Jump to content

புட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

128123963_3890661377632916_3499086261817682168_n.jpg?_nc_cat=103&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=e60qjwiAKOoAX8fdRII&_nc_ht=scontent-frt3-2.xx&oh=ead7b7e25b6c12e2de3d11601b007494&oe=5FE94CE4

 128015235_3890661367632917_4843630545666338944_n.jpg?_nc_cat=106&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=EJxOohWsccIAX_j3LP0&_nc_ht=scontent-frt3-1.xx&oh=8833903c82142f036866d00f4b465a4b&oe=5FEB46BE

பல,  முகம் காட்டும்.. புட்டு.

புட்டிற்கு மற்றய எந்த உணவையும் விட சில விசேட தன்மையுண்டு. அரிசிமா புட்டு, கோதுமை மா புட்டு, புடிப் புட்டு, பால் புட்டு, குரக்கன் புட்டு, ஒடியல் புட்டு, இறால் புட்டு, மரவள்ளி மா புட்டு என்று காலை, மாலை உணவாக இடையில் சாப்பிடும் சிற்றுண்டியாக சாப்பாட்டிற்கு மேல் சாப்பிடும் இனிப்பு பண்டமாக சோற்றுடன் கலந்து சுவை சேர்க்கும் சேர்ந்தியங்கும் தோழனாக. இடையிடையே அரிதாக சாப்பிடும் உணவாக என்ற பல முகம் புட்டிற்கு உண்டு.

 
புட்டில் மாவையும் தேங்காய் பூவையும் காதலன் காதலி போல் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக கலந்த இடையிடையே இணைந்தும் தனித்துவம் காட்டும் இயல்புகள் கலந்தே இருக்கும்.
 
நீத்துப் பெட்டி, புட்டு குழல் என்று இயற்கை சார்ந்த பனை ஓலையும், மூங்கிலும் இணைந்து இசைத்திடும் இராகமாக ஆவி பறக்கும் சுவையே சுவைதான்.
 
நவீனங்கள் அலுமினியம் என்று இடையில் புகுந்தாலும் இந்த கற்பகத்தருவின் ஓலையும், புல்லாங் குழலாக ஒலி கொடுக்கும் மூங்கிலுமே புட்டிற்கு சுவையையும் ஆரோக்கியத்தையும் கொடுப்பவை.
 
இங்கு சுளகும், குட்டாளச் சட்டியும் (அரிகன் சட்டி) இந்த புட்டுக் குழைத்தலுக்குள் தமது கை வண்ணங்களை காட்டியே நிற்கும். சுவையிற்கு பெரிய துருவாலக துருவிய தேங்காய் சுவை சேர்த்தாலும் இடையிடையே தேங்காய் பாலும், சீனியும், சக்கரையும் நாம் இணைத்துக் கொள்வதும் உண்டு. இப்படியாக இவற்றின் ஒரு சமூகமாக தன்னை நிலை நிறுத்தி எம் அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட புட்டை சற்றுத்தான் பேசிப் பார்ப்போமே.....
எமக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள உறவுகள் பற்றி வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. இந்தியாவின் வந்தேறுகுடிகள் என்று கருதப்படுவதில் ஏற்புடைமை இல்லை. அதற்காக நாம் இன்று இலங்கையில் இந்தியத் தமிழர் என்று அழைக்கப்படுவதில்லை அடையாளப்படுத்தப்படுவதில்லை.
நாம் ஈழத் தமிழராகவே அடையாளப்படுத்தப்படுகின்றோம்.
 
