Jump to content

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாண மாவட்டத்தினை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத்பண்டார தெரிவித்துள்ளார்.

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிக்கும் விசேட கூட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை,  யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் , மேலதிக அரசாங்க அதிபர், காணி எஸ்.முரளிதரன், யாழ்.மாவட்ட பிரதேச செயலர்கள் மற்றும் பிரதேச இராணுவ பிரிவுகளின் தளபதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

spacer.png

நிகழ்வில் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி உரையாற்றுகையில்,

இராணுவத்திற்கு  இளைஞர் யுவதிகளை இணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தில் யாழ் மாவட்டத்தில் இளைஞர்களை இராணுவத்தில்  இணைப்பது தொடர்பாக விளக்கம் அளிப்பதற்காகவே நாம்  கூடியுள்ளோம்.

குறிப்பாக 90 இராணுவ வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன அதனை ஆளுநர் மற்றும் அரச அதிபருடன்  கலந்துரையாடி அதனடிப்படையிலே இன்று பிரதேச செயலர்களுக்கு  குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை விளக்குவதற்காகவே கூட்டத்தில் அனைவரும் ஒன்று கூடியுள்ளோம்.

குறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த ஒரு சிலரே தற்போது இராணுவத்தில் இணைந்து கடமை ஆற்றி வருகின்றார்கள். ஆனால் இராணுவத்தில் இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் யாரும் இணைந்து கடமை ஆற்ற முடியும் அதற்கு தடையில்லை அது தொடர்பாக எமது இராணுவ தளபதியும் ஒத்துழைப்பு வழங்குகிறார்.

 

தற்போது உள்ள கொவிட்-19 நிலைமையின் காரணமாக பல இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாது அங்கேயும் இங்கேயும் செல்வதை காணக்கூடியதாக உள்ளது. சில இளைஞர்கள் கொவிட்-19 நிலைமை காரணமாக தனியார் துறைகளில்  வேலைசெய்தவர்கள்  வேலை இழந்து தவிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

நாம் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு கோரிக்கையினை விடுக்க விரும்புகின்றேன் நல்ல ஒரு சந்தர்ப்பத்தினை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஏனைய வேலை வாய்ப்புகளை விட இந்த இராணுவ வேலை வாய்ப்பானது மிகவும் விசேடமான ஒரு வேலை வாய்ப்பாகும் குறிப்பாக ஓய்வூதிய திட்டம் மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகள் ஏனைய அரச வேலைகளுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறந்ததாக காணப்படுகின்றது.

இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த வேலைகளில் இணைவதன் மூலம் எமது யாழ்ப்பாண குடாநாட்டினை மேலும் விருத்தி அடையச் செய்ய முடியும்.

கிராம அலுவலர்கள் தங்களுடைய கிராமங்களுக்குச் சென்று குறித்த இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தொடர்பான விடயங்களை மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும் அவ்வாறு விளங்கபடுத்துவதன் மூலமே இளைஞர் யுவதிகளுக்கு சரியான புரிதல் ஏற்படும்.

எனவே கிராம சேவையாளர்கள் இந்த விடயத்தினை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

தற்போதுள்ள கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு மாவட்டத்தில் உள்ள அனைவரும் இணைந்து செயல்படுகின்றார்கள் குறிப்பாக அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் சுகாதாரப் பிரிவினர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் இணைந்து கொரோனாவினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறோம்.

அதேபோல நான் இன்னும் ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகின்றேன்  இராணுவ ஆட்சேர்ப்பு தொடர்பாக என்னுடன் தொலைபேசியில் பலர் உரையாடுகிறார்கள் அவர்களும் குறித்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள முடியும்.

