Jump to content

குளிர்..... - நிழலி


Recommended Posts

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... -6 பாகை. வேலைக்கு  போகவே மனமில்லாமல் இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 11:09, புரட்சிகர தமிழ்தேசியன் said:

speaker455-1517821798.jpg

எங்கோ அதிகாலை  கோயில் புனலில் 

"செல்லத்தா செல்ல மாரியாத்தா

என்று l.r ஈஸ்வரியின் குரல் இழையோடுகிறது "

குளிர் கால நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி தோழர் ..👍

 

குளிர்காலத்தில் தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருக்கும் பக்திப்பாடல்களும் அதன் நினைவுகளும் எப்பவும் இனிமையானவை.

நன்றி தோழர்

On 11/30/2020 at 11:30, ஈழப்பிரியன் said:

இந்தக் காலங்களிலாவது ஊரை நினைப்போமாக.

ஊரின் நினைவுகளும் அதன் மீதான தீராக் காதலும் அடி மனதில் எப்பவும் ஒரு மூலையிலிருந்து அருட்டிக் கொண்டு தானிருக்கும்.

வருகைக்கும் பின்னூட்டமிட்டமைக்கும் நன்றி.

On 11/30/2020 at 13:07, Kavallur Kanmani said:

வாழும் மண்ணின் குளிரையும் வாழ்ந்த மண்ணின் நினைவையும் குழைத்து அருமையான குளிர்க் கவிதை. பாராட்டுக்கள் நிழலி.

குளிர்காலம் எப்பவுமே அழகானவை. ஒவ்வொரு வயதிலும் அதற்கே உரிய நிகழ்வுகளை எமக்குத் தந்து கொண்டுதானிருக்கும்.

வருகைக்கு நன்றி அக்கா.

On 11/30/2020 at 13:34, பசுவூர்க்கோபி said:

ஊருக்குள் இழுத்துச் சென்று விட்டது கவி வரிகள்.அருமை

நன்றி பசுவூர்க்கோபி. 

பசுவூர் என்பது ஒரு ஊரின் பெயரா?

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:47, Justin said:

குளிரோடு சேர்ந்து ஒரு அமைதியும் வந்து விடுவது மாதிரித் தான் எனது அனுபவம் இருக்கிறது. அது விடுமுறைத்தினங்கள் அதிகம் வருவதாலோ அல்லது சத்தங்களும் சூழலில் உறைந்து விடுவதாலோ தெரியவில்லை!

புதிய புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்க அருமையான நாட்கள்  குளிர் கால நாட்கள்!

ஊரில் குளிர்காலம் என்றால் நிறைய மழையும் பெய்து கூதலும் இருக்கும். போர்த்துக் கொண்டு படுக்க சுகமான காலம். ஆனால் இங்கு குளிர் இருக்கு, ஆனால் கூதல் இல்லை.

On 11/30/2020 at 18:24, suvy said:

இனி குளிர்காலம் வாட்டி எடுக்கப் போகிறது அதற்காக இப்பவே குளிருக்கு அப்பீல் செய்யப் படுகிறது.....!  😂

நல்ல கவிதை .....பகிர்வுக்கு நன்றி நிழலி .....!  👍

இங்கு குளிருடன் பனியும் சேர்ந்து வருவதால் ஆரம்பத்தில் சந்தோசமாகவும் பிறகு எப்படா இளவேனில் காலம் வரும் என்ற ஏக்கமாகவும் இருக்கும்.

வருகைக்கு நன்றி அண்ணா.

18 hours ago, கிருபன் said:

குளிர் இளவேனில் காலத்திற்காக ஏங்கவைக்கும்!

கோடைகாலப் பயணங்களை நினைவுபடுத்தும்!

பனியை அடைவைத்து மரங்கள் இலையை பொரித்தெடுக்கும் காலத்துக்காக ஏங்குவது ஒவ்வொரு வருடமும் நடக்கின்றது.

13 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

சமீபத்தில் என்னுடன் வேலைபார்த்தவர் ஒருவர் கனடாவிற்கு குடியேறிவிட்டார் .. கனடாவில் அவரது முதலாவது குளிர்காலம்.. பனி கொட்டுவதை வீடியோவில் அனுப்பிருந்தார்.. அமைதியான வீதியும், வெள்ளை பனிமழையும் பார்க்க மிகவும் அழகாகவும் இருந்து,..

ஆனால் இங்கே 40டிகிரியில் அனல்பறக்கும் வெயில்.. 

49-E6-C182-EFFC-4-DFA-9-ECC-5-CD3620516-

இங்கு இன்றும் நல்ல பனி. முழு நிலாவும் சில நாட்களுக்கு முன்னர் தான் வந்தமையால் வெண்ணிற இரவுகளை பார்க்க கூடியதாக இருக்கின்றது இப்ப.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மழையும் குளிரும் மெல்லிய கூதல் காற்றும்

இஞ்சி தேநீரும் இதமாக சூடேற்றுகிறது

இங்கே 
புயல் வருமென புகையும் அடுப்பும்
கூப்பன் மாவில் குண்டான றொட்டியாக 
தேங்காய் சம்பலில் தேசிக்காய் புளியிலே 
மாசியும் மசிந்து மழையிலே வயிறு நிறைகிறது. 

Link to comment
Share on other sites

On 11/30/2020 at 15:11, நிழலி said:

குளிர்.....

-----------------------

 

கதவுகளின் இடுக்குகளினூடாக
கசிந்து வருகின்றது
துருவங்களில் பயணித்த
குளிரின் சாரல்

கிளைகளினூடே தாவி
ஏறுகின்ற குளிர்
இலைகளின் விளிம்பில்
உதிர்ந்து என் அறையெங்கும்
வியாபிக்கின்றது

வெளியே பூனை ஒன்று
குளிரின் அரவம் கேட்டு
தன் மீசைகளை
ஒடுக்கி கதவுகளினூடே
உள் நுழைகின்றது

குளிர் எப்போதுமே
இளமை காலம் ஒன்றில்
கடந்து போன
திருவெம்பாவை பாடல்களையும்
வைரவர் கோவிலின்
அதிகாலைப் பூசைகளையும்
அந்தோணியார் கோவிலின்
மார்கழி மாத
இயேசு பிறப்பையும்
நினைவுபடுத்திக் கொள்கின்றது

இடையிடையே
மார்கழி மழையில்
நனைந்த
நந்தியாவட்டை பூவின்
வாசத்தையும்
பவள மல்லிகையின்
இளம் சிகப்பு
இதழ்களையும் கூட
குளிர் ஞாபகப்படுத்தி
செல்கின்றது

குளிர் ஒரு
காலப் பெரு நதி
தன் கீழ்
புதைந்து கொண்ட
எல்லா நினைவுகளின்
மேல் பனியை பொழிந்து
இனிப்பை தடவிச்
செல்கின்றது

சில நேரங்களில்
அது
தகிக்கும் நினைவுகளின்
மீது
பெரு நெருப்பை
மூட்டி விட்டுச் செல்வதையும்
தவறவிடுவதில்லை...

----

நிழலி

Nov 29/2020

அருமையான கவிதை👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 குளிரில் இருந்து நிழல் சொன்ன கவிதை சூடாகவே இருந்தது.வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.