Jump to content

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, குமாரசாமி said:

90 வெற்றிடத்துக்கு தமிழரை வரச்சொல்லி இந்த காட்டுக்கத்து கத்துறாங்கள்.கக்கூஸ் கழுவவா?

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  தற்போது தங்கள் குடும்பத்தையும் அதன் வறுமையையும் போக்க தொழில் வேண்டும் நான் கூட 2010 ல் பொலிசுக்கு சென்றேன் கொஞ்சம் உயரம் போதாது என்ற காரணத்தினால் என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்கள் .  பின்னர் செல்ல வில்லை  கல்யாணம் கட்டவாவது ஓர் தொழில் வேண்டும் அது கவர்மென்டில் கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்லையென முன்னோர்கள் வைத்த தீ இப்ப தொழிலில் வந்து நிற்கிறது.

தற்போது ஆர்மியில் உள்ள உள்ளக வேலையில் அதிகம் இடம் காலியாக உள்ளதாக சொல்லி இணைந்திருக்கிரார்கள் 
நேற்று பொலிஸ் சேர்ந்தவர்களின் குடும்ப விசாரணை முடித்து சென்றது  நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டவர்கள் படம் இருக்கிறது தேவைப்பட்டால் இணைக்கலாம் என நினைக்கிறன் 

மட் / அம்பாறையில் ஆயிரத்துக்குமேல் என நினைக்கிறன் 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

அடைவார்கள்.  இது நான் இலங்கைப் படைகளுக்குக் கொடுத்த ஐடியா அல்ல மீரா! 😎

நன்றி ஜஸ்ரின்,

சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது.

1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  தற்போது தங்கள் குடும்பத்தையும் அதன் வறுமையையும் போக்க தொழில் வேண்டும் நான் கூட 2010 ல் பொலிசுக்கு சென்றேன் கொஞ்சம் உயரம் போதாது என்ற காரணத்தினால் என்னை வெயிட்டிங் லிஸ்டில் வைத்தார்கள் .  பின்னர் செல்ல வில்லை  கல்யாணம் கட்டவாவது ஓர் தொழில் வேண்டும் அது கவர்மென்டில் கக்கூஸ் கழுவினாலும் பரவாயில்லையென முன்னோர்கள் வைத்த தீ இப்ப தொழிலில் வந்து நிற்கிறது.

தற்போது ஆர்மியில் உள்ள உள்ளக வேலையில் அதிகம் இடம் காலியாக உள்ளதாக சொல்லி இணைந்திருக்கிரார்கள் 
நேற்று பொலிஸ் சேர்ந்தவர்களின் குடும்ப விசாரணை முடித்து சென்றது  நேர்முக பரீட்சையில் கலந்து கொண்டவர்கள் படம் இருக்கிறது தேவைப்பட்டால் இணைக்கலாம் என நினைக்கிறன் 

மட் / அம்பாறையில் ஆயிரத்துக்குமேல் என நினைக்கிறன் 

தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

நன்றி ஜஸ்ரின்,

சில காலத்திற்கு முன்னர் திருநெல்வேலி சந்தையில் மரக்கறிகளை மலிவாக கொடுப்பதால் உள்ளூர் விவசாயிகள் பாதிப்படைக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்.

என்னைப் பொறுத்தவரை இராணுவம் இராணுவமாக இருப்பதே நல்லது.

தனி, சில காலத்திற்கு முன்னர் பொலிசில் இருந்தவர்கள் ஏதோ காரணங்களால் விலகுகிறார்கள் என்று எழுதிய ஞாபகம்.