நான் இராணுவத்தில் இணைந்த போது எனக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஒரு கப்டன் தர  தமிழ் அதிகாரி மகேந்திரன் எனப்படும் ஒருவர் எனவே இதனை எல்லாம் நீங்கள் உதாரணமாக கொண்டு நாம் எமது நாட்டினை அபிவிருத்தி செய்வதற்கும் கட்டியெழுப்புவதற்கு நாம் முன்னுதாரணமாக செயற்பட வேண்டும்.

உதாரணமாக ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகின்றேன் 1982 ஆம் ஆண்டு நான் உயர்தர பரீட்சை எழுதும் சுற்றாடல் பாடத்தில் போது இலங்கை அபிவிருத்தி அடைந்துவரும் நாடு எனவே பரிட்சை எழுதி இருந்தேன். அதேபோல் எனது மகன் 2012 ஆம் ஆண்டு பரீட்சை எழுதும் போதும் இலங்கையை அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்று எழுதியிருந்தார்.

இவ்வாறே  எமது எதிர்கால சந்ததியினரையும் அபிவிருத்தி  அடைந்து வரும் நாடு என எழுத அனுமதிக்க போகிறோமா இல்லையா என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.

ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் முன்வர வேண்டும்.  மேலும் கடந்த 30 ஆண்டு யுத்தத்தின் காரணமாக நாம் அனுபவித்ததை நாம் இனி மறப்போம் கடந்த சித்தத்தை மறைந்து நாம் எதிர்காலத்தில் ஏனைய நாடுகளைப் போல எமது நாட்டையும் முன்னேற்றுவதற்கு நாம் அனைவரும்  முயற்சிக்க வேண்டும்.

அத்துடன் இந்த கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பிரிவினர் மற்றும் அனைத்து அரசு ஊழியர்கள் பொதுமக்கள் இணைந்து செயற்படுவதன்  மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்.

ஏனைய பிரதேசங்களை போல அல்லாது யாழ்  குடாநாட்டில் கொரோனா நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது அதற்கு இராணுவத்தினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள்.

அத்தோடு ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலும் ஒரு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கின்றது அதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு மற்றும் இராணுவம் இதற்கு உறுதுணை வழங்கி வருகின்றது.

அதேபோல  பொதுமக்கள் மற்றும் கல்வித்துறை சார்ந்தோர் மற்றும் ஏனைய துறையினர் அதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார்கள் எனவே எமது நாட்டினை அபிவிருத்தி நோக்கிய செயற்படுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வில் உரையாற்றிய யாழ் மாவட்ட  அரசாங்க அதிபர் க.மகேசன்,

இளைஞர் யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனவே பிரதேச மட்டங்களில் கிராம சேவகர்கள் குறித்த ஆட்சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ளார்.

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

ஏன் ராணுவத்துக்கு மட்டும் கூவி அழைக்கிறார்கள்?
வேறு வேலை வாய்ப்புகளுக்கு யாழ் இளைஞர்களே வந்து இணையுங்கள் என அழைத்ததாக தெரியவில்லை.

“இராணுவத்தில் இணைவதன் மூலம் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள முடியும். குறிப்பாக யாழ் மாவட்ட  விவசாய துறை சார்ந்த வெற்றிடங்களுக்கும் இணையுமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன்.

ஏனெனில் யாழ் குடாநாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கு இளைஞர்களின் ஒத்துழைப்பு அவசியமாகும்.  அத்துடன்  மேசன் தச்சு மின் இணைப்பாளர் போன்றவற்றுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.”

Link to comment
Share on other sites

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

https://np.gov.lk/advertisement/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

ஒருவேளை சீனாகாரனின் நரி வேலையாகவும் இருக்கலாம்.
இந்தியாவுடன் போர் என்று வரும் போது இலங்கை ராணுவத்தையும் சீன ராணுவத்துடன் சேர்த்து அடிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, விசுகு said:

ஏற்கனவே அளவுக்கு அதிகமாக ஐனநாயகத்துக்கு சாவால் விடும் அளவுக்கு இராணுவம் உள்ள நாட்டில் வேறு வேலை வாய்ப்புகளுக்கு ஆட்களை தேர்வு செய்யாமல் எதுக்கு மீண்டும் மீண்டும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு???

