Jump to content

தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்…

  • December 1, 20208:02 pm

வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார்

C2BD58A4-0499-4F24-BBCC-A381F31D4FA2-3003F7892AA-EFA5-49F3-9D9D-F02F24E40E36-300

 

https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அப்பாவின் நண்பர். எனக்கு ஆசான்.

பத்மநாதன் ஆசான் அமைதியில் உறங்கட்டும்.  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். 🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு

         03.12.2020.

மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள்

‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு.

 

தமிழர் தாயகத்தில் தேசப்பற்றுமிக்க கல்வியாளனாகவும், விடுதலைப்போராட்டத்திற்காகப் பல தளங்களில் தன்னை அர்ப்பணித்துச் செயற்பட்டவரும் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காக உழைத்தவருமான மயில்வாகனம் பத்மநாதன் அவர்கள் 30.11.2020 அன்று சாவடைந்தார் என்னும் செய்தி தமிழ்மக்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவர், கொழும்புத்துறை மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை உடற்கல்வி விரிவுரையாளராகவும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உடற்பயிற்சி விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இக்காலத்தில் தனது மக்களுக்காகத் தான் பணியாற்றிய கல்வித்தளத்தினூடாக உடல், உள ஆற்றல்களை இளைய தலைமுறையினரும் ஆசிரியத்துவ மாணவர்களும் உலகப்பரப்புவரை தங்கள் திறனை வெளிப்படுத்த அர்ப்பணிப்புடன் உழைத்த நல்லாசான்.  

தாயக விடுதலையின் தமிழீழ அரசுக்கட்டுமானங்கள் துளிர்விட்ட காலம் தொடக்கம் தன் துறைசார்ந்த பணியை இன்னும் அதிவேகமாக நமது இளந்தலைமுறையினரிடம் இட்டுச்செல்ல வேண்டிய காலத்தின் தேவையை உணர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரது எண்ணத்தினைப் புரிந்துகொண்டு தனது பல்கலைக்கழக உடற்கல்வி விரிவுரையாளர் ஓய்வுநிலைக்கு முற்றுப்புள்ளி   வைத்து, தமிழீழ விளையாட்டுத்துறையின் இலக்கு நோக்கிய வளர்ச்சிக்கு அத்திவாரமாகச் செயற்பட்டு அதனைக் கட்டியமைப்பதில் பெரும் பங்குவகித்தவர். தமிழீழப்பரப்பிற்குள் அனைத்து மாவட்டங்களின் விளையாட்டுத்துறை விரிவாக்கம், தடகளப் போட்டிகள், குழுவிளையாட்டுக்கள், இவற்றிற்கான பயிற்சிகளென இவரது உழைப்பு அளப்பரியதாகும்.

அத்துடன், கிளிநொச்சிப் பொதுவிளையாட்டரங்கில் நடைபெற்ற மாபெரும் தமிழீழ விளையாட்டுவிழாவைச் சிறப்பாக நடாத்துவதற்கு உழைத்தவர்களில் இவர் பெரும்பங்காற்றியவர். அவ் விளையாட்டு மைதானம் எப்போதும் இளையோரால் நிறைந்திருக்குமளவிற்குத் தனது கடின உழைப்பைத் தமிழீழ விளையாட்டுத்துறைக்காகத் தந்த ஓர் ஆசான். உலகப்பரப்பின் ஐரோப்பியத் தளத்தில் தமிழீழ விளையாட்டுத்துறையின் தமிழீழப் பெண்கள் வலைப்பந்தாட்ட அணியை  துலங்கவைத்தவர். இவரது அர்ப்பணிப்பான பணிக்காகத் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டவர். 

Jz5BUq2KU8v95N69B0J1.jpg

 

மாவீரர்களின் கனவினையும் தாயகமக்களின் விடுதலையுணர்வுகளையும் தன்னுள்தாங்கி, அர்ப்பணிப்போடு  தேசியப் பணியாற்றிய இவருடைய இழப்பு, தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ மக்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும். இவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன்  மயில்வாகனம் பத்மநாதன் அவர்களின் இனப்பற்றிற்காகவும்  இவர் ஆற்றிய தேசியப் பணிக்காகவும்  ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிக்கின்றோம்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’’

அனைத்துலகத் தொடர்பகம்.

தமிழீழ விடுதலைப் புலிகள்.

 

 

2rUCdEWwhN0YNb2nKkXN.jpg
LLbib1cAf3lTagcOwb2S.jpg

https://www.thaarakam.com/news/1cbe21cb-48a3-4102-9845-6c7c295f043c

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.