Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.பிரெட்லீயில் தொடங்கி பிரதமர் மோடி வரை டுவிட்டரில் வாழ்த்து மழையால் நனைக்கிறார்கள் நடராஜனை. பேரில்தான் ‘நட’ இருக்கிறதே தவிர, நடராஜனின் வாழ்க்கையே பரபர ஃபாஸ்ட் பவுலிங் ஓட்டம்தான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28.jpg
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் அறிமுகமானபோது அவருக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே சிவப்புக் கம்பள வரவேற்பு நம் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ நடராஜனுக்கும் கிரிக்கெட் உலகில் கிடைத்திருக்கிறது!யெஸ். இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் நடராஜன்தான். செல்லமாக ‘நட்டு’; பெருமையாக ‘யார்க்கர் கிங்’. எந்தவித பின்புலமும் இல்லாமல் திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருக்கும் தமிழக வீரர் இவர்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28a.jpg
கடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசஸ் சார்பாக பந்து வீசி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். துல்லியமாக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அனைவரும் புகழ்கின்றனர். லைன் & லெங்ந்த்தை சீர் செய்து பந்து வீசினால் மிகச்சிறந்த பிளேயராக உருவாகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28b.jpg
சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ருத்ரதாண்டவம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.“பள்ளி விட்டுட்டு வந்தா பேட்ட எடுத்துட்டு போயிடுவான். கிரிக்கெட் அவன் ரத்தத்துல ஊறிப் போச்சு. சோறே இல்லைனாலும் பொழுதன்னைக்கும் அவனுக்கு விளையாட்டுதான்.

நாங்க ஏழ்மையான குடும்பம். என் வீட்டுக்காரரு தறி ஓட்டிட்டு இருந்தாங்க. நான் சில்லி கடை வச்சிருந்தேன். எங்க ஊர் தம்பி ஜெயப்பிரகாஷ்தான் வெளியூர்ல இவன விளையாட கூட்டிட்டு போவாங்க. சரி; அவன் ஆசைப்படுறான், விளையாடட்டும்னு ஜெயப்பிரகாஷ்கிட்டயே
விட்டுட்டோம். அவர் இல்லைனா இவ்வளவு தூரம் நட்டு வந்திருக்க மாட்டான்.

வூட்டுக்கு வந்தாக் கூட சும்மா இருக்கமாட்டான். பந்த எடுத்துட்டு கைய, கால ஆட்டிக்கிட்டுதான் இருப்பான். ஃபிரண்டுங்க கூட ஜாலியா பேசுவான். சினிமால நடிக்கக் கூட கேட்டாங்க. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு மறுத்துட்டான். விளையாட்டுதான் மூச்சு. ஐபிஎல்ல விளையாடும்போது எப்ப இந்தியாவுக்கு விளையாடுவான்னு ஏங்கினோம். எங்க ஆச நிறைவேறி இன்னிக்கு பேர் வாங்கிக் கொடுத்துட்டான்...” பூரிக்கிறார் நடராஜனின் அம்மா சாந்தா.

‘‘எங்க வீட்டுல ஐந்து பேர். அண்ணாதான் மூத்தவர். இன்னிக்கு அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது எங்களோடு சேர்ந்து ஊரே கொண்டாடுது. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் பேசாத சொந்தக் காரங்க எல்லாம் எங்ககிட்ட இப்ப வந்து பேசுறாங்க.
அண்ணா கவுர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சாங்க.

அந்த கிரவுண்டுலதான் எப்பவும் இருப்பாங்க. இங்க இருக்குற பசங்க எல்லோரையும் உள்ளூர் டோர்னமெண்டுக்கு ஜெயப் பிரகாஷ் அண்ணாதான் கூட்டிட்டு போவாங்க. அவங்கதான் ‘எங்கண்ணன் பவுலிங் நல்லா போடுறதா’ சொல்லி சென்னையில் போய் சேர்த்து விட்டாங்க...” என்கிறார் நடராஜனின் சகோதரி தமிழ் அரசி.

