Jump to content

கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா உயிரிழப்புக்களின் போது சடலங்கள் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்படும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும் - சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வாதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக  தகனம் செய்யும் நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேற்று திங்கட்கிழமை உயர் நீதிமன்றில் வாதிட்டார்.

கொரோனா  தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ( முஸ்லிம்கள், கத்தோலிக்கர்கள் சார்பில்)  உயர் நீதிமன்றம் நேற்று பரிசீலனைக்கு எடுத்த போதே,  ஹில்மி அஹமட் மற்றும் இருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷிதி ஹபீப் மற்றும் சட்டத்தரணி  ஏர்மிஸா ரீகல் ஆகியோருடன் ஆஜராகி வாதங்களை முன்வைக்கும் போது அவர் இந்த இடைக்கால தடைக்கான கோரிக்கையை முன்வைத்தார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான நீதியரசர்களான முர்து பெர்ணான்டோ மற்றும் ப்ரீத்தி பத்மன் சுரசேன ஆகியோர் முன்னிலையில் இந்த 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்களும் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 5 மனுக்கள் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசாவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் ஊடாக ஒரு மனுவும்,  முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட தரப்புக்களாலும் இந்த 11 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

குறிப்பாக சட்டத்தரணி சபீனா மஹ்ரூப்  ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பிரசன்னமானார். இதனைவிட,  சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா தாக்கல் செய்த 5 மனுக்களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்டவர்களின் மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  புலஸ்தி ஹேவாவசம் முன்னிலையானார். இதனைவிட  கொவிட் தொற்றுக்குள்ளாகி  மரணமடைந்த நிலையில் தகனம் செய்யப்ப்ட்ட இருவரின் மகன்மாரான  பயாஸ் யூனுஸ் மற்றும்  ரபாய்தீன் நெளபர் சார்பில்  தாக்கல் செய்யப்ப்ட்டிருந்த மனுக்கள் சார்பில்  சிரேஷ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோர் அஜராகினர்.

இதேவேளை  கத்தோலிக்கர்களான ஓசல லக்மால் சார்பில் தாக்கல்ச் செய்யப்ப்ட்ட மனுவில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  சிரந்த ரன்மல் சார்பில் தாக்கல் செய்யப்ப்ட்ட மனு தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ஹஸ்திக தேவேந்ரவும் ஆஜராகினர். இம்மனுக்கள் அனைத்தும் சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா ஊடாக தாக்கல் செய்யப்ப்ட்டிருந்தன.

இதனைவிட, ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் உள்ளிடோரும் சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரொயாவும் மன்றில் வெவ்வேறு மனுக்கள் தொடர்பில் பிரசன்னமாகினர். சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னி ஆரச்சி,  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் ஆகியோர் அனைத்து மனுக்களிலும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரின் புள்ளே ஆஜரானார்.

இந்நிலையில் முதலில் எஸ். சி. எப்.ஆர். 502 எனும் மனு  பரிசீலனைக்கு வந்தது. முற்பகல் 10.40 மணியளவில்  அம்மனு விசாரணைக்கு வந்தது. அம்மனு சார்பிலும் பிரிதொரு மனுசார்பிலும் ( முஸ்லிம், கத்தோலிக்க ஒருவர்) சிரேஷ்ட சட்டத்தரணி விரான் கொரயா வாதங்களை ஆரம்பித்தார். அவரது வாதங்கள் சுமார் இரு மணி நேரம் வரை நீடித்தது.

இதன்போது முஸ்லிம்களும், கத்தோலிக்கர்களும், உயிரிழந்த பின்னர் ஒரு நாள் மீள தாங்கள் எழுப்பப்டுவோம் எனும் நம்பிக்கையை கொண்டுள்ளதாக  சுட்டிக்காட்டிய அவர், தமது நம்பிக்கை பிரகாரம் செயற்படுவதற்கான உரிமை அரசியலமைப்பின் 10 ஆவது உறுப்புரை ஊடாகவும்  அதுசார்ந்த மதத்தை தடையின்றி பின்பற்றுவதற்கான உரிமை 14 ஆவது உறுப்புரை ஊடாகவும் குடிமகனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக  சுட்டிக்காட்டினார்.  

 அடிப்படை உரிமைகளை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் அரசியலமைப்பு ஊடாக குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவற்றை கட்டுப்படுத்த  அவசர கால நிலைமையின் போதே முடியும் எனவும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்த முடியாது எனவும் அவர் வாதிட்டார்.

 அத்துடன்  இது குறித்து வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அரிறிவித்தல் சட்ட விரோதமானது என தெரிவித்த அவர், உலக சுகாதார ஸ்தாபனத்தின்  வழிகாட்டலையும் விஞ்சிய செயற்பாடுகளின் பின்னனி என்ன என கேள்வி எழுப்பினார்.

