Jump to content

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு   வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே. சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/139739/snapshot_011.png

 

இன்று வவுனியா வைத்தியாசாலையில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.

பொதுபாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்ற போது தொற்றுகிறது.

அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.

வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியவர்களுடன் இருக்கும் போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.

வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை. என்றாலும் அர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம்  இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம். 

ஆகவே முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது.

இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடகா இதனைச் செய்ய விரும்புகிறோம்.

2025 ஆம் ஆண்டிற்குள் முற்றுமுழுதாக எச்.ஐ.வி தொற்றை இல்லாமற் செய்வதே உலக சுகாதார ஸ்தாபனத்தின் குறிக்கோளாக இருக்கிறது.

இந்த ஆண்டிற்றாக தொனிப்பொருள் 'எச்.ஐ.வி தடுப்பு இளைஞர்களின் பொறுப்பு' என்பதாக இருக்கிறது காரணம் இந்த வருடத்தைப் பொறுத்தவரைக்கும் இளைஞர் மத்திதில் தான் இந்த தொற்று அதிகமாக காணப்படுகிறது. என மேலும் தெரிவித்திருந்தார்.

வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் அதிகரிக்கும் எயிட்ஸ் - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் கொடுமைகள் காணது என்று இந்தக்கொடுமையள் வேறை....

Link to comment
Share on other sites

கொரோனா, டெங்கு, எலிக்காய்ச்சல், எய்ட்ஸ்  etc etc . போற போக்கு சரி இல்லை. இந்த ஹோமோ காரர்களை சீர்திருத்தும் பாடசாலைக்கு அனுப்ப வேண்டும். இருந்தாலும் அங்கும் கவனமாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டிச-1 இன்று உலக எய்ட்ஸ் தினம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

24 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

இங்கும் அதே.. அதே..

நான் மாட்டுப்பட்டது Jaffna கோட்டில்,   Prison Guard டிடம்..

கைதிகளின் நிலைதான் பரிதாபம்.. 😂😂

Link to comment
Share on other sites

1 hour ago, அக்னியஷ்த்ரா said:

நாம நினைப்பது போல இல்லை ,ஏகப்பட்ட 'பொடியன்' கூட்டம் திரியுது
மட்டக்களப்பில் உ.த படிக்கும்போது ஒரு தறுதலை 'பொடியனிடம்'   சிக்கி நான் பட்ட பாடு ,கடைசியாக 'அந்த' இடத்தில் உதைத்து விட்டுத்தான் தப்பி ஓடி வந்தேன், பிறகு விசாரித்து பார்த்தால் அது ஒரு gang , மட்டுநகரில் கடும் பிரசித்தி பெட்ற   'பொடியன்' gang,   

 

1 hour ago, Kapithan said:

 

இங்கும் அதே.. அதே..

நான் மாட்டுப்பட்டது Jaffna கோட்டில்,   Prison Guard டிடம்..

கைதிகளின் நிலைதான் பரிதாபம்.. 😂😂

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கற்பகதரு said:

 

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

எந்த கூட்டமென்றாலும் ஓடதான் வேண்டும், இதில் வீரபார்க்கமுடியாது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கற்பகதரு said:

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

என்ன ஓடியிருப்பேன் ...இழுத்துக்கொண்டு ....😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பிழம்பு said:

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.

அதாவது வருசத்துக்கு 1.5 ஆளுக்கு என்று சொல்லலாம் ....அது ஏன் இந்த அலப்பறை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கற்பகதரு said:

 

இதுவே “பொட்டை” கூட்டமாக இருந்தால், உதைத்துவிட்டு ஓடுவீர்களா?

நிச்சயமாக இல்லை.

எதிர்ப்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது, சமூகத்தால் ஏற்றுக் கொள்ளபட்டது. முக்கியமாக அழகானது.

ஆனால், அதற்காக நான் ஸ்திரி லோலன் என்று கற்பனை செய்து விடாதீர்கள்... 😂

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, putthan said:

அதாவது வருசத்துக்கு 1.5 ஆளுக்கு என்று சொல்லலாம் ....அது ஏன் இந்த அலப்பறை

"வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003 இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்."

 

இதுவரையிலும் ஓகே 
இப்போ 28 பேர் வவுனியாவில் இருக்கும் போது 
இவர்களுக்கு தெரியாமலே சிலருக்கு தொற்றுவதுக்கு வாய்ப்பு உண்டு 
28ம் வருத்தம் முத்தி மருந்து எடுக்க போனவர்கள் என்றுதான் எண்ணுகிறேன் 
இன்னமும் வருத்தம் அறிகுறி தெரியாத நிலையில் யாரும் இருக்கிறார்களோ தெரியவில்லை 
அதுதான் ஆபத்து ஆனது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

என்ன ஓடியிருப்பேன் ...இழுத்துக்கொண்டு ....😂😂😂

யாரிட்ட????🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளஞ்சமுதாயம் எமது கலாச்சாரம் என சொல்கிறவர்களுக்கு இது ஒரு பகுதியென நினைவில் கொள்ளவும் , இப்படி ஒரு குறுப் , தண்ணி , பாக்கு , இன்னொன்று கஞ்சா , போதை , இன்னொன்று , களவு கொலை , கொள்ளையென திரிகிறது.

கனபேர் சிக்கி இருப்பது இங்கு வெளிப்படையாக தெரிகிறது கபிதன் , அக்கினி , 😀😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கட்டுரையையும் அதற்கான பின்னூட்டங்கள் சிலதையும் படிக்கும் போது முன்னாள் ஈரானிய ஜனாதிபதி அகமதி நஜாப் ஐநாவில் “எமது நாட்டில் ஒரு ஓரினசேர்க்கையாளர் கூட இல்லை” என்று சொல்லி கேலிக்கு இலக்காகியதுதான் நினைவுக்கு வருகிறது.

