Jump to content

சுமந்திரனின் மாற்றம்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனின் மாற்றம்...

-கபில்

“ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்”

மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015    ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி மாற்றத்துக்கு இடையில் கிடைத்த ஜனநாயக வெளிக்குள், மாவீரர்நாள் நிகழ்வுகள் பகிரங்கமாக- அரசபடைகளால் இடித்தழிக்கப்பட்ட துயிலுமில்லங்களிலேயே நடத்தப்பட்டன.

அது தமிழ் மக்களில் பெரும்பாலானோருக்கு ஒரு ஆறுதலை கொடுத்தது.  குறிப்பாக  உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பைக் கொடுத்தது.

spacer.png

 

தோல்விச் சுமைக்குள் நீண்ட நாட்களாக முடக்கப்பட்டிருந்த மக்களுக்கு, அதிலிருந்து வெளியேறும் மிடுக்கையும் தந்தது. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும், மாவீரர் நாளை துயிலுமில்லங்களில் தலைமை தாங்கி நடத்த முயன்ற பின்னர் தான், எல்லோரும் அவர்களுக்குப் பின்னால் சென்றார்கள்.

அந்த இடத்தில்அவர்கள் அவ்வாறு முன்னேசெல்ல வேண்டியது தவிர்க்க முடியாததாக இருந்தது. எனினும்,அப்போது கடும் விமர்சனங்களையும் அவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது. அந்த விமர்சனங்களுக்குப் பின்னர், துயிலுமில்லங்களில் அவர்கள் பெரும்பாலும் ஒதுங்கி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இப்போது மீண்டும், அவர்களை முன்னிலைப்படுத்த வேண்டிய நிலை பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

இந்தமுறை மாவீரர் நாள்நினைவேந்தல் செயற்பாடுகள் சார்ந்த முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக அவதானிக்கப்படுவது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடு தான். இந்த நினைவேந்தல் விடயத்தில்,பொலிசாரும், இராணுவத்தினரும், அரசாங்கமும் எவ்வாறு செயற்படுவார்கள் என்பது நன்றாக அறியப்பட்ட விடயம் தான்.

நினைவேந்தலுக்கு எதிராக- அதனைத் தடுக்கின்ற வகையிலான நிலைப்பாட்டை அவர்கள் எடுப்பார்கள் என்பது உறுதியாகவே தெரிந்தது. ஆனால்,இதுவரையில், ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்.

தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையைத் தடுக்க முடியாது, மக்கள் துணிந்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தலாம் என்ற அறிக்கையுடன் அவர் ஒதுங்கியிருக்கவில்லை. தானாக வந்து, நீதிமன்றங்களில் முன்னிலையாகி தடைகளுக்கு எதிராக வாதிட்டார். ஆனாலும், அவரால், நீதிமன்றக் கட்டளைகளை மாற்ற முடியாமல்போனது. 

இது அவர் ஒரு சட்டத்தரணியாக செய்த வேலைதான். சுமந்திரன் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஆதரிக்காவிட்டாலும், சட்டத்தரணியாக விடுதலைப் புலிகளின் போராளிகள் பலரையும் நீதிமன்றங்களில் வாதாடி விடுவித்திருக்கிறார். 

அதுபோன்று, தொழில்சார் முறையில்தான் அவர்,வழக்குகளின் முன்னிலையானாரே தவிர, உணர்வு ரீதியான விருப்புடன் வரவில்லை என்று கூறுபவர்களும் உள்ளனர். எது எவ்வாறாயினும், இத்தகைய விமர்சனங்களைக் கடக்கும் வகையில்தான், சுமந்திரன், கடந்த21ஆம் திகதி கப்டன் பண்டிதரின் இல்லத்தில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். இது தமிழ் அரசியல் பரப்பில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சுமந்திரன் அரசியலுக்கு வந்த பின்னர், நினைவேந்தல் நிகழ்வுகள் எதிலும் பங்கேற்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களில் கூட, அவர் காணப்படவில்லை. அவ்வாறான ஒருவர் மாவீரர் ஒருவரின் இல்லத்துக்குச் சென்று, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியதுடன், அந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட படங்களையும் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டார்.

இந்த நிகழ்வை அவர் மறைக்க விரும்பவில்லை, அதனை வெளிப்படுத்த வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறார். இதன் ஊடாக அவர், ஏதோசில செய்திகளை கூற முனைந்திருக்கிறார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

சுமந்திரனின் மீது வெறுப்படைந்திருந்த பலருக்கும், அவரது இந்த நடவடிக்கை இன்னும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேறு சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் இதனை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.

