Jump to content

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி


Recommended Posts

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி

     by : Dhackshala

http://athavannews.com/wp-content/uploads/2020/11/rajinikanth.jpg

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா? தொடங்க மாட்டாரா? என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீடித்த நிலையில், மாவட்ட செயலாளர்களுடன் ரஜினிகாந்த் இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது கட்சி தொடங்கலாமா? கட்சி தொடங்கும் சூழல் உள்ளதா? என்பது குறித்து நிர்வாகிகளிடம் ரஜினிகாந்த் கேட்டறிந்தார்.

நிர்வாகிகள் தங்கள் பகுதி நிலவரங்கள் மற்றும் தங்களின் கருத்துக்களை ரஜினியுடன் பகிர்ந்துகொண்டனர். முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் போட்டியிட வேண்டும் என்ற கருத்தையும் பலர் முன்வைத்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி கையசைத்தும் வணங்கியும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விரைவில் நல்ல முடிவெடுத்து அறிவிப்பதாக கூறினார்.

என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிப்பதாக மாவட்ட செயலாளர்கள் உறுதி அளித்திருப்பதாகவும் ரஜினிகாந்த் இதன்போது குறிப்பிட்டார்.

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி | Athavan News

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விரைவிலா...? கிளிஞ்சுது.... போ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, nunavilan said:

அரசியல் கட்சி தொடர்பாக விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

அப்படி என்ன முடிவுங்க எடுத்தார்?

அப்புறமா முடிவு எடுக்கிறேன்னு முடிவு எடுத்தார்.
அந்த முடிவுக்கு கட்டுப்படுவோம். 😎

Bild

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

``சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. ``அதெல்லாம் முழுமையாகச் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள்” என்றாராம்.

மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு ரஜினி வரும்போது, ஜாலியான மூடில் வந்திருக்கிறார். வந்திருந்த மாவட்டச் செயலாளர்களில் சிலர் பேசும்போது, அவர்கள் பேசிய பேச்சைக் கேட்டு டென்ஷன் ஆகிவிட்டாராம்.

ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி
 
ஆலோசனைக் கூட்டத்தில் ரஜினி

``நான் உங்களை அழைத்தால் இங்கே வந்து நன்றாகப் பேசுகிறீர்கள். ஆனால், ஃபீல்டுக்குப் போனால்... சொதப்பிவிடுகிறீர்கள். உங்களுக்கு அரசியலில் அனுபவம் போதாது. உங்களில் 15% பேரின் செயல்பாடுகள்தான் சரியாக இருக்கின்ரன. பலரது செயல்பாடுகள், வேலைகளில் திருப்தியில்லை. காசு சம்பாதிக்கணும்னு வர்றவங்க என்னை நம்பி இருக்காதீங்க. வேண்டாம்... போயிடுங்க.

 
 

என் பேருக்கு ரொம்ப களங்கத்தை ஏற்படுத்திட்டு வர்றீங்க. அவங்களோட லிஸ்ட்டு என்னிடம் இருக்கு. அதன்படி நடவடிக்கை எடுப்பேன். சரியில்லாத மாவட்ட நிர்வாகத்தை மாற்றப்போகிறேன். புதிய மாநில நிர்வாகிகளை நியமிக்கப்போகிறேன். நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு பலரும் ஒதுங்கீட்டீங்க. மக்கள் நலத் திட்டப்பணிகளைத் தீவிரமாக செய்வீங்கன்னு எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் சரிவரச் செய்யலை.

ரஜினிகாந்த்
 
ரஜினிகாந்த்

நான் தெருவுக்கு வந்து பிரசாரம் செஞ்சாத்தான் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறேன். கொரோனா சீஸன் என்பதாலேயே யோசிக்கிறேன்” என்று ரஜினி காட்டமாகப் பேசியதாக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

அப்போது சில மாவட்டச் செயலாளர்கள், ``சமூக வலைதளங்களில் விஷுவல் மீடியாவில் பிரசாரம் செய்யலாம்” என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அதை ரஜினி ஏற்றுக்கொள்ளவில்லை. ``அதெல்லாம் முழுமையாகச் சரிப்பட்டு வராது. மக்கள் என்னை நேரில் எதிர்பார்ப்பார்கள்” என்றாராம்.

ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, போயஸ் கார்டன் வீட்டுக்கு வந்ததும், பத்திரிகையாளர்களிடம் பேசினார். ``அவுங்க கருத்தைச் சொன்னார்கள். என்னோட பார்வையை அவுங்ககிட்ட சொன்னேன். என்ன முடிவு எடுத்தாலும் கூட இருப்போம்னாங்க. என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரமோ முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன்” என்றார்.

