Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாம்பழத்துக்கு உலகளவில் பேர் போன ஊர் சேலம். சின்ன வயதில் மாங்காய் அடித்து பழகினாரோ என்னமோ, நடராஜன் போடும் யார்க்கர் எல்லாம் ஸ்டெம்புகளின் கில்லியை எகிறச் செய்கிறது.பிரெட்லீயில் தொடங்கி பிரதமர் மோடி வரை டுவிட்டரில் வாழ்த்து மழையால் நனைக்கிறார்கள் நடராஜனை. பேரில்தான் ‘நட’ இருக்கிறதே தவிர, நடராஜனின் வாழ்க்கையே பரபர ஃபாஸ்ட் பவுலிங் ஓட்டம்தான்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28.jpg
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்’ சோயப் அக்தர் அறிமுகமானபோது அவருக்கு என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதே சிவப்புக் கம்பள வரவேற்பு நம் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ நடராஜனுக்கும் கிரிக்கெட் உலகில் கிடைத்திருக்கிறது!யெஸ். இன்று இந்தியா முழுவதும் பிரியமாக உச்சரிக்கும் ஒரே பெயர் நடராஜன்தான். செல்லமாக ‘நட்டு’; பெருமையாக ‘யார்க்கர் கிங்’. எந்தவித பின்புலமும் இல்லாமல் திறமையின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்திருக்கும் தமிழக வீரர் இவர்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28a.jpg
கடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசஸ் சார்பாக பந்து வீசி விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, டி வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரின் பார்வையையும் தன் பக்கம் திருப்பினார். துல்லியமாக யார்க்கர்களை வீசி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என இவரை அனைவரும் புகழ்கின்றனர். லைன் & லெங்ந்த்தை சீர் செய்து பந்து வீசினால் மிகச்சிறந்த பிளேயராக உருவாகலாம் என்கிறார்கள் கிரிக்கெட் நிபுணர்கள்.
http://kungumam.co.in/kungumam_images/2020/20201218/28b.jpg
சேலம் சின்னப்பம்பட்டியிலிருந்து புறப்பட்ட இந்த எக்ஸ்பிரஸ் கடந்த வாரம் ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ருத்ரதாண்டவம் ஆடியது கண்கொள்ளாக் காட்சி.“பள்ளி விட்டுட்டு வந்தா பேட்ட எடுத்துட்டு போயிடுவான். கிரிக்கெட் அவன் ரத்தத்துல ஊறிப் போச்சு. சோறே இல்லைனாலும் பொழுதன்னைக்கும் அவனுக்கு விளையாட்டுதான்.

நாங்க ஏழ்மையான குடும்பம். என் வீட்டுக்காரரு தறி ஓட்டிட்டு இருந்தாங்க. நான் சில்லி கடை வச்சிருந்தேன். எங்க ஊர் தம்பி ஜெயப்பிரகாஷ்தான் வெளியூர்ல இவன விளையாட கூட்டிட்டு போவாங்க. சரி; அவன் ஆசைப்படுறான், விளையாடட்டும்னு ஜெயப்பிரகாஷ்கிட்டயே
விட்டுட்டோம். அவர் இல்லைனா இவ்வளவு தூரம் நட்டு வந்திருக்க மாட்டான்.

வூட்டுக்கு வந்தாக் கூட சும்மா இருக்கமாட்டான். பந்த எடுத்துட்டு கைய, கால ஆட்டிக்கிட்டுதான் இருப்பான். ஃபிரண்டுங்க கூட ஜாலியா பேசுவான். சினிமால நடிக்கக் கூட கேட்டாங்க. அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்லனு மறுத்துட்டான். விளையாட்டுதான் மூச்சு. ஐபிஎல்ல விளையாடும்போது எப்ப இந்தியாவுக்கு விளையாடுவான்னு ஏங்கினோம். எங்க ஆச நிறைவேறி இன்னிக்கு பேர் வாங்கிக் கொடுத்துட்டான்...” பூரிக்கிறார் நடராஜனின் அம்மா சாந்தா.

