Jump to content

மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலை கலவரத்தால் 8 பேர் உயிரிழப்பு! முடுக்கி விடப்பட்டுள்ள விசாரணை

இரண்டாம் இணைப்பு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கைதிகள் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட 35 காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முதலாம் இணைப்பு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்பத்தினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 43 பேர் காயமடைந்துள்ளனர் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹர சிறைச்சாலையில் மேலும் கைதியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளானதையடுத்து, கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிக்க முயன்றுள்ளனர்.

இதையடுத்து, நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் சிறப்பு பணிக்குழு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், மகரா சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது ஏற்பட்ட தீயை அணைக்க பல தீயணைப்பு வீரர்கள் மற்றும் வாகனங்களும் நிறுத்தப்பட்டன.

இந் நிலையில் மஹர சிறைச்சாலை அமைதியின்மை குறித்து விசாரணை நடத்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே குழுவொன்றை நியமித்துள்ளார்.

இதேவேளை, குழப்பத்தின் போது, உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்போது ராகமவில் அமைந்துள்ள கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளதுடன், மேலும் 43 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

எனினும் இந்த அனர்த்தத்தில் இரண்டு சிறை அதிகாரிகள் உட்பட 35 பேர் மாத்திரம் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் தற்போதுவரை குழப்பமான நிலையே உள்ளதாகவும், நிலைமைகயை கட்டுப்படுத்த அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் கூறியுள்ளது.

மஹர சிறைச்சாலையில் 183 கைதிகள் முன்னதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 1,091 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
 

https://www.ibctamil.com/srilanka/80/155258

 

Link to comment
Share on other sites

போதைப்பொருள் மாத்திரையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணம்- விமல்

 

மகர சிறைச்சாலையில் கலவரம் ஏற்படுவதற்கு கைதிகள் மத்தியில் வழங்கப்பட்ட போதைமாத்திரையே காரணம் என அமைச்சர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாiலியல் இடநெருக்கடி காரணமாக கலவரம் வெடிக்கவில்லை மாறாக போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சிலரே இதற்கு காரணம் என அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

maharapr6-300x162.jpg
போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சதுர என்ற குற்றவாளி சரத என்ற போதைப்பொருளை வெலிக்கடைசிறையில் உள்ளவர்களுக்கு வழங்கியுள்ளார் என அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில நாட்களிற்கு முன்னர் வெலிக்கடை சிறையில் உள்ள கைதிகள் வன்முறையில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள விமல்வீரவன்ச குறிப்பிட்ட போதைப்பொருளை பயன்படுத்திய வெலிக்கடை கைதிகள் கொலை செய்யுமளவிற்கு பாதிக்கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

mahara-medialk-300x169.jpg
இது குறித்து சிறைச்சாலை புலனாய்வு பிரிவிற்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் வெலிக்கடைசிறைக்குள் அந்த போதைப்பொருள் மேலும் செல்வதை தடுத்து விட்டனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் மஹர சிறையில் அந்த போதைமாத்திரை விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் தங்களுடைய போதைப்பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடமுடியாத குழுவினர் சிறைக்குள் திட்டமிட்ட கொலைகள் இடம்பெறுவதாக காண்பிப்பதற்காக மரணங்களை உருவாக்க முயன்றுள்ளனர் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2012 வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் இடம்பெற்றஅதேசூழல் தற்போதும் இலங்கையில் காணப்படுகின்றது என்பதை காண்பித்து ஜனாதிபதிக்கு அவப்பெயரை உருவாக்குவதும இந்த கலகத்தின் நோக்கம் எனவும் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் மாத்திரையே மஹர சிறைச்சாலை கலவரத்திற்கு காரணம்- விமல் – Thinakkural

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் வசதிக்கு ஏற்ப போதைப்பொருள், கொரோனா, பயங்கரவாதம் எதையாவது சொல்லி தப்பித்துக் கொள்ளுங்கள். யாராவது எதிர்த்துக் கேள்வி கேட்கவா போகிறார்கள்?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைதிகளைப் பாதுகாக்க முடியாவிட்டால் அரசு எதற்கு? சிறை முன் கதறியழும் மக்கள்

 
mahara-99.png
 8 Views

மஹர சிறைச்சாலை கைதிகளின் குடும்பத்தவர்களின் சிறைச்சாலைக்கு முன்னாள் திரண்டு கதறியழுவதையும், வேதனையில் துடித்ததையும் காண்பிக்கும் படங்கள் சமூக ஊடகங்களின் பேசுபொருளாக மாறியுள்ளன.

