Jump to content

நினைவேந்தல் உள்ளதா உரிமை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல் உள்ளதா உரிமை?

-என்.கண்ணன்

 “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்”

 “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை”

 

spacer.png

தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினைவேந்தல் செய்வது உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறை, அடிப்படை உரிமையும் கூட.

எதிரியாக இருந்தாலும், இறந்த பின்னர் அவனது உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும், உடலத்தை மரியாதையாக கையாள வேண்டும், அதனை அடக்கம் செய்ய வேண்டும் என்கின்றன சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும், போர்ச் சட்டங்களும், இவ்வாறான நிலையில், போர் ஒன்றில் உயிர் நீத்தவர்களை நினைவில் கொள்ளுதல், அவர்களுக்காக தீபம் ஏற்றுதல், மலர் வளையம் வவைத்து அஞ்சலி செலுத்துதல் என்பன சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

முதலாம் இரண்டாம் உலகப் போர்களில் உயிர்நீத்தவர்களை நினைவில் கொள்ளும் சர்வதேச நிகழ்வுகள் இப்போதும் நடத்தப்படுகின்றன.

இலங்கையைப் பொறுத்தவரையில்  நவீன வரலாற்றுக்கு முன்னரே, போரில் உயிர் துறந்தவர்களை நினைவில் கொள்ளும் மரபு ஒன்று இருந்தது. அனுராதபுரத்தை ஆண்ட எல்லாளனை, போரில் தோற்கடித்த துட்டகெமுனு, எல்லாளனின் சமாதியை அனைவரும் வணங்கி விட்டே செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டான்.

இவ்வாறான ஒரு மரபை பேணி வந்த இலங்கையில் தான், துட்டகெமுனுவின் வாரிசுகள் என்று கூறிக் கொள்பவர்கள், மாவீரர்களை நினைவு கூரும் மரபை தமிழர்களிடம் இருந்து அழிப்பதற்கு கங்கணம் கட்டியிருக்கிறார்கள்.

போரில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் உரிமையை மறுத்து விட்டால், அதனை தடுத்து விட்டால், தமிழர்களின் உணர்வுகளை மழுங்கடித்து விடலாம் என்ற தப்புக் கணக்கை அவர்கள் திரும்பத் திரும்பப் போட்டுக் கொள்கிறார்கள். அதேவேளை, நினைவேந்தல் உரிமை தொடர்பாக இந்தமுறையும், சர்ச்சைகள் எழுந்தபோது, அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், போரில் உயிரை இழந்த உறவுகளை நினைவு கூருகின்ற உரிமை தமிழர்களுக்கு உள்ளது என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தார்கள்.

சர்வதேச சட்டங்களிலும், பிரகடனங்களிலும் இதற்கான உரிமைகள் உள்ளன என்ற இரா.சம்பந்தன் முதற்கொண்டு.எம்,ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்கள் கூறியிருந்தார்கள்.

சட்டத்தரணியும், அரசியல் ஆய்வாளருமான சி.அ.யோதிலிங்கம் கடந்த வாரம் கேசரி வார இதழில் எழுதியிருந்த பத்தியில், இந்த நினைவேந்தல் மறுப்பானது, ஒரு அடிப்படை உரிமை மீறல், கலாசார உரிமை மீறல், உள ஆற்றுப்படுத்தல் உரிமை மீறல், இணக்க அரசியல் மீறல்என பல மீறல்களை உள்ளடக்கியுள்ளதுஎன்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதாவது. நினைவேந்தல் உரிமை மறுக்கப்படுவது சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை மீறல் என்பது சட்டத்துறையில் விற்பன்னர்களான அரசியல் தலைவர்கள் பிரமுகர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

ஆனாலும், சட்டரீதியாக - சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமையாக கூறப்படும், நினைவேந்தல் உரிமை, தமிழர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை அரசாங்கம் இந்த உரிமையை மறுப்பது இதுதான் முதல் முறையல்ல.

இப்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் பதவியில் இருந்த 2015ஆம் ஆண்டு வரையிலும் இவ்வாறான நிலை தான், காணப்பட்டது. கடந்தமுறை கூட பலத்த சந்தேகங்கள், கேள்விகளுடன் தான் நினைவேந்தலை நடத்தக் கூடிய நிலை இருந்தது.

