Jump to content

குளிர்..... - நிழலி


Recommended Posts

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... -6 பாகை. வேலைக்கு  போகவே மனமில்லாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 11:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

குளிர்காலத்தில் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கும் பக்திப்பாடல்களும் அதன் நினைவுகளும் எப்பவும் இனிமையானவை.

நன்றி தோழர்

On 11/30/2020 at 11:30, ஈழப்பிரியன் said:

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

ஊரின் நினைவுகளும் அதன் மீதான தீராக் காதலும் அடி மனதில் எப்பவும் ஒரு மூலையிலிருந்து அருட்டிக் கொண்டு தானிருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.

On 11/30/2020 at 13:07, Kavallur Kanmani said:

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

குளிர்காலம் எப்பவுமே அழகானவை. ஒவ்வொரு வயதிலும் அதற்கே உரிய நிகழ்வுகளை எமக்குத் தந்து கொண்டுதானிருக்கும்.

வருகைக்கு நன்றி அக்கா.

On 11/30/2020 at 13:34, பசுவூர்க்கோபி said:

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

நன்றி பசுவூர்க்கோபி. 

பசுவூர் என்பது ஒரு ஊரின் பெயரா?

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:47, Justin said:

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

ஊரில் குளிர்காலம் என்றால் நிறைய மழையும் பெய்து கூதலும் இருக்கும். போர்த்துக் கொண்டு படுக்க சுகமான காலம். ஆனால் இங்கு குளிர் இருக்கு, ஆனால் கூதல் இல்லை.

On 11/30/2020 at 18:24, suvy said:

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

இங்கு குளிருடன் பனியும் சேர்ந்து வருவதால் ஆரம்பத்தில் சந்தோசமாகவும் பிறகு எப்படா இளவேனில் காலம் வரும் என்ற ஏக்கமாகவும் இருக்கும்.

வருகைக்கு நன்றி அண்ணா.

18 hours ago, கிருபன் said:

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

பனியை அடைவைத்து மரங்கள் இலையை பொரித்தெடுக்கும் காலத்துக்காக ஏங்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

இங்கு இன்றும் நல்ல பனி. முழு நிலாவும் சில நாட்களுக்கு முன்னர் தான் வந்தமையால் வெண்ணிற இரவுகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது இப்ப.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் குளிரும் மெல்லிய கூதல் காற்றும்

இஞ்சி தேநீரும் இதமாக சூடேற்றுகிறது

இங்கே 
புயல் வருமென புகையும் அடுப்பும்
கூப்பன் மாவில் குண்டான றொட்டியாக 
தேங்காய் சம்பலில் தேசிக்காய் புளியிலே 
மாசியும் மசிந்து மழையிலே வயிறு நிறைகிறது. 

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:11, நிழலி said:

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

அருமையான கவிதை👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குளிரில் இருந்து நிழல் சொன்ன கவிதை சூடாகவே இருந்தது.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.