தகுதிகளுக்கேற்ப வேற வேலை கிடைக்குமாயின் அதிகார பூர்வமாக விலகலாம் ஆர்மியில் 20 வருடங்கள் பூர்த்தியாகினால் தாமாகவே விலகி வேற தொழில் செய்யவும் வாய்ப்புண்டு 
01. டெய்லர்
02. பிளம்பர் (நீர் குழாய் பொருத்துனர்)
03. காபென்டர் ( ஓடாவி)
04. சாரதி 
 இன்னும் பல துறையில் அழைப்பு விடுத்திருந்தார்கள் விமான படையிலும் சேர்ந்து விட்டார்கள் இதே போல பல துறைகளுக்கும் மட்டக்களப்பில் அதிகமானவர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nunavilan said:

உங்களுக்கு ஒப்பிடுவதில் கடுமையான பிரச்சனை உள்ளது என ஆழமாக நம்புகிறேன்.

உங்களுடைய பிரச்சனை என்ன என்பது எனக்கு தெளிவாகவே விளங்குகின்றது

 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  கிழக்கில் சேர்ந்தவர்கள் படம்  நான் முன்னொரு திரியில் இணைத்திருந்தேன் பெண்களும் சென்று இருக்கிறார்கள் எனவும் கூறியிருந்தேன் .  

வெளிநாட்டில் கக்கூஸ் கழுவி வேலை செய்கிறார்கள் பின் ஏனாம் இலங்கையில் கக்கூஸ் கழுவி வேலை செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் கக்கூஸ் கழுவுவது கேவலம் என நினைக்கிறீர்களா??  

24 minutes ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாட்டில் கக்கூஸ் கழுவி வேலை செய்கிறார்கள் பின் ஏனாம் இலங்கையில் கக்கூஸ் கழுவி வேலை செய்வதை கேவலமாக நினைக்கிறார்கள்?

 

கக்கூஸ் கழுவுவதில்  கூடுதலான புலம்பெயர் தமிழர்கள் ஒரே நேர் கோட்டில்தான் இருக்கின்றார்கள்.(பெரியபிரித்தானியா,கனடா மேட்டுக்குடிகளை தவிர்த்து) இப்போது அதே நேர்கோட்டில் உங்களைப்போன்ற சீமான்களும் இணைவதில் மிக்க மகிழ்ச்சி.👌🏽

நான் என்றுமே தொழிலை தொழிலாக பார்க்கின்றவன்.தொழிலை கேவலமாக பார்ப்பவன் அல்ல.  இருந்தாலும் சிங்களத்தின் நடவடிக்கையில் சந்தேகம் வைத்திருப்பதில் தவறில்லைத்தானே ஐயாமாரே.....⁉️

கெக்...கெக்...கெக்....கெக்  சிரிக்கிறனாம்.:cool:

நான் ஒரு முறை இங்கே தொழில் கோப்பை கழுவுதல் என எழுதியதற்கு ஒரு கள உறவு நக்கல் அடித்தார் பாருங்கோ சொல்லி வேலையில்லை. அவர் இன்று யாழ்கள நன்னடத்தை ஆலோசகராக இருப்பது வேறை லெவல்.😜

Link to comment
Share on other sites

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

Link to comment
Share on other sites

2 hours ago, விளங்க நினைப்பவன் said:

உங்களுடைய பிரச்சனை என்ன என்பது எனக்கு தெளிவாகவே விளங்குகின்றது

 

 

நல்லது. உங்களின் பிரச்சனையை விளங்க பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

இவ்வாறு இணையும் தமிழ் இளைஞர்களை பயிற்றுவித்து விட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பணி புரிய அனுப்பி அதன் மூலம் மேலும் பிளவுகளை சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். 
எல்லைப் பிரச்சனை, காணிப் பிரச்சனை என்று தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சிவில் பிரச்சனைகளை தீவிரப்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இனை இந்திய ஏவல் படைகளின் மூலம் தூண்டி விட்டு தமிழ் - முஸ்லிம் மோதலை முதன் முதலில் இராணுவ ரீதியாக / ஆயுத ரீதியாக மாற்றியது இந்தியாவும் இலங்கை அரசும். அதே போன்று அந்த கணங்கை மீண்டும் அணைய விடாமல் பார்த்துக் கொள்ள இலங்கை அரசு முயலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

