Jump to content

உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொசாட் - உலகின் தலைசிறந்த உளவு அமைப்பு.அதன் சிறப்பம்சங்களும் தோற்ற வரலாறும்.

மொசாட். கேட்ட உடனேயே லேசாக அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் பெயர்.
உலகின் அதிபயங்கர உளவு அமைப்பு.

இஸ்ரேலின் முதல் பிரதமர் டேவிட் பென் குயின் 1951-ம் ஆண்டு மொசாத்தைத் தொடங்கினார். 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இயங்கும் மொசாத்தின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிவோர் இரண்டாயிரம் பேர் வரை இருக்கலாம் என்பது உறுதிப்படுத்தப் படாத தகவல்.

அத்தனை பெரும் உளவாளிகள்.

ஆனால் யாரென்று அறிந்து கொள்ளமுடியாத பல்லாயிரக்கணக்கான ரகசிய உளவாளிகள்.
மொசாத் அமைப்பிற்கு உலகெங்கிலும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமக்கு பக்கத்தில் ஒரு மொசாத் இருந்தால்கூட ஆச்சரியமில்லை.

உலகத்தில் இருக்கும் அத்தனை உளவு நிறுவங்களில் வேலை பார்ப்பவர்களின் சம்பளத்தைவிடவும் பல மடங்கு அதிகமானது மொசாத்தின் சம்பளம்

உலகத்தில் உளவு அமைப்புகளுக்காக வரையறுக்கப்பட்ட வரம்புகளைக் காட்டிலும் மிக மிக அதிக அதிகாரத்தைக் கொண்டிருப்பது மொசாத் மட்டுமே.

இஸ்ரேலில் மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் உலகின் வேறெந்தப் பகுதியிலும் கூட ஒரு மொசாத் ஏஜெண்ட், தமது தேசத்தின் எதிரி என்று கருதக்கூடியவர்களைக்கொல்லுவதற்கு இஸ்ரேல் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

அரசியல் கொலைகளை அதிகாரபூர்வமாகச் செய்வதற்கு மொசாத் அமைப்பிற்கு அனுமதி இருக்கிறது என்றால் மிகையாகாது.

இந்த உளவு அமைப்பில் உலகத்தில் உள்ள எவரும் சேரலாம்.

யூதர்களுக்கு முன்னுரிமை உண்டு.

ஆனால், அவர்கள் அளிக்கும் பயிற்சிகள் பரம ரகசியமாக வைக்கப்படும்.

கை கால்களை கட்டி கடலில் போட்டால் கூட நெஞ்சை வைத்தே நீத்தி கரைசேர்வது உள்ளிட்ட பயிற்சிகள் கொடுக்கப்படும்.

மொசாட் இஸ்ரேலின் உளவுப்படை. மொசாட்டுக்கென்று தனியாக அலுவலகம் (அறிவிக்கப்பட்டது) எதுவும் கிடையாது.

அரசாங்க வேலைக்கு ஆளெடுப்பு என செய்திதாளில் செய்தி மட்டுமே வரும்.

அதற்கு செல்லும் நபருக்கு, தான் மொசாட் பணிக்குத்தான் செல்கிறோம் என்று கூடத் தெரியாது. இது எல்லா நாடுகளிலும் கிளை விரித்துப் பரவியுள்ளது.

இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்க நினைத்தாலேஅந்த நாட்டின் நிம்மதியை கெடுக்கும் மொசாட்.

அமெரிக்காவின் மேற்பார்வையில் உருவானது மொசாட். பின் நாளில் குருவுக்கே தண்ணி காட்டும்  சிஷ்யனாக வளர்ந்தது.

ஒரு நபரை அவரின் அனுமதியில்லாமல் அவருக்கே தெரியாமல் தன் உளவு வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளும் திறைமை மொசாட் உளவாளிகளுக்கு  உண்டு.

மொசாட்டில் ஒருவர் சேருவது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல கட்ட சோதனைகள் இருக்கும்.

பல்வேறு விதமான பயிற்சிகள் என இருக்கும். உலகின் பல மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும்.

