Jump to content

இன்று முதல்முதலாக இந்திய அணிக்கு விளையாடும் தமிழக வீரர் நடராஜன்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரெண்டு போட்டிகளிலும் விளையாடும் குழாமில் நட்டு இல்லை😞.

பும்ரா, சர்மா திரும்ப வருவதாலா?

அல்லது நட்டு 5 ஓவரில் ஒவ்வொரு முதல் பந்தினையும் நோபாலாக வீசியதை ஷேன் வான் spot fixing ஆக இருக்கும் என்ற சந்தேக தொனியில் டிவீட் போட்டிருந்தார், இந்த சந்தேகமா?

கிரிக்கெட் உல‌கில் சேன் வான் மாதிரி ஒரு அர‌வேக்காட்டை இதுவ‌ரை பார்த்த‌து இல்லை , 

புறாமை பிடிச்ச‌ ந‌ரி , 2003ம் ஆண்டு போதையின் உச்சிக்கு போன‌தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி  ஏற்ற‌ ப‌ட்டார் , 

பெண்க‌ளுட‌ன் உட‌ல் உற‌வு செய்வ‌தில் கிரிக்கெட் உல‌கில் இவ‌ரை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , ஒழுக்க‌ம் என்றால் என்ன‌ என்று இவ‌ருக்கு அற‌வே தெரியாது , விளையாட்டு மைதான‌த்தில் அதிக‌ம் தூச‌ன‌ம் க‌தைச்ச‌து என்றால் அது சேன் வான் தான் ,

இவ‌ரின் ப‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா சுழ‌ண்ட‌து அது தான் இவர் அவுஸ்ரேலியா அணியில் இட‌ம் பிடிக்க‌ முக்கிய‌ கார‌ன‌ம் , இவ‌ரின் ஒழுக்க‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் விளையாட‌ அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரிய‌ம் த‌டை போட்ட‌து 

Link to comment
Share on other sites

  • Replies 111
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பையன்26 said:

கிரிக்கெட் உல‌கில் சேன் வான் மாதிரி ஒரு அர‌வேக்காட்டை இதுவ‌ரை பார்த்த‌து இல்லை , 

புறாமை பிடிச்ச‌ ந‌ரி , 2003ம் ஆண்டு போதையின் உச்சிக்கு போன‌தால் உல‌க‌ கோப்பையில் இருந்து வெளி  ஏற்ற‌ ப‌ட்டார் , 

பெண்க‌ளுட‌ன் உட‌ல் உற‌வு செய்வ‌தில் கிரிக்கெட் உல‌கில் இவ‌ரை மிஞ்ச‌ ஆட்க‌ள் இல்லை , ஒழுக்க‌ம் என்றால் என்ன‌ என்று இவ‌ருக்கு அற‌வே தெரியாது , விளையாட்டு மைதான‌த்தில் அதிக‌ம் தூச‌ன‌ம் க‌தைச்ச‌து என்றால் அது சேன் வான் தான் ,

இவ‌ரின் ப‌ந்து க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் ந‌ல்லா சுழ‌ண்ட‌து அது தான் இவர் அவுஸ்ரேலியா அணியில் இட‌ம் பிடிக்க‌ முக்கிய‌ கார‌ன‌ம் , இவ‌ரின் ஒழுக்க‌த்தை பார்த்து ஒரு வ‌ருட‌த்துக்கு மேல் விளையாட‌ அவுஸ்ரேலியா கிரிக்கெட் வாரிய‌ம் த‌டை போட்ட‌து 

பொம்பிளை விசயத்த பார்த்தால் முக்காவாசி வீரர்கள் விளையாட முடியாது🤣.

ஆனால் வார்ன் recreational drugs பாவித்து ஒரு வருடம் தடை வாங்கியது உண்மைதான்.

ஆனாலு இதுவரை உலகில் வந்த அற்புதமான ஸ்பின் போலர் வார்ந்தான் (முரளி ஸ்பின்னர் அல்ல சக்கர்). 

அவர் எப்படி பட்டவராக இருந்தாலும், அவரின் கூற்றை அவரின் கடந்த காலத்தை வைத்து நிராகரிப்பது சரியாகபடவில்லை.

ஏனெறால் வார்ன் ஒரு போதும் கிரிகெட்டில் cheat பண்ணியதில்லை.

ஐந்து ஓவரில் முதல் பந்தை மட்டும் நோபாலாக எறிவது சந்தேகபட கூடிய விசயம்தான். 

இதை ஒரு பாகிஸ்தான் போலர் எறிந்திருந்தால் நாங்கள் எல்லாரும் ஷேன் வார்னை போலவே சிந்தித்திருப்போம்.

நட்டு என்பதால் - இருக்காது என எமது மனது சொல்கிறது.

