Jump to content

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை,  யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர், காணி எஸ்.முரளிதரன், யாழ்.மாவட்ட பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

spacer.png

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உரையாற்றுகையில்,

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே நாம்  கூடியுள்ளோம்.

குறிப்பாக 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதனை ஆளுநர் மற்றும் அரச அதிபருடன்  கலந்துரையாடி அதனடிப்படையிலே இன்று பிரதேச செயலர்களுக்கு  குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை விளக்குவதற்காகவே கூட்டத்தில் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் இராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும் அதற்கு தடையில்லை அது தொடர்பாக எமது இராணுவ தளபதியும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.

 

தற்போது உள்ள கொவிட்-19 நிலைமையின் காரணமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அங்கேயும் இங்கேயும் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் கொவிட்-19 நிலைமை காரணமாக தனியார் துறைகளில்  வேலைசெய்தவர்கள்  வேலை இழந்து தவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

நாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன் நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனைய வேலை வாய்ப்புகளை விட இந்த இராணுவ வேலை வாய்ப்பானது மிகவும் விசேடமான ஒரு வேலை வாய்ப்பாகும் குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் ஏனைய அரச வேலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.

இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைகளில் இணைவதன் மூலம் எமது யாழ்ப்பாண குடாநாட்டினை மேலும் விருத்தி அடையச் செய்ய முடியும்.

கிராம அலுவலர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று குறித்த இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் அவ்வாறு விளங்கபடுத்துவதன் மூலமே இளைஞர் யுவதிகளுக்கு சரியான புரிதல் ஏற்படும்.

எனவே கிராம சேவையாளர்கள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள் குறிப்பாக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து கொரோனாவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

அதேபோல நான் இன்னும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்  இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பலர் உரையாடுகிறார்கள் அவர்களும் குறித்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.

நான் இராணுவத்தில் இணைந்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு கப்டன் தர  தமிழ் அதிகாரி மகேந்திரன் எனப்படும் ஒருவர் எனவே இதனை எல்லாம் நீங்கள் உதாரணமாக கொண்டு நாம் எமது நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன் 1982 ஆம் ஆண்டு நான் உயர்தர பரீட்சை எழுதும் சுற்றாடல் பாடத்தில் போது இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு எனவே பரிட்சை எழுதி இருந்தேன். அதேபோல் எனது மகன் 2012 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் போதும் இலங்கையை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று எழுதியிருந்தார்.

இவ்வாறே  எமது எதிர்கால சந்ததியினரையும் அபிவிருத்தி  அடைந்து வரும் நாடு என எழுத அனுமதிக்க போகிறோமா இல்லையா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும்.  மேலும் கடந்த 30 ஆண்டு யுத்தத்தின் காரணமாக நாம் அனுபவித்ததை நாம் இனி மறப்போம் கடந்த சித்தத்தை மறைந்து நாம் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும்  முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் இந்த கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து செயற்படுவதன்  மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஏனைய பிரதேசங்களை போல அல்லாது யாழ்  குடாநாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது அதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

அத்தோடு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலும் ஒரு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது அதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவம் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றது.

அதேபோல  பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் ஏனைய துறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் எனவே எமது நாட்டினை அபிவிருத்தி நோக்கிய செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் க.மகேசன்,

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே பிரதேச மட்டங்களில் கிராம சேவகர்கள் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

“இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.”

Link to comment
Share on other sites

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

https://np.gov.lk/advertisement/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

ஒருவேளை சீனாகாரனின் நரி வேலையாகவும் இருக்கலாம்.
இந்தியாவுடன் போர் என்று வரும் போது இலங்கை ராணுவத்தையும் சீன ராணுவத்துடன் சேர்த்து அடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

3 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் தொகையோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதி இராணுவம் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து தேவையில்லாமல்  குடியிருக்கு. போர் முடிவுற்றபடியால் வேலையில்லாமல் இருக்கும் இராணுவம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்தார்கள். இதில் மீண்டும் எதற்கு இராணுவ சேர்ப்பு?  ஏதோ பயங்கர பூச்சுத்தல் நடக்குது. இந்தியனுக்கு ஏதாவது மிரட்டல் விடும் செய்தி ....? தன் இராணுவத்தை தென்பகுதிக்கு எடுத்தால் தமிழர் பகுதியில்  அது ஆடிய கோரத்தாண்டவத்தை அங்கு ஆட வெள்ளிக்கிட்டால்  பிறகு இலங்கையே தாங்காது. அதுகளை கட்டி தீனி  போடவும் முடியாது. அதனால் கேட்பாரற்று மேயட்டுமென்று தமிழ்ப்பகுதிகளிலேயே விட்டிருக்கு.

