Jump to content

அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் – ரஜினி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ரஜனி தேர்தலில் படுதோல்வி அடைய வேண்டும். இனி வரும் காலங்களில் தமிழகத்தில் எந்தவொரு நடிகரும் மக்கள் மத்தியில் இறங்கி அரசியல் செய்யாமல் தன் போலி கதாநாயக பிம்பத்தை வைத்துக் கொண்டு தேர்தலில் வெல்ல முடியும் என்ற நப்பாசை தகர வேண்டும். இது ரஜனிக்கு மட்டுமல்ல கமலஹாசனுக்கும் பொருந்தும்.

ரஜனி சாருக்கு இப்பிடி ஐடியா இருக்கோ என்னமோ?!

Link to comment
Share on other sites

  • Replies 80
  • Created
  • Last Reply

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Paanch said:

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

பாஞ்ச்  அண்ணை.... ரஜனி ரசிகர் போல் உள்ளது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

இப்படித்தான் சிறீலங்காவில் சனாதிபதி வேட்பாளராக கோத்தபாய அறிவிக்கப்பட்டபோது பலரும் கொதித்தெழுந்தார்கள், கமடியும் பண்ணினார்கள், 

அந்தாள் இப்போ சனாதிபதி.

அநேகமாக யாழில் கருத்து எழுதிய எல்லாருமே கோட்ட அபய வெல்லப் போகிறார் என்றே எழுதினார்கள் என்றே நியாபகம்.

சிலர் வென்றால் தமிழருக்கு (எதிர் மறையாக) நல்லது நடக்கும் என எழுதினார்கள்.

நான் உட்பட சிலர் - வென்றால் மக்கள் மீதான அழுத்தம் கூடும், மாவீரர் தினமும் தடைப்படும். சிங்கள மயமாதல் கூடும்.  சர்வதேச அழுத்தம் ஒன்றும் இராது, எனவே வெல்ல கூடாது என எழுதினோம்.

கோட்ட வென்ற பின் என்ன நடக்கிறது என்பதை எழுத வேண்டிய தேவை இல்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

(எனது விருப்பு வேறு)

 

Link to comment
Share on other sites

14 minutes ago, தமிழ் சிறி said:

பாஞ்ச்  அண்ணை.... ரஜனி ரசிகர் போல் உள்ளது. :grin:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

10 minutes ago, விசுகு said:

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

...

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்..

 

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

அதே பாதையால் தானே இவரும் வருகிறார்??

அதைத்தான் சொன்னேன் ராசா

10 minutes ago, Paanch said:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

 

வந்திட்டோம்  என்று  சொல்லுங்க

போனது போலவே (சொன்னது போலவே)

60 வருடத்துக்கு பின்னர்  வந்திட்டோம்  என்ற  சொல்லுங்க🤣

Link to comment
Share on other sites

29 minutes ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

ரஜனியை ரசிக்கும், அவரை சூப்பர் ஸ்ரார் என்று எல்லாம் போற்றும் அவரது தீவிர ரசிகர்கள் எல்லாம் 55 வயதையும் கடந்தவர்கள். அவர்களில் எத்தனை சதவீதம் இவருக்கு வாக்கு போடுவார்கள் என்று தெரியவில்லை. மிஞ்சினால் 3 வீதம் இருப்பார்கள். மிகுதி இருப்பவர்களில் இப்ப இருக்கும் எந்தக் கட்சியையும் நம்பாமல், ரஜனியால் மாற்றம் வரும் என்று நினைப்பவர்கள் ஒரு 2 வீதம் இருப்பார்கள் என நினைக்கின்றேன். ஆகக் குறைந்தது 5 வீதமாகினும் ரஜனி பெறுவார் என நினைக்கின்றேன்.

ரஜனி ஒரு வேளை தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதுவரைக்கும் பெரியளவில் அரசியல் கட்சி ஒன்றை சாராத, பிரபலமான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் இந்த நிலை மாறும். அது எல்லா பிரதானக் கட்சிகளையும் பாதிக்கும். 


எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நிழலி said:

 


எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

இந்த கூட்டணியின் வெற்றிக்காக மறைமுகமாக இறக்கபட்டவர்கள்தான்

“கூத்தாடிகள்” ரஜனி, கமலும் “கூத்து கட்டுபவர்” சீமானும்🤣.