இன்னும் ஒரு படி மேலே போய் எமது தமிழர்களின் இந்திய... தென் இந்திய திராவிட மக்களின் அதில் தமிழர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்களின் மரபணுவை ஆய்வு செய்து போது ஆபிரிக்காவின் கறுப்பின மக்களின் அடியில் இருந்து வந்ததாக விஞ்ஞானம் நிறுவி நிற்கின்றது. அதற்காக நாம் திராவிடர்கள்.. தமிழர்கள்... இலங்கை தமிழர்களை ஆபிரிக்க கறுப்பர்கள் என்று யாரும் விழிப்பதில்லை.
மூலம் எங்கிருந்தாலும் அது அங்கிருந்து நழுவி வந்து வளர்ச்சியடைந்து அது ஒரு புதுப் பரிமாணத்தை எடுத்து தனக்கான புதிய அடையாளத்தை எடுப்பதே வளர்ச்சி.. கூர்ப்பு. இதன் அடிப்படையில் புட்டு மூங்கிலிற்குள் போட்டு பிலிபைன்ஸ் என்று ஆரம்ப புள்ளியை ஆராய்சி செய்து சொல்லி இருந்தாலும் இது கேரளத்தில் இருந்து இலங்கையிற்கு வந்தாக கூறினாலும் அது ஈழத்திற்கு வந்து தனக்குரிய அடையாளத்தை தனித் தன்மையை பெற்றிருக்கின்றது என்பதே உண்மை. எனவே அங்கிருந்ததான் இதனைப் பற்றி நான் பேசவிளைகின்றேன்.
 
அது தமிழ் மக்களின் ஒரு உணவாக அடையாளம் பெற்றிருக்கின்றது என்பதே உண்மை. தத்தெடுத்து வளர்க்கும் பிள்ளையை மாற்றான் பிள்ளை என்று நாம் விழிப்பது இல்லை அதன் வலியும் பலருக்கும் புரியும் இதனைப் போன்றதே இதவும். இது வேறு ஒரு இனத்தின் நாட்டின் உணவாக கூட இருக்கலாம் ஆனாலும் எமது வாழ்வின் உணர்வில் கலந்துவிட்ட உணவாகி நிற்கின்றது.
இதற்கான உரிமத்தை அதற்கான ஆரம்ப புள்ளியை வைத்து கொண்டாடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. வேணும் என்றால் அவர்களும் கொண்டாட்டும் ஏக போகம் கொண்டாடுவதில் எனக்கு எப்போது எதிலும் எடன்பாடு இல்லை. அந்த வகையில் புட்டு ஈழத் தமிழரின் ஒரு உணவாக நாம் கருதியே பார்க்க வேண்டி இருக்கின்றது.
 
அது ஈழத்திற்குள் வந்த பின்பு நான் மேலே கூறி பல்வேறு பரிணாமங்களை எடுத்து தன்னை செழுமைப்படுத்தி புதுப்புது வடிவங்களும்இ சுவையும்இ பெயரும் பெற்று இருக்கின்றது.
 
இது இடியப்பத்திற்கு இல்லாத ஒரு விசேட தன்மை. வேறு பல உணவிற்கு இல்லாத சிறப்பு. பல உணவகள் ஓரே ஒரு வடிவத்தை மட்டுமே எடுத்துள்ளன. புட்டு மாத்திரமே பல அவதாரங்களை எடுத்து எம்மிடையே கொலுவோச்சி நிற்கின்றது. ஆரோக்கியம் என்று பார்த்தால் சிறுதானிய மாக்களினால் ஆன உணவுப்பட்டங்கள் ஆரோக்கியமானவை அளவாக மாப் பொருளை உள்ளெடுத்தல் ஆரொக்கியமானது என்ற வரையிறையிற்குள் நாம் புட்டை உம் உள்வாங்கிக் கொள்ளல் வேண்டும்.
 