 கொரோனா காரணமாக முதல் முஸ்லிம் நபர்  ஒருவர் கடந்த மார்ச் 30 ஆம் திகதி உயிரிழக்கும் போதும், உலக சுகாதார  ஸ்தாபனத்தின் ஆலோசனைகள், சுகாதார சேவைகள் பணிமனையின் இணையத்தில் இருந்த போதும்,  உடனடியாக இரவோடிரவாக அது மாற்றப்பட்டது எந்த அறிவியல் ஆய்வின் அடிப்படையிலானது என அவர் உயர் நீதிமன்றில் கேள்வி எழுப்பி அதன் நோக்கத்தை  நியாயமற்றது என விளக்கினார்.

 இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்  தனது வாதங்களை முன்வைத்தார். இதுவரை கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் சடலங்களை எரிப்பதால் அந்த வைரஸ் பரவும் என எந்த ஆய்வுகள் ஊடாகவும் கண்டறியப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

இத்தாலி, அமெரிக்கா உள்ளிட்ட  அபிவிருத்தி அடைந்த நாடுகளில்  கூட கொவிட் தொற்றினால் உயிரிழந்த தமது உறவுகளை அடக்கம் செய்ய அனுமதியுள்ள நிலையில், அங்கு அதனூடாக வைரஸ் பரவியதாக எந்த  விடயமும் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

 இலங்கையின் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழும் ,  அடக்கம் செய்ய அனுமதியுள்ளதாக சுட்டிக்காட்டி வாதிட்ட ஜ்னாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், நாட்டில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் இருந்தும், தனிமைப்படுத்தல் நிலையங்கலில் இருந்தும் கழிவுகள் திறந்த சூழலுக்கே செல்வதாக சுட்டிக்காட்டினார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலை புறக்கணித்து செயற்படுமளவுக்கு இலங்கையில் இந்த விடயத்தில் ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டு அறிவு பூர்வமான உறுதிப்படுத்தல்கள் வெளிபப்டுத்தப்பட்டுள்ளனவா என கேள்வி எழுப்பிய   சுமந்திரன், அவ்வாறான ஆய்வுகள் இருப்பின் அதனை உலக சுகாதார ஸ்தாபனமே தனது வழிகாட்டலில் உள்ளீர்த்திருக்கும் என்றார்.

 இதன்போது இந்தியாவின்  மும்பை மற்றும் கல்கத்தா மேல் நிலை நீதிமன்றன்ங்களில், கொவிட் மரணங்களின் போது சடலங்களை எரிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்ப்ட்ட வழக்குகளில், அந் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பினையும் ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் உயர் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.

இலங்கையை உதாரணம் காட்டி, தாக்கல் செய்யப்பட்டிருந்த அம்ம்மனுக்களை,  உலக சுகாதார ஸ்தபனத்தின் வழி காட்டல்களை விட சிறந்த இலங்கையின் நடைமுறையை ஏற்க முடியாது என கூறி  அந் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில்  குறிப்பிடப்ப்ட்டுள்ளதை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிலையில்  மனித உரிமை என்பது, இறந்த ஒருவரின் சடலத்துக்கும் உள்ளது என அந்த தீர்ப்புக்களில் கூறப்பட்டுள்ள விடயத்தை சுட்டிக்காட்டிய அவர், கெளரவமான இறுதிக் கிரியைகள் ஒவ்வொருவரினதும் உரிமை என வாதிட்டார்.

அதன்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்ட 2170/8  ஆம் இலக்க வர்த்தமானி சட்ட விரோதமானது என வாதிட்ட சுமந்திரன், மனுக்களை விசாரணைக்கு ஏற்குமாறும், தற்காலிக நிவாரணமாக உடனடியாக சடலங்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதற்கு இடைக்கால தடை விதிக்குமாறும் கோரினார்.

 இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணிகளான  பைசர் முஸ்தபா,  நிசாம் காரியப்பர் ஆகியோர் உணர்வுபூர்வமாக மன்றில் வாதங்களை முன்வைத்தனர். மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸும்,  தகனம் மட்டும் செய்யப்படல் வேண்டும் என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனவும் அதனால் அது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி சட்ட வலுவற்றது எனவும் வாதிட்டார். ஏனைய சட்டத்தரணிகளும் அதனை ஒத்த வாதங்களையே மன்றில் கொண்டு வந்தனர்.

இந்நிலையில் மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்ததும், பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரில் புள்ளே வாதங்களை ஆரம்பித்தார்.