விடுங்கள் ஐயா! வர வர சிறுமைத்தனமாக இங்கே கருத்தெழுத  ஆரம்பித்து விட்டார்கள். அதற்கு பதிலளித்தால் நிழலி வந்து அகற்றுகின்றார். ஆனால் கேள்வி மட்டும் அப்படியே இருக்கும். பதில்கள் அகற்றப்பட்டு விடும். கேட்டால் தனிமனித தாக்குதல் அல்லது    கள விதிகளுக்கு உட்படவில்லை என்பர். இங்கே தனிமனித தாக்குதலை விட தனி மனித செல்வாக்குதான் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விளங்க நினைப்பவன் said:

வெளிநாடுகளில் உள்ள இலங்கை தமிழர்கள் சிலர் என் மகன் வெளிநாட்டு இராணுவத்தில் பயிற்சி எடுக்கிறான் என்று பெருமை அடித்து படங்களுடன் வலைதளங்களே வெளியிட்டனர். இலங்கை ராணுவத்தில் இலங்கையர் இணைவதில் எத்தனை கேள்விகள்

இலங்கை அரசும், இராணுவமும் தமிழரை சமமாக மனிதர்களாக மதித்திருந்தால் அவர்கள் ஏன் வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்? அந்த நாட்டு இராணுவத்தில் சேர்ந்தார்கள்? நாம் இலங்கை இராணுவம் என்று பெருமை பேசத் தயங்கி இருப்பார்கள்? சர்வதேச இராணுவத்துக்கு போயே இந்த இராணுவத்தைப்பற்றி பல  முறைப்பாடுகள் வெளிவந்தன. அவர்களை இணைப்பதில் குறித்த அமைப்புகள் தயக்கம் காட்டுகின்றன.  இதில் நம் இராணுவம் ஒழுக்கமானது என சான்றிதழ் வேறை. வேறு நாடுகளை உதாரணம் காட்ட வேண்டாம். நாம் இந்த ராணுவத்தாலும், அரசாலும் அழிவுகளை சந்தித்தவர்கள் மட்டுமல்ல இன்றுவரை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அவர்களை பாராட்ட எம்மால் முடியாது. வேலையில் இணைபவர்களை யாரும்  தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. அது அவரவர் அனுபவம், வசதி. ஆனால் நாம் இவர்களால் இன்றும் நம் பூமியில் சுதந்திரமாக நடமாட முடியாமல் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோம்.  இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவரால் கொடுக்கப்படும் வாதம்  பொருத்தமானது அல்ல. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Paanch said:

வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது. இலங்கையில் இராணுவம் பெண்ணைக் கொன்றுவிட்டு அவளைப் பிணமாக்கியபின்பு அந்தப் பிணத்தையே புணர்கிறதே.... படமாகவும். வீடியோவாகவும் போட்டுக் காட்டினார்களே பார்த்ததில்லையா.??

பெண்ணைக் கொன்று  பிணமாக்கி பின்பு பிணத்தையே.. விடியோக்கள் படங்கள்  நான் பார்ப்பதில்லை.
+ வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது.???
அமெரிக்கா பிரிட்டன்  வெளிநாட்டு இராணுவமும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குற்றங்கள் செய்துள்ளன

1 hour ago, satan said:

வேலையில் இணைபவர்களை யாரும்  தடுக்கவில்லை தடுக்கவும் முடியாது. அது அவரவர் அனுபவம், வசதி.

இது சரியானது  சேருவதா இல்லையா என்பது அவர்களது முடிவு.