ஆனால் சிலவேளை ரஜனியை, A டீமில் சேர்க்கவும் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

...எது எப்படியோ, அதிமுக + பா.ஜ.க வெல்வது உறுதி. 

இந்த கூட்டணி வெற்றியை உறுதி செய்யவே பாஜக. 'பி டீம்' (ரஜினி) இறக்கிவிடப்பட்டுள்ளார்.

இவரின் வேலை திமுக, மற்ற உதிரிக் கட்சிகளின் வாக்குகளை உள்வாங்கி குறைப்பது. 

ரஜினி குறூப்பின் பேச்சுக்களில் அதிமுக எதிர்ப்போ, அல்லது அதிமுக வில் ரஜினி பற்றிய விமர்சனங்களில் காரம் அதிகம் இருக்காது.

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

ரஜனி ஒரு வேளை தன்னை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்காமல், பொது வாழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இதுவரைக்கும் பெரியளவில் அரசியல் கட்சி ஒன்றை சாராத, பிரபலமான ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தால் இந்த நிலை மாறும். அது எல்லா பிரதானக் கட்சிகளையும் பாதிக்கும். 

சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.

Link to comment
Share on other sites

5 minutes ago, ராசவன்னியன் said:

 

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

பா.ஜ.க வின், அமித் ஷாவின் முழு இலக்கும் இது தான். இதற்காகத்தான் இவர்கள் இறக்கி விடப்படுகின்றார்கள்.இவர்களின் வெற்றியடையும் பட்சத்தில் திராவிடம் மட்டுமன்றி தமிழ் தேசியத்தையும் தமிழகத்தில் இருந்து வேரோடு சாய்க்க முயற்சி எடுக்கப்படும்.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

சகாயத்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம்.

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

இந்த கருத்தை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்த்திருக்கவில்லை 
சீமான் இனி எவ்வளவு விட்டுக்கொடுப்பு செய்தாலும் ... தலைவர் பிரபாகரனை 
எவ்வாறு ஒரு சர்வாதிகாரியாக சித்தரித்து ஒரு மாய விமபத்தை தோற்றுவித்தார்களோ 
அதே போலதொரு பிரிவினைவாதி என்றொரு மாய தோற்ற்றம் சீமான் மேலே உருவாக்கி 
எந்த வாக்கையும் பெறமுடியாத ஒரு நிலையை உருவாக்கி கொண்டு இருப்பார்கள்.

சீமான் புத்திசாலி என்றால் சகாயம் போன்றவர்களை முதல்வர் வேட்ப்பாளர்கள் ஆக்கி 
யாரும் எதிர்பாராத ஒரு அரசியல் நகர்வை செய்யவேண்டும் இல்லாதுபோனால் 
அரசியல் பலம் என்பது  ரஜனி கமல் போன்றவர்களுக்கு வாக்கு போட தாயராக இருக்கும் 
தமிழக மக்கள் மத்தியில் இருந்து பெறுவது என்பதே முடியாமல் போகும் ஒன்றுதான். 
இதை நான் கடந்த தேர்தலில் கூட எனக்குள் எண்ணி இருந்தேன்.

ஒருவேளை வென்றால் கூட ஒரு அரசை கொண்டு செல்லக்கூடிய திறமை சீமானிடம் 
பெரிதாக இல்லை இனி வரும் முதல்வர் தென்மாநில அரசுகளுடன் ஒரு நெருங்கிய உறவை 
பேணி இந்தியாவின் தென்மாநில அரசுகள் ஒரு கூட்டை உருவாக்க கூடியவராக இருக்கவேண்டும். 
அது தென்மாநிலத்துக்கு மட்டும் அல்ல இந்தியாவிற்கே இப்போதைய சூழலில் முக்கியமானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசின் மத்திய அரசின் அதிகாரவர்க்கத்தின் வெளிப்படையான குறிக்கோள்தான்..

தமிழ்நாட்டிற்கான தனித்தன்மையை, மத்திய அரசின் கொள்கைகளை/திட்டங்களை எதற்கெடுத்தாலும் எதிர்க்கும் வலுவை நீர்த்துப்போக செய்வது.