எந்தக் கடினமான சூழ்நிலையையும் மிக சாமர்த்தியமாக சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இந்த சோதனைகளில் பங்கேற்கும் போதே பல ஆபத்துகளைச் சந்திக்க வேண்டும். இந்த சோதனைகளில் வெற்றி பெற்றுவிட்டால் உளவுக்காக அமர்த்தபடுவார்கள். இல்லையென்றால் அதோடு அவனின் கதை முடிந்தது..

பாகம் 1.

மறுபடியும் வேறு விதமாக கேள்விகள்.

மொசாட் அவ்வளவு பயங்கரமானதா.?

இல்லவே இல்லை!!

 அதிஅதி பயங்கரமானது.

உலகத்தில் வீசப்படும் ஒவ்வொரு குப்பைப் பேப்பரும், பழைய கம்ப்யூட்டர்களும் ஆராயப்படும்.

எனது இந்தப் பதிவு, முந்தைய பதிவிலிருந்து, அதன் லைக், கமெண்ட் வரை தோண்டிவிடுவானுக.

24 மணி நேரமும் காலை ஆட்டிக் கொண்டே இருக்கும் வேட்டை நாய்.

இன்னும் ஒரு அழகான விடயம்.

மொசாட்டை வடிவமைப்பு செய்தது ஒரு பெண்!!

பல்லாண்டுகள் அந்த தேசத்தின் பிரதமர்.

ஜெயா போல, இந்திரா போல, சுப்பீரியர் பர்சனாலிட்டி!!

இது இப்படித் தான் கேள்வி கேட்கும்,
சந்தேகப்படும் நபர்கள் வரலாற்றில் தேவை இல்லை.

ஜெகோவா. உங்களுக்கு ஒரு விருந்தாளி.

தனது மொசாட்டுக்கு உலகத்தில் யார் வேண்டுமானாலும் உளவாளியாக வரலாம் என வெப்சைட் வைத்து உள்ள ஒரே ஒரு உளவு அமைப்பு அதுதான்.

டபிள் செக், ட்ரிபிள் செக், க்வாட்ரோ செக், பென்டா செக், க்யுனோ செக், நேனோ செக்..என பலகட்டப் பரிசோதனை நிகழும்.

நிழல் தவறாக அசைந்தாலும், உங்கள் பரம்பரை அத்திப் பட்டியில் புதைக்கப்பட்ட அஜீத் குடும்பம் தான்.

அப்ப, மற்ற நாடுகளின் உளவு அமைப்புகள்.??

சிம்பிள். அமெரிக்கா 9|11

பிரான்ஸ், பெல்ஜியம், இந்தியா.

உலகம் முழுவதும் குண்டு வெடிப்பு.
ISIS. உலகம் முழுவதும் வெறியாட்டம்.!!

இதுவரை,

இஸ்ரேலில்,

குண்டு எல்லாம் இல்லை. பட்டாசு வெடித்தது என்று செய்தி பார்த்து இருக்கிறீர்களா.??

அதுதான் மொசாட்!!

அதனால் தான் அது மொசாட்.!!

பாகம் 2

சரி.. இதுவரை நீங்கள் சொன்ன மொசாட்டை எவனுமே ஜெயித்ததில்லையா.?

ஆம். ஒரே ஒருவர் உண்டு!!

அவன் இன்று உயிரோடு இல்லை என்கின்றனர். ஆனால் பிணத்தைக் காட்டவில்லை. 

தப்பித்தவறி மீண்டும் உயிரோடு வந்தால்??

அவர்களிடமும், மற்றும் அவர்களது பரம எதிரிகளிடமும், அதாவது பாலஸ்தீன போராளிகளிடமும் ஒரே நேரத்தில் தன் வீரர்களைப் போர் பயிற்சி பெற வைத்தவர்.
கொரில்லா என்ற திடீர்த் தாக்குதல் என்ற உத்தியில்,

தற்கொலைப்படை என்ற ஒன்றை உருவாக்கி, உலகத்தை அதிரச் செய்தவர்!!

மனித வெடிகுண்டு என்ற  ஒருபோர் உத்தியைக்கையாண்ட முதல் போராளி இயக்கம்.