 

1 hour ago, நிழலி said:

 தமிழ் - முஸ்லிம்

அவர்கள் முஸ்லிம் மதம் தான் எல்லாம் என்று இருக்கும்வரை அவர்களுடன் சேர முடியாது தங்களது தேவைகளுக்கு தமிழர்களை  தாராளமாக பயன்படுத்தி கொள்வார்கள்

15 minutes ago, goshan_che said:

அதே சமயம் “எந்த வேலையும் செய்யலாம். ஒரு வேலையும் இழுக்குகில்லை” எனசொல்லும் அதே வாயால், “அது, அது அங்க, அங்கதான் இருக்கணும், என்று எம் முன்னோர் சொன்னது சரிதான்” என்று, சாதியத்துக்கு ஒரு மறைமுக இழுப்பும், இழுப்பார்கள்

மறுக்கவே முடியாது நேரிலேயே இப்படி சொல்லுவதை  பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பிழம்பு said:

யாழ். இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைவதால் வேலைவாய்ப்பு பிரச்சினை தீரும்: யாழ். அரச அதிபர்

யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இரா
ணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

jaffna-ga-1-300x225.jpg

அண்ணைக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல் ப்ரம் ஃபாரின் நெட்வீரதமிழன் ப்ளிஸ்... 😂😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

7 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அண்ணைக்கு ஒரு துரோகிப்பட்டம் பார்சல் ப்ரம் ஃபாரின் நெட்வீரதமிழன் ப்ளிஸ்... 😂😂

 

மிஸ்டர் ஓணாண்டி,

எப்படி சுகம். கனகாலம் காணேல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு ரசிகரும் அவுட்ட்டோ என்று பெரும் கலவையாய் போச்சுதையா🤣

கண்டது சந்தோசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, goshan_che said:

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

நீங்கள் வேர.. நானும் என்ர குடும்பமும் சண்டைக்கையே ஆப்பிடக்கூடதெண்டு ஓடி வந்த ஆக்கள் நாங்கள்... எவன் போராடிச்செத்தால் எனக்கென்ன நான் இஞ்ச வந்தது என்ர பிள்ளையளை நல்ல செல்வச்செழிப்போட படிப்பிச்சு வளத்து நல்ல கை நிறைய சம்பளத்தோட அதிகள செட்டில் ஆக்க.. எங்களுக்கு தெரியும் இதிலை வந்து திட்டினாலும் அங்க ஒண்டும் மாறாது எண்டு.. நானும் என்னைப்போல ஆக்களும் வேலையால வந்து திண்டிட்டு சும்மா கிடக்குர ரைம்மில இதில வந்து மாரித்தவக்கை மாரி கத்திட்டு நாட்டுபற்றாளன் எண்டு காட்ட இலங்கை சனத்தையும் ஆர்மியையும் ரெண்டு திட்டி திட்டிபோட்டு போரனாங்கள்.. சரி இருங்கோ வாறன் பிள்ளை என்னவோ ஜெர்மன் மொழில கேக்குராள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விளங்க நினைப்பவன் said:

+ வெளிநாட்டு இராணுவம் இராணுவத்துக்குரிய கடமைகளைச் செய்கிறது.???
அமெரிக்கா பிரிட்டன்  வெளிநாட்டு இராணுவமும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் குற்றங்கள் செய்துள்ளன

எனவே சிங்கள இராணுவம் தமிழ் பெண்களுக்கு செய்த அவல அநியாங்கள் எல்லாம் வெள்ளைக்கார இராணுவமும் பெண்களுக்கு செய்துதான் இருக்குது. அதாலை இதெல்லாம் நோர்மல்.....இதை போய் பெரிசு படுத்திக்கொண்டு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இலங்கை இராணுவத்தில் எம்மக்கள் பெருவாரியா இணைவது பற்றி.

1. 2009 வரை சேராதோர் இப்போ ஏன் சேருகிறார்கள்?

2. 2010-2019 இல் கூட அவ்வளவாக இல்லையே? இப்போ ஏன்?

3. பிள்ளையான், அங்கஜன், திலீபன், டக்லசுக்கு வாக்கு போட்டவர் யார்?

4. இதுவரை சேர்ந்தவர்கள் மோசமாக நடத்தபட்டால், மேலும் ஏன் சேருகிறார்கள்?

இந்த கேள்விகளுக்கு விடையை ஏலவே எடுத்த முடிவுகள் (preconceptions) அடிப்படையில் அல்லாமல், பக்கம்சாராமல் யோசித்தால் ஊரில் எம் மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள அதி அடிப்படையான மாற்றம் paradigm shift விளங்கும்.