‘‘எங்க வீட்டுல ஐந்து பேர். அண்ணாதான் மூத்தவர். இன்னிக்கு அவர் இந்தியாவுக்காக விளையாடும் போது எங்களோடு சேர்ந்து ஊரே கொண்டாடுது. அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இதுவரைக்கும் பேசாத சொந்தக் காரங்க எல்லாம் எங்ககிட்ட இப்ப வந்து பேசுறாங்க.
அண்ணா கவுர்மென்ட் ஸ்கூல்லதான் படிச்சாங்க.

அந்த கிரவுண்டுலதான் எப்பவும் இருப்பாங்க. இங்க இருக்குற பசங்க எல்லோரையும் உள்ளூர் டோர்னமெண்டுக்கு ஜெயப் பிரகாஷ் அண்ணாதான் கூட்டிட்டு போவாங்க. அவங்கதான் ‘எங்கண்ணன் பவுலிங் நல்லா போடுறதா’ சொல்லி சென்னையில் போய் சேர்த்து விட்டாங்க...” என்கிறார் நடராஜனின் சகோதரி தமிழ் அரசி.

இவை எல்லாம் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த எல்லா விளையாட்டு வீரர்களும் சந்திக்கும் பிரச்னைகள்தான். ஆனால், சென்னையில் நடராஜன் எதிர்கொண்டது வேறு யாரும் எதிர்கொள்ளாத சிக்கல்கள்.ஆம். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து, பல கனவுகளோடு சென்னை வந்த நடராஜனுக்கு அப்போது தெரியவில்லை விளையாட்டில் ஜெயிப்பதைவிட அணியில் இடம் பெறுவதற்குத்தான் முதலில் ஜெயிக்க வேண்டும் என்பது.

அணியில் இடம் பெறுவதற்காக நடராஜன் சந்தித்த புறக்கணிப்புகள், அவமானங்கள், எடுத்த முயற்சிகள்… என்று கூடவே இருந்து பார்த்த பெயர் சொல்ல விரும்பாத அந்த கிரிக்கெட் கோச் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை அனைத்தும் கல் நெஞ்சையும் கரைய வைப்பவை.
“ஜெயப்பிரகாஷ் கண்ணில் பட்டு சென்னை வந்த நடராஜ், லோயர் டிவிஷன்ல முதலில் ஆடினார். இங்க ஐந்து டிவிஷன் இருக்கு. அதில் ஃபர்ஸ்ட் டிவிஷன்ல இருந்து ரஞ்சி டிராஃபிக்கு தேர்வு பண்ணுவாங்க.

நடராஜன் லோயர் டிவிஷனுக்கு அப்புறம் செகண்ட் டிவிஷன் ஆடப் போனார். அங்க நல்லா பண்ணியும் நெட் பவுலராவே வச்சிருந்தாங்க. ஆனா, இவர் போடுற ஸ்பீடை வச்சு ஃபர்ஸ்ட் டிவிஷனுக்கு எடுத்தாங்க.சென்னை முழுக்க நடராஜனுக்கு ‘ஸ்பீடு’னு பேர் வந்தது. ‘நரம்பு மாதிரி இருந்துட்டு பயங்கரமா போடுறான்’னு பேசுவாங்க. கெம்ப்ளாஸ்ட்டுக்கும், இந்தியா சிமெண்டுக்கும் லீக் மேட்ச் நடக்கும்போது அண்டர் 19
இந்தியால ஆடிய ஹேமந்த் குமார் விக்கெட்டை ஷார்ப் பவுன்சர் போட்டு எடுத்தார்.

டாப் பிளேயர் விக்கெட்டையே எடுத்துட்டார்னு கெம்ப்ளாஸ்ட் ஒரு பெரிய தொகையை சம்பளமா நிர்ணயித்து கூப்பிட்டாங்க. இதுக்கு அப்புறமாதான் தங்கச்சிங்க படிக்க உதவி செய்ய ஆரம்பித்தார்.இந்தியாவுலயே தமிழ்நாட்டுலதான் இந்த மாதிரி லீக் சிஸ்டம் வச்சு, பிளேயர்ஸுக்கு நல்லா பே பண்றாங்க. அதில் கெம்ப்ளாஸ்ட், இந்தியா சிமெண்ட் கிளப் முதன்மையானது. கெம்ப்ளாஸ்ட்ல இருந்துதான் எல்.பாலாஜி, பத்ரிநாத், அஸ்வின், சடகோபன் ரமேஷ், ப்யூஸ் சாவ்லானு நிறைய பிளேயர்ஸ் இந்திய அணிக்கு போனாங்க.