அதில் சீமானின் தமிழ்த்தேசிய கொள்கையும் அடங்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

D டீமும் இறங்கீட்டா.

பலே பலே அமீத்ஜி

C ரீம் சரியான வீக்  வாக்குகளை பிரிக்க போதாது ஆரவாரம் மட்டும் தான். அதனால்  பாஜக இவரையும் D இறக்க போகிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிக்கூடமே போகேல்லை பிரின்ஸ்சிபல் ஆக நினைக்குது பரட்டை. நான் சொல்லுறது இண்டு வரைக்கும் ஒரு அரசியல் மேடையே ஏறவில்லை. நினைப்பு முதல்வர்.தமிழ் ஒழுங்காகவே வாயிலை வராது  ஆனால் தமிழ்நாட்டுக்கு முதல்வர் நினைப்பு...சீமானை விஜயலட்சிமியுடன் நக்கலடித்தவர்கள். கூத்தாடி இந்த பரட்டையின் அந்தக்கால காம லீலைகளை யாருக்காவது தெரியுமா? இனி வரும் காலங்களில் எழுத்துருவில் வாசித்து மகிழலாம்.
தமிழ்நாட்டு மக்கள் உண்ணும் உணவை விட கேளிக்கைக்கும் பகட்டுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். ஆகவே பச்சைத்தமிழன் பரட்டைதான் அடுத்த தமிழ்நாட்டு முதல்வர்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விளங்க நினைப்பவன் said:

C ரீம் சரியான வீக்  வாக்குகளை பிரிக்க போதாது ஆரவாரம் மட்டும் தான். அதனால்  பாஜக இவரையும் D இறக்க போகிறது

அப்போ நீங்கள் காங்கிரஸ் ஆதரவாளர். 🤓

Link to comment
Share on other sites

3 hours ago, ராசவன்னியன் said:

ம்ம் அவ்வளவு நம்பிக்கை..!

இந்த விசிலடிச்சான் குஞ்சுகளை வைத்து எடை போடாதீர்கள்.

காலங்காலமாய் திராவிடக் கட்சிகளுக்கு கண்ணை மூடி வாக்களிக்கும் சனம் மிக அதிகம். அவர்களின் வாக்கு வங்கி(கருணாநிதி, எம்ஜிஆர்) அப்படியேதான் உள்ளது.

உங்களைப் போலவேதான் நாங்களும் எண்ணியிருந்தோம்... ஒரு கல்லை வைத்து இதுதான் தமிழ் அரசுக்கட்சி என்று சொன்னாலே போதும், வேறெந்தக் கட்சிகளையும் திரும்பிக்கூடப் பார்க்காமல், கண்ணைத் திறந்துகொண்டே தங்கள் வாக்குகள் அத்தனையும் தமிழ் அரசுக்கட்சிக்கு செலுத்திய மக்கள்தான் இன்று டக்ளசு, அங்கயன், பிள்ளையான், கருணா என்று அவரவர்கள் தங்களுக்கென்று உருவாக்கியுள்ள கட்சிகளுக்கு ஆதரவளித்து ஆனந்தக் கூத்தும் ஆடுகிறார்கள். 😲   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

இந்த கூட்டணி வெற்றியை உறுதி செய்யவே பாஜக. 'பி டீம்' (ரஜினி) இறக்கிவிடப்பட்டுள்ளார்.

இவரின் வேலை திமுக, மற்ற உதிரிக் கட்சிகளின் வாக்குகளை உள்வாங்கி குறைப்பது. 

ரஜினி குறூப்பின் பேச்சுக்களில் அதிமுக எதிர்ப்போ, அல்லது அதிமுக வில் ரஜினி பற்றிய விமர்சனங்களில் காரம் அதிகம் இருக்காது.

திராவிட சித்தாந்தையும், பெரியாரிசத்தையும் தமிழகத்தில் ஒழித்துக் கட்டி, மனு நீதியை புகுத்துவதே இந்த ஆன்மீக அரசியல் முன்னெடுப்பு.

வன்னியரின் கூற்றில் ஒவ்வொன்றிலும் ரஜனி என்பதற்கு பதிலாக, சீமான் என்று போட்டுப்பார்த்தாலும் அப்படியே பொருந்துகிறது 😀.