நினைவேந்தலுக்கான உரிமை தமிழ் மக்களுக்கு உள்ளது என்று சுமந்திரன் அறிக்கை வெளியிட்ட போது, அவர் அறிக்கை வெளியிட்டுவிட்டு ஒதுங்கியிருக்காமல், முன்னால் வந்துதானும் பங்கெடுத்து மக்களுக்கு தெம்பூட்டவேண்டும் என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருந்தார்.

ஆனால், கப்டன்பண்டிதரின் வீட்டில் அஞ்சலி செலுத்திய பின்னர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளாத சுமந்திரன், மாவீரரின் நினைவேந்தலுக்கு வந்ததை கேள்விக்குட்படுத்தினார்.

இதுபோன்ற அரசியல் தர்க்கங்களுக்கு மத்தியில் சுமந்திரனின் மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியஒன்றுதான். அவர், ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளாவிடினும், தியாகங்களை கொச்சைப்படுத்தவில்லை. இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்று, அரசியல் இலாபத்துக்காக பயன்படுத்த விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார்.

அந்த நிலையில் இருந்து பார்த்தால், அவர் இப்போது வந்திருப்பது அரசியல் நலனுக்கானதா என்ற கேள்வி எழுகிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரன், ஒரு முழுமையான தமிழ்த் தேசியவாதியாக இருக்கவில்லை என்று குறைபட்டுக் கொண்டவர்கள், இவ்வாறான நிகழ்வுகளில் பங்கேற்கமுன்வந்து, அதனை நெருங்கி வரும்போது எட்டி உதைக்க முனைவதும் சரியானதா என்ற கேள்விகளும் உள்ளன.

இந்த இடத்தில் அரசியல் நலன்களை சுமந்திரன் எதிர்பார்க்கவில்லை என்று கூறமுடியாது. கடந்தபொதுத்தேர்தலில் சுமந்திரன் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கட்சிக்குள்ளேயும், கடும் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியிருந்தது. அதற்குப் பின்னர் அவர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனாலும், தேர்தலுக்குப் பின்னர் கூட அவர், ஆயுதப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று அறிக்கை விட்டு பெரும் சர்ச்சைக்குள் சிக்கியிருந்தார்.

ஆக, தேர்தல் பின்னடைவுகளின் விளைவாக அவர் தன்னை மாற்றிக் கொண்டுள்ளார் என, கருதுவதற்கு இடமில்லை. திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர் நினைவேந்தலுக்கும் நீடிக்கப்பட்டதன் மூலம், தான் சுமந்திரன் இந்த அரங்கிற்குள் வரும்நிலை ஏற்பட்டது.

சுமந்திரனின் வருகை தனியே, தமிழ் மக்களை கவருவதற்கானதாக மாத்திரம் எடுத்துக் கொள்ள முடியாது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைப் பார்த்து, நாடாளுமன்றத்தில் பயங்கரவாதி என்று சரத் பொன்சேகா அடையாளப்படுத்தியது போன்று, சுமந்திரனை அடையாளப்படுத்த முடியாது.

காரணம் அவரது தனிப்பட்ட அரசியல் வழிமுறை அவ்வாறானது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடும்போக்கை வெளிப்படுத்துபவர், சுமந்திரன் மென்வலு அரசியல் செய்பவர். ஆனாலும், அவரையும் கடும்போக்கு அரசியலை நோக்கித்திரும்பும் நிலைக்கு கொண்டு வந்திருக்கிறது அரசாங்கம். இதுதான், ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையா?
 

https://www.virakesari.lk/article/95564

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போர் குற்ற விசாரணை முடிந்ததா இல்லியா என்று ஒரு கேள்வியை போட்டு பாருங்க எல்லா வேஷமும் கழண்டு  கொட்டுப்படும் .

No photo description available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

சுமந்திரனின் மீது வெறுப்படைந்திருந்த பலருக்கும், அவரது இந்த நடவடிக்கை இன்னும் சீற்றத்தை ஏற்படுத்தியது. வேறு சிலருக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியது. ஏனென்றால், அவர் இதனை ஒரு அரசியல் உத்தியாகப் பயன்படுத்த முனைகிறாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது.

நூற்றுக்கு நூறுவீதம் இது ஒரு சூழ்ச்சி அரசியல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஏன் தமிழகத்தில் கேரளாவில் பாஜாகவினால் வெற்றி பெறமுடியவில்லை. அங்கு வேறு இயந்திரமா உபயோகிக்கிறார்கள்?  😀
    • த‌வ‌றுக்கு ம‌ன்னிக்க‌னுன் அண்ணா🙏..............நான் நினைத்தேன் 2013கால‌ க‌ட்ட‌த்தில் சொன்ன‌து என்று......................
    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.