நம்ம ஊர்ல ஃபாஸ்ட் பவுலருக்கு அதிகமா இன்ஜுரி வரும். வெயில்… பிட்ச்... எல்லாம் கட்டாந்தரை மாதிரி இருக்கும். தண்ணீர் இல்லாததால கிரவுண்ட் முழுசும் கல்லு மாதிரி ஆகிடும். ஃபாஸ்ட் பவுலருக்கு இவ்வளவுதான் போடணும்னு ஒரு லோடு இருக்கு. நடராஜன் ஓவர் லோடு, தவிர ஒவ்வொரு கோச்சும் ஒவ்வொரு விதமா ஆக்‌ஷன் மாத்துனதால ஷோல்டர், எல்போ இன்ஜுரி அவருக்கு வந்துட்டு இருந்தது.

இதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டுக்கு அவர் தேர்வானப்ப த்ரோ பால்னு கால் பண்ணிட்டாங்க. அந்த ஆக்‌ஷனை சரிபண்ணாதான் லீக் ஆட
முடியும். தன்னுடைய தன்னம்பிக்கைனால இதை சரி செய்தார். எல்லாமே புதுசா மாறினதால ஸ்விங் மாறிடுச்சு. ஸ்பீடும் கம்மியாகிருச்சு. எல்போ பெயின் வர ஆரம்பிச்சது. அந்த நேரத்துல கெம்ப்ளாஸ்ட்டை சேர்ந்த பிசியோ தெரபிஸ்ட்டான ஷ்யாமும், பாலாவும் அவரை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்டாங்க.

இருந்த கிளப்ல சம்பளம் உயர்த்தாததால ஏற்கனவே இருந்த கிளப்கிட்ட பேசினார். அங்க இருந்த சிலர், ‘அவன் வேஸ்ட் ஆகிட்டான்’னு தட்டிக்
கழிச்சாங்க. இந்த நேரத்துலதான் சரியா டிஎன்பிஎல் வந்தது. சூப்பர் ஓவர் மேட்ச்சுல ஆறு யார்க்கர் போட்டு எல்லாரையும் மிரள வைச்சார். இதைப் பார்த்துட்டு தான் கிங்ஸ் 11 பஞ்சாப்புக்கு சேவாக் பிக் பண்ணார். அங்க ஒரு மேட்ச் கூட ஆடல.

தனக்கு கிடைச்ச பேரை வச்சு ஊர்ல கிரிக்கெட் அகடமி ஆரம்பிச்சார். கிரிக்கெட்ல இருந்து ஒதுங்கி அதுல ஃபோக்கஸ் பண்ணலாம்னுதான் இருந்தார். காரணம், இங்க அவருக்கு ஏற்பட்ட புறக்கணிப்பு. ஐபிஎல், இந்தியா எல்லாம் ஆடுவோம்னு நடராஜன் நினைச்சே பார்க்கலை. எல்லாரும் அவர் குறையைத் தான் பார்த்தாங்க. நிறையை கண்டுக்கவே இல்ல.
 

ஆனா, இந்த வருஷம் ஐபிஎல்ல ஹைதராபாத் சன் ரைசஸ் டீம்ல ஆடினார். டீம்ல இருந்த பெரிய பவுலர்ஸை எல்லாம் உட்கார வச்சு நடராஜை எல்லா மேட்ச்சும் ஆடவச்சாங்க. முரளி தரனுக்கு இவர்மேல ஒரு ஹோப் இருந்தது. முதல் மேட்ச்சுல இருந்தே நல்ல ரிதம்ல இருந்தார்.
 

கடைசி ஆறு மாசம் ஃபிட்னஸ்ல நல்லா ஃபோக்கஸ் பண்ணார். இவ்ளோ பெரிய சீசன் தொடர்ந்து ஆடுவது அவ்வளவு ஈசி கிடையாது. ஐபிஎல் முழுதும் ஆடி, ஒன் டே, டி 20னு ஃபிட்டாவே இருப்பது நல்ல விஷயம்.