சடலங்களை தகனம் செய்யும் தீர்மானம் எந்தவொரு மதம், இனத்தவரை வெறுப்பூட்டுவதற்காக அல்லது பழி வாங்கும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல என குறிப்பிட்ட நெரின் புள்ளே, அது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றார்.  கொவிட் தொற்றினால் மரணமடைபவரை   அடக்கம் செய்யலாம் என வழிகாட்டல் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்க்கப்பட்டிருந்தாலும்,  1998 ஆம் ஆண்டு அந்த ஸ்தபனம் சடலங்கள் ஊடாகவும் வைரஸ் பரவலாம் என்ற  கருத்தினை வெளியிட்டுள்ளதாக அவர் வாதிட்டார். அவரது வாதங்கள் நிறைவு பெறாத நிலையில், மீள இன்றும் தொடரவுள்ளது. அதன்படி மனுக்கள் மீதான மேலதிக பரிசீலனைகள் இன்றைய தினம் முற்பகல் 10.30 வரை ஒத்தி வைக்கப்பட்டது. 
 

 

https://www.virakesari.lk/article/95673

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...!

MA-Sumanthiran-720x450.jpg

 

சுமந்திரன் சேர்!

 

சகோதர சமூகத்தின்

உளக்காயங்களுக்கு

மருந்திட வந்திட்ட

மரியாதைமிகு

சுமந்திரன் ஐயாவுக்கு

இஸ்லாமிய சமூகம்சார்

உளமார்ந்த நன்றிகள்

பல கோடி!

 

எமது உறவுகள் அல்ல

எமது உணர்வுகளே

எரிக்கப்பட்டன சார்!

 

விஞ்ஞான ரீதியிலா

அஞ்ஞான ரீதியிலா

அநீதி என்பதை

மெய்யாக நீங்கள்

மன்றில் பேசி,

மன்றாடுவது 

எமக்காக அல்லளூ

சிறுபான்மையின்

நசுக்கப்படும் உரிமைக்காய்!

 

வெகுமதி சொல்லவியலா

வெருட்சியில் நாம்

அகமதில் உம்மை

அகிலமெலாம்

அமுதூட்டுவோம்!

 

மத வேறுபாடுகள்,

மனிதத்திற்கப்பால்

என்பதை உரத்த

போராட்டத்தில்

பார்த்தோம் ஐயா!

 

மதத்தால் வேறாயினும்,

இனிய மொழியால்,

கனிய தேசத்தால்

வேறில்லை

ஒன்று நாம்!

 

பல்லின சமூகமும்

சொல்லுது உங்களது

நீதியியலின்

ஆதி வரலாற்றை

சாதி பேதமில்லை என!

 

சமூகங்கள் இணைய

சமுத்திரப் பாலமாய்,

சட்டம் பேசி நீவிர்

சங்கமித்தீர்!

 

வாதாட்ட வீரன்ளூ

அஞ்சா நெஞ்சன்ளூ

முகஸ்துதி அல்லளூ

உளச்சுத்தியாய்

உரைக்கிறேன் ஐயா!!

 

வாழ்க பல்லாண்டு

வளமுடனும்

நலமுடனும்

நம் தேசத்திற்காய்

நீதியின் வாசத்திற்காய்

இறை துணையோடும்

எமது துஆவோடும்!

 

 

அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்

http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_736.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸா எரிப்பு வழக்கு தள்ளுபடி - ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் ஏமாற்றம் - ஒரேயொரு நீதியரசர் ஆதரவு, 2 பேர் எதிர்ப்பு

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்களை வலுக்கட்டாயமாக  தகனம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று 01.12.2020 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

http://www.jaffnamuslim.com/2020/12/blog-post_29.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாஸாக்களை வெளிநாட்டில் நல்லடக்கம், செய்வது குறித்து பரிசீலனை - முஸ்லிம் பணக்காரர்களும் ஒத்துழைப்பு

இலங்கையில் கொரோனாவினால் மரணிக்கும், முஸ்லிம்களுடைய ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யவிடாமல் தகனம் செய்வது தொடரும் நிலையில், மாற்றுத் திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளது.

 

 

அதாவது கட்டார் அல்லது மாலைதீவு போன்ற முஸ்லிம் நாடுகளின் சம்மதத்துடன், அந்த நாடுகளுக்கு கொரோனாவினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எடுத்துச்சென்று, நல்லடக்கம் செய்வது குறித்தும் சில தரப்புக்கள் ஆராய்ந்துள்ளன.

 

இதற்கு ஐக்கிய நாடுகள் சபையின், ஆதரவை பெறுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

 

மேலும், முஸ்லிம் பணக்காரர்கள் இவ்வாறான ஒரு திட்டம் முன்னெடுக்கப்பட்டால், அதற்கு தம்மால் 100 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கித்தர முடியுமெனவும் வாக்குறுதி வழங்கியுள்ளனர்.