இந்தமுறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை போட்டது தொடக்கம், திலீபன் நினைவேந்தலைத் தடை செய்யும் கட்டளைகள் பெறப்பட்டது வரை – நடந்த சம்பவங்கள் எல்லாமே, மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளின் மீது அழுத்தங்கள் கொடுக்கப்படும் என்பதை வெளிப்படுத்தியிருந்தன.

ஆனாலும், திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை.

நினைவேந்தலுக்கு சட்டரீதியான உரிமை உள்ளது என்றால், அதனை சட்டரீதியாக பெறுவதற்கு முயன்றிருக்க வேண்டும்.

நாட்டின் உயரிய நீதிமன்றங்களை நாடியிருக்க வேண்டும். நினைவேந்தல் உரிமையை உறுதிப்படுத்தும் கட்டளைகளைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் மாவீரர் நாள் நெருக்கும் வரை- இன்னும் சொல்லப் போனால், பொலிஸார் தடை ஆணை கேட்டு நீதிமன்றங்களை நெருங்கத் தயாராகும் வரை சட்டரீதியாக எந்த முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவேந்தும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதனை அறிக்கைககளின் ஊடாக தெரிவிப்பதை விட, சட்டரீதியாக உள்ள உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வது தான் முக்கியமானது. 

அதுதான் அவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கக் கூடியது.

ஆனால் தமிழ்த் தலைமைகளும், கட்சிகளும் அவ்வாறான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. கடைசி நேரம் வரை அவர்கள், நீதிமன்றப் படிகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.

இதன் மூலம், அவர்களின் கவனம் நினைவேந்தல்களில் இருந்து திருப்பப்பட்டு. நீதிமன்ற வழக்குகளின் மீது, கவனம் செலுத்தும்நிலைஉருவானது.

இதனை அரசாங்கமும், பொலிஸாரும் ஒரு உத்தியாகவே கையாண்டு வருகின்றனர். அதனை தமிழ்த் தலைவர்கள் யாரும் உணர்வதாகவே தெரியவில்லை.

உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் இந்த உரிமையை அவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டும்.

நினைவேந்தலுக்கான உரிமை மறுக்கப்பட முடியாத ஒன்று என சர்வதேச சட்டங்களை துணைக்கு அழைத்துக் கொள்ளும் அவர்கள், அந்தச் சட்டங்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு அந்த உரிமை கிடைப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதுதன் முறையானது.

இனப்படுகொலை நடந்ததா- இல்லையா என்று ஆதாரத்தை நிரூபிக்குமாறு கேட்பது போன்று இந்த விடயத்துக்கு பெரிதாக எந்த ஆதாரங்களும் தேவையில்லை.

தமிழ் மக்களின் தொன்மையை நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருப்பதைப் போன்று, இதற்கு ஆதாரங்களைள தேடிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அரசாங்கமே இந்த உரிமை கிடையாது என்று கூறுகிறது. இதற்கு தடைவிதிக்குமாறு கோரி நீதிமன்றக் கட்டளைகளையும் பெற்றிருக்கிறது.

ஆக அரசாங்கத்தினதும், நீதிமன்றங்களினதும் கட்டளைகள் உத்தரவுகளை வைத்துக் கொண்டே இந்த உரிமை மறக்கப்படுகிறது என்பதை சர்வதேச முறையீடுகளுக்கு கொண்டு செல்ல முடியும்.

வெறுமனே இந்த முறையீடுகளை அறிக்கைகளாக கொடுப்பதில் இருந்து விலகி, மாற்று வழிகளில் இந்த உரிமைகளை நிலைநாட்ட முனைய வேண்டும்.

அவ்வாறான முயற்சிகளில் ஏன் தமிழர் தரப்பில் உள்ளவர்கள் யாருமே சிந்திக்கவில்லை. எவ்வளவு காலத்துக்குத் தான் சர்வதேச சட்டங்களில் உள்ள உரிமை மறுக்கப்படுகிறது என்று அவர்கள் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருக்கப் போகிறார்கள்?

அறிக்கை அரசியலில் இருந்து விலகி அவர்கள், வெளியே வர வேண்டும், ஏற்றுக் கொள்ளப்படட நியமங்களின்படி தமிழர்களுக்கு உரிமைகள் உள்ளனவென்றால், அந்த உரிமையை நிலைநாட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்பது தான்தலைமைக்கு அழகு.

 

https://www.virakesari.lk/article/95543

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.