நானும் நட்டு இப்படி செய்தார் என நம்பவில்லை.

ஆனால் ஷேன் வார்ன் இதில் சந்தேகப்பட்டதிலும் பெரிய தப்பு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரெண்டு போட்டிகளிலும் விளையாடும் குழாமில் நட்டு இல்லை😞.

பும்ரா, சர்மா திரும்ப வருவதாலா?

அல்லது நட்டு 5 ஓவரில் ஒவ்வொரு முதல் பந்தினையும் நோபாலாக வீசியதை ஷேன் வான் spot fixing ஆக இருக்கும் என்ற சந்தேக தொனியில் டிவீட் போட்டிருந்தார், இந்த சந்தேகமா?

நான் நினைக்கிறேன் அவரை ஒரு நாள் மற்றும் டி 20 ஆகியவற்றில் பயன் படத்துவார்கள் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, சுவைப்பிரியன் said:

நான் நினைக்கிறேன் அவரை ஒரு நாள் மற்றும் டி 20 ஆகியவற்றில் பயன் படத்துவார்கள் என்று.

ஓம், பையனும் சொன்னார் மேலே, டெஸ்டில் விளையாடினால் விரைவில் ஓய்வுபெற வேண்டி வரும்.

தவிரவும் சர்மா, பும்றா வந்தால் டெஸ்ட் டீமில் இடம் கஸ்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நடராஜன் தனது குழந்தையை பார்க்க ஓய்வெடுப்பதாக அறிகிறேன். 

அப்படி என்றால் சந்தோசம்😀

Link to comment
Share on other sites

நடராஜன் இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சேர்க்கபடாததற்கு காரணம் இதுதான் – விவரம் இதோ 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று முடிந்தது. இந்த நீண்ட தொடரில் ஒரு நாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணியும் கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. இந்திய அணி பெற்ற இந்த வெற்றிக்கு வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி கலந்துகொள்ளும் அடுத்த தொடர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அதன்படி இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மோதவுள்ளது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நான்கு டெஸ்ட் போட்டி, 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

Nattu-4-1024x576.jpg - இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளுக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோர் இந்திய அணிக்காக அழைக்கப்பட்டுள்ளனர் .அது தவிர இஷாந்த் ஷர்மா மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

IND-1-1-1024x576.jpg

இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கபடாமல் போனதற்கு ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த நடராஜன் இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அதனால் நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்திருந்தனர். - 

nattu-2-1024x576.jpg

- இந்நிலையில் இங்கிலாந்து தொடருக்கான அணியில் அவர் இடம்பிடிக்காததற்கு காரணம் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போது நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன்காரணமாக அவரது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கவே அவருக்கு அணியில் இருந்து இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://crictamil.in/the-reason-behind-nattu-rejection-vs-eng/?fbclid=IwAR3xKQ_dmjeeFEEqUH7hJF6H0eSF6HpnXFePEHAkJURdi1fjAvYrMLGl1jI

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

141730973_1127632084345183_7367408096842

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் - வார்னர் புகழாரம்

தமிழக வீரர் நடராஜன் ஒரு ஜாம்பவான் - வார்னர் புகழாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக டேவிட் வார்னர் தலைமையில் விளையாடிய தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் கடந்த ஐ.பி.எல். சீசனில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தி பிரமாதப்படுத்தினார். அது மட்டுமின்றி அந்த ஐ.பி.எல்.-ல் மொத்தம் 71 யார்க்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய பயணம் மேற்கொண்ட அவர் ஒரு நாள், 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகம் ஆனதுடன் மொத்தம் 5 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்டுகள் கைப்பற்றி முத்திரை பதித்தார். அவருக்கு ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பாராட்டு தெரிவித்து ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டுள்ளார். அதில் முதலில் ‘வாழ்த்துகள் நட்டு’, என்று தமிழில் பேசியுள்ள வார்னர் அதன் பிறகு, ‘நடராஜன், நிச்சயம் நீங்கள் ஒரு ஜாம்பவான். நான் உங்களுடன் நிறைய நேரத்தை செலவிட்டு இருக்கிறேன். களத்திற்கு வெளியேயும், உள்ளேயும் நீங்கள் சிறப்பான மனிதர். நீங்கள் எங்கள் அணியில் (ஐதராபாத்) இருப்பதை மிகவும் விரும்புகிறேன்’ என்றார்.