3 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலுள்ள மக்களின் தொகையோடு ஒப்பிடும்போது மூன்றில் ஒரு பகுதி இராணுவம் மக்களின் வாழ்விடங்களையும், விவசாய நிலங்களையும் ஆக்கிரமித்து தேவையில்லாமல்  குடியிருக்கு. போர் முடிவுற்றபடியால் வேலையில்லாமல் இருக்கும் இராணுவம் யாழ்ப்பாணத்தில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுகிறது என்று விளக்கம் வேறு கொடுத்தார்கள். இதில் மீண்டும் எதற்கு இராணுவ சேர்ப்பு?  ஏதோ பயங்கர பூச்சுத்தல் நடக்குது. இந்தியனுக்கு ஏதாவது மிரட்டல் விடும் செய்தி ....? தன் இராணுவத்தை தென்பகுதிக்கு எடுத்தால் தமிழர் பகுதியில்  அது ஆடிய கோரத்தாண்டவத்தை அங்கு ஆட வெள்ளிக்கிட்டால்  பிறகு இலங்கையே தாங்காது. அதுகளை கட்டி தீனி  போடவும் முடியாது. அதனால் கேட்பாரற்று மேயட்டுமென்று தமிழ்ப்பகுதிகளிலேயே விட்டிருக்கு.

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

இல்லை. தொலைக்காட்சிகளில் நிறையவே விளம்பரங்கள் செய்தார்கள். சிங்கள தொலைக்காட்சிகளில் கூடுதலாக செய்ததை காணக்கூடியதாக இருந்தது. பத்திரிகைகளிலும் பிரசுரித்துஇருந்தார்கள்.

3 hours ago, Justin said:

ஏதாவதொரு வேலையில் சேர்ந்து உழைக்கட்டும் இளைஞர்கள். என்ன இராணுவம் என்றால் கொஞ்சம் முறிச்செடுத்து விடுவார்கள். வெளியே வந்தாலும் ஒரு வேலைத் தீவிரம் இருக்கக் கூடும். 

நாம் இலங்கையர் என்ற ரீதியில் இலங்கை ராணுவத்தில் இணைவதில் தவறில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

 

ஏற்கனவே ராணுவத்தில் இணைந்த தமிழர்களை தோட்ட வேலைகள் செய்விப்பதாக இங்கே எழுதியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்திற்கேற்ப சொற்தொடர் பாவிக்கப்படும். வந்தேறுகுடிகள், கள்ளத்தோணி, நாம் இலங்கையர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

Link to comment
Share on other sites

12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இலங்கை இராணுவம் தமிழ் மக்களுக்கு செய்த அநியாயங்களால் தமிழர்கள்  ஏன் அவர்களுடன் இணைய வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு?

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன். 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, குமாரசாமி said:

சிங்கள  இராணுவம் தமிழர்களை கொன்றதிற்கும் சிங்களவர்களை கொன்றதிற்கும் வித்தியாசம்,வேறுபாடுகள் தெரியாத ஈனத்தமிழன்.

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைந்து வேலை பெற்றுவிடுவார்களோ என்று கவலை கொள்ளும் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழும் ஈனத்தமிழன்

முதலில் நான் எழுதியதை ஒழுங்காக வாசியுங்கள்.பதிலளியுங்கள். அதன் பின் இலங்கையில் இருக்கும் உங்களுக்கு   சொகுசு பற்றி பதில் தருகின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, விளங்க நினைப்பவன் said:

பல வருடங்களுக்கு முன்பு சிங்களவர்கள் கூட இலங்கை இராணுவத்தால் கொல்லபட்டனர் இதை விபரமாக கற்பகதரு யாழ்களத்தில் தெரிவித்திருந்தார்.இப்போது  சிங்களவர்கள் இராணுவத்தில் இணையவில்லையா?
இலங்கையில் உள்ள தமிழர்கள் இராணுவத்தில் இணைய மாட்டோம் என்று சொல்லவில்லை இணைந்துவிடுவார்களோ என்று வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் தான் கவலை கொள்கின்றனர்.