செக்கோஸ்லோவேக்கியா இரண்டாகப்பிரிக்கப்பட்டு,

செக் ரிபப்ளிக் மற்றும் ஸ்லோவேக்கியா எனப்பிரிந்த போது அதில் ஒரு நாட்டிலிருந்து இஸ்ரேலியத் தயாரிப்பு விமானத்தைக் கொண்டு வந்து, அதைவைத்து ஒரு விமானப் படை உருவாக்கியவர்.

அதைவைத்தே அந்த நாட்டுத் தயாரிப்பு  விமானங்களைச்சுக்கு நூறாக்கியவர்.

அவர் பெயர் #கரிகாலன்.

அவருக்கு மற்றொரு பெயர் உண்டு.

ஆம். எம் தலைவர்!!

வேலுப்பிள்ளை_பிரபாகரன்.

இஸ்ரேலிய ஆயுதங்களும், இந்திய ரேடார்களும் பயனின்றிப் போன இடம்.
#கட்டுநாயக விமான தளம்.

மொசாட்கள் மோப்பம் பிடிக்காமல் கோட்டை விட்ட இடம்.

உலகத்தில் மொசாட் தோற்ற இடம் அது.

அதன் பெயர் ஈழம். அதுவே எங்கள் சகோதர தேசம்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தற்கொலைப் படையை முதலில் உருவாக்கினார்கள் என்று என்ன நோக்கத்திலோ இந்த சமூகவலைப் பதிவர் சொல்ல அதை நாங்களும் குதூககலமாகப் பரப்பி சர்வதேச நாடுகளில் தடையை நியாயப் படுத்துவது மாதிரி இருக்கு!

ஜப்பானின் கமிகாசி வீரர்கள், இரண்டாம் உலகப் போரிலேயே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 

நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதலை பேரழிவு ஆயுதமாக்கியது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், 1981 இல். பின்னர் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள்  தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செய்து வந்தன (இஸ்ரேலில் பட்டாசு கூட வெடிக்கவில்லையாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்!😎).

2001 இல் விசேட தடைப்பட்டியலில் புலிகள் அமைப்பை அமெரிக்கா சேர்ப்பதற்கு ஹமாஸ், ஹிஸ்பல்லா வழி வந்த தற்கொலைத் தாக்குதல்களும் ஒரு பிரதான காரணம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள இராணுவமும்,சிங்கள பொதுமக்களும் வியந்து  பாராட்டும் ஒரு விடுதலை இயக்கத்தை ஒரு சில தமிழர்களும்,ஒரு சில ஒட்டுக்குளுவன்களும் தூற்றுவதில் வியப்பேதும் இல்லை.

அமெரிக்காவுக்குள் குண்டு என்று  ஒருவர் மனதுக்குள் முணுமுணுத்தாலே CIAக்கு இடிமுழக்க சத்தத்தில் கேட்குமாம்.உடனே உசாராகி விடுவார்களாம். அதே போல் இங்கும் எங்கேயாவது ஒரு இடத்தில் புலி,பிரபாகரன்,சீமான் என்ற சொல் வந்தால் போதும் சிலிர்த்து விடுவார்கள். 

Why do we get goosebumps? | Popular Science

******

Link to comment
Share on other sites

இலங்கையில் முஸ்லிம்களின் எதிர்ப்பால்(அரசில்) மொசாட் வெளியேற்றப்பட்டது. 

இத்தனை ஆயுதங்கள் வைத்திருந்தும் அமெரிக்காவால் தலபானை அழிக்க முடியவில்லை. அவர்களை பயங்கரவாதிகள் பட்டியலில் போட்டார்கள். அவர்களுடன் பல சுற்று பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக மோசமான கட்டுரை. இதற்குள் விடுதலைப் புலிகளை வலிந்து இழுத்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம்... 😡

சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்டுரை ஒரு குப்பை.. இதற்குப் பதில் எழுதுவதே நேர விரயம்.... 😫

 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

புலிகள் தற்கொலைப் படையை முதலில் உருவாக்கினார்கள் என்று என்ன நோக்கத்திலோ இந்த சமூகவலைப் பதிவர் சொல்ல அதை நாங்களும் குதூககலமாகப் பரப்பி சர்வதேச நாடுகளில் தடையை நியாயப் படுத்துவது மாதிரி இருக்கு!