மஹர சிறைக்கைதிகளின் குடும்பத்தவர்கள் தங்களின் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் சிறைச்சாலை முன்னாள் நின்று கதறி அழுவதையும் மன்றாடுவதையும் காண்பிக்கும் பல படங்கள் வெளியாகியுள்ளன.

மஹர சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த பெண்ணொருவர் பொலிஸ்உத்தியோகத்தரின் காலில் விழுந்து மன்றாடுவதை காண்பிக்கும் மனதை உருக்கும் படமொன்று குறித்து பதிவிட்டுள்ளனர்.

வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களுடன் கதறல்களையும் மஹர சிறைச்சாலையின் முன்னாள் சிறைக்கைதிகளின் உறவினர்களின் கதறல்களையும் ஒப்பிட்டும் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.

பொலிஸ் உத்தியோகத்தரின் காலில் பெண்ணொருவர் விழுந்து கதறும் படம் எனது இதயத்தை பிளக்கின்றது என பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் ரசிக்கா ஜயக்கொடி சிறைச்சாலையில் உள்ளவர்களை பாதுகாக்க முடியாவிட்டால் அரசாங்கங்கள் எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளார்.

997.jpegநாங்கள் தோல்வியடைந்த நாடாக மாறிவிட்டோம், பொலிஸ் அதிகாரியொருவரின் காலில் விழுந்து இந்த தாய் கதறியழும் படம் சிறைச்சாலை கலவரம் குறித்து அனைத்தையும் தெரிவிக்கின்றது என ரசிக்கா ஜெயக்கொடி பதிவிட்டுள்ளார்.

கண்ணீர் தொடர்ந்து வெளிப்படுகின்றது,கண்கள் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளன,அழுகுரல்கள் பெரிதாகின்றன காதுகள் மூடப்பட்டுள்ளன என பதிவிட்டுள்ள ஒருவர் வடக்குகிழக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களின் படங்களையும் மஹரசிறை முன்னாள் கைதிகளின் தாய்மார்கள் கதறியழும் படத்தையும் பதிவிட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடம் கடக்கும் போதும் புதிதாக கண்ணீர் விட்டு அழும் தாய்மார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர் என தர்சா பஸ்டியன் பதிவிட்டுள்ளார்

அவர்களின் பாசத்திற்குரியவர்கள் சிறைக்கைதிகளாகயிருக்காலம் ஆனால் மரணிக்க்கவேண்டிய அளவிற்கு என்ன குற்றமிழைத்தார்கள் என பிரசாத் வெலிகும்புர என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்

வன்முறையை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கிகளை பயன்படுத்துமாறு யார் உத்தரவிட்டது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் சிறுபான்மையினத்தவர்களை போல சிங்கள சிறைக்கைதிகள் சிங்கள பாட்டாளி வர்க்கத்தினர் மாற்றுக்கருத்துடைய சிங்களவர்கள் சமஸ்டி முறைக்கு ஆதரவான சிங்களவர்கள் அனைவரினது உயிர்களும் அரசாங்கத்தினை பொறுத்தவரை அவசியமில்லாதது எனவும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பலர் மஹரசிறையின் முன்னாள் கைதிகளின் உறவுகள் கதறும்காட்சிகள் தங்களை மிகவும் வேதனைப்படுத்திவிட்டன என பதிவிட்டுள்ளனர்.

https://www.ilakku.org/கைதிகளைப்-பாதுகாக்க-முடி/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and shoes

சிங்கள பொலிசாரால் சிறையில் கொல்லப்பட்ட
சிங்கள இளைஞனின் சிங்கள தாயொருவர்
சிங்கள பொலிசாரின் காலில் விழுந்து மன்றாடுகிறார்.
சிங்கள கோத்தபாயாவுக்கு வோட்டு போட்டவர்களுக்கு
இந்த நிலை நிச்சயம் வரும் என்று எமக்கு தெரியும்.
ஆனால் இந்தளவு விரைவாக வரும் என எதிர்பார்க்கவில்லை.
Link to comment
Share on other sites

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்

 

மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன? - கைதிகளின் வன்முறைக்கான காரணம்

 