 

தற்போது இலங்கை - கட்டார் விமான சேவைகள் தினமும் நடந்துவரும் நிலையில், இத்திட்டத்தை சாதகமாக்கலாமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

அத்துடன் இதுபற்றிய இறுதி அறிக்கை, துறைசார் வைத்தியர்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கிடைக்குமென எதிர்பார்த்துள்ளதாகவும் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு உறுதிப்படுத்தினார்.

 

சட்டத்துறை மற்றும் அரசியல்துறை வட்டாரங்களும் இத்தகவலை, ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் உறுதிப்படுத்தின.

 

இதுவரை இறுதி முடிவுகள் எதுவும் எடுகப்பட்டவில்லை என்றபோதிலும் இத்திட்டம் பரிசீலனையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் Jaffna Muslim இணையத்திடம் கூறினர்.

http://www.jaffnamuslim.com/2020/11/blog-post_437.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது சுமந்திரனை வாழ்த்தும் இதே முஸ்லீம் கூட்டம். ரிசான எனும் சிறுமி சவுதியில் கழுத்து வெட்டி கொல்லப்படும்போது, இதை பாரளுமன்றத்தில் விமர்சித்தார். அப்பொழுது முஸ்லீம்கள் மேசையில் தட்டி இவரை தூசித்தார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

இப்பொழுது சுமந்திரனை வாழ்த்தும் இதே முஸ்லீம் கூட்டம். ரிசான எனும் சிறுமி சவுதியில் கழுத்து வெட்டி கொல்லப்படும்போது, இதை பாரளுமன்றத்தில் விமர்சித்தார். அப்பொழுது முஸ்லீம்கள் மேசையில் தட்டி இவரை தூசித்தார்கள். 

அவர்கள் கழுத்து வெட்டுவதை வரவேற்பார்கள், கல்லால் எறிந்து கொன்றால் கை தட்டுவார்கள் ஏனெனில் அவர்களுடைய மதம் அப்படி செய்யும் படி சொல்லிவிட்டது.டென்மார்க்கில் கொரோனா பிடித்துள்ளது என்ற பயத்தினால் Mink மிருகங்களை  கொன்று அதன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துவிட்டு இப்போது சுகாதார கேடு என்பதால் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான  ஜனாஸாக்களை தோண்டி எடுத்து எரிக்க டென்மார்க் திட்டமிடுகிறது.
இலங்கையில் கொரோனா காலத்திலாவது ஜனாஸாக்களை எரிப்பது எல்லோருக்கும்  பொதுவானதாக இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

13 hours ago, விளங்க நினைப்பவன் said:

அவர்கள் கழுத்து வெட்டுவதை வரவேற்பார்கள், கல்லால் எறிந்து கொன்றால் கை தட்டுவார்கள் ஏனெனில் அவர்களுடைய மதம் அப்படி செய்யும் படி சொல்லிவிட்டது.டென்மார்க்கில் கொரோனா பிடித்துள்ளது என்ற பயத்தினால் Mink மிருகங்களை  கொன்று அதன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்துவிட்டு இப்போது சுகாதார கேடு என்பதால் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருந்த மில்லியன் கணக்கான  ஜனாஸாக்களை தோண்டி எடுத்து எரிக்க டென்மார்க் திட்டமிடுகிறது.
இலங்கையில் கொரோனா காலத்திலாவது ஜனாஸாக்களை எரிப்பது எல்லோருக்கும்  பொதுவானதாக இருக்க வேண்டும்.

நீங்கள் சொல்வது உண்மைதான். அவர்களுக்கு சார்பாக பேசும்போது வாழ்த்துவதும், உண்மையை கூறும்போது தூற்றுவதும் உண்மை. ஆனால் இந்த சமூகத்தில் இது அதிகமாகவே காணப்படுகின்றது. இவர்களது இணையத்தளத்தில் இப்படியான கருத்துக்களை நிறையவே பார்த்திருக்கிறேன். ஆனால் நாங்கள் பத்தி கருது எழுதினால் அது அங்கு வராது.

இருந்தாலும் ஒன்று. எல்லா நாடுகளிலும் அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுகின்றது. WHO வும் இதைத்தான் சொல்கிறது. எனவே உலகம் முழுவதும் சொல்லப்படும் நடை முறைமைகளை பின்பற்றும் அரசு இதட்கு மட்டும் தடை விதிப்பது எதோ ஒரு நோக்குடன்தான். அதாவது இனவாதமே ஒழிய வேறொன்றும் இல்லை.

இருந்தாலும் இவர்களுக்கு இந்த தண்டனை பொருத்தமானதுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.