ஜப்பானின் கமிகாசி வீரர்கள், இரண்டாம் உலகப் போரிலேயே தற்கொலைத் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். 

நவீன காலத்தில் தற்கொலைத் தாக்குதலை பேரழிவு ஆயுதமாக்கியது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள், 1981 இல். பின்னர் ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகள்  தற்கொலைத் தாக்குதல்களை தொடர்ந்து இஸ்ரேலுக்கும் அமெரிக்காவிற்கும் எதிராக செய்து வந்தன (இஸ்ரேலில் பட்டாசு கூட வெடிக்கவில்லையாம் என்று ஆய்வாளர் சொல்கிறார்!😎).

2001 இல் விசேட தடைப்பட்டியலில் புலிகள் அமைப்பை அமெரிக்கா சேர்ப்பதற்கு ஹமாஸ், ஹிஸ்பல்லா வழி வந்த தற்கொலைத் தாக்குதல்களும் ஒரு பிரதான காரணம்! 

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 

 

 

Link to comment
Share on other sites

ஆரும் உளறி கொட்டுவதை படிப்பதை விட இது சம்பந்தமான புத்தகங்களை படிக்கலாம்
netflix  ல மொஸாட் மற்றும் அதன் நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நிறைய தொடர்கள் உள்ளன அவற்றை பார்க்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kadancha said:

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 

 

 

கடஞ்சா, நான் சொன்னதையே விரிவாகச் சொல்லியிருக்கிறீர்கள். தற்கொலைப் படையென்பது புராதன காலத்திலும் இருந்த விடயம் தான். ஜப்பான் காரன் ஆகாயத்தில் இருந்து குண்டு கட்டிக் கொண்டு பாய்ந்ததால் அது பிரபலமானது. 
குண்டைக் கையில் எடுத்து கொண்டு தாங்கியின் கீழ் ஊர்ந்து சென்ற தற்கொலைத் தாக்குதல்கள் முதல் உலகப் போரிலேயே சில நடந்தவை.

எனவே இது ஒன்றும் தமிழர்கள் கண்டு பிடித்த முதல் விடயம் அல்ல! அப்படி ஒரு கதையைக் கிளப்பி விடுபவருக்கு நல்ல நோக்கம் இருக்காது என்பது உங்களுக்கும் புரியாமலிருப்பது ஆச்சரியம்!

Link to comment
Share on other sites

தற்கொலைப்படை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம்  எமது போராட்டம் வலிமை அடைந்த போது மகிழ்வாகவும்😀 அதே தற்கொலைப்படை அரசியல்வாதிகளை கொல்ல பயன்பட்டு போராட்டத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்த பயன்பட்டு அதன் மூலம்  எமது போராட்டத்தை அழிக்க காரணமாக எதிரியால் பயன்பட்ட  போது கவலையாகவும்😞 இருந்த‍து.  அதாவது ஒரு போராட்ட வடிவம்  எமக்கு ஏறு முகத்தையும் அதை விட அதிகமாக இறங்கு முகத்தையும் தந்த‍து தமிழரின் பட்டறிவு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

அப்படி பார்த்தால், ஷியா பிரிவு 7 ம் நூற்றாண்டில் இருந்து  அலமட் (Alamut) அரண்மனையை தளமாக  கொண்டு ஷியா வழிபாட்ட்டு தலமும், நம்பிக்கை பீடம் எனும் போர்வையில்  இயங்கிய இரகசிய ஷியா கொலை குழு.

12 ம் நூற்றாண்டில், இவர்களின் சக்தியும், வீச்சும் அதி உசகத்தில் இருந்தது.

இவர்கள், இப்போதைய ஸ்பெஷல் forces போன்று இயங்கினர், மறைக்க கூடிய கத்திகளை கொண்டு, தற் கொலைப்படையாக.

விபரங்கள் :

https://www.nationalgeographic.com/history/magazine/2018/11-12/nizari-ismaili-muslim-warriors-medieval-times/

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.

ஆனால், us உம் இரகசிய தற்கொலை படை வைத்து இருந்தது, அதன் கடற்படையில்.  Spanish armada இற்கு எதிராக பாவிக்கப்பட்டது.  

பாண்டியரும் தற்கொலை வைத்து இருந்தனர் ஆபத்து தாவிகள் என்ற பெயரில். 