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Link to comment
Share on other sites

இதுவரை 11 பேர் இறந்துள்ளதாகவும் இன்னும் சிலர் கடும் காயங்களுடன் இருப்பதாகவும் அறிய முடிகிறது. இது நிச்சயமாக அரசுக்கு நெருக்கடியை  கொடுக்கும் சம்பவமாகவே பார்க்கப்படுகின்றது. இருந்தாலும் கோட்டா அரசு இதையெல்லாம் கடந்து சென்று விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் இறந்தவர்கள் ஏழை எளிய மக்கள்.சிறிது தொகையைக் கொடுத்து வாயை அடைத்துவிடுவார்கள்.அரசுக்கு பாதிப்பேதும் நடக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மஹர சிறைச்சாலை மோதல்- பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு

 
%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%B0-01-696x348.p
 18 Views

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் நேற்று உயிரிழந்தனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்து ராகமை மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரே இவ்வாறு உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் 107 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

https://www.ilakku.org/மஹர-சிறைச்சாலை-மோதல்களில/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

என்ன மாதிரி கதை  விடுறாங்கள் உவங்கள் கைதிகளை விட மோசமானவங்கள்

Link to comment
Share on other sites

Comments
 
 
  •  
     
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nunavilan said:

இதற்கிடையில், உட்கொண்டால் இரத்தத்தை பார்க்க தூண்டும் எனக்கூறப்படும், “ரிவர்ஸ் மாத்திரை” என்ற போதை மாத்திரையை, கைதிகளை உட்கொள்ள வைத்து

அப்படி ஒரு மாத்திரையை இவர்களே உருவாக்கியுள்ளார்களா? ஒருவேளை புலிகளுடனான யுத்தத்தில் இராணுவத்தினருக்கு வழங்க கண்டுபிடித்திருப்பினம். விமலின் அரிய கண்டுபிடிப்புகளுக்கு அளவே இல்லாமற்போயிற்று.

Link to comment
Share on other sites

மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித்

 

கொரோனா வைரஸ் விதிமுறைகளைமீறி வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து சிறைக்கைதிகள் மஹர சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டமையே மஹர சிறையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணம் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

sajith-parl-300x216.jpg
கொவிட்19 தொடர்பான விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து மஹரசிறைச்சாலைக்கு கைதிகள் மாற்றப்பட்டமையே சிறைச்சாலையில் கொரோனா வைரஸ் பரவலைஉருவாக்கியது என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக பதற்றநிலை உருவானது இதற்கு காரணமான நபர் ஜனாதிபதியின் வியத்மஹா அமைப்பைசேர்ந்தவர் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
மஹரசிறைச்சாலை கலவரத்திற்கு மறைமுக சக்தியொன்று காரணம் என இந்த நாடாளுமன்றத்தில் முன்னர் தெரிவிக்கப்பட்டது,வேறு சிலர் தங்கள் சொந்த ஆராய்ச்சிகளின் முடிவினை முன்வைத்தனர் போதைமாத்திரையே இதற்கு காரணம் என தெரிவித்தனர் எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சர்வதேச அரங்கில் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கான முயற்சிஇதுவென சிலர் குறிப்பிட்டனர் எனவும் அவர்தெரிவித்துள்ளார்

maharapr4-300x162.jpg
எனினும் நிர்வாகத்தில் பாரிய வெற்றிடம் காணப்படுகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது சிறைக்கைதிகள் தாங்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை அறிவத்ற்காக பிசிஆர் சோதனைகளை மாத்திரம் கோரினார்கள் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கொவிட் விதிமுறைகளை மீறி வெலிக்கடையிலிருந்து 120 கைதிகள் மஹர சிறைக்கு மாற்றப்பட்டனர் என்பதை அமைச்சர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச இந்த கைதிகளிற்கு பொறுப்பாகவுள்ள பிரதி இயக்குநர் வியத் மகாவின் உறுப்பினர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அவரே கைதிகளை வெலிக்கடையிலிருந்து மஹரவிற்கு மாற்றினார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது அரசியல் அறிக்கையில்லை இது உண்மை என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாகவே கொரோனா வைரஸ் கொத்தணி உருவானது இந்த துயரம் இதன்காரணமாகவே உருவானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மஹரசிறையில் கொரோனா பரவியது எப்படி – நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் சஜித் – Thinakkural

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.