Jump to content

தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வரவேண்டும் - யாழ். கட்டளைத் தளபதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

வெளிநாட்டுக்கு வந்துவிட்ட எனக்கு தனிப்பட எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இனவாதத்தினையே முழு கொள்கையாக கொண்ட ஒரு தேசத்தின் கொலை இயந்திரத்துக்கு, தமிழர்களை கொன்று குவித்த ஒரு இராணுவத்துக்கு அதே தமிழர்களை சேர்ப்பது நிச்சயம் தாயக மக்களுக்கு சிறிலங்கா அரசு நல்லது செய்வதற்காக என்பதில் தெளிவு இருக்கின்றது. 

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

Link to comment
Share on other sites

  • Replies 70
  • Created
  • Last Reply
38 minutes ago, ரதி said:

அரசு நல்லதற்கு செய்யாட்டிலும் இனி மேல் தீமை செய்யாது என்ற நம்பிக்கை இருக்கு ...இனி யுத்தம் செய்வதற்கு புலிகள் இல்லாத நிலையில்  இன்னொரு ஆயுத போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலையில் அந்த மக்கள் தங்களை தாங்கள் தான் பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் அவர்கள் இதில் சேருவதில் தப்பே இல்லை
யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டரை இலச்சம் சிங்கள இராணுவத்திற்கு புல்லுப் புடுங்க 100 தமிழ் பேசும் கூலிகள் தேவை என்று விளம்பரம் போட்டிருக்கலாம்.

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

எந்த நாட்டை? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

யார் கண்டது பெரும்பாலான தமிழர்கள் ஆமியில் சேர்வது மூலம் இராணு புரட்சி மூலம் கூட நாட்டை கைப்பற்றலாம் 

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Robinson cruso said:

அதை பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். ரதி அக்காவுக்கு அந்தளவு தூரத்துக்கு போக முடியுமோ தெரியவில்லை. இதட்கு பாகிஸ்தான், மியன்மார் , பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் கேடடாள் நல்லது.

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

 

Link to comment
Share on other sites

1 minute ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அப்படி எண்டால் கச்சதீவைத்தான் பிடிக்க வேண்டும். அதுக்கு மேல போக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

இது உலகத்திற்கு காட்ட சொறீலங்கா இராணுவத்தில் தமிழரும் இருக்கினம். அது இனப்படுகொலை இராணுவமல்ல என்று சொல்ல வசதிக்கு. 

இலங்கை இராணுவம் தமிழருக்கெதிராக இனப்படுகொலை செய்தது எனும் குற்றச்சாட்டை மறுப்பதற்கு செய்யப்படும் ஏற்பாடு.  இராணுவம் தமிழரை  படுகொலை செய்திருந்தால் அந்த இராணுவத்தில் எப்படி தமிழ் இளைஞர் விரும்பி இணைந்தனர்? எனும் கேள்வியை எழுப்பி, தமிழ் மக்களே அந்த இராணுவத்தில் இணைந்து வேலை செய்கிறார்கள்,  அரசியலில் இணைந்து அரசாங்கத்தோடு கைகோர்த்து நாட்டைக் கட்டி எழுப்புகிறார்கள். இங்கே இனப்பிரச்சனை இல்லை, வேறுபாடு இல்லை ஒரே கோட்பாட்டுடன் வாழ்கிறோம், சிங்களத்தில் தேசிய கீதம் பாடுகிறோம், சிங்களக்கொடியை ஏற்று உயர்த்திப்பிடிக்கிறோம், "எங்களுக்கு சர்வதேச விசாரணை வேண்டாம்" தமிழர் சொல்லுகினம் என்றொரு மாயை காட்ட உதவலாம். அங்கஜன் அண்மையில் ஒரு பேட்டியில், விடுதப்புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கம் அதனால்   மாவீரரை நினைவு கூர தான் அரசாங்கத்திடம் அனுமதி கேட்கவில்லை என தனது பக்க நிஞாயத்தை கூறியிருந்தார். இவர் மக்களின் பிரதிநிதி. அந்த மக்களே நீதிமன்ற தடையையும் மீறி, இராணுவ மிரட்டல்களையும் கடந்து தம் உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

எனகென்னமோ 1988 மாலைதீவு பயணம்தான் கண்ணுக்கு வந்து, வந்து போகுது🤣

அல்லது 1987 தனிநாட்டு பிரகடனம் செய்து விட்டு கப்பல் ஏறி இந்தியா போனது போலவும் இருக்கலாம்🤣.

