Jump to content

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய


Recommended Posts

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய

நாட்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல என்று அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். கெஹலிய ரம்புக்வல்ல மேலும் கூறியுள்ளதாவது, “கொரோனா நிலவரத்தை அடுத்து இத்தாலியிலும் இவ்வாறான சிறைச்சாலை வன்முறைச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இது உலகின் முதல் முறையாக இடம்பெறும் சம்பவம் அல்ல. எவ்வாறாயினும், நாம் அரசாங்கம் என்ற ரீதியில் இந்தப் பொறுப்பிலிருந்து விலகிச் செல்லாமல் இதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

இதற்கான பொறுப்பை நாம் நிச்சயமாக ஏற்றுக் கொள்வோம். எவ்வளவு பாதுகாப்புக்கு மத்தியிலும் சிறைச்சாலைகளில் போதைப்பொருள் வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றமையை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.

இதனை முற்றாக ஒழிக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும். 2014 ஆம் ஆண்டளவில் போதைப்பொருள் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள்.

இலங்கை தங்களுக்கு பாதுகாப்பான நாடு இல்லை என்றும் இலங்கையில் தங்களின் வர்த்தகத்தை மேற்கொள்ள முடியாது என்றும் வெளிநாடுகளுக்கு அவர்கள் சென்றார்கள்.

பின்னர் 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டார்கள். தற்போது நாம் இதற்கெதிராக செயற்பட்டவுடன், மீண்டும் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.

இது ஓரிரு நாட்களில் முடிக்க வேண்டியப் பிரச்சினைக் கிடையாது. மாறாக இதற்கு நீண்ட கால செயற்றிட்டமொன்று அவசியப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளும்போது, சில சவால்களுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

தற்போது இதுதொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, விரைவில் மஹர சிறைச்சாலை தொடர்பான அனைத்து உண்மைகளும் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல- கெஹலிய | Athavan News

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஏனென்றால்.... அதை செய்வதே, அரசியல்வாதிகள்தான். 

செய்வது அரசியல்வாதிகள்
வினியோகிப்பது பாதுகாப்புபடை.
அழிவது பொதுமக்கள்.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றாக ஒழிப்பது இலகுவாக செயற்பாடு அல்ல

போதைப்பொருள் வர்த்தகமா.?? 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன். 

Link to comment
Share on other sites

9 hours ago, Paanch said:

போதைப்பொருள் வர்த்தகமா.?? 30 வருடங்களாகத் தன்கட்டுப்பாட்டில் இருந்த நாட்டில் போதைப்பொருளே இல்லாது செய்தானே ஒரு தமிழன். 

அது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்கப்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

Link to comment
Share on other sites

5 hours ago, Robinson cruso said:

அது உண்மை. தமிழர் பிரதேசங்களில் அதன் வாடையே இருக்கவில்லை. ஆனால், சிங்களவர்கள் வேறுவிதமாக சொல்லுகிறார்கள். அவர்கள் காலத்தில்தான் தங்கள் பகுதியில் கூடுதலாக இவை விநியோகாக்கப்பட்ட்தாகவும் , இந்த வியாபாரத்தினால் உலகம் முழுவதும் பெரும் பணம் இவர்களால் சம்பாதிக்கப்பட்ட்தாகவும் கூறுகிறார்கள். இப்படியான செய்திகள் முன்னர் யுத்த காலத்தில் அடிக்கடி கூறப்பட்ட்து. அது எவ்வளவு தூரம் உண்மை என்று எனக்கு தெரியவில்லை.

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான் ரொம்பப் பக்கம்தான் பார்த்தால் இரண்டும் வேறுதான்.

பாலுக்கும் கள்ளுக்கும் வண்ணம் ஒன்றுதான் பார்க்கும் கண்கள் ஒன்றுதான் உண்டால் ரெண்டும் வேறுதான்.

சிங்களவர் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும்... தாங்கள் வட பாரதத்திலிருந்து வந்ததாக அவர்களுடைய மகாவம்சத்திலேயே உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.

முசுலீம்கள் நாங்கள்தான் இலங்கையின் பூர்வீகமக்கள் என்று பொய்யுரைத்தாலும். குதிரைக்கு என்ன உணவு கொடுப்பதென்று இந்த நாட்டு மக்களுக்குத் தெரியாது என்று தாங்கள் குதிரை விற்பதற்கு வந்த உண்மையை வெளியிட்டுள்ளார்கள்.

உண்மையும் பொய்மையும் பக்கம் பக்கம்தான். 😂🤣

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.