Jump to content

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  இந்தியாவுக்கு  வழங்குவது  தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்.

நல்லாட்சி அரசாங்கம் செய்த தவறையே தற்போதைய அரசாங்கமும் தொடர்கிறது என வன்முறைகளை தோற்கடிக்கும் மக்கள் இயக்கத்தின் ஒருங்கினைப்பாளர் உலப்பனே சுமங்கல தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கிழக்கு முனையம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - உலப்பனே சுமங்கல தேரர் | Virakesari.lk

Link to comment
Share on other sites

உளப்பனே சாது, இலங்கைக்கு 51 % இந்தியாவுக்கு 49 % . இதுதான் இலங்கை அரசின் முடிவு. இது எல்லோருக்கும் தெரிந்த விடயம். எதனை தரம்தான் சொல்ல வேண்டும். தலைக்குள்ள ஒரு நாசமும் கிடையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டாம் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa-400.png
 42 Views

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என்று அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்தத் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என அறிந்துகொள்ள முடிகின்றது. இதில் 49 வீதம் இந்தியாவுக்கும், 51 வீதம் இலங்கைக்கும் வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்குமுனையமும் 65 வீதம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது.

பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதைத் தவிர்த்துள்ளன. துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதிலிருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராயவேண்டும். தற்காலிக வருமானங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகால நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. இப்போதும்கூட துறைமுகத் தில்வரும் வருமானத்தில் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பாரிய நிதி மோசடி” என்றார்.

 

https://www.ilakku.org/துறைமுக-கிழக்கு-முனையத்த/

 
 
 
 
Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுக்க வேண்டாம் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa-400.png
 42 Views

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கு கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என்று அறிந்துகொள்ள முடிகின்றது. எனவே அந்தத் தவறை ஒருபோதும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸஅத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்களுக்கான நிதியொதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்குக் கொடுத்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தயாராகியுள்ளது என அறிந்துகொள்ள முடிகின்றது. இதில் 49 வீதம் இந்தியாவுக்கும், 51 வீதம் இலங்கைக்கும் வழங்கப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது. தெற்குமுனையமும் 65 வீதம் இந்தியாவுக்கே வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அபிவிருத்திகளில் இலங்கைக்கு கிடைத்த இலாபம் ஒன்றுமே இல்லை. இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை இன்றும் நட்டத்தில் இயங்கிக் கொண்டுள்ளது. இந்நிலையில் துறைமுகங்களை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம். குறிப்பாக கிழக்கு முனையம் இலங்கைக்கு கிடைத்துள்ள முக்கிய வளமாகும். அதனை இந்தியாவுக்கு வழங்க வேண்டாம்.

மேலும் துறைமுகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 900 பேரளவில் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் துறைமுகம் முடக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளன. இதனால் இலங்கைக்கு வரும் கப்பல்கள் எண்ணிக்கை குறைவடையும் நிலைமை உருவாகியுள்ளது.

பிரதான சர்வதேச நிறுவனங்கள் இலங்கை வருவதைத் தவிர்த்துள்ளன. துறைமுகத்தின் கடன்கள் மாத்திரம் மொத்தக் கடன்களில் 24 வீதமாகும். இதிலிருந்து துறைமுகங்களை எவ்வாறு மீட்பது, அதற்கான வேலைத்திட்டம் என்ன என்பதை ஆராயவேண்டும். தற்காலிக வருமானங்களைக் கருத்தில் கொண்டு நீண்டகால நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது. இப்போதும்கூட துறைமுகத் தில்வரும் வருமானத்தில் சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தைப் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது பாரிய நிதி மோசடி” என்றார்.

 

https://www.ilakku.org/துறைமுக-கிழக்கு-முனையத்த/

 
 
 
 

இவங்கள் ஆட்சியில் இருந்தால் ஒரு கதை, வெளியே போனால் இன்னொரு கதை. அதுதான் நாடு இப்படி குட்டிசுவருகிப்போய் இருக்குது. ஒரு கொள்கை என்பது கிடையாது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.