அரிசி மா புட்டு... சேரல் பச்சை அரிசி ஊறப் போட்டு கல்லுரைலில் இடித்து அந்த மாவை நீத்துப் பெட்டியில் வைத்து நீராவியில் அவித்து பின்பு சுழகில் போட்டு வெந்நீர் கலந்து குழைத்து தேங்காய்பூ கலந்து அவித்தல் என்பதற்கு நிகரான சுவையும் ஆரோக்கியமும் வேறு எந்த வகை புட்டு அவித்தலிலும் இல்லை. அவித்த புட்டை பனை ஓலைப் பெட்டியிற்குள் போட்டு வைக்க வேண்டும். நாம் பொதுவாக அவிக்கும் புட்டு என்பதினால் அதன் செய் முறையை இங்கு தந்தேன்.
 
கேரளத்தில் இடியப்பத்தை அதிகம் தேய்காய் பாலுடன் கலந்து உண்பர் தற்போது பாயா வைத்தும் சாப்பிடுகின்றனர். தமிழ் நாட்டில் அதிகம் இடியப்பம் இல்லையாகினும் கேரளத்தின் தாக்கமே அதிகம்.
 
வறுமையின் அடையாளமாக அரிசிப் புட்டும் சிவப்பு மிளகாய்ச் சம்பலுமாகிப் போன வரலாற்றை தனக்குள் கொண்டிருந்து இந்த புட்டு. வறுமையின் இல(ள)கு நிலையில் பொரியலுடன் புட்டு, முட்டைப் பொரியலுடன் புட்டு ஏன் இறைச்சி, மீன் வேறு மரக்கறிகளுடன் புட்டு என்று வசதிகளின் அடிப்படையில் மாற்றம் பெற்றிருக்கின்றது தற்போது.
 
முக்கனிகளுடன் இணைத்துச் சாப்பிடுதல் என்பதுவும் சீனி கலந்து சாப்பிடுதல் என்பதுவும் மற்றய எந்த சாப்பாட்டையும் விட புட்டி பெற்றிருக்கும் விசேட நிலமை. இது இடியப்பத்திற்கோ அல்லது தோசை இட்லிக்கோ பொருந்தாது. நான் இங்கு கறி இட்லிக்குள் போக விரும்வில்லை...?
இந்த இரண்டு 'P' இற்கும் இடையிலான போட்டியாக உருவகப்படுத்தினாலும் இந்தாலியரின் பீட்சா என்று உலகில் பொதுவாகப் பேசப்பட்டாலும் அது உலகெங்கும் பரவி தற்போது இருக்கின்றது. அதற்கு முதற்காரணம் இந்த அவசர உலகின் இலகுவில் எவ்விடத்திலும் இலாவகமாக ஒரு துண்டை எடுத்து சாப்பிட்டுவிட்டு போய்கிட்டே இருக்கலாம் என்பதாலேயே அந்த நிலமை.
 
இதற்கு அப்பால் இதனுடன் கலக்கப்படும் புளிப்புத் தன்மையுடைய தக்காளிச்சாறு(tomato sauce) அடிப்படையிலான புளிப்பும் இயல்பில் ருசியை ஏற்படுத்தும் வெண்ணை என்று நாம் அழைக்கும் சீஸ் கொடுக்கும் சுவையுமே முக்கிய காரணங்கள்.
பீட்சா ஆறினால் விராட்டி புட்டு ஆறினாலும் ஆட்டம் காணாது விரும்பி சாப்பிடும் அமிர்த சுவை கொண்டது உணவு என்பதே இங்குள்ள சிறப்பு .
சிறப்பாக எமது தாயகத்து உணவுகளுக்கு உரிய சிறப்பு ஆக்கி ஆற வைத்து அடுத்த வேளை சூடாக்காமலும் சாப்பிடும் போதும் சுவை மாறாமல் இருக்கும் என்ற உணவுத் தயாரிப்பு முறை. ஆனால் மேற்கத்திய உணவுகள் அடுத்த மணித்தியாலயம் என்பது நொது நோதுத்துப் போய் சுவையில்லாப் பண்டம் ஆகி குப்பையிலே போகும் உப்பில்லாப் பண்டம் போல் ஆகிவிடும் என்பதை நாம் இங்கு சீர்தூக்கி பார்க்க வேண்டும். நான் இங்கு பழமையை பேசவில்லை பழமையிற்குள் இருக்கும் சிறப்பை பேசவிளைகின்றேன்.
 