இவை எல்லாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விளையாட்டு வீரர்களும் சந்திக்கும் பிரச்னைகள்தான். ஆனால், சென்னையில் நடராஜன் எதிர்கொண்டது வேறு யாரும் எதிர்கொள்ளாத சிக்கல்கள்.ஆம். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கனவுகளோடு சென்னை வந்த நடராஜனுக்கு அப்போது தெரியவில்லை விளையாட்டில் ஜெயிப்பதைவிட அணியில் இடம் பெறுவதற்குத்தான் முதலில் ஜெயிக்க வேண்டும் என்பது.

அணியில் இடம் பெறுவதற்காக நடராஜன் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், எடுத்த முயற்சிகள்… என்று கூடவே இருந்து பார்த்த பெயர் சொல்ல விரும்பாத அந்த கிரிக்கெட் கோச் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை.
“ஜெயப்பிரகாஷ் கண்ணில் பட்டு சென்னை வந்த நடராஜ், லோயர் டிவிஷன்ல முதலில் ஆடினார். இங்க ஐந்து டிவிஷன் இருக்கு. அதில் ஃபர்ஸ்ட் டிவிஷன்ல இருந்து ரஞ்சி டிராஃபிக்கு தேர்வு பண்ணுவாங்க.

நடராஜன் லோயர் டிவிஷனுக்கு அப்புறம் செகண்ட் டிவிஷன் ஆடப் போனார். அங்க நல்லா பண்ணியும் நெட் பவுலராவே வச்சிருந்தாங்க. ஆனா, இவர் போடுற ஸ்பீடை வச்சு ஃபர்ஸ்ட் டிவிஷனுக்கு எடுத்தாங்க.சென்னை முழுக்க நடராஜனுக்கு ‘ஸ்பீடு’னு பேர் வந்தது. ‘நரம்பு மாதிரி இருந்துட்டு பயங்கரமா போடுறான்’னு பேசுவாங்க. கெம்ப்ளாஸ்ட்டுக்கும், இந்தியா சிமெண்டுக்கும் லீக் மேட்ச் நடக்கும்போது அண்டர் 19
இந்தியால ஆடிய ஹேமந்த் குமார் விக்கெட்டை ஷார்ப் பவுன்சர் போட்டு எடுத்தார்.

டாப் பிளேயர் விக்கெட்டையே எடுத்துட்டார்னு கெம்ப்ளாஸ்ட் ஒரு பெரிய தொகையை சம்பளமா நிர்ணயித்து கூப்பிட்டாங்க. இதுக்கு அப்புறமாதான் தங்கச்சிங்க படிக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரி லீக் சிஸ்டம் வச்சு, பிளேயர்ஸுக்கு நல்லா பே பண்றாங்க. அதில் கெம்ப்ளாஸ்ட், இந்தியா சிமெண்ட் கிளப் முதன்மையானது. கெம்ப்ளாஸ்ட்ல இருந்துதான் எல்.பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், சடகோபன் ரமேஷ், ப்யூஸ் சாவ்லானு நிறைய பிளேயர்ஸ் இந்திய அணிக்கு போனாங்க.

நம்ம ஊர்ல ஃபாஸ்ட் பவுலருக்கு அதிகமா இன்ஜுரி வரும். வெயில்… பிட்ச்... எல்லாம் கட்டாந்தரை மாதிரி இருக்கும். தண்ணீர் இல்லாததால கிரவுண்ட் முழுசும் கல்லு மாதிரி ஆகிடும். ஃபாஸ்ட் பவுலருக்கு இவ்வளவுதான் போடணும்னு ஒரு லோடு இருக்கு. நடராஜன் ஓவர் லோடு, தவிர ஒவ்வொரு கோச்சும் ஒவ்வொரு விதமா ஆக்‌ஷன் மாத்துனதால ஷோல்டர், எல்போ இன்ஜுரி அவருக்கு வந்துட்டு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கு அவர் தேர்வானப்ப த்ரோ பால்னு கால் பண்ணிட்டாங்க. அந்த ஆக்‌ஷனை சரிபண்ணாதான் லீக் ஆட
முடியும். தன்னுடைய தன்னம்பிக்கைனால இதை சரி செய்தார். எல்லாமே புதுசா மாறினதால ஸ்விங் மாறிடுச்சு. ஸ்பீடும் கம்மியாகிருச்சு. எல்போ பெயின் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல கெம்ப்ளாஸ்ட்டை சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட்டான ஷ்யாமும், பாலாவும் அவரை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.