 

https://www.vikatan.com/news/politics/what-happened-in-rajini-district-secretaries-meeting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, உடையார் said:

நான் அரசியலுக்கு வரமாட்டேன்னு ஒதுங்கிட்டீங்களா..!’ - ஆலோசனைக் கூட்டத்தில் கொதித்தாரா ரஜினி?

ஒரே ஒரு கேள்விதான்...?

தமிழக முதல்வராக ஆவதற்கு ரஜினிக்கு என்ன தகுதி உள்ளது...?

அவர் ஒரு இந்திய குடிமகன் போன்ற சாமானிய மக்களுக்கும் பொருந்தும் தகுதியை தூக்கி கொண்டு வராமல் தெளிவான பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்... 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொசுத்தொல்லை  தாங்கமுடியல சாமி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

                                               ரசிகன்

maxresdefault.jpg

அடுத்த பிறவியிலாவது மனுசுரா பொறங்கடா..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் முடிவை அறிவிப்பேன்... என,  முடிவை... அறிவித்த ரஜினி. 😜 🤣 

Link to comment
Share on other sites

 ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

ரஜினியுடன் தமிழருவி மணியன் சந்திப்பு

 

ரஜினிகாந்த் நேற்று முன்தினம் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மாவட்ட செயலாளர்களுடன் நடந்த சந்திப்பில் அவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தார்கள். நானும் எனது கருத்தை அவர்களுடன் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் உங்கள்கூட இருப்போம் என்று கூறினார்கள். நானும் எனது முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தெரிவிக்கிறேன் என கூறினார்.

இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் ரஜினியை காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் இன்று சந்தித்துள்ளார்.

அரசியல் பிரவேசம் குறித்து விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பேன் என ரஜினி கூறிய நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128176925_4140341066028070_9179383276204

அது போன வருசம் .. நான் சொல்லுறது இந்த வருசம் ..

128396938_4140317609363749_5075946017914

tenor.gif 

வாய்ப்பில்ல ராஜா ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

128429097_2042024269287804_1780543796225

Just now, புரட்சிகர தமிழ்தேசியன் said:

128429097_2042024269287804_1780543796225

hqdefault.jpg

என்ன ஏன்யா இங்க கூட்டி வந்த.?

☺️..😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரியில் கட்சி, தேர்தலில் வெற்றி: முற்றுப்புள்ளி வைத்த ரஜினி

spacer.png

 

அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதன்பிறகு கடந்த பிப்ரவரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் முதலமைச்சராக மாட்டேன் எனவும், நல்லவர் ஒருவரை முதல்வராக்குவேன் எனவும் தெரிவித்தார். ஆனால், ரஜினிகாந்த்தான் முதல்வராக வேண்டும் என அவரது ரசிகர்கள் வலியுறுத்தினர்.

சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ரஜினி கட்சி ஆரம்பிப்பதும் தள்ளிப்போனது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால், கொரோனா காலத்தில் மருத்துவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்துவதாக ரஜினி பெயரில் கடிதம் வெளியானது. அந்த அறிக்கையை மறுத்த ரஜினி, அதில் உள்ள மருத்துவர் ஆலோசனை சம்பந்தப்பட்ட வரிகள் மட்டும் உண்மைதான் என்று தெரிவித்தார். இதனால் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது.

 

இதனிடையே மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30ஆம் தேதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தான் என்ன முடிவு எடுத்தாலும் பின்னால் நிற்பதாக நிர்வாகிகள் தெரிவித்தாகவும், தன்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என அவர் எப்போது வேண்டுமானாலும் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் அரசியல் கட்சி தொடர்பான அனைத்து தகவல்களுக்கும் ரஜினிகாந்த் இன்று (டிசம்பர் 3) முற்றுப் புள்ளிவைத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த், “ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல” என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இணைக்கப்பட்ட அறிக்கையில், “வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் வெற்றிபெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, சாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்..அதிசயம் நிகழும்” என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்பதை ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.


 

https://minnambalam.com/politics/2020/12/03/31/actor-rajinikanth-anounce-political-party-start-janaury

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பாஜக பிரமுகர்!

