Jump to content

குளிர்..... - நிழலி


Recommended Posts

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... -6 பாகை. வேலைக்கு  போகவே மனமில்லாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 11:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

குளிர்காலத்தில் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கும் பக்திப்பாடல்களும் அதன் நினைவுகளும் எப்பவும் இனிமையானவை.

நன்றி தோழர்

On 11/30/2020 at 11:30, ஈழப்பிரியன் said:

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

ஊரின் நினைவுகளும் அதன் மீதான தீராக் காதலும் அடி மனதில் எப்பவும் ஒரு மூலையிலிருந்து அருட்டிக் கொண்டு தானிருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.

On 11/30/2020 at 13:07, Kavallur Kanmani said:

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

குளிர்காலம் எப்பவுமே அழகானவை. ஒவ்வொரு வயதிலும் அதற்கே உரிய நிகழ்வுகளை எமக்குத் தந்து கொண்டுதானிருக்கும்.

வருகைக்கு நன்றி அக்கா.

On 11/30/2020 at 13:34, பசுவூர்க்கோபி said:

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

நன்றி பசுவூர்க்கோபி. 

பசுவூர் என்பது ஒரு ஊரின் பெயரா?

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:47, Justin said:

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

ஊரில் குளிர்காலம் என்றால் நிறைய மழையும் பெய்து கூதலும் இருக்கும். போர்த்துக் கொண்டு படுக்க சுகமான காலம். ஆனால் இங்கு குளிர் இருக்கு, ஆனால் கூதல் இல்லை.

On 11/30/2020 at 18:24, suvy said:

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

இங்கு குளிருடன் பனியும் சேர்ந்து வருவதால் ஆரம்பத்தில் சந்தோசமாகவும் பிறகு எப்படா இளவேனில் காலம் வரும் என்ற ஏக்கமாகவும் இருக்கும்.

வருகைக்கு நன்றி அண்ணா.

18 hours ago, கிருபன் said:

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

பனியை அடைவைத்து மரங்கள் இலையை பொரித்தெடுக்கும் காலத்துக்காக ஏங்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

இங்கு இன்றும் நல்ல பனி. முழு நிலாவும் சில நாட்களுக்கு முன்னர் தான் வந்தமையால் வெண்ணிற இரவுகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது இப்ப.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் குளிரும் மெல்லிய கூதல் காற்றும்

இஞ்சி தேநீரும் இதமாக சூடேற்றுகிறது

இங்கே 
புயல் வருமென புகையும் அடுப்பும்
கூப்பன் மாவில் குண்டான றொட்டியாக 
தேங்காய் சம்பலில் தேசிக்காய் புளியிலே 
மாசியும் மசிந்து மழையிலே வயிறு நிறைகிறது. 

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:11, நிழலி said:

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

அருமையான கவிதை👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குளிரில் இருந்து நிழல் சொன்ன கவிதை சூடாகவே இருந்தது.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.