இருந்த கிளப்ல சம்பளம் உயர்த்தாததால ஏற்கனவே இருந்த கிளப்கிட்ட பேசினார். அங்க இருந்த சிலர், ‘அவன் வேஸ்ட் ஆகிட்டான்’னு தட்டிக்
கழிச்சாங்க. இந்த நேரத்துலதான் சரியா டிஎன்பிஎல் வந்தது. சூப்பர் ஓவர் மேட்ச்சுல ஆறு யார்க்கர் போட்டு எல்லாரையும் மிரள வைச்சார். இதைப் பார்த்துட்டு தான் கிங்ஸ் 11 பஞ்சாப்புக்கு சேவாக் பிக் பண்ணார். அங்க ஒரு மேட்ச் கூட ஆடல.

தனக்கு கிடைச்ச பேரை வச்சு ஊர்ல கிரிக்கெட் அகடமி ஆரம்பிச்சார். கிரிக்கெட்ல இருந்து ஒதுங்கி அதுல ஃபோக்கஸ் பண்ணலாம்னுதான் இருந்தார். காரணம், இங்க அவருக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு. ஐபிஎல், இந்தியா எல்லாம் ஆடுவோம்னு நடராஜன் நினைச்சே பார்க்கலை. எல்லாரும் அவர் குறையைத் தான் பார்த்தாங்க. நிறையை கண்டுக்கவே இல்ல.
 

ஆனா, இந்த வருஷம் ஐபிஎல்ல ஹைதராபாத் சன் ரைசஸ் டீம்ல ஆடினார். டீம்ல இருந்த பெரிய பவுலர்ஸை எல்லாம் உட்கார வச்சு நடராஜை எல்லா மேட்ச்சும் ஆடவச்சாங்க. முரளி தரனுக்கு இவர்மேல ஒரு ஹோப் இருந்தது. முதல் மேட்ச்சுல இருந்தே நல்ல ரிதம்ல இருந்தார்.
 

கடைசி ஆறு மாசம் ஃபிட்னஸ்ல நல்லா ஃபோக்கஸ் பண்ணார். இவ்ளோ பெரிய சீசன் தொடர்ந்து ஆடுவது அவ்வளவு ஈசி கிடையாது. ஐபிஎல் முழுதும் ஆடி, ஒன் டே, டி 20னு ஃபிட்டாவே இருப்பது நல்ல விஷயம்.

சின்ன வயசுல இருந்தே டிரைனிங் பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. சாப்பாடும் பெருசா இருக்காது. இதையெல்லாம் மீறிதான் நடராஜன் ஜெயிச்சிருக்கார். வீட்டு மொட்டை மாடி உட்பட கிடைச்ச இடங்கள்ல எல்லாம் அவர் பயிற்சி எடுத்தது முக்கியமான விஷயம்...’’ என்று வியக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கோச்.  நடராஜனின் தாண்டவம் தொடரட்டும்!

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17545&id1=4&issue=20201213

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

131300099_10218614097891670_800808470049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி முத‌லாவ‌து ரெஸ் தொட‌ரில் காய‌ம் , சில‌ வேலை ந‌ட‌ராஜ‌ன் சாமிக்கு ப‌திலா ரெஸ்ரில் விளையாட‌ கூடும் , பொறுத்து இருந்து பாப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி?