அமித்சாவை சந்திக்காத போதும் ரஜனியை பாஜக கையாள் என கண்டு கொள்ளும் அதே எடுகோள் நாம் தமிழருக்கும் பொருந்தும். 

சீமான் இரவில் போய் ஏன் எடப்பாடியை சந்தித்தார்?

அவர் மேல் ஏன் தேசிய பாதுகாப்பு சட்டம்/குண்டாஸ் பாயவில்லை?

8 வருடமாக ஆட்சியில் இருக்கும் அதிமுகவை விட ஏன் திமுகவை பலமடங்கு விமர்சிக்கிறார்? 

ரஜனி இரு அணி வாக்குகளையும் சமமாக பிரிக்க கூடும். அதனால்தான் ரஜனியை A டீமில் சேர்க்க இன்னும் நேரம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

ஆனால் சீமான் மிக அதிகளவில் திமுகவுக்கு வரும் வாக்குகளையே பிரிப்பார்.

சீமான் எதிர் (தெலுங்கு வாக்குகளை) தெலுங்கு சமிதி, துரைசாமி வகையறாக்கள், திமுகவிடம் இருந்து நகர்தி பாஜக பக்கம் கொண்டு போய்விடுவார்கள்.

ஆக மொத்தத்தில் எல்லா பக்கத்தாலும் திமுகவை வச்சு செய்கிறார் அமித் ஜி.

அப்படியே அழகிரியையும் அவிழ்த்து விட்டால்....

 

2 hours ago, ராசவன்னியன் said:

மோடி அரசின் மத்திய அரசின் அதிகாரவர்க்கத்தின் வெளிப்படையான குறிக்கோள்தான்..

தமிழ்நாட்டிற்கான தனித்தன்மையை, மத்திய அரசின் கொள்கைகளை/திட்டங்களை எதற்கெடுத்தாலும் எதிர்க்கும் வலுவை நீர்த்துப்போக செய்வது.

அதில் சீமானின் தமிழ்த்தேசிய கொள்கையும் அடங்கும்.

மத்திய அரசின் கொள்கையை அற்புதமாக சொல்லி உள்ளீர்கள்.

ஒரு கொள்கை தமக்கு எதிராக திரும்புமாப்போல் தெரிந்தால் அந்த கொள்கையின் தலைமையில் தமது ஆளையே அமர்த்தி, அந்த கொள்கை ஓரளவுக்கு மேல் வீரியம் ஆகாமல் பார்த்துக்கொள்வது.

கஸ்மீர் பிரச்சனையில் பரூக், ஒமர் அப்துல்லாவை, திராவிட நாட்டு கொள்கையில் அண்ணா, கருணாநிதியை, ஈழப்போராட்டத்தில் பிரபாகரன் தவிர்ந்த ஏனைய போராளிக்குழு தலைவர்களை, தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தில் சீமானை. 

இந்த “தலையில் தடவும்” நடைமுறைக்கு பலியாகாதவர்கள் பெரியாரும், பிரபாகரனும் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

பா.ஜ.க வின், அமித் ஷாவின் முழு இலக்கும் இது தான். இதற்காகத்தான் இவர்கள் இறக்கி விடப்படுகின்றார்கள்.இவர்களின் வெற்றியடையும் பட்சத்தில் திராவிடம் மட்டுமன்றி தமிழ் தேசியத்தையும் தமிழகத்தில் இருந்து வேரோடு சாய்க்க முயற்சி எடுக்கப்படும்.

சகாயம் பிஜேபி போன்ற வகுப்பு வாத மதவாத கட்சிக்கு சார்பான ரஜனியின் கட்சியில் இணைவார் என நினைக்கவில்லை. ஆனால் சகாயம் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அது ஏனைய அனைத்துக் கட்சிகளுக்கும் சவாலாக அமையும்.

சகாயத்தை அறிவித்தால் நானே “மூக்கை பிடித்துகொண்டு” நாதவை ஆதரிப்பேன்.

ஆனால்....

சகாயம் இனத்தூயமை வாதத்தில் நாம்தமிழரிடம் ஒத்து போவார் போல தெரியவில்லை.