மேலும் வார்னர் கூறுகையில், ‘அதிர்ஷ்டவசமாக அவருக்கு நான் கேப்டனாக இருந்துள்ளேன். நடராஜன் வியப்புக்குரிய வீரர். பணிவானவர். உண்மையிலேயே ஒரு ஜென்டில்மேன். 2020-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நம்ப முடியாத அளவுக்கு அவரது பந்து வீச்சு இருந்ததை பார்த்தோம். அதைத் தொடர்ந்து வலைபயிற்சி பவுலராக ஆஸ்திரேலியாவுக்கு பயணித்தார். தனக்கு முதல் குழந்தை பிறந்ததை கூட பார்க்க செல்லாமல் தியாகம் செய்தார். அதன் பிறகு மூன்று வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டிலும் கால்பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என்ன ஒரு மகத்தான சாதனை. அவரை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்ன செய்ய வேண்டும், சூழ்நிலைக்கு தக்கபடி எப்படி பவுலிங் செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும். கடந்த முறை இறுதிகட்ட பந்துவீச்சில் நேர்த்தியாக செயல்பட்டார். இந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறார் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.’ என்றும் குறிப்பிட்டார்.


 
இதற்கிடையே சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை பார்த்து இந்திய முன்னாள் வீரர் ஷேவாக் சிலாகித்து போய் உள்ளார். மேளம் தாளம் முழங்க சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷேவாக், ‘இது தான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது சாதாரண விளையாட்டல்ல. அதற்கும் மேலாக பார்க்கப்படுகிறது. நடராஜன் சொந்த ஊருக்கு திரும்பிய போது அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இது நம்ப முடியாத வகையில் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

 

https://www.maalaimalar.com/news/sports/2021/01/23130032/2288264/Tamil-newes-Warner-says-Tamil-Nadu-player-Natarajan.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நட்டுவை தவறான முறையில் பந்துவீசுகின்றார் என்று ஓராண்டு பந்து வீச விடவில்லை தமிழ்நாட்டு கிரிக்கெட் சங்கம், பந்து வீசும் பாணியை மாற்றி இப்போது சாதித்திருக்கிறார்.

Link to comment
Share on other sites

 

 

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 1

 

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க !

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் டெஸ்ட் தொடரை 2 – 1 என கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி வெறும் 36 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் இந்திய அணி ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை 4-0  என இழந்து விடும் என்று முன்னாள் வீரர்கள் பலர் விமர்சனம் செய்தனர்.

ஆனால் மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் பெற்ற அதிரடி வெற்றியால் இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1  என கைப்பற்றி விமர்சனம் செய்த அனைவருக்கும் தக்க பதிலடி கொடுத்தது.

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 2

இந்திய அணியின் இந்த வரலாற்று வெற்றியையும் சீனியர் வீரர்கள் இல்லாத போது அவர்களுக்கு பதிலாக சிறப்பாக விளையாடி இளம் வீரர்களையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். 

இந்நிலையில்,  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பிய இந்திய வீரர்களை இந்திய ரசிகர்கள் மேளதாளங்களுடன் வரவேற்றனர். இதில் இந்திய கேப்டன் ரஹானே மற்றும் தமிழக வீரர் தங்கராஜ் நடராஜன் ஆகியோரின் வரவேற்பு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 
நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 3

ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று விதமான போட்டிகளிலும் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடராஜன்.

இவர் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 2 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார். தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு நடராஜன் தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு நேற்று வந்தடைந்தார். ஆஸ்திரேலிய தொடரில் கலக்கிய நடராஜனை ஊர் பொதுமக்கள் அனைவரும் இணைந்து கோலாகலமாக வரவேற்று இருக்கின்றனர்.

நடராஜனின் வரவேற்பை கண்டு வாயடைத்து போன சேவாக் ; என்ன சொல்லியிருக்கார் பாருங்க ! 4

நடராஜனின் வரவேற்பு குறித்து விரேந்திர சேவாக் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். இவரது இந்த ட்விட் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அதில் சேவாக் “இதுதான் இந்தியா. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு விளையாட்டு மட்டுமல்ல. அதற்கும் மேலானது. சேலம் மாவட்டத்திலுள்ள சின்னப்பம்பட்டி கிராமத்தில் நடராஜனின் வரவேற்பு பிரம்மாண்டமாக இருந்தது. நடராஜனின் கதை சுவராசியமாக இருக்கிறது” ட்வீட் செய்திருக்கிறார். 

https://tamil.sportzwiki.com/cricket/sehwag-who-was-speechless-at-natarajans-welcome-look-at-what-he-said/?fbclid=IwAR2Qf7YL_7qcO9tjxewAp17ykcZ_yvdGj68rV9A7ZfTPoS7hAkZCI5We7sM

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
    • வாலிபத்தில் தவற விட்டவைகளை எண்ணி வயோதிபத்தில் அசை போடுகிறீர்கள் போல. எழுதம் கதை கவிதை எல்லாமே காதல் மயமாகவே உள்ளதே?
    • பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன் பொன்னுஞ்சல் ஆடுகிறான் ஐயப்பன்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.