுகளில் உள்ளவர்கள் மட்டுமல்ல, இங்குள்ள சிலருக்கும் இது புரிவதில்லை. யதார்த்தத்தை புரியாதவர்களுடன் விவாதிப்பதில் பயனில்லை. கட்பனை உலகில் வேணுமெண்டால் அவர்கள் நினைப்பது நடக்கலாம். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சில இங்கு தமிழில் எழுத்துவதட்கே குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி என்றால் எந்த மொழியில் எழுதவேண்டுமோ தெரியவில்லை. நிர்வாகம் தமிழில் மட்டுமே பதிவிட வேண்டுமென்று கடடளை போட்டிருக்கிறது.

Link to comment
Share on other sites

3 hours ago, satan said:

ஒருதடவையல்ல இருதடவை எழுதியிருக்கிறார். யூட் என்னும் பெயருடன் அறிமுகமாகியிருந்த போது என நினைக்கிறன். சிங்களவருக்குரிய ஒரே நாடு இலங்கை

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

3 hours ago, satan said:

அதில் அவர்களுடன் நம் அடையாளத்தை  விட்டு சேர்ந்திருப்பது மேல் என்பது போல் ஒரு கருத்து.

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

முடிந்தால் நீங்கள் எழுதியதை மீண்டும் தேடி எடுத்து மீள் பதிவிட்டால் யார் சொல்வது உண்மை என்பது தெரியும். உண்மையை ஏற்றுக்கொள்ள திராணி வேண்டும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கற்பகதரு said:

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். 

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

Link to comment
Share on other sites

4 hours ago, Eppothum Thamizhan said:

யாரந்த உலகமகா ராஜதந்திரிகள் எண்டு கொஞ்சம் சொல்லுங்கோ?? அப்படியென்ன நேர்மையற்ற திரிபுகள் அவர்களுக்கு சொல்லப்பட்டன?? உள்ள பொய்யெல்லாம் சொன்னது சிங்களம் அதுக்கு இங்கை ஒருவர் வக்காலத்து வாங்க வந்திட்டார்!!

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கற்பகதரு said:

தோற்பதும் அழிவதும்தான் உங்கள் இலட்சியக்கனவு போல .... நான் ஏன் உங்கள் ஆசையில் மண்போட போகிறேன்? 

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

Link to comment
Share on other sites

5 hours ago, Eppothum Thamizhan said:

கேட்டால் அந்த கேள்விக்கு பதில்சொல்ல முதலில் பழகுங்கோ! எப்ப பார்த்தாலும்  கேள்விக்கு எதிர்கேள்வி வருமேயொழிய பதில் ஒருநாளும் வராது! அதுசரி வச்சுக்கொண்டே  வஞ்சகம் செய்யிறியள்.

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

Link to comment
Share on other sites

21 hours ago, கற்பகதரு said:

இது உண்மை - நான் எழுதியதும் அதுவே.

 

இது உங்கள் திரிபு. இப்படியான நேர்மையற்ற திரிபுகளும் உங்களை உலக இராஜதந்திரிகள் கைவிட்டதற்கு ஒரு காரணம். மற்றவர்களை முட்டாள்களாக நினைத்து உங்கள் முயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்தால் தோல்வியும் அழிவுமே உங்களை தேடிவரும். நேர்மையுடன் உண்மை பேசி மற்றவர்களை மதித்து உறவுகளை தேடினால் வெற்றி நிச்சயம்.

தூங்குபவனை எழுப்பலாம். ஆனால் நடிப்பவனை எழுப்ப முடியாது. நீங்கள் என்னதான் எழுதினாலும் இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பயவதில்லை. நேர்மையாய் நடப்பவர்கள் நிச்சயமாக தோட்பதில்லை. தோல்வியைப்போல இருந்தாலும் முடிவு வெற்றியாகத்தான் இருக்கும் உண்மையை ஏற்கும் வரை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

உங்களிடம் தாராளமாக இருப்பதால்தான் உங்களுக்கு தருவதில்லை. பயன்பெறக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுப்பதே எனது பழக்கம்.

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

Link to comment
Share on other sites

31 minutes ago, Eppothum Thamizhan said:

ஓ, பதில் தெரியாது என்பதை இப்படியும் சொல்லலாமோ?? தூங்க நினைப்பவரும் வந்து முட்டுக்கொடுக்கிறார்!!

உண்மையில் உங்கள் கேள்விகளுக்கு பதில் தெரியாது. இந்த உரையாடல் தூக்கத்தை தருவதும் உண்மைதான். 😴

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.