சின்ன வயசுல இருந்தே டிரைனிங் பேக்ரவுண்ட் எல்லாம் கிடையாது. சாப்பாடும் பெருசா இருக்காது. இதையெல்லாம் மீறிதான் நடராஜன் ஜெயிச்சிருக்கார். வீட்டு மொட்டை மாடி உட்பட கிடைச்ச இடங்கள்ல எல்லாம் அவர் பயிற்சி எடுத்தது முக்கியமான விஷயம்...’’ என்று வியக்கிறார் அந்த பெயர் சொல்ல விரும்பாத கோச்.  நடராஜனின் தாண்டவம் தொடரட்டும்!

 

http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=17545&id1=4&issue=20201213

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

131300099_10218614097891670_800808470049

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாமி முத‌லாவ‌து ரெஸ் தொட‌ரில் காய‌ம் , சில‌ வேலை ந‌ட‌ராஜ‌ன் சாமிக்கு ப‌திலா ரெஸ்ரில் விளையாட‌ கூடும் , பொறுத்து இருந்து பாப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, nunavilan said:

கிரிக்கெட் வீரர் நடராஜன் மேல் ஏன் இவ்ளோ காழ்ப்புணர்ச்சி?

 

 

இத‌ பார்க்க‌ என‌க்கு என்ன‌ தோனுது என்றால் , க‌ரும்புலிக‌ளுக்கு நீச்ச‌ல் ப‌ழ‌க‌ க‌ட்டின‌ சிமிங்பூலில் தேசிய‌ த‌லைவ‌ர் அவ‌ர் ம‌க‌னோட‌ குளிச்ச‌த‌ வைச்சு பார் பிர‌பாக‌ர‌ன் எப்ப‌டி எல்லாம் உல்லாச‌மாய் வாழுகிறார் , 

ந‌ட‌ராஜ‌னை ப‌ற்றி போதையின் புக‌ழ் என்று எழுதின‌து ம‌லையால‌ ஊட‌க‌ம் என்று நினைக்கிறேன் , ஒரு ச‌ண் கிலாஸ் மிஞ்சி போனால் 10டொல‌ர் , இதை எல்லாம் வ‌யித் எரிச்ச‌லில் கொட்டி தீக்கிறாங்க‌ள் ஒரு த‌னின் வ‌ள‌ர்சியை பிடிக்காத‌ர்வ‌ர்க‌ள் ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் நடராஜன் சேர்ப்பு
 
மும்பை,
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காலில் காயமடைந்தார்.
இதையடுத்து அவர் பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அவர் பந்துவீச வரவில்லை. அவரது காய தன்மை குறித்து ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது.
 
 
இந்த நிலையில் காயம் காரணமாக உமேஷ் யாதவ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்டில் இருந்து விலகி உள்ளார். இதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்  தொடரில்  தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைத்துள்ளது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2021 at 14:09, சுவைப்பிரியன் said:

நாளை தொடங்கும் மட்ச்சில் நட்டு விளையாடும் 11 பேரில் இடம் பெற வில்லை.😦

சுவை அண்ண‌ , ஜ‌ந்து நாள் விளையாட்டில் நீண்ட‌ ஓவ‌ர் ப‌ந்து வீச‌னும் , ம‌க்க‌ள் ம‌த்தியில் ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு இப்போது வ‌ர‌வேற்பு இல்லை ,

ந‌ட்டு 20ஓவ‌ர் ம‌ற்றும் 50 ஓவ‌ர் விளையாட்டில் விளையாடி சாதிச்சு இந்திய‌ அணியில் நிர‌ந்த‌ இட‌ம் பிடிச்சா ம‌கிழ்ச்சி , ந‌ட்டு 20 ஓவ‌ர் விளையாட்டில் துல்லிய‌மாய் ப‌ந்து போட்டு ஓட்ட‌த்தை க‌ட்டு ப‌டுத்துவ‌தில் சிறந்த‌ வீர‌ர்  😍🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி; இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இடம்பிடித்துள்ளனர்
 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்குகி உள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமாக இடம்பிடித்துள்ளார். 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15065156/4th-Test-against-Australia-Natarajan-and-Washington.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

IMG-20210115-111932.jpg 

தமிழ் வீரர்கள் இருவரும் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள் தோழர்..👍

உண்மைதான்..