 

spacer.png

பாஜகவில் இருந்து வந்த அர்ஜுன்மூர்த்தியை தான் ஆரம்பிக்கும் கட்சிக்கு நிர்வாகியாக நியமித்துள்ளார் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த் வரும் ஜனவரி மாதம் அரசியல் கட்சி ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்து, அதுபற்றிய அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவோம் என்ற தகவலை பதிவிட்டிருந்தார். உடல்நிலை காரணமாக அரசியலுக்கு வரமாட்டேன் என்ற அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்த்த நிலையில், ரஜினியின் அரசியல் வருகை அறிவிப்பு அவரது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு மிகப்பெரிய பணிகள் நடைபெற வேண்டியுள்ளதுதான் தாமதத்திற்கு காரணம் என விளக்கினார் ரஜினிகாந்த். கட்சிப் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டதாகத் தெரிவித்த அவர், “கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருக்கிறேன். கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன்மூர்த்தி நியமிக்கப்படுகிறார்” என்ற முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார்.

 

இந்த நிலையில் அர்ஜுன்மூர்த்தி சில நாட்களுக்கு முன்பு வரை பாஜகவில் இருந்தவர் என்ற தகவலும் வெளிவரத் துவங்கியது. பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவராக இருந்துவந்த அர்ஜுன் மூர்த்தி, வேல் யாத்திரை போராட்டங்களிலும் தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த நவம்பர் 27ஆம் தேதி பாஜகவின் பொதுச் செயலாளராக சி.டி.ரவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் பாஜகவிலிருந்து விலகி ரஜினியுடன் கைகோர்த்துள்ளார். பாஜகவின் அறிவுஜீவிப் பிரிவின் தலைவர் என்று வைத்திருந்த ட்விட்டர் பயோவை, தற்போது தலைவருடன் இருக்கிறேன் என Now with Thalaivar என்று மாற்றியுள்ளார் அர்ஜுன்மூர்த்தி. அத்துடன் தலைவருக்கு என் அனேக கோடி வணக்கங்களும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் செயல்படுகிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், தற்போது பாஜகவைச் சேர்ந்தவரையே நிர்வாகியாக நியமித்தது அதனை உறுதிப்படுத்தும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டப்படுகிறது.

மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் அணிச் செயலாளர் சு.ஆ.பொன்னுசாமி, “ரஜினியின் முடிவிற்கு பின்னால் பாஜகவின் தூண்டுதல் இருக்கிறது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் அரசியல், ஆட்சி மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை தான். ஆனா பாஜகவின் மனசாட்சியாக ரஜினி இருக்க நினைத்தால் மக்களின் மனசாட்சி வேற மாதிரி இருக்கும்” என்றும் கடுமையாக விமர்சித்தார்.


 

 

https://minnambalam.com/politics/2020/12/03/37/bjp-leader-join-with-rajinikanth-party

 

Link to comment
Share on other sites

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு

  by : Yuganthini

http://athavannews.com/wp-content/uploads/2020/12/rajani-720x450.jpg

நடிகர் ரஜினிகாந்த், ஜனவரி மாதமளவில் அரசியல் கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ரஜினி, தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.

ஆனாலும் அரசியல் கட்சி  ஆரம்பிப்பது  தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடாமல்  அமைதியாக இருந்து விட்டார். விரைவில் முடிவு எடுப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது, ருவிட்டர் பக்கத்தில் அரசியல் பிரவேசம் குறித்து பதிவேற்றியுள்ளார்.

குறித்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது,  எதிர்வரும்  சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப்பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச்சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம்” என குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சி ஆரம்பிக்கப்படும் நாள் குறித்து ரஜினிகாந்த் அறிவிப்பு | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

மிகவும் சரி. நல்ல நகைச்சுவைகள் நிச்சயம் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

இவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் காற்றில் பறக்க போகின்றது, 😭

என்றாலும் இவரின் வருகை BJP தூண்டுதல்களே😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினி கட்சி அறிவிப்பு.!? கமலுடன் கூட்டணியா.!?யார் காரணம்.!? ரவீந்திரன் துரைசாமி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இனி... தமிழக அரசியல், நல்ல தமாசாக இருக்கப் போகுது. 😄

மீம்ஸ் தயாரிப்பவர்களுக்கு...   “ஓவர் ரைம்”    பார்க்கிற அளவுக்கு, பயங்கர  வேலை இருக்கு. 🤣

Bild

Link to comment
Share on other sites

ரஜனி தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு நடிகரும் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் செய்யாமல் தன் போலி கதாநாயக பிம்பத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியும் என்ற நப்பாசை தகர வேண்டும். இது ரஜனிக்கு மட்டுமல்ல கமலஹாசனுக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.