சீமான் ஒரு மாற்று அதிகார மையத்தை அனுமதிப்பார் போலவும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் : தமிழ்நாட்டுக்குத் தேவையே இல்லாத ஆணி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

விசுகு அவர்களையும் என்னோடு இணைத்து ஒரு ஊட்டம் இட்டால் பெரு மகிழ்ச்சியடைவேன். 😂

 

11 hours ago, விசுகு said:

எழுதி  வைத்துக்கொள்ளுங்கள்

ரஐனி அனைவரது எதிர்பார்ப்புக்களையும் தாண்டி 

பெரும்  எடுப்பில் முன்னேறுவார்

தமிழகம் இன்னும்  அங்கேதான்  நிற்கிறது

அதை  அவர் பயன்படுத்திக்கொள்வார்

பாஞ்ச்  அண்ணே.... நான் கருத்து எழுதிய பின், விசுகர் தனது பதிவை போட்டதால்...
அவரையும் உங்களுடன்  சேர்த்து, எழுத முடியாமல் போய் விட்டது.

"லேற்றா வந்தாலும்.. லேற்றஸ்ராக"  வருவேன்.. என்று, ரசனி  சொல்லியபடி..   
வந்த விசுகருக்கும், வயசு 60 க்கு மேல். :grin:

ரஜனி ரசிகர்கள்... எல்லோரும் "பென்ஷன்" எடுத்த ஆட்கள் என்பதை....
யாழ். களத்தில்,  நீங்கள் இருவரும் நிரூபித்து விட்டீர்கள். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தாமரைக்கும் அருணாச்சலம் ஐயாவுக்கும் என்ன தொடர்பு?! 🤣
    • கொழும்பு மக்கள் செல்லமாக OGF  என அழைக்கும் இவ்விடத்தில் - எல்லாமுமே விலைதான்.  டிசைனர் வகைகள் வெளிநாட்டு விலையிலும், உணவு/உள்ளூர் பொருட்கள் வெளியில் விற்பதை விட இரு மடங்கு விலையிலும் இருந்ததாக நினைவு.  பல்கனியுடன் கூடிய உணவு/பார் பகுதி உண்டு. குடிமக்கள் சூரியன் மறைவதை ரசித்தபடி லாகிரி வஸ்தாதுகளை உறிஞ்சுகிறார்கள்.
    • 🤣 விட்டா தூக்கி கொண்டு போய் கோம்பையன் மணலில் வச்சிடுவியள் போல கிடக்கு🤣. இல்லை…காலமாகிய அம்மாவின் பென்சன் கணக்கு உண்மையில் மூடப்பட்டுவிட்டதை உறுதி செய்யச் சென்றேன். 
    • ஆறு பெண்கள் கலந்து கொண்டார்கள் என்று எழுதினால் குறைந்தா போய்விடும்
    • மட்டக்களப்பு: நிலப்பயன்பாடும் – சனத்தொகை வளர்ச்சியும் March 27, 2024 — அழகு குணசீலன் — மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவுகின்ற நிலத்தட்டுப்பாடு, குறைந்தளவான நிலப்பரப்பில் வாழ்கின்ற மக்கள் செறிவை -அடர்த்தியை அதிகரித்திருக்கிறது. இது வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களுக்கும், வரையறுக்கப்படாத அல்லது கட்டுப்படுத்த முடியாத மக்கள் தேவைக்கும் இடையிலான சமநிலைத்தளம்பல். இந்த நிலையானது தேசிய இயற்கை வளங்களை – நீண்ட காலமாக சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு ஏற்ப முகாமைத்துவம் செய்யத்தவறியதன் விளைவு. மனித சக்திக்கு அப்பாற்பட்டு இயற்கை வளங்களை அதிகரிக்கமுடியாத ஜதார்த்தத்தில், மனித சமூகம் தான் சார்ந்த சமூக, பொருளாதார வாழ்வியல் பண்புகளில் காலத்திற்கு ஏற்ப ஒரு நெகிழ்ச்சி போக்கை கைக்கொள்வதன் மூலமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பிரச்சினையை பின் போடமுடியும். இதற்கான கொள்கைவகுப்பு, அரசியல் நிர்வாக