இதனை யாழ்ப்பாண காவல்துறை அதிகாரியிடம் பீட்சா சுட்டு நாளைக்கு வைத்து சாப்பிட முடியுமா...? புட்டு அவிச்சு ஆறிய பின்பும் சுவையாக சாப்பிட முடியும்... இதில் உள்ள வகை வகையான புட்டுகளை பற்றி பேசி இருக்க வேண்டும்.
 
இவை எல்லாவற்றிற்கும் மேலாக எமது தமிழர்களின் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவு என்று உலகின் பல்வேறு சமூகத்தினரிடமும் ஏற்புடையதாக்கும் உணவு எது...? இதற்கான அடையாளம் இருக்கின்றதா...? அப்படி இருந்தால் அதனை நாம் வேற்று இனத்தவர்களும் விரும்பிச் சாப்பிடும் வகையில் முன்னிறுத்தி அடையாளப்படுத்தியுள்ளோமா...? அப்படி அடையாளப்படுத்தி அவர்களால் ஏற்புடையதாக்கிய உணவுகளை 'அழகு"படுத்தி பரிமாறும் முறமைகளை நாம் கொணடிருக்கின்றோமா...? என்பதை நான் இங்கு வினாவாக முன்வைக்கின்றேன்.
இதுதான் இன்று பேசப்பட வேண்டிய விடயம் மாறாக பீட்சாவா புட்டா என்பது அல்ல.
மாறாக பழம் பெருமை மட்டும் பேசி நாம் இருப்பது போதுமானதா...? சரியானதா...? எமது அடையாளத்தை பாரம்பரியத்தை பண்பாட்டை எடுத்து நிறுத்த போதுமானதா...? என்ற கேள்வி எம்மிடம் உள்ளது.
 
எமது ஈழத் தமிழர்களின் பாரம்பரிய உணவுகளை அடையாளப்படுத்தி இதற்குள் இருக்கு ஊட்டச் சத்துகள் அதனை எவ்வாறு முறைப்படி ஆக்குவது... உண்பது.. எவ்வாறு போன்ற விடயங்கள் ஆராயப்பட்டு அறியப்பட்டு ஆவணப்படுதப்பட்டு அங்கீகாரத்தை பெற வேண்டும் அதனை அறிமுகப்படுத்தி சர்வ தேச சமூகத்திடம் ஏற்புடமையை உருவாக்க வேண்டும்.
 
தென் அமெரிக்கர்கள் அதிகம் சாப்பிடும் ஒரு வகை சோத்து குழையலை மென்மையான ரொட்டியிற்குள் வைத்து உருட்டி உலகெங்கும் ஏற்புடையதான உணவாக்கியது போல் சோயா சாற்றை(soy sauce) கலந்து செய்யும் எல்லாவகை உணவுகளையும் சைனீஸ் உணவு என்று எற்புடமை ஏற்படுத்தியதையும், ஓரளவிற்கேனும் புரியாணி என்று உணவை சமைத்து இந்தியா?வின் உணவு என்று ஏற்புடமை ஆக்கியதையும் கூடவே சமோசா இன்று மேற்குலக சிறறுண்டி மேசையில் சங்கோஜம் இன்றி உண்ண வைத்த செயற்பாட்டையும் நாமும் எமது பாரம்பரிய உணவுகள் மூலம் செய்ய வேண்டும்.
 