1. இந்த மாற்றத்தை வெறுக்கலாம் தப்பில்லை

2. இந்த மாற்றத்தை மாற்ற முயற்சிக்கலாம், தப்பில்லை

3. ஆனால் மாற்றத்தை ஏற்க மறுப்பதோ, மாறும் மக்களை திட்டுவதோ, மாறுகிறது என செய்தி சொல்லும் தனி போன்றவர்களை திட்டுவதோ ஒன்றுக்கும் பயனில்லாத வேலை.

மிஸ்டர் ஓணாண்டி,

எப்படி சுகம். கனகாலம் காணேல்ல. எனக்கு இருந்த ஒரே ஒரு ரசிகரும் அவுட்ட்டோ என்று பெரும் கலவையாய் போச்சுதையா🤣

கண்டது சந்தோசம்.

தல உங்களத்தான் தலைவா காணேல்ல கனநாள்.. அப்புறம் உங்கள மறுபடியும் எழுதுறத கண்டு மகிழ்ந்தேன்.. பிக்பொஸ்ல வில்லன் ஆகிரவங்க மாதிரி மனசுல வாறத அப்புடியே நான் நானாக இருந்து மினக்கெட்டு எழுதினாலும் வெட்டிப்போடுவாங்கள்.. உண்மைய பச்ச பச்சையா பேசினா எழுதினா யாருக்கும் புடிக்காதே.. அதான் அதிகம் எழுதுரேல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தல உங்களத்தான் தலைவா காணேல்ல கனநாள்.. அப்புறம் உங்கள மறுபடியும் எழுதுறத கண்டு மகிழ்ந்தேன்.. பிக்பொஸ்ல வில்லன் ஆகிரவங்க மாதிரி மனசுல வாறத அப்புடியே நான் நானாக இருந்து மினக்கெட்டு எழுதினாலும் வெட்டிப்போடுவாங்கள்.. உண்மைய பச்ச பச்சையா பேசினா எழுதினா யாருக்கும் புடிக்காதே.. அதான் அதிகம் எழுதுரேல்ல..

எல்லாம் நம்ம தல விவேக் சொன்னதுதான்.

”அடிங்க ஆனா கைய கழுவிட்டு அடிங்க”

மனசில் பட்டதை அப்படியே எழுதுங்க ஆனா வார்த்தைகள் மட்டும் கத்தி படதாமாரி பட்டர் பூசி இருக்கணும் 🤣.

தொடர்ந்து எழுதுங்க புலவரே. 

உங்கள் சேவை யாழுக்குத்தேவை.

Link to comment
Share on other sites

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

நீங்கள் வேர.. நானும் என்ர குடும்பமும் சண்டைக்கையே ஆப்பிடக்கூடதெண்டு ஓடி வந்த ஆக்கள் நாங்கள்... எவன் போராடிச்செத்தால் எனக்கென்ன நான் இஞ்ச வந்தது என்ர பிள்ளையளை நல்ல செல்வச்செழிப்போட படிப்பிச்சு வளத்து நல்ல கை நிறைய சம்பளத்தோட அதிகள செட்டில் ஆக்க.. எங்களுக்கு தெரியும் இதிலை வந்து திட்டினாலும் அங்க ஒண்டும் மாறாது எண்டு.. நானும் என்னைப்போல ஆக்களும் வேலையால வந்து திண்டிட்டு சும்மா கிடக்குர ரைம்மில இதில வந்து மாரித்தவக்கை மாரி கத்திட்டு நாட்டுபற்றாளன் எண்டு காட்ட இலங்கை சனத்தையும் ஆர்மியையும் ரெண்டு திட்டி திட்டிபோட்டு போரனாங்கள்.. சரி இருங்கோ வாறன் பிள்ளை என்னவோ ஜெர்மன் மொழில கேக்குராள்..