தற்போதைய நிலை 2/15 நடராஜன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்த நடராஜன், வாஷிங்டன் சுந்தர்

பிரிஸ்பேன்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன. சிட்னியில் நடந்த 3-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி இந்திய அணி பந்து வீச்சைத் துவங்கியது.

இதற்கிடையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக தமிழக வீரர் நடராஜன்  களம் இறங்கியுள்ளார். மேலும் சுழற்பந்து வீச்சாளராக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரும் இன்றைய டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.

முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்(1 ரன்), மார்கஸ் ஹாரிஸ்(5 ரன்கள்) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த லபுசாக்னே நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு புறம் ஸ்டீவ் ஸ்மித் 36 ரன்களில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

இதையடுத்து சிறப்பாக ஆடி வந்த லபுசாக்னே-மேத்யூ வேட் கூட்டணியை நடராஜன் உடைத்தார். நடராஜன் வீசிய பந்தில் மேத்யூ வேட் (45 ரன்கள், 87 பந்துகள்) ஷர்துல் தாக்கூரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து நடராஜனின் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் லபுசாக்னே(108 ரன்கள், 204 பந்துகள்) கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதன் மூலம் தனது முதல் டெஸ்ட் ஆட்டத்தில் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக வீரர்கள் இருவரும் களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருப்பது, பொங்கல் பண்டிகை தருணத்தில் தமிழக ரசிகர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2021/01/15123104/Natarajan-Washington-Sundar-added-pride-to-Tamil-Nadu.vpf

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ள் இருவ‌ருக்கும் இது தான் ஜ‌ந்து நாள் ரெஸ்ட் அறிமுக‌ விளையாட்டு ,

இருவ‌ருக்கும் வாழ்த்துக்க‌ள் 🙏

இன்று இந்திய‌ அணியில் ப‌ல‌ மாற்ற‌ம் செய்து இருக்கின‌ம் , 

வும்ரா 
அஸ்வின்
ஜ‌டேயா
விகாரி இவ‌ர்க‌ள் இன்று விளையாட‌ வில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ர‌ வ‌ர‌ ஜ‌ந்து நாள் விளையாட்டுக்கு வ‌ர‌வேற்பு குறையுது , 

அவுஸ்ரேலியா இங்லாந்த் விளையாடும் ஜ‌ந்து நாள் ஜ‌ந்து போட்டிக்கு இங்கிலாந்தில் அதிக‌ ம‌க்க‌ள் விரும்பி பாப்பின‌ம் , ம‌ற்ற‌ நாடுக‌ள் விளையாடினா , ப‌ற‌வைக‌ள் தான் மைதான‌த்தில் அதிக‌ம் ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

 

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

என்ன‌ தாத்தா நீங்க‌ளுன் கிரிக்கெட்டை பின் தொட‌ர்வ‌து போல் தெரியுது ஹா ஹா 😁😀
 

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

அப்பப்ப பாக்கிறது....அதுக்காக  கிரிக்கெட்டுலை பாய் விரிச்சு படுக்கிறேல்லை.  😁

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பையன்26 said:

அது ச‌ரி உங்க‌ளுக்கு க‌ள்ளுக்கொட்டில்ல‌ ப‌டுக்க‌வே நேர‌ம் ச‌ரியா இருக்கும் , கிரிக்கெட்டில் எப்ப‌டி பாய் விரித்து ப‌டுக்க‌ நேர‌ம் இருக்க‌ போகுது   ஹா ஹா 😁😀

அப்பன்! நான் இணைச்சது ஜேர்மன் நியூசிலை  வந்தது.ஒரு கிரிக்கெட் மச்சுக்காக 10 மாதமாய் சிலோனிலை தவம் கிடக்கிறாராம்.😁

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

6 hours ago, குமாரசாமி said:

 

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

நீங்கள் உளவு வேலை பார்ப்பவரா? அல்லது ஏஜெண்ட் ?????? 😎

என்ன அண்ணை,

எங்கட 7 வருச யாழ்கள பந்தம் தொடங்கின நாளில் இருந்து என்னை ஏஜெண்ட் எண்டுதானே சொல்லுறியள்?