ஓரினச்சேர்கை உந்துதல் என்பது நோயல்ல சீர்திருத்த பள்ளிக்கு அனுப்ப. அது ஒரு உளவியல், தனியே உடலுறவு சம்பந்தபட்ட விடயம் கூட இல்லை. ஒருவர் தன்னை எப்படி அடையாளம் காண்கிறார் என்ற identity சம்பந்தமானது. 

அதிலும் இது ஒரு spectrum போல ஒரு extreme இல் 100% வேரினசேர்க்கை விருப்பு உள்ளோரும், மறு extreme இல் 100% ஓரினசேர்கை விருப்பு உள்ளோரும் இடையில் கலவையாக different shades of sexuality யில் ஆட்கள் இருப்பதாயும், ஒவ்வொரு சனத்தொலையிலும் 3% அளவில் இப்படி இருப்பதாயும் நம்ப படுகிறது.

இதை நம்மால் ( வேரினச்சேர்கையாளர்?) ஒரு போதும் உணர முடியாது. நமக்கு எப்படி ஒரு பெண்ணை/பெண்களை பார்த்து உணர்சிகள் வருகிறதோ, நாம் எப்படி அதை வலிந்து உருவாக்கவில்லையோ, நாம் எப்படி அதை தடுக்க முடியாதோ ( செயல்பாட்டை தடுக்கலாம், ஆனால் பெண்கள் மீதான ஈர்ப்பை தடுக்க முடியாதல்லவா) அப்படித்தான் அவர்களுக்கும்.

இவர்களை உண்மையில் sexual minorities பாலியல் சிறுபான்மை என்பதே பொருத்தமாக இருக்கும்.

இதற்காக, ஆட்கள் “கையை போடுவதை” ஆதரிக்க வேண்டும் என்பதில்லை. பெண்களை உரச என்றே பஸ்சில் போகும் பல ஆண்கள் உள்ள நாடு நம்நாடு. அதை போலதான் இவர்களும்.

வெளிநாட்டில் வசிக்கும் பெற்றார் - இதை ஒருதரம் உங்கள் பராயம் வந்த பிள்ளைகளுடன் ஆலோசித்து பாருங்கள். அவர்களில் பலர் என்னை போன்ற நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள்.

அப்புறம் எயிட்ஸ் தொற்றை குறைக்க மிக சுலபமான வழி பாதுகாப்பான உடலுறவு. அதைதான் வைத்தியர்கள் முன் வைக்கவேண்டும். ஒருவனுக்கு ஒருத்தியாய் இருங்கள், ஓரினசேர்க்கையில் ஈடுபடாதீர்கள் என்பதெல்லாம் வைத்தியர் சொல்ல கூடாது. அது அவரவர் தனிப்பட்ட விடயம்.

இந்தியாவில் விபச்சாரம் சட்டவிரோதம், ஆயினும் பாலியல் தொழிலாளருக்கு இலவச பாலியல் சிகிச்சை, பாதுகாப்பு சாதனங்களை தொண்டர் நிறுவனங்கள் வழங்கும்.

ஏன்? ஏனென்றால் பாதுகாப்பற்ற உடலுறவே எயிட்ஸ் பரவ காரணம். ஒரே இனமோ, மாற்றுபாலினமோ, ஏலியனோ - பாதுகாப்பாக இருந்தால் எயிட்ஸ் பரவாது.

இதை சொல்லாமல்- வேறு விடயங்களை கதைப்பதால், இவர்கள் மேல் ஒரு சமூக வெறுப்பை பாய்ச்சுவதால், அவர்கள் மேலும் மேலும் underground க்கு போய், மேலும் மேலும் பாதுகாப்பற்ற உறவில் ஈடுபட்டு, எயிட்ஸ் அபாயம் மேலும் மேலும் அதிகரிக்கும்.

இதைதான் ஆங்கிலத்தில் counter productive என்பார்கள். இதை ஒரு அதிகாரியே செய்வதை என்னவென்பது.

அடுத்து நாட்டில் உள்ள அனைவரும் எச் ஐவி பரிசோதனை செய்ய வேண்டுமாம்? பரிசோதனை முடிந்து அடுத்தநாள் வரும் வெளிநாட்டில் இருந்து வருவோரை என்ன செய்வீர்கள்?

ஒவ்வொரு முறை கட்டுநாயக்கவில் இறங்கும் போதும் எச் ஐ வி சோதனை செய்து, நெகடிவ் என்றால்தான் உள்ளே விடுவீர்களா🤦‍♂️.

எச் ஐ வி தொற்ற வவுனியாவில் குறைக்க,

1. இலவச பாதுகாப்பு சாதனங்களை, அடையாளம் காட்டாமல் பெற்றுகொள் வழிமுறைகளை ஏற்படுத்துங்கள்.

2. தேவைபடும் கூட்டத்தினரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துங்கள்.

அவரவர் தனியுரிமையை அவர்களிடமும், நாட்டின் சட்டத்திடமும் விட்டு விடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

இளஞ்சமுதாயம் எமது கலாச்சாரம் என சொல்கிறவர்களுக்கு இது ஒரு பகுதியென நினைவில் கொள்ளவும் , இப்படி ஒரு குறுப் , தண்ணி , பாக்கு , இன்னொன்று கஞ்சா , போதை , இன்னொன்று , களவு கொலை , கொள்ளையென திரிகிறது.

கனபேர் சிக்கி இருப்பது இங்கு வெளிப்படையாக தெரிகிறது கபிதன் , அக்கினி , 😀😎

நான் சிக்கியிருப்பது தங்களுக்கு மகிழ்ச்சிபோல... 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.