உண்மை , உண்மை. ஆனால் இங்கு உண்மையை எழுதினால் சிலருக்கு பொத்துக்கொண்டு வருகுதே. சரி, சரி நடக்கிறதை பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2020 at 05:09, nunavilan said:

எனது கேள்வியின் சாராம்சம் 90 வெற்றிடங்களுக்கு இந்த கூவு கூவுபவர்கள்  சில மாதத்துக்கு முன் ப்ல ஆயிரம் வேலை வெற்றிடங்கள்  வந்த போது  ஒரு கூவலும் இல்லை  ஏன் என்பதே.

கடந்த இரு வருடங்களுக்கு முன் ராஜித யாழ் மக்களிடம் ஒன்று கூறினார், சர்வதேச விசாரணை செய்ய வெளிக்கிட்டால் புனர்வாழ்வு பெற்று திரும்பிய போராளிகளையும் விசாரணை செய்ய வேண்டிவரும் ஆகவே கடந்ததை மறந்து நாட்டில் சகஜ வாழ்வை ஏற்படுத்துவோம் என்றார். இதனால் தமிழர் நாம் பயந்து சர்வதேச விசாரணையை கைவிடுவோம் என்று எதிர்பார்க்கிறார்கள். அதேபோல் தமிழரை இராணுவத்தில் சேர்த்து அதை வைத்து ஒரு கதை உருவாக்கி சர்வதேச விசாரணை என்பதை கைவிட வைக்க முனையும் திட்டமாகவும் இருக்கலாம். அன்றி சீனா அண்ணா சொன்னாரோ மூன்றாம் உலகப்போரை தொடங்கப்போறேன் என்று..... சோழியன் குடுமி சும்மா ஆடாது. சேருபவர்கள் ஏன் சேர்ந்தோம் என்று நொந்து கொள்ளாமல் இருந்தால் சரி.

Link to comment
Share on other sites

9 hours ago, Robinson cruso said:

உண்மை , உண்மை. ஆனால் இங்கு உண்மையை எழுதினால் சிலருக்கு பொத்துக்கொண்டு வருகுதே. சரி, சரி நடக்கிறதை பார்ப்பம்.

சிங்களவரின் கபடம் தெரியாமல் ரொம்ப அப்பாவிகளாக இங்கு சிலர் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

சிங்களவரின் கபடம் தெரியாமல் ரொம்ப அப்பாவிகளாக இங்கு சிலர் இருக்கிறார்கள்.

அப்படி இருக்கலாம். இருந்தாலும் இங்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை. ஒன்று வலி கடடக்கூடியவர்கள் வழி காடடவேண்டும் அல்லது அவர்களது வாழ்வுக்கு வழி சொல்ல வேண்டும். இராணுவத்தில் சேர்ந்தாலும் சரி, சேராவிடடாலும் சரி என்னதான் நாங்கள் நினைத்தாலும் அவர்கள் நிகழ்ச்சி நிரலின்படியேதான் எல்லாம் நடக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

இவ்வாறு இணையும் தமிழ் இளைஞர்களை பயிற்றுவித்து விட்டு, முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் பணி புரிய அனுப்பி அதன் மூலம் மேலும் பிளவுகளை சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். 
எல்லைப் பிரச்சனை, காணிப் பிரச்சனை என்று தமிழர் முஸ்லிம்கள் மத்தியில் இருந்த சிவில் பிரச்சனைகளை தீவிரப்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எப் இனை இந்திய ஏவல் படைகளின் மூலம் தூண்டி விட்டு தமிழ் - முஸ்லிம் மோதலை முதன் முதலில் இராணுவ ரீதியாக / ஆயுத ரீதியாக மாற்றியது இந்தியாவும் இலங்கை அரசும். அதே போன்று அந்த கணங்கை மீண்டும் அணைய விடாமல் பார்த்துக் கொள்ள இலங்கை அரசு முயலும்.