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

ஆட்சியில் இருப்பவர்கள் சிங்களவர்களையும் தமிழர்களையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவத்தை பயன்படுத்துகிறார்கள். தமிழ் இராணுவத்தை வைத்து தமிழர்களை கட்டுப்படுத்துவது வெற்றிகரமானது என்பதை, ஈ.பி.டி.பி., புளொட், கருணாகுழு, பிள்ளையான் குழு ஆகிய துணை இராணுவ குழுக்களின் பயன்பாட்டில் இருந்து இராஐபக்‌ஷ அரசு அறிந்துள்ளது. ஆகவே அதனை மேலும் பெருப்பித்து தமது முழுமையான இராணுவ அமைப்புக்குள் உள்வாங்கும் முயற்சியாகவே இது தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, விளங்க நினைப்பவன் said:

இலங்கை இராணுவத்தில் இணைந்த தமிழர்கள் இராணுவ புரட்சி மூலம் நாட்டை கைப்பற்றி தமிழீழ தனிநாட்டு பிரகடனம் செய்யலாம் பின்பு கொழும்பை விட்டு வெளியேறி யாழ்பாணம் வரலாம்

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

கனவு காணலாம், ஆனால் இந்தளவுக்கா? இணையப்போகிறவர்களே சிங்கள  புலனாய்வார்களின் கைக்கூலிகள். இதில தமிழீழ தனிநாட்டுப்பிரகடனம்...? உங்களுக்கே இது அதிகமாகத் தெரியவில்லையா? அல்லது நையாண்டியா?   

நக்கலா, உண்மையா என்று தலைமுடியை பிய்த்துகொள்ளும் படி அடிக்கும் நக்கல்தான் அதி உச்ச நக்கல்.

வழமையாக இதில் சச்சின் ரேஞ்சுக்கு இறங்கி ஆடுபவர் யூட்டர் எனப்படும் கற்பகதரு. ஆனால் இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னிகரில்லாத தலைவன், தன்னலம் இல்லாமல், தன் முழுக்குடும்பத்தையுமே பணயம் வைத்து ஆடிய போராட்டத்தை குறை கூறி, கேலி செய்தவர்கள் இந்த வழியில் போய் தமிழீழ பிரகடனம் செய்தாலும் செய்வார்கள். யார் கண்டது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இப்போ எல்லாரும் கோலி ரேஞ்சுக்கு விளாசுகிறார்கள்

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

அவதாரங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் களமிறங்கி அபார ஆட்டம்.  

சம்பவாமி யுகே, யுகே😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

சம்பவாமி யுகே, யுகே😀

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 19:14, நிழலி said:

ரதி,
இது எப்படி இருக்கின்றது என்றால், புலிகள் இருந்தமையால் தான் சிங்கள அரசுகள் தமிழர்களை அழித்தொழித்தது என்றும் இப்ப அவர்கள் இல்லமையால் தமிழர்களை சக பிரஜைகளாக கருதி நல்லது மட்டுமே செய்யும் என்றும் நம்பலாம் என்ற கருத்தில் இருக்கின்றது.

சரி, அப்படியே நீங்கள் எண்ணுவது போன்று எனில், இன்று புலிகள் இல்லாமல் போனபின் ஏன் தமிழர்களுக்கு சொந்தமான மேச்சல் காணிகளை கூட விட்டு வைக்காமல் சிங்கள மக்களுக்கு அடாத்தாக பறித்து கொடுக்கின்றனர் என்பதற்கோ, அல்லது முல்லைத்தீவின் எல்லைக் கிராமங்கள் எங்கும் தமிழர்களின் பாரம்பரிய கிராமங்கள் பலவற்றில் அடாத்தாத்தாக சிங்கள விவசாயிகள் பறித்தெடுக்கின்றனர் என்பதற்கோ, வடமராச்சி கிழக்கில் தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான வாடிகளை தீ வைத்து எரித்து விட்டு அதில் சிங்கள மீனவர்கள் வந்து தம் கொட்டில்களை அமைத்து இருக்கின்றார்கள் என்பதற்கோ அல்லது இவற்றுக்கெல்லாம் சிங்கள இராணுவமும் பொலிசும் பாதுகாப்பு கொடுக்கின்றது என்பதற்கோ உங்களின் மேலான பதில் என்ன?