 

 

இத‌ பார்க்க‌ என‌க்கு என்ன‌ தோனுது என்றால் , க‌ரும்புலிக‌ளுக்கு நீச்ச‌ல் ப‌ழ‌க‌ க‌ட்டின‌ சிமிங்பூலில் தேசிய‌ த‌லைவ‌ர் அவ‌ர் ம‌க‌னோட‌ குளிச்ச‌த‌ வைச்சு பார் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி எல்லாம் உல்லாச‌மாய் வாழுகிறார் , 

ந‌ட‌ராஜ‌னை ப‌ற்றி போதையின் புக‌ழ் என்று எழுதின‌து ம‌லையால‌ ஊட‌க‌ம் என்று நினைக்கிறேன் , ஒரு ச‌ண் கிலாஸ் மிஞ்சி போனால் 10டொல‌ர் , இதை எல்லாம் வ‌யித் எரிச்ச‌லில் கொட்டி தீக்கிறாங்க‌ள் ஒரு த‌னின் வ‌ள‌ர்சியை பிடிக்காத‌ர்வ‌ர்க‌ள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
 
மும்பை,
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
 
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 14:09, சுவைப்பிரியன் said:

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

சுவை அண்ண‌ , ஜ‌ந்து நாள் விளையாட்டில் நீண்ட‌ ஓவ‌ர் ப‌ந்து வீச‌னும் , ம‌க்க‌ள் ம‌த்தியில் ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு இப்போது வ‌ர‌வேற்பு இல்லை ,

ந‌ட்டு 20ஓவ‌ர் ம‌ற்றும் 50 ஓவ‌ர் விளையாட்டில் விளையாடி சாதிச்சு இந்திய‌ அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிச்சா ம‌கிழ்ச்சி , ந‌ட்டு 20 ஓவ‌ர் விளையாட்டில் துல்லிய‌மாய் ப‌ந்து போட்டு ஓட்ட‌த்தை க‌ட்டு ப‌டுத்துவ‌தில் சிறந்த‌ வீர‌ர்  😍🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15065156/4th-Test-against-Australia-Natarajan-and-Washington.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

உண்மைதான்..

தற்போதைய நிலை 2/15 நடராஜன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1 ரன்), மார்கஸ் ஹாரிஸ்(5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15123104/Natarajan-Washington-Sundar-added-pride-to-Tamil-Nadu.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இது தான் ஜ‌ந்து நாள் ரெஸ்ட் அறிமுக‌ விளையாட்டு ,

இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள் 🙏

இன்று இந்திய‌ அணியில் ப‌ல‌ மாற்ற‌ம் செய்து இருக்கின‌ம் , 

வும்ரா 
அஸ்வின்
ஜ‌டேயா
விகாரி இவ‌ர்க‌ள் இன்று விளையாட‌ வில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ர‌ வ‌ர‌ ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு வ‌ர‌வேற்பு குறையுது , 

அவுஸ்ரேலியா இங்லாந்த் விளையாடும் ஜ‌ந்து நாள் ஜ‌ந்து போட்டிக்கு இங்கிலாந்தில் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பாப்பின‌ம் , ம‌ற்ற‌ நாடுக‌ள் விளையாடினா , ப‌ற‌வைக‌ள் தான் மைதான‌த்தில் அதிக‌ம் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பையன்26 said:

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

அப்பன்! நான் இணைச்சது ஜேர்மன் நியூசிலை  வந்தது.ஒரு கிரிக்கெட் மச்சுக்காக 10 மாதமாய் சிலோனிலை தவம் கிடக்கிறாராம்.😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

6 hours ago, குமாரசாமி said:

 

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

என்ன அண்ணை,

எங்கட 7 வருச யாழ்கள பந்தம் தொடங்கின நாளில் இருந்து என்னை ஏஜெண்ட் எண்டுதானே சொல்லுறியள்?

இப்ப என்ன கேள்வி குறி போடும் அளவுக்கு திடீர் சந்தேகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

காலம் எல்லா வலிகளையும் ஆற்றும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

அப்பிடிப்போடு அரிவாளை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.