சோழரும் ஆரம்பத்தில் வைத்து இருந்தனர். சோழரின் பலம் மற்றும் சக்தி எழுச்சியை ஆழமாக ஆராய்ந்தால், ஏறத்தாழ US ஐ போலவே, அன்றைய நிலையில் இருந்தது.   
   
புலிகள், தற்கொலை படை என்பதை வேறு, இதுவரையில் கண்டிராத  பரிமாணத்திற்கு கொண்டு சென்றனர்,  வரலாற்று தடத்தை அடிப்படையாக வைத்து.
 

 

 

பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து.

இங்கே பந்தி என்பது பந்திப் படை என்றும் ஏறக்குறைய தற்கொலைப் படைக்குச் சமானமானது என்றும் ஒரு பார்வை உண்டு. 

பந்திப்படையில் இருப்பது பெருமையாகவும், கெளரவமாகவும்பார்க்கப்பட்டுள்ளது. இப்படையில் இருந்து போருக்குச் செல்பவர்கள் உயிருடன் திரும்பி வருவது அரிதானதாக கூறப்படுகிறது.

46 minutes ago, tulpen said:

தற்கொலைப்படை இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு அதன் மூலம்  எமது போராட்டம் வலிமை அடைந்த போது மகிழ்வாகவும்😀 அதே தற்கொலைப்படை அரசியல்வாதிகளை கொல்ல பயன்பட்டு போராட்டத்தை பயங்கரவாதமாக முத்திரை குத்த பயன்பட்டு அதன் மூலம்  எமது போராட்டத்தை அழிக்க காரணமாக எதிரியால் பயன்பட்ட  போது கவலையாகவும்😞 இருந்த‍து.  அதாவது ஒரு போராட்ட வடிவம்  எமக்கு ஏறு முகத்தையும் அதை விட அதிகமாக இறங்கு முகத்தையும் தந்த‍து தமிழரின் பட்டறிவு. 

இங்கே சரியான பார்வை என்று ஒன்றுமே இல்லை. ஜப்பானியர்கள் கமிக்காசியாக இறப்பது மேன்மையானதாகக் கருதினார்கள். 

தேவைக்கேற்ப ஒவ்வொரு இனங்களினதும் பார்வை மாறுபடுகிறது.

Link to comment
Share on other sites

****

கட்டுரையில் இருப்பது அதை எழுதியவரின் கற்பனையான வெட்டிப் பெருமையை விட ஏதுமில்லை என்பது தான் என் கருத்து. ஈழத்தில் மொசாட் தோற்றது என்பது நகைச்சுவை. ஈழத்தில் மொசாட்டே தோற்றது என்றால் ஈழம்  படு தோல்வியுற்றது ஏன் என்று கேட்டால் இதை விட நகைச்சுவைக்கதைகளை கூறுவார்களே தவிர உண்மை கரணங்களை ஆராயமட்டார்கள்.  இப்படியான நகைச்சுவை கதைகள் எமது எதிர்கால போராட்டத்திற்கு உதவாது. எதிர் மறையான விளைவையே தரும். எதிர் கால சந்ததி  தமது சொந்தப் புத்தியில் போராராடி வெல்லட்டும். 👍👍அதன் பின்னர் அவர்கள் இந்த  வெட்டிப் பெருமை  வீணர்களின் நகைச்சுவை கதைகளை வைத்து comedy film  எடுத்து ஒஸ்கார் விருதுக்கு அனுப்பட்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெட்டிப் பெருமை பேசும்  நகைச்சுவை கதைகளை ஆரம்பத்தில் நல்ல நகைச்சுவை கதைகள் என்று படித்து சிரித்தாலும் இப்போது எல்லாம்  மிகவும் அலுத்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kapithan said:

மிக மிக மோசமான கட்டுரை. இதற்குள் விடுதலைப் புலிகளை வலிந்து இழுத்தது மிகப் பெரிய அயோக்கியத்தனம்... 😡

சுருக்கமாகச் சொன்னால் இந்தக் கட்டுரை ஒரு குப்பை.. இதற்குப் பதில் எழுதுவதே நேர விரயம்.... 😫

 😏

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

அப்போ கடுப்பை எப்படித் தானையா காட்டுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இந்த குப்பையை வாசிக்காமல் சரி விடுவம்.....
வாசித்ததுதான் வேஸ்டு.....அதுக்கு கருத்து எழுதாமல் போயிருந்தாலே நேரம் மிச்சமாயிருக்கும் எல்லோ....? 😁

நேரம் பொன்னான ஆக்கள் ஏன் இப்பிடியான திரிகளுக்குள் எழுதி நேரத்தை பாழாக்குறியள்🤣

பெரியவர்..