இப்ப என்ன கேள்வி குறி போடும் அளவுக்கு திடீர் சந்தேகம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நட்டு முதல் போலே நோ போலில் தொடங்கினாலும் பின்னர் சுதாரிச்சு கொண்டார். ஆனாலும் அதிகம் அவுட் சைட் ஓப் ஸ்டம் எறிவதால் விக்கெட் எடுக்கும் வாய்ப்புக்களை இழக்கிறார்.

டெஸ்ட் போட்டியில் விக்கெட் எடுப்பது மட்டுமே மேட்டர். பார்ப்போம் இண்டைக்கு என்ன நடக்குது என.

இந்த காலி கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மேட்ச் பார்ப்பது ஒரு சுகானுபவம்தான்.

கோட்டையும், அதன் உள்ளே இருக்கும் பள்ளிவாசல், கடற்கரை, வெளிச்சவீடு, டச்சு காரரர் கட்டிய கட்டிடங்கள், கோர்ட் எல்லாம் சுற்றிபார்க்க வேண்டிய இடங்கள். 

ரெயில் நிலையத்துக்கு அருகில் ஒரு பெரிய சிவன் கோயிலும் உண்டு. நல்லாக பராமரிக்கிறார்கள்.

கொழும்புக்காக கடைசி ரெயின் 3.30 என நினைக்கிறேன். ஏறி கடற்கரையோரம் சீட்டில் உட்கார்ந்தால்- அற்புதமான சூரிய அஸ்தமனத்தை பார்த்தபடி கொழும்பு வந்து சேரலாம்.

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

காலம் எல்லா வலிகளையும் ஆற்றும்🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

உந்த‌ ந‌ர‌க‌த்தை சுற்றி பார்ப‌த‌ விட‌ த‌மிழ் நாட்டில் உள்ள‌ அழ‌கான‌ கிராம‌ புறத்த‌ சுற்றி பார்த்து கோயிலுக்கு போயிட்டு சுத்த‌மான‌ குள‌த்தில் நீச்ச‌ல் அடித்து விட்டு இர‌வு நேர‌ம் சாலை ஓர‌ க‌டையில் ஆட்டு பிரியாணி சாப்பிட்டு மொட்ட‌ மாடியில் ப‌டுத்து தூங்கிர‌ சுக‌ம் இருக்கே த‌னி சுக‌ம் / 2009க்கு பிற‌க்கு சிங்க‌ள‌ ஏரியா ப‌க்க‌ம் போக‌வே பிடிக்காது 😡
 

அப்பிடிப்போடு அரிவாளை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடாளுமன்றத் தேர்தல் 2024: மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் – ஏப்ரல் 14 முதல்… Apr 13, 2024 18:46PM IST ஷேர் செய்ய :    சூடு பிடிக்கிறது அரசியல் களம்! எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள், எந்த கூட்டணி பெரும்பான்மையான தொகுதிகளைக் கைப்பற்றப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருக்கிறது. மக்களின் மனதை வென்ற வேட்பாளர் யார் என்பதைக் கணித்துச் சொல்வதற்கு தமிழ்நாடு முழுவதும் பயணித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது மின்னம்பலம். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுதும் 39 மக்களவைத் தொகுதிகளில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மின்னம்பலம் சார்பாக மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. புதுச்சேரி மக்களவைத் தொகுதியிலும் மின்னம்பலம் குழுவினர் கருத்துகணிப்பு நடத்தினர். இதைத் தவிர இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியிலும் சர்வே மேற்கொள்ளப்பட்டது. ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 100 பேர் என்று 6 தொகுதிகளைக் கொண்ட ஒரு மக்களவைத் தொகுதிக்கு 600 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்- பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. மொத்தமாக தமிழ்நாடு முழுதும் 23,400 பேரிடம் நடத்தப்பட்ட மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகள் ஒவ்வொரு தொகுதியாக ஏப்ரல் 14 முதல் தொடர்ந்து வெளியிடப்பட உள்ளது. மொத்தமாக தமிழ்நாட்டில் எந்தெந்த கூட்டணி எத்தனை சதவீத வாக்குகளைப் பெற உள்ளது என்பதையும் மின்னம்பலம் வெளியிட உள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/2024-lok-sabha-election-competition-between-admk-dmk-bjp-ntk-minnambalam-mega-survey/
    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.