நான் வரலாற்று ஆய்வாளனோ உணவு பற்றிய பாண்டித்தியம் பெற்றவனோ அல்ல.
வெறும் யாழ் இந்து மாணவ விடுதியில் அவிச்சமாவை பாயில் கொட்டி ஒருவர் மாவில் தண்ணி தெளிக்க மற்றவர் பெரிய தட்டகப்பையினால் கிழறி பின்பு புட்டு என்று சொல்லும் அந்த மாவை அண்டா ஒன்றிற்குள் அள்ளிப் போட்டு ஆவியில் அவிச்சு இறக்கி தேங்காய் பூவை அதன் மேலே தூவிய சாப்பாட்டை சாப்பிட்டு வளர்ந்தவன்.
 
வறுத்த கோதுமை மா புட்டை மொக்கன் கடையில் ஆணம் விட்டு சாப்பிட்டு ஹொட்டலில் சாப்பட்டதாக உவகை கண்டவன் எனது அனுபவம் அவ்வளவே
 
பௌதிகப் பாடத்தில் சில பக்கங்களை கணிதத்துடன் இணைத்து படித்தவன். சில தாள்களில் கணணி என்று படிக்க முற்பட்டவன் அவ்வளவே என் பட்டப்படிப்பு பட்டறிவு பலரை போலவே எனக்கும் உண்டு.
 
வரலாற்றிலும் சமையிலிலும் பல வல்லுனர்கள் எம்மடையே உள்ளனர் அவர்கள் இதற்கான ஆய்வுகள் முறமைகளை தயார் செய்து சர்வதேச சமூகத்திடம் எமது உணவிற்கான ஏற்புடமையினை அறிமுகப்படுத்தட்டும் ஏற்புடமையை பெறட்டும்.
இதற்கான ஆதரவுக் கரங்களை கொடுப்பவர்களில் நானும் ஒருவனாக இருந்துவிட்டுப் போகின்றேன்.
 
பலரையும் போல் எப்படி இலங்கை காவல் துறை அதிகாரி ஒருவர் இப்படிச் சொல்ல முடியும் என்று மீசையை முறுக்கவும் இல்லை 'புட்டா" 'பிட்டா" என்று தமிழ் இலக்கணம் பற்றியும் பேச விரும்பவும் இல்லை.
இதற்கு அப்பால் புட்டை வைத்து திருக்குறளும், திருவெண்பாவும் பேச விளைவில்லை.
எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் எமது புராணங்களில் புட்டுக்கு மண் சுமந்த செம்மனச்செல்லிவியின் கதையில் இடம் பிடித்தது இந்த புட்டுத்தான் அதுவும் குழல் புட்டுதான் தேங்காய பூ போட்ட புட்டுத்தான். அந்த வகையிலும் புட்டு 'உயர்ந்து" தான் நிற்கின்றது என்று கூறி பிரம்படி வாங்கவும் நான் தயார்....?
 
இவற்றிற்கு அப்பால் இலங்கையில் புட்டிற்கு இன்னும் ஒரு விசேடம் உண்டு. இலங்கை வாழ் சிறுபான்மை மக்களாகிய தமிழ் மக்கள், முஸ்லீம் மக்கள் இடையேயான உறவை இந்த (குழல்) புட்டுடன் ஒப்பிடும் ஒரு வரலாற்று ஒன்றுமையை நாம் எம் வாழ்வியலுடன் இணைத்துப் பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை.
 
நாம்... சிறுபான்மை மக்கள்... புட்டுக்கள்தான் அவ்வாறு வாழ்ந்தால்தான் நாம் வாழ்வோம் அன்றேல் வீழ்வோம் என்ற சகோதரத்துவத்தை இவ்விடத்தில் கூறி இந்த புட்டுப் புதினத்தை முடிக்கின்றேன்

Logan Subramaniam

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் மகத்துவத்தை புட்டுப் புட்டு வைத்ததற்கு நன்றி......!

இடியப்பம் காச்சல் காரருக்கு விசேஷமானது, உழைப்பாளிகளுக்கு புட்டுதான் கொங்கிரீட் போன்றது. நிலைத்து நின்று பசி தங்கும் .....!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.