முகாமைத்துவம் மட்டக்களப்பில் இருக்கவில்லை. காலத்திற்கு ஏற்ற சமூக, பொருளாதார வாழ்வியல் பண்பியல் மாற்றத்தில் மட்டக்களப்பின் இன,மத, கலாச்சார, பண்பாட்டு பாரம்பரியங்கள் நெகிழ்ச்சியற்ற இறுக்கமான போக்கை கொண்டிருப்பது நிலநெருக்கடியை மேலும் ஊக்கப்படுத்துவதாக உள்ளது. மட்டக்களப்பின் சமூகக்கட்டமைப்பு சார்ந்த பொருளாதார வாழ்வியலில் பிரதான பொருளாதார நடவடிக்கைகளாக விவசாயம், மீன்பிடி, வியாபாரம் உள்ள நிலையில் மக்கள் அதற்கு பொருத்தமான இடத்தை பொருளாதார வாழ்வியல் சார்ந்து தெரிவு செய்கிறார்கள். இது மானியசமூதாயம் முதலான வரலாற்று போக்கு. கடற்றொழிலாளர்களை எவ்வாறு வயல்வெளிகளில் குடியேற்ற முடியாதோ அவ்வாறு நகரம்சார் வியாபார சமூகம் ஒன்றை கடற்கரைகளிலும், விவசாயம்சார் நிலங்களிலும் குடியேற்ற முடியாது. அதே வேளை மறுபக்கத்தில் மக்கள் தொகை அதிகரிப்பு சேவைகள் துறையில் பெரும் வீக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் மூலமான வேலைவாய்ப்புகள் காரணமாக மக்கள் நகரம்சார்ந்து வாழவேண்டிய பொருளாதார கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வர்த்தக சமூகம் ஒன்று நுகர்வோர் இல்லாத அல்லது குறைவாக உள்ள நிலையில் எவ்வாறு வியாபாரம் செய்ய முடியும். விவசாயம், மீன்பிடி என்பனவும் இன்று தன்னிறைவு பொருளாதார நடவடிக்கைகளாக இல்லாமல் வர்த்தக நோக்கிலான சந்தை பொருளாதாரமாக மாறிவிட்டன. அத்துடன் சமூகவளர்சிக்கு ஏற்ப சமூகசேவைகள் கல்வி, வைத்தியம், போக்குவரத்து மற்றும் நுகர்வு என்பனவற்றின் சமகால, எதிர்கால தேவைகருதி மக்கள் அவை இலகுவாகவும், தரமாகவும், தாராளமாகவும் கிடைக்கக்கூடிய இடங்களை வாழ்வதற்கு தெரிவு செய்கின்றனர். இந்த நிலை சனத்தொகை அடர்த்தியை குறிப்பிட்ட பகுதிக்குள் அதிகரிக்க காரணமாகின்றது . மக்கள் இயல்பாகவே சமூக , பொருளாதார வசதி வாய்ப்புகள் குறைந்த இடங்களில் வாழவும் ஆர்வம் காட்டுவதில்லை. இவை எல்லாம் அரசியல் பேசுகின்ற காரணங்களை விடவும் முக்கியமானவை. அரசியல் தனக்கு தேவையானதை பேசுகிறது. மக்கள் தமக்கு தேவையானதை, பொருத்தமானதை, வசதியானதை, விருப்பமானதை செய்கிறார்கள். மக்களுக்கு வழிகாட்ட முடியாத அரசியல்வரட்சி  குறுக்கு வழிகளை நாடுகிறது.  மட்டக்களப்பு மாவட்டத்தின் 346 கிராமசேவகர் பிரிவுகளில் 49 கிராமசேவகர் பிரிவுகள் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நான்கு பிரதேச செயலகங்களுக்குள் உட்பட்டவை. மிகுதி 297 கிராமசேவகர் பிரிவுகள் தமிழ் மக்களை பெரும்பான்மையாக கொண்ட பத்து பிரதேச செயலகங்களுக்குள் அடங்குகின்றன. இதன் விகிதாசாரம் 6:1. மட்டக்களப்பு மாவட்டத்தின் 965 கிராமங்கள் இந்த  346 கிராமசேவகர் பிரிவுகளுக்குள் பங்கிடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 65 கிராமங்களை முஸ்லீம் கிராமங்கள் என்று அடையாளப்படுத்தினாலும் 900 கிராமங்கள் தமிழ், சிங்கள கிராமங்கள். இதன் விகிதாசாரம் ஏறக்குறைய 15:1. இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலப்பயன்பாட்டு பாணி. மாவட்டத்தின் மொத்த 2,854 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பில் காட்டுவள நிலங்கள் 40 வீதம். விவசாயநிலங்கள் 37 வீதம். ஆக, 75 வீதத்திற்கும் அதிகமான  நிலங்கள் இந்த இரண்டு தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்ற நிலையில் எஞ்சி இருப்பது 25 வீதத்திற்கும் குறைவான நிலப்பரப்பு மட்டுமே.  