எந்த சிங்கள மக்கள் மீது சிங்கள அரசால் குண்டு வீசப்பட்டது என்பதை  திகதி வாரியாக பட்டியல் இடுங்கள் பார்க்கலாம்

உங்களுக்கு ஒப்பிடுவதில் கடுமையான பிரச்சனை உள்ளது என ஆழமாக நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா
ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

jaffna-ga-1-300x225.jpg
இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்
தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது.  எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர் – Thinakkural

Link to comment
Share on other sites

2 hours ago, பிழம்பு said:

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Paanch said:

நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதற்காக. உலகிலுள்ள நாடுகள் தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.

சிறீலங்காவில் மட்டும் வேலைவாய்ப்புப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக தங்களது மக்களை இராணுவத்தில் இணைக்கிறார்கள்.🤔🤣

 

பாஞ்ச், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் எனக் கூற வரவில்லை, ஆனால் பெரும்பாலான நாடுகளில் யுத்தமில்லை, ஆனால் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர், ஏன் என்று நினைக்கிறீர்கள்? 

ஆயுதப் படைகளில் சண்டை, பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய வேலைகளும் சமாதான காலத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பாரிய அணைக்கட்டுகளைப் பராமரிப்பது இராணுவத்தின் பொறியியல் பிரிவு. அண்மையில் ஒரு இலங்கைப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கேள்விப்பட்டேன், கடற்படையின், இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் அரசாங்கம் கொடுக்கும் கட்டிட நிதியில் ஒப்பந்த அடிப்படையில் கல்வி தொடர்பான கட்டிடங்களைச் சில இடங்களில் கட்டுகிறார்களாம். 

எனவே துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள் என்பது முற்றிலும் சரியல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

பாஞ்ச், இலங்கை இராணுவத்தில் தமிழர்கள் இணைய வேண்டும் எனக் கூற வரவில்லை, ஆனால் பெரும்பாலான நாடுகளில் யுத்தமில்லை, ஆனால் படைகளுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தான் இருக்கின்றனர், ஏன் என்று நினைக்கிறீர்கள்? 

ஆயுதப் படைகளில் சண்டை, பாதுகாப்பு தவிர்ந்த ஏனைய வேலைகளும் சமாதான காலத்தில் இருக்கின்றன. அமெரிக்காவில் பாரிய அணைக்கட்டுகளைப் பராமரிப்பது இராணுவத்தின் பொறியியல் பிரிவு. அண்மையில் ஒரு இலங்கைப் பாடசாலை அபிவிருத்தி தொடர்பான கூட்டத்தில் கேள்விப்பட்டேன், கடற்படையின், இராணுவத்தின் பொறியியல் பிரிவு தான் அரசாங்கம் கொடுக்கும் கட்டிட நிதியில் ஒப்பந்த அடிப்படையில் கல்வி தொடர்பான கட்டிடங்களைச் சில இடங்களில் கட்டுகிறார்களாம். 

எனவே துவக்குத் தூக்கிக் கொண்டு சண்டைக்குப் போகத் தான் ஆட்களைச் சேர்க்கிறார்கள் என்பது முற்றிலும் சரியல்ல. 

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, MEERA said:

ஐயா ஜஸ்ரின்,

இதனால் உள்ளூர் கட்டட ஒப்பந்தக்காரர்கள் & தொழிலாளர்கள் பாதிப்படைய மாட்டார்களா? 

அடைவார்கள்.  இது நான் இலங்கைப் படைகளுக்குக் கொடுத்த ஐடியா அல்ல மீரா! 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.