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

இல்லை. தொலைக்காட்சிகளில் நிறையவே விளம்பரங்கள் செய்தார்கள். சிங்கள தொலைக்காட்சிகளில் கூடுதலாக செய்ததை காணக்கூடியதாக இருந்தது. பத்திரிகைகளிலும் பிரசுரித்துஇருந்தார்கள்.

3 hours ago, Justin said:

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

நாம் இலங்கையர் என்ற ரீதியில் இலங்கை ராணுவத்தில் இணைவதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

 

ஏற்கனவே ராணுவத்தில் இணைந்த தமிழர்களை தோட்ட வேலைகள் செய்விப்பதாக இங்கே எழுதியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்திற்கேற்ப சொற்தொடர் பாவிக்கப்படும். வந்தேறுகுடிகள், கள்ளத்தோணி, நாம் இலங்கையர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

Link to comment
Share on other sites

12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

முதலில் நான் எழுதியதை ஒழுங்காக வாசியுங்கள்.பதிலளியுங்கள். அதன் பின் இலங்கையில் இருக்கும் உங்களுக்கு   சொகுசு பற்றி பதில் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

எந்த சிங்கள மக்கள் மீது சிங்கள அரசால் குண்டு வீசப்பட்டது என்பதை  திகதி வாரியாக பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்

உங்களுக்கு ஒப்பிடுவதில் கடுமையான பிரச்சனை உள்ளது என ஆழமாக நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா
ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

jaffna-ga-1-300x225.jpg
இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்
தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது.  எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர் – Thinakkural

Link to comment
Share on other sites

2 hours ago, பிழம்பு said:

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

 

பாஞ்ச், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் எனக் கூற வரவில்லை, ஆனால் பெரும்பாலான நாடுகளில் யுத்தமில்லை, ஆனால் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர், ஏன் என்று நினைக்கிறீர்கள்? 

ஆயுதப் படைகளில் சண்டை, பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய வேலைகளும் சமாதான காலத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பாரிய அணைக்கட்டுகளைப் பராமரிப்பது இராணுவத்தின் பொறியியல் பிரிவு. அண்மையில் ஒரு இலங்கைப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கேள்விப்பட்டேன், கடற்படையின், இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் அரசாங்கம் கொடுக்கும் கட்டிட நிதியில் ஒப்பந்த அடிப்படையில் கல்வி தொடர்பான கட்டிடங்களைச் சில இடங்களில் கட்டுகிறார்களாம். 

எனவே துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள் என்பது முற்றிலும் சரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பாஞ்ச், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் எனக் கூற வரவில்லை, ஆனால் பெரும்பாலான நாடுகளில் யுத்தமில்லை, ஆனால் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர், ஏன் என்று நினைக்கிறீர்கள்? 

ஆயுதப் படைகளில் சண்டை, பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய வேலைகளும் சமாதான காலத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பாரிய அணைக்கட்டுகளைப் பராமரிப்பது இராணுவத்தின் பொறியியல் பிரிவு. அண்மையில் ஒரு இலங்கைப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கேள்விப்பட்டேன், கடற்படையின், இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் அரசாங்கம் கொடுக்கும் கட்டிட நிதியில் ஒப்பந்த அடிப்படையில் கல்வி தொடர்பான கட்டிடங்களைச் சில இடங்களில் கட்டுகிறார்களாம். 

எனவே துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள் என்பது முற்றிலும் சரியல்ல. 

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

அடைவார்கள்.  இது நான் இலங்கைப் படைகளுக்குக் கொடுத்த ஐடியா அல்ல மீரா! 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.