இந்த 25 வீதத்தில் பயன்பாடின்றி அல்லது பயன்பாட்டிற்கு பொருத்தமற்ற தரிசு நிலங்களாக உள்ள நிலப்பரப்பு 6வீதம். நீர்நிலைகள் 5வீதம், சதுப்பு நிலங்கள் 2வீதம்,  வீட்டு வசதி, வீட்டு தோட்டங்களுக்கான நிலம் 5வீதம். ஆக, இன்னும் விவசாயம் செய்யக்கூடிய, பயன்பாட்டிற்கு உட்படுத்தப்படாத நிலப்பரப்பு 5 வீதம் மட்டுமே உள்ளது. மேலும் விவசாய நிலங்கள் 37 வீதம் தனியாருக்கு சொந்தமானவை என்பதும், 40 வீதமான வனபரிபாலன, வனவிலங்கு புகலிட பாதுகாப்பு நிலங்கள்  அரச நிலங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் கொண்டுள்ள 120 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது, கடற்கரையோர, சுற்றாடல் பாதுகாப்பு, உல்லாசப்பிரயாணத்துறை விருத்திக்கானது. உள்நாட்டு நீர்நிலைகளைப் பொறுத்தமட்டில் குளங்கள், வாவிகள், ஆறுகள்,தோணாக்கள்…. என்று 342 நீர்நிலைகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 342 இல் பத்துக்கும் குறைவான சிறிய நீர்நிலைகளே நான்கு முஸ்லீம் பிரதேச செயலகப் பிரிவிலும் உள்ளன. மிகுதி 330 க்கும் அதிகமானவை தமிழ்மக்களின் விவசாயவாழ்விடங்களுக்கு உட்பட்டவை. அதிகமானவை விவசாய உற்பத்தி, மீன்பிடி, கால்நடை வளர்ப்போடு தொடர்பு பட்டவை. பட்டிருப்பு தொகுதி முற்று முழுதாகவும், மட்டக்களப்பு தொகுதியின் மேற்குகரை விவசாய உற்பத்தி பெருநிலப்பரப்பில்  99 வீதமும் வரலாற்று காலம் முதல் தமிழர் வாழ்விடங்கள். அதேபோன்று எழுவான்கரையில் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பிரதேசங்களை சார்ந்த நிலப்பரப்பில் முஸ்லீம் மக்களும், ஏனைய எழுவான் பகுதிகளை தமிழ்மக்களும் சேர்ந்து நிர்வகித்தும், வாழ்ந்தும் வருகின்றனர். குறிப்பாக மண்முனை, கோறளை, ஏறாவூர் பற்றுக்களில் பல பண்டைய சிறிய முஸ்லீம் கிராமங்கள் அங்கும், இங்கும் சிதறிக்கிடக்கின்றன.  இதில்  மன்னம்பிட்டி பிரதேச தமிழ், முஸ்லீம் பாரம்பரிய கிராமங்களும் அடங்கும். இந்த சிதறல் மன்னம்பிட்டி பிரதேசம் பொலனறுவை மாவட்டத்துடன் இணைக்கப்படும் வரை மகாவலி வரை நீண்டுகிடந்தது. அதே போன்று 1961 இல் அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒருபகுதி அந்தமாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. உண்மையில் மட்டக்களப்பு மாவட்டம் தனது பூர்விக நிலப்பரப்பில் ஒரு பகுதியை வடமேற்காகவும், தெற்காகவும் இழந்து நிற்கிறது.  