அரசும் ,புலிகளும் விரும்பியோ , விரும்பாமலோ யுத்தம் செய்ய வேண்டிய தேவையில் இருந்தது ...புலிகள் இல்லாதவிடத்து யுத்தம்  இல்லை.
அவர்கள் யுத்தத்தில் வென்று விட்டார்கள்...அதை அவர்கள் செயலில் காட்டுகிறார்கள் ....இந்த நிலமைக்கு கொண்டு வந்ததில் புலிகளின் பங்கும்  இருக்குது அல்லவா?
இப்படியே இருந்து கொண்டு சிங்களவன் எமது நிலங்களை ஆக்கிரமித்து விட்டான், வலைகளை அறுத்து விட்டான் என்று புலம்புவதிலோ அல்லது நேருக்கு நேர் எதிர்த்து நிற்பதிலோ பிரயோசனம் இல்லை.
என்னுடைய கருத்து அவர்களது வழியில் போய் அவர்களை வளைப்பது 
தமிழர்கள் எல்லாத் துறைகளிலும் கால் பாதிக்க வேண்டும் .
நாம் பலமில்லாதவராய் இருக்குமிடத்து எமது நிலங்களை போராடித் தான் பெற வேண்டும்.
வெட்டுவேன் ,குத்துவேன் என்று கதைப்பது சும்மா நாங்கள் தேசியவாதிகள் என்று காட்ட மட்டும் உதவும்.
தங்கள் வயிற்று பிழைப்பிற்காய் அந்த மக்கள் ஆமியிலோ, பொலீசிலோ சேர்ந்தால் துரோகி என்பதும்[கீழே ஒருவர் எழுதியிருக்கார். அவர் அவுசில் இருக்கிறார் . நல்லாய் படித்து நல்ல வேலை ...சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .
அங்குள்ள மக்கள் தான் தங்களை தங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டும் ...அவர்களது நிலங்களை எப்படி மீட்பது என்பது அவர்களுக்கு தெரியும் .
வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎03‎-‎12‎-‎2020 at 21:13, குமாரசாமி said:

எந்த நாட்டை? :cool:

நான் பிறந்த நாடுதான்  
 

On ‎03‎-‎12‎-‎2020 at 22:23, goshan_che said:

இந்த திட்டம் எப்படி செயல்வடிவம் பெறக்கூடும் என்ற மேலதிக தகவல்களையும் சொல்லிவிடுங்களேன்?

எல்லாம் ஒரு நப்பாசை தான்...நான் தமிழர்கள் பிரித்து தமிழீழம் அமைப்பார்கள் என்று சொல்லவில்லை ...இராணுவம் மூலம்  ஆட்சி கைப்பற்ற கூடிய சாத்தியக் கூறுகள் ஏற்படலாம் ...சிங்களவரும்,தமிழருக்கு உதவலாம் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், தேவைக்கேற்ப எங்கும் வியாபித்திருப்பார். 

அவதாரங்கள் இரு பகுதியிலும்தான் பிறப்பெடுக்கிறன.

இராவண அவதாரம் இராமர் வேசம் போடுவது கூட இந்த யாழ் உலகில் சகஜம்.

அந்த இராவண அவதாரை இராம பக்தர், “இராம, இராமா” என்று பூஜிப்பது கூட நடக்கும் 🤣

அதே நேரத்தில் பார்க்க மிருகம் போல இருப்பதால் நரசிம்மரை அசுரன் என்று சொல்லும் அறியாமையும் இங்கே சகஜம்.

 ஆதலால்தான் நான் அவதாரங்களின் அடி முடி தேடுவதில்லை. அவதாரங்களா இல்லையா என்றும் சிந்திப்பதில்லை. கருத்தை மட்டும் பார்த்தால் போதுமானது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

சிம்பிளாய் துரோகி பட்டம் கொடுத்திருக்கார்.அவருக்கு ஊரில் உள்ளவர்கள் போராடி நாடு எடுத்து கொடுக்கோணும் ..அங்குள்ள மக்கள் வறுமையால் செத்தாலும் பாவாயில்லை இப்படியான வேலைக்கு போக கூடாது .] .

💯 

அதே நிலையில் வெளிநாடுகளில் பலர் இருப்பதை காண கூடியதாக உள்ளது. இலங்கையில் உள்ளவர்கள் என்ன வேலைகளில் சேர கூடாது எதில் சேரலாம் என்பதை இவர்கள் தான் முடிவு எடுப்பார்கள்.

6 hours ago, ரதி said:

வெளிநாட்டில் இருந்து கொண்டு எம்மால் முடிந்த ஒரு சிலருக்கு நிதியுதவி அளிப்பதை விட வேறு எதுவும் எம்மால் செய்ய முடியாது .
காசை அனுப்பி விட்டு அந்த மக்களை தூண்டி விடுவதை விடுத்து , அவர்களை நிம்மதியாய் இருக்க விடுங்கள் 

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.