தமிழர்கள்  ஆமியில் அல்லது பொலீசில்  சேர்ந்தால்  முஸ்லீம் இனத்திற்கு எதிராய் தூண்டி விடப்பட்டு பிரச்சனை வரும் சொல்லி முட்டுக்கடடை போடுபவர்கள் முஸ்லீம்கள் இதில் சேர்ந்து தமிழ் இனத்திற்கு எதிராய் நிற்கும் போது வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்...ஆனால் முஸ்லீம்கள் தமிழரை ஒதுக்கி எல்லா துறைகளிலும் முன்னேறிக் கொண்டு போகிறார்கள் .
அரசின் எல்லாத்  துறைகளிலும் தமிழாட்கள் உள்ளிட வேண்டும் 

Link to comment
Share on other sites

4 minutes ago, ரதி said:

தமிழர்கள்  ஆமியில் அல்லது பொலீசில்  சேர்ந்தால்  முஸ்லீம் இனத்திற்கு எதிராய் தூண்டி விடப்பட்டு பிரச்சனை வரும் சொல்லி முட்டுக்கடடை போடுபவர்கள் முஸ்லீம்கள் இதில் சேர்ந்து தமிழ் இனத்திற்கு எதிராய் நிற்கும் போது வாயை மூடிக் கொண்டு இருப்பார்கள்...

நீங்கள் அந்த நேரத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தமைக்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. முக்கியமாக முஸ்லிம்களைக் கொண்டு ஊர்காவல்படை பிரிவுகளை அமைக்கும் போது தென்னிலங்கை பத்திரிகைகள், வடக்கு பத்திரிகைகள், மனிதவுரிமை அமைப்புகள் அன்றும் எச்சரித்து இருந்தனர். அத்துடன் முஸ்லிம்கள் பெருவாரியாக இராணுவத்தில் சேரும் பொழுது எம்மைக் காக்கவென விடுதலைப் புலிகள் அன்று இருந்தனர், எனவே தமிழ் தரப்பில் இதற்கு எதிராக அரசிடம் முறையிடும் தேவை இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, நிழலி said:

நீங்கள் அந்த நேரத்தில் வாயை மூடிக் கொண்டு இருந்தமைக்காக எல்லாரையும் அப்படி நினைப்பது தவறு. முக்கியமாக முஸ்லிம்களைக் கொண்டு ஊர்காவல்படை பிரிவுகளை அமைக்கும் போது தென்னிலங்கை பத்திரிகைகள், வடக்கு பத்திரிகைகள், மனிதவுரிமை அமைப்புகள் அன்றும் எச்சரித்து இருந்தனர். அத்துடன் முஸ்லிம்கள் பெருவாரியாக இராணுவத்தில் சேரும் பொழுது எம்மைக் காக்கவென விடுதலைப் புலிகள் அன்று இருந்தனர், எனவே தமிழ் தரப்பில் இதற்கு எதிராக அரசிடம் முறையிடும் தேவை இருக்கவில்லை.

சரி நம்பிட்டன் நீங்கள் அன்றைக்கு எச்சரித்து இருப்பீர்கள் ...இப்ப நிகழ்காலத்தில் புலிகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் தமிழர் இதில் இணைவதால் உங்கள் போன்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

6 minutes ago, ரதி said:

சரி நம்பிட்டன் நீங்கள் அன்றைக்கு எச்சரித்து இருப்பீர்கள் ...இப்ப நிகழ்காலத்தில் புலிகள் இல்லாத நிலையில் அந்த மக்கள் தமிழர் இதில் இணைவதால் உங்கள் போன்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எனக்கு தனிப்பட எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இனவாதத்தினையே முழு கொள்கையாக கொண்ட ஒரு தேசத்தின் கொலை இயந்திரத்துக்கு, தமிழர்களை கொன்று குவித்த ஒரு இராணுவத்துக்கு அதே தமிழர்களை சேர்ப்பது நிச்சயம் தாயக மக்களுக்கு சிறிலங்கா அரசு நல்லது செய்வதற்காக என்பதில் தெளிவு இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.