மட்டக்களப்பு மாவட்ட சனத்தொகை வளர்ச்சியை உற்று நோக்குகையில் பொதுவாக காணிப்பிரச்சினையை ஒரு பொதுவான காரணமாக கொள்ள முடியாது. ஆனால் சில தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் இது ஒரு சிறப்பு பிரச்சினை என்பதையும் மறுப்பதற்கில்லை. கடந்த நான்கு தசாப்தங்களை நோக்கினால் 1981 இல் 2,37,787 ஆக இருந்த தமிழர் சனத்தொகை 2012 இல் 3,82,300 ஆக அதிகரித்துள்ளது. இது சுமார் 1,50,000 பேரினால் அதிகரித்துள்ளது.  1981 இல் முஸ்லீம்களின் சனத்தொகை 78,829 இல் இருந்து 2012 இல் 1,33,844 ஆக உயர்ந்துள்ளது. இது சுமார் 50,00 பேரினால் அதிகரித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி சனத்தொகை வளர்ச்சி ஏறக்குறைய ஒரு வீதமாக இருக்கின்ற நிலையில் இதை காணிநெருக்கடிக்கான முக்கிய காரணமாக சமகாலத்தில் கொள்ள முடியாது. இதனால் தான் வாழ்வியல் முறை, வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற சமூக, பொருளாதார காரணிகள் முக்கியம் பெறுகின்றன. இந்த வளர்ச்சிக்கு-தேவைக்கு சமாந்தரமாக காணி, வீடமைப்பு வசதிகள், சனத்தொகை செறிவை ஐதாக்குவதற்கான திட்டமிடல் நடவடிக்கைகள் தேசிய, மாகாண, மாவட்ட மட்டத்தில் செய்யப்படவில்லை. தமிழ்ஆயத அமைப்புக்களின் வன்முறையினால் வாழ்விடங்களை விட்டுவெளியே முஸ்லீம் மக்கள்  விரும்பினால் அந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும். குறிப்பாக பாவற்கொடிச்சேனை, உறுகாமம் போன்றவற்றை குறிப்பிடலாம்.  அதேபோல் புல்லுமலை, தியாவட்டவான், புனானை போன்ற பகுதிகளில் இருந்து வெளியேறிய மக்களும் விரும்பினால் மீள்குடியேற வாய்ப்பளிக்கப்படவேண்டும். இங்கு இவர்கள் தங்கள் காணி உரிமையை உறுதிப்படுத்துவதற்கான விதிவிலக்கான நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியது அவசியம். இதற்கான வழிவகைகளை அரசியல் ஊடாகத்தேடாது “எங்கள் பங்கைத்தானே கேட்கிறோம்” என்பதால் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது. முஸ்லீம் தலைமைகள் “பங்கு” என்று எதைக் கருதுகிறார்கள்? மட்டக்களப்பு மாவட்ட மொத்த நிலப்பரப்பில், சனத்தொகை விகிதாசாரத்திற்குரியதா? இல்லை பாவனைக்குரியதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலப்பரப்பில் ஒரு பங்கா?  அல்லது தமிழ்த்தரப்பு வன்முறையினால் இடம்பெயர்ந்தவர்கள் மீளக்குடியேறுவதா? அல்லது தவறான வழியில் தனிநபர் காணிகள் எடுக்கப்பட்டிருந்தால் அதுவா?  அல்லது நீங்கள் பங்கு என்று குறிப்பிடுவது மலையும், காடும், கடலும் கொண்ட நிலப்பரப்பில் ஒரு பங்கா?   இந்த கேள்விகளுக்கு ஒரு பதில் இருந்தால் அதில் இருந்து நகரமுடியும். அவ்வாறு இல்லாமல் நஸீர் அகமட்டின் வார்த்தைகளை மீள உச்சரிப்பதாலோ, அவரின் மொத்த சனத்தொகை அடிப்படையிலான காணிப்பங்கீட்டை கோருவதனாலோ இதற்கு தீர்வு காண முடியாது. கல்முனை தமிழ் பிரதேச தரம் உயர்வுக்கு ஹரிஷ் போடுகின்ற தடைகளை முஸ்லீம் காங்கிரஸ் அரசியல் பயங்கரவாதம் என்று சொல்லலாமா…..?    https://arangamnews.com/?p=10587  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.