Jump to content

புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதை குழிகளிலிருந்து எழும் விலங்குகள் டெனிஸ் அரசுக்கு தொடர்ந்து தலைவலி – கண் கலங்கிய பிரதமர்

 
  • கார்த்திகேசு குமாரதாஸன்

மிங் (Mink) விலங்குகள் இன அழிப்பு விவகாரம் டென்மார்க் அரசுக்குத் தொடர்ந்தும் பெரும் தலையிடியாக மாறியிருக்கிறது.

%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0

படம்: விலங்குகள் அழிக்கப்பட்டதால் வெறிச்சோடிக் காணப்படும் மிங் பண்ணை ஒன்றுக்கு விஜயம் செய்த பின்னர் TV2 தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த டெனிஸ் பிரதமர் Mette Frederiksen இடையில் பல தடவைகள் கண்கலங்கிய காட்சி

பாரிய கிடங்குகளில் லட்சக் கணக்கில் புதைக்கப்பட்ட விலங்குகள் அமுக்கம் காரணமாக ஊதிப் பெருத்து புதை குழிகளில் இருந்து மேலெழுகின்றன. இதனால் புதிதாகப் பெரும் சுகாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

புதை குழிகளை மீண்டும் தோண்டி விலங்குகளை வெளியே எடுத்து பாதுகாப்பான வேறு வழி முறைகளில் புதிய இடத்தில் அவற்றை எரித்து அழிக்க வேண்டும் என்று நாட்டின் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

டென்மார்க்கின் வடக்கு யூலான்ட் (Jutland) பிராந்தியத்தில் அண்மையில் மிங் பண்ணைகளில் வைரஸ் தொற்று காரணமாக லட்சக்கணக்கில் விலங்குகள் கொல்லப்பட்டு இராணுவப் பயிற்சித் தரவை ஒன்றின் நிலப்பகுதியில் பாரிய குழிகள் தோண்டப்பட்டு அவற்றில் புதைக்கப்பட்டமை தெரிந்ததே.

அவ்வாறு புதைக்கப்பட்ட விலங்குகளே குழிகளில் இருந்து மெலெழுந்து வெளியேறி உள்ளன.

அழுகிய விலங்குகளில் இருந்து வெளியேறும் நைட்ரஜென்(nitrogen) மற்றும் பொஸ்பரஸ் (phosphorus) வாயுக்களின் அமுக்கத்தால் அவை உருப்பெருத்து மேலெழுவதாக யூலான்ட் ஊடகங்களில் தகவல் வெளியாகி இருக்கிறது.

பாரிய இரண்டு விலங்குப் புதை குழிகள் தோண்டப்பட்ட இடத்துக்கு அருகே நீரேரி ஒன்றும் குடி தண்ணீர் மையமும் அமைந்துள்ளன. இதனால் புதைகுழிகளில் இருந்து மாசுக்கள் நீர் நிலையில் கலக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

mink-2.jpgஅண்மையில் புதிய வைரஸ் பரவும் அச்சம் காரணமாக மில்லியன் கணக்கான மிங் விலங்குகளை ஒரேயடியாகக் கொல்ல டென்மார்க் பிரதமர் எடுத்த தீர்மானம் அரசியல் மற்றும் சட்ட ரீதியாக அவரது அரசை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது.

இந்த விவகாரம் தொடர்பான சர்ச்சைகளால் நாட்டின் விவசாய அமைச்சர் பதவி விலக நேர்ந்தது.

அதிகளவில் தொற்றுக்கு இலக்காகிவரும் மிங் விலங்குகள் அவற்றின் உடலில் மரபு மாறிய புதிய வைரஸ் கிருமிகளைக் காவி அவற்றை மனிதர்களுக்குப் பரப்பும் ஆபத்து இருக்கிறது என்ற அச்சம் எழுந்துள்ளது.

இதனால் ஜரோப்பிய நாடுகள் பலவற்றில் மிங் பண்ணைகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன. பிரான்ஸில் உள்ள நான்கு மிங் பண்ணைகளில் ஒன்றில் தொற்று ஏற்பட்டதால் சுமார் ஆயிரம் விலங்குகள் கொன்றழிக்கப்பட்டுள்ளன.

போலந்து, லித்துவேனியா நாடுகளிலும் மிங் பண்ணைகளில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.