1) இந்தக் கட்டுரை மிம மிகத் தரம் குறைந்த, மிகப் பிழையான, பொய்யான தரவுகளை ஆதாரங்களாக, நாசூக்காக வாசிப்பவர்களை ஏமாற்றும் நோக்கில் எழுதப்பட்டதாக(நான்) உணருகிறேன். அதனால்தான் கடுமையாக எனது கருத்தை முன் வைத்தேன்.

2) எங்கள் விடுதலைப் போராட்டத்தை ஏன் இதற்குள் இழுக்க வேண்டும்.. ? 

கவனியுங்கள்..

தலைப்பு ..

உலகின் தலைசிறந்த உளவு அமைப்புக்கள்...

அதன் சிறப்பம்சங்கள்...

அவற்றின் தோற்றம்...

மேற்கூறிய ஒன்றேனும் கட்டுரையில் கூற அல்லது உள்ளடக்கப்பட்டுள்ளதா.. ?

கட்டுரையின் உள்ளடக்கத்தில் எத்தனை வீதமான தரவுகள் உறுதிப்படுத்தப் பட்டவை (மிகப் பெரும்பாலான தகவல்கள் ஊதிப் பெருப்பிக்கப்பட்டவை...)

இதற்குள் விடுதலைப் போராட்டத்தை வலிந்து திணிப்பதற்கான காரணம்/தேவை என்ன..?

ஒருவர் மொசாட்டைப் பற்றியோ அல்லது CIA தொடர்பாகவோ அல்லத் KGB தொடர்பாக எதை வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். அதையிட்டு நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. வாசித்துவிட்டு அத்துடன் அதை மறந்து போகலாம்.

ஆனால் எங்கள் போராடத்தை வலிந்து திணிப்பதற்கான ஏதாவது ஒரு காரணத்தை இந்தக் கட்டுரையில் காட்ட முடியுமா.. ?

யாரை நோக்கி இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.. ?

சற்று யோசியுங்கள். 

(Mossad தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் Gate Keepers எனும் தொடர் விவரணச் சித்திரம்(Nerflix.. ?) வெளிவந்தது. பல சுவாரசியமான தகவல்கள் அதில் உள்ளன. தேடிப் பாருங்கள். நிச்சயம் விரும்புவீர்கள்))

👍

2 hours ago, ஈழப்பிரியன் said:

அப்போ கடுப்பை எப்படித் தானையா காட்டுவது?

உங்களுக்கும் சேர்த்துத்தான் பதில் மேலே எழுதப்பட்டுள்ளது. புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். 😀

Link to comment
Share on other sites

9 hours ago, விளங்க நினைப்பவன் said:

இந்த வெட்டிப் பெருமை பேசும்  நகைச்சுவை கதைகளை ஆரம்பத்தில் நல்ல நகைச்சுவை கதைகள் என்று படித்து சிரித்தாலும் இப்போது எல்லாம்  மிகவும் அலுத்து விட்டது.

பொதுவாக கதாசிரியர்கள் எழுதும் கற்பனைக் கதைகள் ஆரம்பத்தில் சுவார்ஷியமாக இருந்தாலும் அக்கதைகள்  ஒரே மாதிரி தொடர்ந்தும்  இருந்தால் காலப்போக்கில் அந்த கதைகளை வாசிக்கும் போது சலிப்பு வருவது இயல்பு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியுக்குள்ளை எங்கடை சாந்தியக்காவும் வந்து போய் இருக்கிறா எண்டேக்கை மொசாட்டிலை ஏதோ விசயம் இருக்கு....😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எல்லாம் புட்டின் தான். சோறு அவியா விட்டாலும் புட்டின் தான்.😃
    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.